search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலம்  சீரமைப்பு பணிகளால் தன்பாத்-ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் சென்னை செல்லாது
    X

    கோப்புபடம்

    பாலம் சீரமைப்பு பணிகளால் தன்பாத்-ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் சென்னை செல்லாது

    சென்னை - அரக்கோணம் இடையே ரெயில் பாலம் மறுகட்டமைக்கும் பணி நடக்கிறது

    திருப்பூர்:

    சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் தன்பாத் மற்றும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் சென்னை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் மறுகட்டமைக்கும் பணி நடக்கிறது.இதனால் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு இயக்கப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் இன்று முதல் 10ந் தேதி வரை 7நாட்களுக்கு சென்னை அருகேயுள்ள பெரம்பூர் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் நிலையத்துக்குச் செல்லாது.அதேபோல கொச்சுவேலி - இந்தூர் இடையே இயக்கப்படும் அஹில்யா நகரி அதிவிரைவு ெரயில் பெரம்பூர் மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும். சென்னை சென்ட்ரலுக்கு செல்லாது.

    கொச்சுவேலி - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 5 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - கோர்பா சூப்பர் பாஸ்ட் ஏப்ரல் 6 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம் - பரூனி எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7-ந் தேதியும் சென்னைக்கு செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×