search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் மைனர் பெண்ணை காதலித்த பெயிண்டருக்கு அடி உதை4 பேர் மீது வழக்கு
    X

    காரைக்காலில் மைனர் பெண்ணை காதலித்த பெயிண்டருக்கு அடி உதை4 பேர் மீது வழக்கு

    • பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முல்லை நகர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (வயது 28). பெயிண்டர் வேலை செய்கிறார். இவர் அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்த தாக கூறப்படுகிறது. அந்த ப்பெண் மைனர் என்பதால், பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் தந்தை, அவரது உறவினர்கள் அரவிந்த்ராஜை பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த் ராஜ் தனது நண்பர் நந்தகோபால் மற்றும் சிலருடன் அங்குள்ள சுடுகாடு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மேற்கண்ட 4 பேர், அரவிந்த்ராஜ்ஜை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்துள்ளனர். தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அரவிந்த்ராஜை விரட்டி சென்று அடித்த பொழுது, அவரது தாய் மீனா தடுத்த பொழுது அவரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அரவிந்த் ராஜ், அவரது தாய் ஆகியோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×