என் மலர்
ராஜஸ்தான்
- வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
- ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தீத்வானா மாவட்டத்தில் உள்ள குச்சமன் நகர் பகுதியை சேர்ந்த அனில் சிங் என்பவரது மின்சார கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதானது. இதனால் அவரால் அங்கிருந்து காரை ஓட்டி செல்ல முடியவில்லை. அதோடு நடுரோட்டில் கார் பழுதாகி நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் நிலவியது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த காளை வண்டியில் இருந்து பழுதான காருக்கு கயிறு கட்டி இழுத்து சென்றுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கார் உரிமையாளரான அனில் சிங் மெட்டியா கூறுகையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மின்சார காரை வாங்கினேன். ஆனால் ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த சரியான பதிலையும் வழங்கவில்லை என விரக்தியுடன் கூறினார்.
- பெண் குழந்தை எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 150 அடி ஆழத்தில் சிக்கியது.
- ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 170 அடி ஆழத்தில் சிக்கியது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வந்தனர்.
டெல்லில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 10வது நாளான இன்று மீட்டனர்.
கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் குழந்தையை மீட்டனர்.
பின்னர் அங்கு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறுது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள்.
- முதல் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை சீமா பெற்றுள்ளார்.
- விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார்
கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார்.
பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார்.
இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் அவர் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார் என்றும் வெவ்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
- தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
- நாளை ஐதராபாத்தில் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ஜோத்வாராவில் வசிக்கும் பிரபல நகைக்கடை அதிபர் தனக்கு மணப்பெண் தேடினார். இதற்காக ஆன்லைன் மூலம் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ஒரு பெண் அவருக்கு அறிமுகமானார். அவர் தன்னை சீமா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சீமாவின் உறவினர்கள் என்று சிலரும் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர் அந்த பெண்ணின் ஊரான டோராடூனுக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு இருந்த சீமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுபற்றி நகைக்கடை அதிபர் அங்குள்ள முரளிபுரா போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலைய அதிகாரி சுனில் குமார் ஜாங்கிட், சப்-இன்ஸ்பெக்டர் வசுந்தரா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டேராடூன் சென்று சீமா அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நிக்கி என்ற சீமா அகர்வால் என்பதும் அவர் ஆன்லைன் திருமண தளங்கள் மூலமாக சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களின் முழுமையான தகவல்களை பெற்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு 3, 4 மாதங்களில் அவர்களின் நம்பிக்கையை பெற்று பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களுடன் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கனவே இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை சீமா திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து அந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதேபோன்று 2017-ம் ஆண்டு குருகிராமில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து அவர் மீதும் அவரது உறவினர் மீது கற்பழிப்பு புகார் கூறி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.1.21 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான இளம்பெண் சீமா வேறு யாரையும் இதுபோன்று மோசடி செய்துள்ளாரா? அவரது மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 8 முறை பல்டி அடித்து ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது.
- காரில் பயணம் செய்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நடைபெற்ற விபத்தில் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவருடன் ஐந்து பேர் இருந்தனர். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் சுமார் 8 முறை பல்டியடித்தவாறு, சாலையின் அருகில் உள்ள ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
ஷோ ரூமில் உள்ளவர்கள் காரில் பயணம் செய்தவர்களுக்க என்ன ஆனதோ? என பதறியடித்து கரை நோக்கி ஓடி வந்தனர்.
அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து வெளியேறினார். அதன்பின் ஒவ்வொருவராக காரில் இருந்து வெளியில் வந்தனர். காரில் இருந்து வெளியில் வந்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
பயங்கரமான விபத்து நடைபெற்றும் காரில் பயணம் செய்தவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாததை ஷோரூம் பணியாளர்கள் வினோதமாக பார்த்தனர்.
அதை விட வினோதம் என்ன வென்றால், காரில் இருந்து வெளியில் வந்தவர்கள் விபத்தை பற்றி அலட்டிக்கொள்ளலாம், ப்ளீஸ் ஒரு கப் டீ கிடைக்குமா? என்று கேட்டதுதான்.
- பாப் கார்ன் தயாரித்து உப்பு, மசாலா சேர்த்து அப்படியே சாப்பிடக் கொடுத்தால் அதற்கு 5 சதவீதம் வரி.
- 1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட முக்கியம்சங்கள்:-
* பாப் கார்ன் தயாரித்து உப்பு, மசாலா சேர்த்து எந்தவிதமான எழுத்தும் இல்லாத கவரில் வைத்துகொடுப்பதற்கு (not pre-packaged) 5 சதவீதம் வரி. பாக்கெட்டில் வைத்து பெயர் பொறிக்கப்பட்டால் (Labelled) 12 சதவீதம். caramel popcorn-க்கு 18 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை.
* 1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரியை உயர்த்த பரிந்துரை. தற்போது 5 சதவீதமாக இருக்கும் நிலையில், 12 சதவீதமாக உயர்ந்த பரிந்துரை.
* 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை
* 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சைக்கிளிலுக்கான வரி 12 சதவீதமாக உள்ள நிலையில், அதை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை.
* ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகளுக்கு வாங்கப்படும் சர்வீஸ் சார்ஜ் மீதான வரியை குறைப்பதற்கான ஆலோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
* 15 ஆயிரும் ரூபாய்க்கு அதிமான விலை கொண்ட ஷூக்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்த பரிந்துரை
- ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
- ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்
ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

சுசீலா மீனாவின் பந்துவீச்சு திறனை பார்த்து வியந்த சச்சின் அவரின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணியை ஒப்பிட்டு எழுதினார்.
ஹைலைட் என்னவென்றால் இந்த பதவிக்கு ஜாகீர் கானும் பதில் அளித்துள்ளார். தனது பதிவில் ஜாகீர் கான் கூறியதாவது, நீங்கள் அதை [சிறுமியின் பந்துவீச்சு பாணியை] கவனித்தரிந்துள்ளீர்கள், அதை நான் முற்றிலும் ஏற்கிறன், அவளது விளையாட்டு மென்மையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது, ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

- 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது.
- லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.
2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.

லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது.
லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.
இந்த கோர தீ விபத்து இன்று காலை 5.30 மணி யளவில் நிகழ்ந்தது. ஏற்க னவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது.
தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.
அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன.
எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். லாரிகள் தீப்பி டித்து எரியும் காட்சிகளை உயிர் தப்பியவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து பத்து வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது.
ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து அரங்கேறிய சம்பவ இடத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக தீ விபத்தில் காயமுற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.
தீ விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக தேவையான மருத்துவத்தை வழங்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். வசதிகள் மற்றும் காயமுற்றவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.
ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த கலிகாட் என்ற கிராமத்தில் கடந்த 9-ந்தேதி (திங்கள் கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஆர்யனை மீட்பது தொடர்பாk அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணிகளை தொடங்கினர். சிறுவனை மீட்க அதிக நேரம் ஆகலாம் என்பதால், முதலில் 150 அடி ஆழத்தில் இருந்த சிறுவன் சுவாசிக்க ஏதுவாக ஆக்ஜிஜன் குழாயை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.
சிறுவனை கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டே கிணற்றில் துளையிடும் எந்திரங்களை பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்க கிட்டத்தட்ட 55 மணி நேரங்கள் ஆகிவிட்டது. மீட்கப்பட்ட போது சிறுவன் சுயநினைவில் இல்லாமல் காணப்பட்டான்.
சிறுவனை மீட்டதும் அதிநவீன வசதிகள் நிறைந்த ஆம்புலன்ஸ் மூலம் அதிவேகமாக மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி சிறுவன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






