என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் திருநள்ளாறில் வீட்டு சுவர் மீது டிராக்டர் மோதி சேதமானதால் விவசாயி மீது தாக்குதல்
- தனது டிராக்டரை விவசாயப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது.
- இது குறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தாமனாங்குடி மாதாகோவில் வீதியை ச்சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது61). விவசாயி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது டிராக்டரை விவசாய ப்பணிக்காக எடுக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரன்ஸ் (25) என்பவர் வீட்டு சுவர் மீது மோதியது. இதில், லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து லாரன்ஸ் கேட்டபோது, சேதமான சுவரை சரி செய்து கொடுத்துவிடுவதாக அடைக்கலசாமி கூறினார்.
இந்நிலையில், மதியம் வீட்டில் அடைக்க லசாமி தனியாக இருந்தபோது, லாரன்ஸ் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து, அடைக்கல சாமியை ஆபாச மாக திட்டி, கையில் வைத்தி ருந்த மரக்க ட்டையால் தாக்கி னார். இதில் காயம் அடைந்த அடைக்க லசாமி, திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்ஸை தேடிவரு கின்றனர்.