search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில்  புதுச்சேரி அரசை கண்டித்து, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    புதுவை அரசை கண்டித்து, காரைக்காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காரைக்காலில் புதுச்சேரி அரசை கண்டித்து, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
    • இனியாவது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், கிராம பஞ்சாயத்து ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும், புதுச்சேரி அரசை கண்டித்து, காரைக் காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழி யர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலா வுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலை வர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனும் முதல மைச்சரின் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்க ளை பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் செய்யும் உள்ளாட்சித்துறை, இனியா வது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செய லாளர் சகாயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், சம்மேளனன நிர்வாகிகள் கலைச் செல்வன், திவ்விய நாதன், சந்தன சாமி, புக ழேந்தி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×