என் மலர்
புதுச்சேரி
- நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார்.
- மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள்.
புதுச்சேரி:
சாலை, தெருவிளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை, வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும். என, நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த நிரவி-திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கணல், இது குறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நிரவி கொம்யூன் மானாம் பேட்டை கிராமத் தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக வழங்கப்படுகிற தண்ணீரை, கலெக்டராகிய நீங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வுக்கு உட்படுத்துங்கள். மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள். மானாம் பேட்டை வடக்கு தெரு இருளில் கிடக்கிறது.
எனவே, சாலை, தெரு விளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவைகளை 50 கிராமங்களில் இருந்து முதல் கட்டமாக 200 பேர், மேற்கண்ட அனைத்து அரசு ஆவணங்களையும், வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
- ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
புதுச்சேரி:
காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.
- விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.
- நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, புகார் தரும் நபர்களிடம் விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுங்காடு பகுதியில், இருவர் தங்களது செல்போன்களை தவறவிட்டனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர், சி.ஐ.இ.ஆர்.போர்ட்டல் ஆப் மூலம் தொலைந்து போன செல்போன் எண்களை வைத்து அதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்பைடைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
- கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர், நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சந்திர பிரியங்கா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு துறைகளில் திருப்திகரமாக செயல்படாததால்தான் நீக்கப்பட்டதாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது முதலில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்திருந்த சந்திர பிரியங்கா முதலமைச்சருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செயல்படாததால் அவரை நீக்க எனக்கு பரிந்துரைத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது துறைகளில் செய்த வளர்ச்சிப்பணிகள், சாதனைகள், மாற்றங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு துறைகளிலும், தான் செய்த வளர்ச்சி, மாற்றங்களை தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்கள் பார்வைக்கும், அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த ஒய் 20 மாநாட்டில் பங்கேற்ற புதுவை கவர்னர் தமிழிசை, நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மேடையிலேயே பாராட்டி பேசி சான்றளித்தார்.
புதுவை அரசு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்கப்படும் விருதும் கடந்த 2022-ம் ஆண்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என எனது தொழிலாளர் துறைக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.
இதுதவிர ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்டு, அதில் தான் செய்த மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.
- சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்ததால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சந்திர பிரியங்காவிற்கு பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் என்னை சந்தித்து இருக்கலாம்.
சந்திர பிரியங்கா கூறியுள்ள காரணங்கள் வருத்தம் அளிக்கிறது. சாதி ரீதியான பிரச்சினை எதுவும் கிடையாது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்தால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட உள்ளதை அறிந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்.
- காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் வெளியிட்டார்.
அந்த கடிதத்தில், மறைமுகமாக காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், தலித் சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிராலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்காலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் சமூகங்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
ஏனெனில் திருமுருகன் வன்னியர், தலித், சிறுபான்மை அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திரபிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார்.
- புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைச்சரவை நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தான் தலித் என்பதாலும், பெண் என்பதால் பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அதோடு, தனது பணி தொகுதி மக்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தனித்தனியாக அமைச்சர் சந்திர பிரியங்கா அனுப்பியுள்ளார்.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு புதுவை சட்டமன்றத்தில் ஒரு பெண் அமைச்சராக இருந்தார்.
அதோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வும் சந்திர பிரியங்காதான். அவரும் ராஜினாமா செய்துள்ளது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை அவரின் மாளிகையில் இரவில் சந்தித்தார். சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அவர் திரும்பி விட்டார்.
அப்போதே ரங்கசாமி, தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக கவர்னர் தமிழிசை மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் தமிழிசை தேர்தல் நடைபெறும் தெலுங்கானா சென்றுவிட்டார். திருமுருகன் அமைச்சர் ஆவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் தமிழிசை இன்று சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை திருமுருகன் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. இதில் மாகி, ஏனாமில் தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு காரைக்கால் வடக்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திரபிரியங்காவும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
இதனிடையே திருமுருகன் நேற்று மாலை கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை திருமுருகனுக்கு வழங்கினார்.
- யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று.
- சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
ராஜினாமா குறித்து தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், தான் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்ததாகவும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்தே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.
இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று. அதிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் புதுவை பெண் அமைச்சர் தனக்கு பாலின தாக்குதல் நடந்திருப்பதாக புகார் கூறியிருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு.
- பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை. அவர் வகித்த துறைகளுக்கு நியமிக்கப்பட்ட செயலர்கள், தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
இது காரைக்காலுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டது. பட்டியலின அமைச்சர் பதவியை வேறு யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? முதலமைச்சர் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் என்ற பெருமை கிடைத்திருந்தது. எனவே இதை சிந்தித்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம்:-
அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு. தலித் பெண் என்ற காரணத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் அமைச்சராக தொடர முடியவில்லை என கூறியுள்ளது.
என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் அவமானம். 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி வாய்ச் சவடால் விடுகிறார். பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.
சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ.வுக்கும் வழங்கி அமைச்சர் பதவியை என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு அதிகார பீடத்திலிருந்து இறக்கியுள்ளது. இது பெண் சமூகத்திற்கு எதிரான ஆணாதிக்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அமைச்சருக்கு ஏற்பட்ட அநீதி.
இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா:-
ஒரு பெண் அமைச்சருக்கே இப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன? பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட நேரத்தில் புதுவையில் 40 ஆண்டுக்கு பின் அமைச்சராக ஒரு பெண் இருப்பதை ஏற்க முடியாத ஆணாதிக்க அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமாவுக்கு காரணமான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்
- தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது.
- சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர்.
அவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.
இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள்.
ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.
மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.
சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா?
கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.
இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
எனக்கு இப்பதவியினைக் கொடுத்த முதலமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்.
மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.
எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான எனது நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.
இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 6 மாத காலமாக தனது துறைகளில் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார்களும் சென்றது. அவர் சந்திர பிரியங்காவை அழைத்து அறிவுரையும் கூறினார்.
ஆனால், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையை ராஜ்நிவாஸில் சந்தித்தார். அப்போது கவர்னர் தமிழிசையிடம், அமைச்சர் சந்திர பிரியங்கா செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவரை நீக்கவும் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால், பதவியை பறிக்கும் முன்பு, அமைச்சர் சந்திர பிரியங்கா முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- புஷ்பராஜிக்கு மது பழக்கம் இருந்தமையால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமா விளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது48). இவரது மனைவி சந்தா னமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (கூயது 20), சன் சால்ட் கிங் (17) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் கூலி வேலை செய்து வந்தார். புஷ்பராஜிக்கு மதுபழக்கம் இருந்தமையால், தினமும் மது குடிவுவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பகல் வழக்கம் போல், மது அருந்தி விட்டு புஷ்பராஜ் வீட்டுக்குசென்றுள்ளார். அப்போது சில வீட்டு பொருட்கள் வீட்டின் சில பகுதிகளில் கிடந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி கிடக்கிறது. என மனைவி சந்தான மேரியையும், மகள் லிட் லார்ட் ஆப் குயினை வீட்டை விட்டு வெளியே போகுமாறு புஷ்பராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, சந்தானமேரி தனது மகளுடன், பக்கத்து தெருவான சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாலை அதே தெருவைச்சேர்ந்த ஜான்பிட்டர் என்பவர், ஊர் கூட்டத்திற்கு புஷ்ப ராஜை அழைக்க சென்று ள்ளார். பலமுறை சத்தம் போட்டும் புஷ்பராஜ் வராததால், திறந்திருந்த கதவின் வழியே ஜான்பீட்டர் எட்டி பார்த்தார். அப்போது, புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து, சந்தானமேரிக்கு தகவல் கொடுத்து, உடலை இறக்கி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், உடலை கைபற்றி, காரை க்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழா.
- நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம்.
புதுச்சேரி:
வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியானது நேற்று மாலை 3.40 மணிக்கு நடந்தது. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிவாலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி சமேத ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள ராகு- கேது தனி சன்னதியில் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. மதியம் 3.40 மணியளவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராகு பகவான், கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.






