search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RRvSRH"

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 214 ரன்களை குவித்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது.

    இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 203 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஐதராபாத் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டின. டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.

    ஜோஸ் பட்லர் 54 ரன்னில் அவுட்டானார்.ஜெய்ஸ்வால் 54 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து 55 ரன் எடுத்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் 85 ரன் திரட்டியது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது அது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

    அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.

    ×