என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மணமகள் கிராமத்துக்கு வருகை தந்தனர்.
    • காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

    ராஜஸ்தானில் திருமணத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சண்டையில் மணமகன் வீட்டை சேர்ந்த நபர் பெண் வீட்டை சேர்ந்த 7 பேர் மீது வண்டியை ஏற்றியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா[Dausa] வில் மணமகள் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

    மாப்பிளை வீட்டாரோடு தனது காரில் அவர்களின் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அங்கு தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அவருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபர் கோபத்தில் தனது காரை இயங்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில்  வெளியாகி உள்ளது.

    ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா சுயேட்சையாக நின்றார்.
    • அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று [நவம்பர் 13] இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றன. அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில் டோங்க் மாவட்டம் தியோலி - யூனியாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப் கலெக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தொகுதியில் சுயேட்சையாக நின்ற முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா சாம்ராவதாவில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சப் கலெக்டர் அமித் சவுத்ரி தனது ஆட்கள் 3 பேரை அழைத்துவந்து கள்ள ஒட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி அவரது அவரது கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கினார். இதனைத்தொடர்ந்து போலீசார் மீனாவை அங்கிருந்து அகலச் செய்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நேற்று இரவு நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்ய வந்தனர். ஆனால் அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேட்பாளரின் ஆதரவாளர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

    பின்னர் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேட்பாளர் நரேஷ் மீனா இன்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கிராமத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலையின் மத்தியில் விறகு கட்டைகளை அடுக்கி தீ வைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அப்பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது..

    • ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளுளில் இடைதேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
    • காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா கட்சி முடிவை எதிர்த்து சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்தார்.

    இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று [நவம்பர் 13] இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளுளில் இடைதேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்நிலையில் தியோலி - யூனியாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்(SDM) மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு கஷ்தோர் சந்த் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது.

    ஆனால் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா கட்சி முடிவை எதிர்த்து சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்தார். இதனால் கட்சியில்இருந்து மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாரத் - ஆதிவாசி கட்சி ஆதரவுடன் பிரசாரம் சுயேட்சை கேண்டிடேட்டாக பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில் சாம்ராவதாவில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த துணை நீதிபதி அமித் சவுத்ரிதனது ஆட்கள் 3 பேரை அழைத்துவந்து கள்ள ஒட்டு போட முயன்றதாக குற்றம்சாட்ய மீனா, அவரது அவரது கன்னத்தில் அறைந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மீனாவை அங்கிருந்து அகலச் செய்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
    • அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.

    தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

    ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை என்று அரசு கூறியுள்ளது
    • மேஜைகளே பற்றாக்குறையாக உள்ள நிலையில் பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது

    ராஜஸ்தானில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்தது. சமீப காலமாக ராஜஸ்தான் அரசு பிறப்பிக்கும் வித்தியாசமான உத்தரவுகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் தெருவில் திரியும் மாடிகளை ஆதரவற்ற மாடுகள் என்றுதான் மரியாதையோடு மக்கள் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில் தற்போது அரசுக் கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ராஜஸ்தான் உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்றும், அதனைப் புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரியில் சேரும் போதே மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரிகளின் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால்  இது கல்வித்துறையைக் காவி மயமாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மாணவர் அணியின் மாநில தலைவர் வினோத் ஜாகர், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் இல்லை, மேசைகள் இல்லை. ஆனால் இந்த சூழலில் மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது என்று தெரிவித்தார்.

    அரசு சார்ந்த நிறுவனங்களான தூர்தர்சன் தொலைக்காட்சி லோகோ , பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் லோகோ , வந்தே பாரத் ரெயில்கள் என அனைத்தின் வண்ணமும் காவி நிறத்தை ஒத்த நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     

    • ஒருவித பாக்டீரியாவால் பறவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
    • பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

     ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரி உள்ளது. இந்த ஏரியைச்சுற்றி ஏராளமான வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வருகின்றன.

    இங்கு கடந்த மாதம் 26-ந் தேதியில் இருந்து கொத்துக்கொத்தாக பறவைகள் செத்து வருகின்றன. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடந்த ஆய்வில், ஒருவித பாக்டீரியாவால் பறவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற அந்த பாக்டீரியா தாக்கிய பறவைகளின் இறகு மற்றும் கால்கள் செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.

    நோய் வாய்ப்பட்டுள்ள பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் பிரசவம் நடந்துள்ளது
    • இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா [Nokha] நகரரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் இந்த தன்மையோடு  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தை எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது.

    இதற்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த தன்மை கொண்ட குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சில குறிப்பிட்ட நிலைகளில் வளரிளம் பருவம் வரை உயிர்பிழைத்திருக்க முடியும் வேண்டும் தெரிவிக்கின்றனர்.

    • கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் இந்த முடிவு முன்மொழியப்பட்டது
    • பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்று அழைக்கக்கூடாது.

    தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை தெருமாடுகள் [Stray Cows] என்று அழைப்பது வழக்கம். ஆனால் அது மாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை இனிமேல் 'ஆதரவற்ற மாடுகள்' [Destitue/Helpless Cows] என்று அலையாக வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தின்போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோராராம் குமாவத் இந்த மாற்றத்தை முன்மொழிந்த நிலையில் நிலையில் தற்போது அரசு அதை உத்தரவாக பிறப்பித்துள்ளது.

    எனவே அதன்படி தெருவில் சுற்றித் திரியும் பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்பதற்கு பதிலாக ஆதரவாற்ற மாடுகள் என்றே ராஜஸ்தான் மக்கள் அழைக்க வேண்டும்.

    • எஸ்யுவி காரில் இருந்து இறங்கும் அவர் போனை பார்த்தவரே கீழ் இறங்கி நடந்து வருகிறார்.
    • 5 வது முறையே டீனாவின் வணக்கத்தை கவனித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் [Barmer] மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலெக்டர் டீனா டாபி ராஜஸ்தான் முன்னாள் பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யா - வுக்கு 7 வினாடிகளில் 5 முறை தலை குனிந்து வணக்கம் வைத்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பார்மர் மாவட்டத்தில் முன்னெடுப்பாக நடத்தப்பட்ட துப்புரவு பணிகளை பார்க்க வந்திருக்கிறார்.

    அப்போது எஸ்யுவி காரில் இருந்து இறங்கும் அவர் போனை பார்த்தவரே கீழ் இறங்கி நடந்து வருகிறார். அவரை வரவேற்க காத்திருந்த டீனா அவருக்கு 4 முறை தலை குனிந்து வணக்கம் வைக்கிறார். ஆனால் சதீஷ் அதை கவனிக்கவில்லை. அதன்பின் 5 வது முறையே டீனாவின் வணக்கத்தை கவனித்துள்ளார்.

    அதன்பின் டீனா நன்றாக செயல்படுவதாக அவரை பாராட்டியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.
    • காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ராஜஸ்தானில் பேருந்தும் டெம்போ வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று இரவு குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.

    இந்த விபத்தில் இர்பான்(38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பஸ் ஓட்டுநர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
    • இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

    உடன்கட்டை எனும் சதி 

    ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.

    இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர். சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற வழக்கம் இந்துமதத்திலிருந்து வந்தது.

    பழமைவாதம் 

    மனைவி விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் தீயில் கருகப்படுவார்கள். இந்த கொடுமையான வழக்கத்தை ஒழிக்க சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டோர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து 1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார்.

    ஆனாலும் தீவிர பழமைவாத இந்துக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தை மீறி சதி பின்பற்றப்பட்டுவந்தது. தடை செய்யப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு கடந்தும் இந்த கொடூர வழக்கத்தை பழமைவாதம் பேசும் இந்துக்கள் கைவிடுவதாக இல்லை. அப்படி 1987 செப்டம்பர் 4 ஆம் தேதி கணவனின் எரியும் சிதையில் ஏற்றப்பட்டவரே 18 வயது ரூப் கவுர். இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசி பெண் என்று நம்பப்படுகிறது.  

     எரிக்கப்பட்ட ரூப் கவுர் 

     ரூப் கவுர் 18 வயதை எட்டியதும் 1987 ஜனவரி 18 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

     

    எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சரூப் கன்வரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.

    விடுதலை 

    1996 ஆம் ஆண்டு அக்டோபரில் மாமனார் - மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.

    6 பேர் ஜாமீன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே. மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

     

    புத்துயிர் 

    பெண் சிசுக் கொலை, கௌரவக் கொலை உள்ளிட்டவை இன்னும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களின் விடுதலை வருங்காலங்களில் இந்துமத பழமைவாத கொடுமையான சதி மீண்டும் புத்துயிர் பெற ஊக்குவிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    ×