என் மலர்
நீங்கள் தேடியது "trucks caught fire"
- கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
- ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.
ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது.
- லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.
2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.

லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது.
லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.
இந்த கோர தீ விபத்து இன்று காலை 5.30 மணி யளவில் நிகழ்ந்தது. ஏற்க னவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது.
தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.
அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன.
எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். லாரிகள் தீப்பி டித்து எரியும் காட்சிகளை உயிர் தப்பியவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.






