என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    • புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
    • புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.

    மேஜர் அஜய் சங்வான் தலைமையில்ஆறு ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் தற்போது மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்தனர்

    • மயிலம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது.

    நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல் இரவு 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கரையை கடந்தது. பின்னர் நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது.

    இதனால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் இருந்தே இந்த பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் கரையை கடந்த போதும், கரையை கடந்து முடித்த பின்னரும் மிக கனமழை கொட்டி தீர்த்தது.

    புதுச்சேரி மற்றும் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர்ச்சியாக பெய்த மழை இரவு முழுவதும் நீடித்ததால் புதுச்சேரி மற்றும் மயிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்தது. மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கும், புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கும் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

    இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இதே போன்று மயிலம் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று மாலையில் இருந்தே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் புதுவை மாநிலம் இருளில் மூழ்கியது. புதுச்சேரி வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், ஞானபிரகாசம் நகர், கிருஷ்ணா நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் தவித்தனர். உயிருக்கு பயந்து வீடுகளின் மாடியில் தஞ்சம் புகுந்தனர்.

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள உப்பனாறு வாயக்கால் நிரம்பி வழிவதால் அதை ஒட்டியுள்ள கோவிந்த சாலை, திடீர் நகர், கென்னடி நகர், வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி புதுச்சேரி மாநில அரசு துறை அதிகாரிகள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் சுமார் 10 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. 208 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் 1½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    புதுச்சேரியை போன்று விழுப்புரம் மாவட்டமும் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மயிலம் பகுதியில் பெய்துள்ள மிக கன மழையால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 570 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    மரக்காணத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. 17 இடங்களில் மரம் முறிந்து விழுந்தது.

    2 கோழிப்பண்ணைகளில் மழை நீர் புகுந்தது. அங்குள்ள பயிரிடப்பட்டுள்ள புடலங்காய், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கிது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தண்ணீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வீடு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. மழை காரணமாக விடூர் அணை நிரம்பியது. இதன் கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது 10 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் தென் பெண்ணையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் 36 ஏரிகள் உள்ளது. மழை காரணமாக 20 ஏரிகள் நிரம்பி உள்ளது. மழை காரணமாக ஒட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், சவுக்கு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    ஏரி கிராம பகுதிக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. திண்டிவனம், மயிலம் சாலை தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.
    • தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இப்போதும் எடுத்து வருகிறோம். 1971-ம் ஆண்டில் 31 செ.மீ. மழை பெய்தது. அதுதான் அதிகபட்சமான மழை. தற்போது 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் அதிகபட்சமான மழை. எதிர்பார்க்காத மழை.

    எல்லா வாய்க்காலிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றமாக இருந்ததால் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. கடல் நீரை உள்வாங்காததால் வாய்க்கால் நிறைந்து தண்ணீர் ஊருக்குள் வந்தது. எல்லா பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்தது.

    மழை 3 மணி நேரம் பெய்யாமல் இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும். தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து வருகிறோம்.

    மக்களை வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் காவல் துறையினர் சொல்வதை கேட்டு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

    நடேசன் நகர், உப்பளம் வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். எல்லா துறையினரும் வேலை செய்து வருகிறார்கள். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    • அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
    • நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    புதுவையில் அதி கனமழை, கடும் சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடந்த நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் பொதுமக்களுக்கான நிவாரண முகாமாக செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

    நிவாரண முகாம் செயல்படுவது குறித்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் குலோத்துங்கள் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை நிவாரண முகாமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது
    • விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை 10.8, திருத்தணி 11, மீனம்பாக்கம் 11, நுங்கம்பாக்கம் 11, செங்கல்பட்டு 11.1, திருநின்றவூர் 13, கொளப்பாக்கம் 12, புழல் 9.55, செம்பரம்பாக்கம் 9.25, எண்ணூர் 6.6, பள்ளிக்கரணை 8.02, திருவண்ணாமலை 17, செய்யாறு 16, ஆர்.கே.பேட்டை 12, காஞ்சிபுரம் 12.05, கள்ளக்குறிச்சி 10.6, திருப்பத்தூர் 7.8, வேலூர் 7.6, விழுப்புரம் 49.8, கடலூர் 18, புதுச்சேரி 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
    • ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது

    காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துக் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.

    தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. மொத்தமாக ஹிஸ்புல்லாவினரின் பேஜர் கருவிகளை வெடிக்கச் செய்தது, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது என இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

     

    இதனால் லெபனான் மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தனர். 3,800க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதன்படி ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 27 முதல் அமலுக்கு வந்தது.

    இதை ஹிஸ்புல்லாவின் தற்போதைய தலைவர் நைம் காசிம் வெற்றியாக வர்ணித்தார். இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, நாம் அவர்களை தடுத்ததால் நாம் பாதுகாப்பாக உள்ளோம், இது நமது எதிரி ஹிஸ்புல்லாவை அழிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

     

     ஹிஸ்புல்லா தலைவர் - நைம் காசிம் 

    இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

    ஆனால் தாங்கள் எந்த தாக்குதலுக்கும் தயாராக வில்லை என ஹிஸ்புல்லா மறுத்துள்ளது.போர் காரணமாக வெளியேறிய லெபனானியர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களைத் தடுக்கும் வகையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

     

    ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. லிட்டானி ஆற்றின் வடக்க்குப் பகுதிக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்வாங்க வேண்டும். இஸ்ரேல் படை தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும்.

    எல்லையின் இடைப்பட்ட பகுதியை லெபனான் மற்றும் ஐநா அமைதிப்படை கண்காணிக்கும் என்பதே ஒப்பந்தமாகும். ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த இரண்டு நாட்களில் இஸ்ரேல் தாக்குதல் நடந்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.

    மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும், அடுத்த 3- 4 மணி நேரத்தில் புயல் கரையை முழுமையாக கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால், பொது மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, பொது மக்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை வரை அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    • கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார்.
    • திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார்.

    புதுச்சேரியில் பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணியிடமிருந்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் கர்ப்பிணியின் நகையை பறித்து சென்றனர்.

    திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நகையை பறித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    • கடல் அலைகள் 5 அடிக்கு மேல் எழுந்தது.
    • கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுவை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இது புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால், தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 2-ந் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரை 7.5 செ.மீ. மழை புதுவையில் பதிவானது. நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த தரைக்காற்று வீசியது. கடலில் அலைகளில் 5 அடிக்கு மேல் எழுந்தது.

    இதையடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பாண்டி மெரீனா கடற்கரைக்கு செல்லும் பாதையையும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கடல் சீற்றத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டார்.

    பலத்த காற்று வீசியதில் இந்திராநகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே ராட்சத மரம் பெயர்ந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் இந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    மோசமான வானிலை நிலவுவதை குறிப்பிடும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை ஒன்றுடன், ஒன்று பிணைத்து கட்டி வைத்துள்ளனர்.

    சோலை நகர், வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு உட்பட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். புயல் கரையை கடக்குக்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.


    புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நகர பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இல்லை. பொதுமக்களும் வீடுகளில் முடங்கினர்.

    புதுவையில் இன்று காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருவதால் மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

    புதுச்சேரியில் புயல், கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் ஆலோசனை நடத்தினார்.

    புயல், கன மழையை எதிர்கொள்ள அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
    • புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

    ×