என் மலர்
புதுச்சேரி
- தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடி படை போலீசார் ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 3 ½ கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர்.
இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளரான முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் எம்.டெக். பட்டதாரி ஆவார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவருடைய நண்பர் அஸ்வின் (34) மூலம் பெங்களூருவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து புதுவை திருமால் நகரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அஸ்வினையும் போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வினோத்குமார் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார். மற்றொருவரான அஸ்வின் புதுவை அரசியல் கட்சி நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
- நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.
நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
- ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
- புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் ரங்கசாமியோடு என்ஆர்.காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள், துணை சபாநாயகர், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் உள்ளனர்.
அரசு பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டு ஆட்சி அமைந்தது முதல் கடந்த 2 ½ ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை.
இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு தங்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா மேலிடத்திடம் கேட்டு வருகின்றனர்.
பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், தன்னைவிட தனது தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக புகார் செய்தார். தனது தொகுதி பணிகளை நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார்.
முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் அடங்குவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.
நேற்று மாலை புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை மேலிட பொறுப்பாளரிடம் மனக்குமுறலாக வெளிப்படுத்தினர்.
வாரிய பதவி இல்லாமல் மக்களை எப்படி சந்திப்பது? வாரிய பதவி இருந்தால் தொகுதியை சேர்ந்த கட்சியினருக்கும், தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் சலுகைகள் அளிக்க முடியும். இப்போது ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பா.ஜனதா அமைச்சர்கள் வகிக்கும் துறைகளில் வாரியங்கள் உள்ளது. அந்த வாரிய பதவியை அளிப்பதில் என்ன பிரச்சினை? பா.ஜனதா அமைச்சர்களே வாரியம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் பிரதான அங்கமாக இருக்கும். அப்படியிருக்க கட்சியில் உள்ள அந்த சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கினால்தான் அப்பிரிவு மக்கள் ஓட்டுக்களை நாம் பெற முடியும்.
நாங்கள் கேட்கும் போதெல்லாம் முதலமைச்சர் தரவில்லை என தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அப்படியானால் அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தரலாம். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்களின் வலியும், சூழ்நிலையும் புரியும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தருவதால் எங்களுக்கு எந்த சலுகையும் தர மறுக்கின்றனர்.
தொகுதியில் உள்ள கோவில் கமிட்டிக்கு கூட நிர்வாகிகளை நியமிக்க போராட வேண்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தொகுதியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தற்போது நெருக்கடி அளித்தால் வாரிய பதவி கிடைக்கும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். இதனால பா.ஜனதா மேலிடம் எம்எல்ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
- தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.
ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
- காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது.
- இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து, காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஸ்டேரிங் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அங்கும்மிங்கும் அலைந்து, சாலையில் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரது 3 சக்கர வாகனத்தில் மோதி, தொடர்ந்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார். அதேபோல், பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து, இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் காரைக்காலை அடுத்த அண்டூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர்.
- பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. கல் மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இவர் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வாழை இலை போட்டு முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர். மாணவர்கள் பசியுடன் சிறப்பு வகுப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க ஊக்குவிக்கும் விதமாகவும் ஆசிரியர் செய்துள்ளார்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
பள்ளியில் பயிலும் மாணவியர் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்க சென்றபோது அவர்களின் ஏழ்மை கருதி அனைவருக்கும் ஒரே வண்ணத்தில் கலாச்சார உடையையும் ஆசிரியர் கிருஷ்ணசாமி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
- குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
- இனியாவது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், கிராம பஞ்சாயத்து ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும், புதுச்சேரி அரசை கண்டித்து, காரைக் காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழி யர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலா வுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலை வர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனும் முதல மைச்சரின் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்க ளை பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் செய்யும் உள்ளாட்சித்துறை, இனியா வது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செய லாளர் சகாயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், சம்மேளனன நிர்வாகிகள் கலைச் செல்வன், திவ்விய நாதன், சந்தன சாமி, புக ழேந்தி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
- மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
- கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் கூடப்பாக்கம் தச்சு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது50). இவர் கூடப்பாக்கம் மந்தைவெளியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தபோது 19 வயது இளம்பெண் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்பது போல் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவருடன் வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்துள்ளார். அதன்பிறகு கருணாகரனிடம், ஒருநாள் உங்களுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி இருவரும் வில்லியனூர் கணுவாப்பேட்டை சுடுகாடு அருகே புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபோது, ஏற்கனவே இருட்டில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் திடீரென டார்ச் லைட் அடித்து எங்கும் ஓடக்கூடாது என மிரட்டி அந்த கோலத்திலேயே படம் எடுத்துள்ளனர்.
பிறகு அந்த பெண்ணின் பெயரை கூறி ஆடைகளை உடுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் இவர்கள் திட்டம் போட்டு பணம் பறிக்க அழைத்து வந்தது கருணாகரனுக்கு தெரியவந்தது.
இதனிடையே அந்த கும்பல் கருணாகரனிடம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோவை இணைய தளத்தில் போட்டு விடுவோம். குடும்பத்திலும் காட்டி அவமானப்படுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதால் உடனே கருணாகரன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை ஜிபே மூலம் கொடுத்துள்ளார்.
ஆனாலும் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியதால் கருணாகரன் அவரது நண்பர் கடையில் இருந்து ரூ.30 ஆயிரத்தை வாங்கி கொடுத்தார்.
மொத்தமாக ரூ.1.25 லட்சத்தை வாங்கி கொண்டு, செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட்டதாக கூறிவிட்டு அந்த வாலிபர்களும், இளம்பெண்ணும் சென்று விட்டனர்.
இதுகுறித்து கருணாகரன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாய்பேட்டையை சேர்ந்த ராமு, பிரகாஷ், அருண்குமார் மற்றும் ராமு மனைவியின் தோழி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராமு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டதால் ராமு மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை போட்டதும், கருணாகரனை கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டி இவரிடம் அதிக பணம் உள்ளது என்று கூறி சிக்க வைத்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஏற்கனவே மங்கலம் பகுதியில் ஒருவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்து சென்று வீடியோ எடுத்து அவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண், அருண்குமாரை தேடி வருகின்றனர்.
- சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது
- சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகை அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 10-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் கடந்த 8-ந் தேதியே சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசையிடம் கடிதம் அளித்தார். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது. முடிவாக கடந்த 21-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
அதையடுத்து, சட்டசபையில் சந்திர பிரியங்கா பயன்படுத்திய அறையில் இருந்து பொருட்கள் காலி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சட்டசபை செயலர் தயாளன் அறையை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினார்.
மேலும் சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த நோட்டீஸ் கிழித்து எறியப்பட்டு, முதலமைச்சரின் தனிச்செயலர் அமுதன் கையெழுத்திட்ட 'சீல் நோட்டீஸ்' அறை கதவில் ஒட்டப்பட்டது.
சட்டசபை வளாகம் சட்டசபை செயலர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அமைச்சர்களின் அலுவல்கள் மற்றும் அறை ஒதுக்கீடு உள்ளிட்ட அதிகாரங்கள் முதலமைச்சரின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால் சந்திர பிரியங்கா அறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் முதலமைச்சர் அலுவலகத்திற்கே உள்ளது என நிரூபிக்கும் வகையில், 2-வது முறையாக சீல் வைத்து, சந்திர பிரியங்கா அறை பூட்டப்பட்டது.
- காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர ரோந்துப்போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ெரயில் நிலையம் அருகே உள்ள காட்டுநாயக்கன் தெரு சந்திப்பில், 3 பேர், பொது மக்களின் அமைதிக்கு இடையூறாக, பொது இடத்தில் சத்தம் போட்டு மது அருந்திகொண்டிருந்தனர். இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் புதுச்சேரி நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பைச்சேர்ந்த ஜோதிமணி (வயது 35), அவரது நண்பர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கண்டபிள்ளைத் தெருவைச்சேர்ந்த ஜான்பாஸ்கோ (36), காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கீழசுப்புராய புரத்தைச்சேர்ந்த அருளானந்தமேனன் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






