என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா
- விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார்.
துச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக் கரசு, பொருளாளர் அருள் செல்வன், துணை செய்லா ளர் தினகரன் முன்னிலை வகித்தனர். சங்கீதா கண்ணன், திருக்குறள் முற்றோதல் குறித்து சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உசேன்,ராசா, சிவேந்தி ரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனந்தராசன் நன்றி கூறினார்.
- அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது
- விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில்
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர்
ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக விங் காமாண்டர் சாகர் துபராக், இளநிலை அதிகாரி சிவகுமார் ஆகியோர் க லந்து கொண்டு தேசிய மாணவர் படைபெயர் பலகையை திறந்து வைத்தனர். மேலும் தேசிய மாணவர் படையின் சிறப்புகள், நன்மைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி பெங்களூருவை சேர்ந்த தனியார் மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனமான எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரமுடியும்.
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது
- இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்.
கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. கன்னியகோயில், அரியாங்குப்பம் வழியாக பேரணி சென்றது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் பயன்படுத்து வோர் சீட் பெல்ட் அணி வதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் எடுத்து ரைத்தனர்.
இந்தியாவில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படு கிறது. அதிலும் குறிப்பாக 20 முதல் 50 வயதிலான இளைஞர்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டீன்.டாக்டர் ராகேஷ்சேகல், உயர் மருத்துவ தொழில் முறை கல்வி டீன். டாக்டர் மகாலட்சுமி, துணை பதிவா ளர் பெருமாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் நடனம், நாடகம் மூலம் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
அந்தப் பகுதியில் ஒரு சிறப்பு அம்சமாக அவசரநிலை பயிற்சி குறித்து வகுப்புகள் நடை பெற்று வருகிறது. நிகழ்ச்சி யின் இறுதியாக சாலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
- குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஊசுடு தொகுதி
எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சாய்.ஜெ. சரவணன்குமார் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், துணைத் தலைவர் முரளி, நிர்வாகிகள் ஏழுமலை, மீனா, தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கணபதி பா.ஜனதா தொகுதி பட்டியலின அணி தலைவர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூடப்பாக்கம் பா.ஜனதா கிளை தலைவர் முரளி, பாலு, ஜெகன், சதீஷ், ஆனந்த் ஆகியோரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
- துச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
தொகுதியை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி
எம்.எல்.ஏ. கலந்து
கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.
தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் நிர்வாகி ரகுராமன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.
- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம். இந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? மத்திய அரசு கொடுக்கும் நிதியை செலவழிக்காமலும், மக்க ளுக்கு வேண்டிய அடிப் படை வசதிகளை உருவாக் காமலும் இருப்பதற்காகவா இங்கே இரட்டை எஞ்சின் அரசு நடைபெறுகிறது?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.
ஸ்மார்ட் சிட்டி பணிக்கு ஒப்பந்தம் போட்டு 16 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த திட்டங்களுக்கு அடிக் கல் கூட நாட்ட வில்லை.
ஒப்பந்தப்படி இத்திட்டங்களை செயல் படுத்த முடியாது என்று என்.பி.சி.சி. கூறியுள்ளதாக தெரிகிறது.
அந்த நிறுவனம் பணி செய்ய தயாராக இருந்தும் பூமி பூஜை போட்டு அனுமதி கொடுக்காததால் அந்த நிறுவனம் தன் பணியை தொடங்க முடிய வில்லை.
அனுமதி அளிக்க வேண்டும்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இதுபோல் சுணக்கம் இருக்கவே இல்லை. பிரச்ச னையின் தீவிரத்தை புரிந்து கொண்டு வளர்ச்சியை மனதில் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குள் திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டி ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 65 எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு
- புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165
எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.
3 ஆயிரம் ஆசிரியர்கள்
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.
செல்போனுக்கு தடை
அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.
தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.
மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.
இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
- தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165
எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.
3 ஆயிரம் ஆசிரியர்கள்
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.
செல்போனுக்கு தடை
அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.
தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.
மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.
இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
- புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன
- ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன.
இயற்கை சீற்றத்தாலும், கடலின் குறுக்கே அமைக்கப்பட்ட துறைமுகம், தமிழ் நாடு பகுதியான தந்திராயன்குப்பம் மற்றும் பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பின்ளைச் சாவடி கிராமத்தின் தெற்கு சுடலோர பகுதிகளில், கடல் அரிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை போன்றவை களால் புதுவை பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடல் அரிப்பு மேலும் அதிகமாகி வருகிறது.
இதனால், பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராமத்தில் வாழும் மீனவர்கள் உள்ளிட்ட, கடலோர மக்களின் வீடுகள், வலை பின்னும் கூடம் போன்ற அடிப்படை உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. பாதிப்புகளில் இருந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் காக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் என்.சி.சி.ஆர். தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று, பிள்ளைச் சாவடி கிராமத்தில் கடல அரிப்பை தடுக்கும் வகையில், கடலோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் 6 தடுப்பு சுவர்கள் அமைக்கபட இருக்கின்றன. 50 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச்சுவரும் 40 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 30 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச் சுவரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்புச் சுவர்கள் வெவ்வேறு இடைவெளி விட்டு அமைக்க வும், அதில் 2 டன்னில் இருந்து 10 கிலோ வரை எடையுள்ள கருங்கல் கற்கள் 3 லேயர்களாக போடப்படும் வகையில் கடலோர தடுப்புப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6¼ கோடியாகும். இந்த் திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில். பொதுப் பணித்துறை அமைச்சர் நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, தலைமை பொறியாளர், பழனியப்பன் கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கரன, உதவி பொறியாளர் சீனு, சம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதே போல் புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் ஓடையில் ரூ.3 கோடியில் பக்கவாட்டு கால்வாயுடன் கூடிய கான்கிரீட் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் பூமி பூஜை செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
ஒட்டு மொத்தமாக புதுவையில் இன்று ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
- காரைக்கால் திருநள்ளாறில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை முன்பு, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில், திருந ள்ளாறு போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது, அங்கு திருநள்ளார் நகர் பகுதியை ச்சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரது செல்போனில் பொது மக்களுக்கு 3 எண் கொண்ட தடை செய்ய ப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாரிமுத்தை போலீசார் கைது செய்து, அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.
- இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
- தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.
அகில இந்திய அளவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பா.ஜனதா சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் டெல்லியில் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.
புதுவையில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய எம்.பி. வைத்தி லிங்கமே மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
ஆளும்கட்சி கூட்டணி தரப்பில் பா.ஜனதா போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே புதுவை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுவை வந்து கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளார்.
பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. தொகுதிதோறும் வாக்காளர் சந்திப்பு இயக்கமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் புதுவை பா.ஜனதாவினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவையை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களின் பெயரும் வேட்பாளராக பேசப்படுகிறது. இதனிடையே பா.ஜனதாவை ஆதரிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜனதா சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜனதா கட்சி கூட்டங்களில் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பா.ஜனதாவில் செயல்பட்டு வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஏற்கனவே வணிகர்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தனக்கு வணிகர்கள், தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது போல் பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகி ஆகியோரும் விரும்புவதாக கூறப்படுகிறது.
அவர்கள் தனித்தனியாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.






