என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    • எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றார்.
    • சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    புதுச்சேரி:

    சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாக சந்திர பிரியங்கா செயல்பட எந்த தடையும் இல்லை.

    பதவி நீக்க கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.

     சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    • சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
    • வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் தமிழிசையும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பணி திருப்தி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.

    வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்

    ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் அவர் வகித்து வந்த துறைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

    அதோடு புதுவை கடற்கரை சாலையையொட்டி சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.

    இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றார். காரைக்கால் பஞ்சாட்சபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்காட்சி நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். அவரை அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சந்திர பிரியங்கா வழங்கினார். விழாவுக்கு அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்தார்.

    மேலும் அந்த அரசு விழா குறித்த சந்திர பிரியங்காவின் செய்தி தொடர்பு வாட்ஸ்-அப் குழுவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர், சபாநாயகர் நீக்கப்பட்டதாக அறிவித்த பின்னும் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. 

    • பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
    • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.

    பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.

    இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

     

    இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
    • 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர். 

    • ஆரோக்கியசாமி மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் திருவிடைமருதூர், புதூர் வடக்கு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிடா உஷாரானி. இவர்களுக்கு ஸ்ரீவாக் (வயது 24), கிலாடிஸ் (22), மார்க்வாக் (20) என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ரீவாக் என்ஜினியரிங் முடிததுவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கிவீச ப்பட்டார்,

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைகாக சேர்த்து இருப்பதாக, ஆரோக்கி யசாமியின் நண்பர் சிவக்குமார் என்பவர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கூறியுள்ளார். உடனே ஆரோக்கியசாமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீவாக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, ஆரோக்கியசாமி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
    • ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.

    இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக கிராக்கி உள்ளது.

    ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ரத்தினம் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து வாங்கி சென்றார். 

    • காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க அமைப்பா ளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மதகடி தோமாஸ் அருள் திடலைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24). இவர் கும்ப கோணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், 2-ம் பரிசு பெற்ற மகிழ்ச்சியில், நண்பர்கள் டேவிட், சூரியா, அலெக்ஸ், ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. அப்போது, இந்த கபடிக்குழு வெற்றிபெற நான்தான் காரணம் என ரமேஷ் என்பவர் கூறியதாக வும், அதற்கு, பிரசாந்த் ஏன் சூரியா நல்ல விளையாட வில்லையா என கேட்டதாக வும் இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பீர்பாட்டி லால் பிரசாந்த் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காயம் ஏற்பட்ட பிரசாந்த் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு பிரசாந்த் நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    அதேபோல், ரமேஷ் நிரவி போலீசில் கொடுத்த மற்றொரு புகாரில், பிரசாந்த் இந்த கபடிகுழு வெற்றி பெற நான்தான் காரணம் என கூறியதால் எங்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குசென்றேன். வீட்டின் அருகே சென்ற போது, மேற்படி பிரசாந்த் தனது நண்பர்கள் அஜித், சிவக்குமார், கார்த்திக் ஆகி யோருடன் என்னை வழி மறித்து, என்னை தாக்கி னார்கள். இதில் காயம் அடைந்த நான் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்க பட்டேன். மேலும் என் மீது தாக்குதல் நடத்திய மேற்கண்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார்.
    • பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

    சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதால் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் 11-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டியளித்தார்.

    அப்போது புதுவை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    துறைரீதியான செயல்பாடுகளில் திருப்தியளிக்காததாலும், அதிருப்தியாலும் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் அளித்தார்.

    இந்த கடிதத்தின்பேரில் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆனாலும் இதுவரை சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என குழப்பமான நிலை நீடித்து வந்தது. அரசாணை வெளி வராதது பல்வேறு சர்ச்சைகளையும், சமூகவலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.

    தெலுங்கானா சென்ற கவர்னர் தமிழிசை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று புதுவை திரும்பினார். கவர்னர் மாளிகையில் நடந்த பள்ளி மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது, நிருபர்கள் கவர்னர் தமிழிசையிடம், சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? அரசாணை வெளிவராதது ஏன்.? என பல கேள்விகளை எழுப்பினர்.

    அதற்கு தமிழிசை, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ, அமைச்சர்களின் பணியை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. சுயநலனால் நல்ல வாய்ப்பை சந்திர பிரியங்கா இழந்துள்ளார் என்று கூறினார்.

    அதோடு, அரசாணை வெளிவராததற்கு நிர்வாக ரீதியாக சில சட்டதிட்டங்கள் உள்ளது என்றும், உரிய அறிவிப்பு வெளியாகும்போது பல உண்மைகள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

    மேலும், பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை. முதலமைச்சர் தந்தை போலவும், பிற அமைச்சர்கள் சகோதரர்கள் போலவும் சந்திர பிரியங்காவை பார்த்துக்கொண்டனர்.

    அவர் சாதி, பாலின ரீதியில் குற்றம் சாட்டியிருக்கக்கூடாது. நானும் சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன் என்றும், இது என்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர், அமைச்சர் இடையிலான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை கவர்னர் தமிழிசை மீண்டும் உறுதி செய்தார். அதோடு அரசாணை வெளிவர நிர்வாக தாமதமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில் சந்திர பிரியங்கா நீக்கம் குறித்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
    • அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.

    ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.

    அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.

    அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.

    அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    • நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார்.
    • மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    சாலை, தெருவிளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை, வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும். என, நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த நிரவி-திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கணல், இது குறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நிரவி கொம்யூன் மானாம் பேட்டை கிராமத் தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக வழங்கப்படுகிற தண்ணீரை, கலெக்டராகிய நீங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வுக்கு உட்படுத்துங்கள். மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள். மானாம் பேட்டை வடக்கு தெரு இருளில் கிடக்கிறது.

    எனவே, சாலை, தெரு விளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவைகளை 50 கிராமங்களில் இருந்து முதல் கட்டமாக 200 பேர், மேற்கண்ட அனைத்து அரசு ஆவணங்களையும், வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×