search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repair works"

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    சென்னை - அரக்கோணம் இடையே ரெயில் பாலம் மறுகட்டமைக்கும் பணி நடக்கிறது

    திருப்பூர்:

    சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் தன்பாத் மற்றும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் சென்னை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் மறுகட்டமைக்கும் பணி நடக்கிறது.இதனால் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு இயக்கப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் இன்று முதல் 10ந் தேதி வரை 7நாட்களுக்கு சென்னை அருகேயுள்ள பெரம்பூர் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் நிலையத்துக்குச் செல்லாது.அதேபோல கொச்சுவேலி - இந்தூர் இடையே இயக்கப்படும் அஹில்யா நகரி அதிவிரைவு ெரயில் பெரம்பூர் மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும். சென்னை சென்ட்ரலுக்கு செல்லாது.

    கொச்சுவேலி - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 5 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - கோர்பா சூப்பர் பாஸ்ட் ஏப்ரல் 6 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம் - பரூனி எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7-ந் தேதியும் சென்னைக்கு செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழையால் சேதமடைந்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    தமிழகத்தில் தற்போது பருவமழையின் காரணமாக, ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் ஆகியவைகளில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

    மழைகாலங்களில் பெறப்படும் நீரை முறையாக சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டு, தடை யின்றி கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகளிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பேரிடா் காலங்களில் எதிர்பா ராதவிதமாக ஏற்படும் விளைவுகளை எதிர்கொ ள்வதற்கு ஏதுவாக, மீட்புப்பணிகளுக்கான தன்னார்வலா்கள் மற்றும் மணல் மூட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

    தற்போது பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் உட்கோ ட்டத்தைச் சோ்ந்த செவ்வூர் - கண்டவராயன்பட்டி சாலையில் உள்ள சிறு பாலம் சேதமடைந்து உள்ளது. இதை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டியுடன் பார்வையிட்டு சேதமடைந்த சிறு பாலத்தை பெரிய பாலமாக கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அ.வேலங்குடி ஊராட்சியிலுள்ள கருப்பா் கோவில் பகுதியிலுள்ள ஊரணி மழையின் காரணமாக, நிரம்பி, ஊரணியின் சுற்று ச்சுவா் இடிந்து பழுது ஏற்பட்டுள்ளது.

    அதனையும் தற்காலிமாக, மணல் மூட்டைகளை கொண்டு சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, சுற்றுச்சுவா் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கும் அலுவலா்களுக்கு அமைச்சா் பெரியகருப்பன் அறிவுறுத்தினார்.

    • ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
    • பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட பாணபரன் மற்றும் படமாத்தூர் கண்மாய்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 யூனியன் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்துவது மட்டுமின்றி, நீர்வள ஆதாரங்களை சீரமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், சங்கன் பிட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை யூனியனுக்கு உட்பட்ட 43 ஊராட்சிகளில் 88 தொகுப்புக்களில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் தொடர்பாக சிவக ங்கை யூனியனுக்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி, கரும்பாவூர் கிராமத்தில் ரூ.8.56 லட்சம் மதிப்பீட்டில் பாணபரன் கண்மாய் சங்கன் பிட் மற்றும் படமாத்தூர் கிராமத்தில் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் படமாத்தூர் கண்மாய் சங்கன் பிட் ஆகியவைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    பருவமழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதற்கு ஏதுவாக இந்த பணிகளை தரமான முறையில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டறிந்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) விசாலாட்சி, உதவிப்பொறியாளர்கள் கிருஷ்ணகுமாரி, தேவிசங்கர், சையது இப்ராகிம், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் (ஓவர்சியர்) செந்தில்நாதன், சாலை ஆய்வாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுமதி சரவணன் (பில்லூர்), மங்களம் (படமாத்தூர்) ஆகியோர் உடனிருந்தனர்.

    • தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.
    • பி.என்.ரோடு வழியாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, திருவண்ணாமலைக்கு ஊத்துக்குளி மார்க்கமாக செல்லும் பஸ்கள் திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.

    மாநகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான முன் னேற்பாடுகளை மேயர் தினேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து இன்று அதிகாலை முதல் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் திருப் பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு பலகை யுனிவர்செல் தியேட்டர் ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டன.மேலும் யுனிவர்செல் தியேட்டர் ரோட்டில் இயங்கி வந்த தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படவில்லை.

    சேலம், ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ் கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பி.என்.ரோடு வழி யாக புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலையம் வந்து ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளு மாறு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இன்று முதல் நாள் என்பதால் சேலம், ஈரோடு செல்லும் பயணிகள் யுனிவர்சல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நின்ற போக்குவரத்து கழக அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    ×