search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிபா வைரஸ் எதிரொலி- புதுச்சேரி பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    நிபா வைரஸ் எதிரொலி- புதுச்சேரி பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 5ஆக உயர்ந்துள்ளது.

    இதனால், கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதன் எதிரொலியால், கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாஹேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    மேலும், புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாஹேயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×