என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singrigudi Lakshmi Narasimha"

    கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை தவளகுப்பம் அருகே தமிழகப்பகுதியான சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை யடுத்து கோவில் சன்னதியில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து உரிய அனுமதிபெற்று ஒரு ஜோ டிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள்சன்னதி முன்பு பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடை பெற்றது.

    மணமக்களை கிராம பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன், கோவில் செயல் அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்தினர்.

    • 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் பாதயாத்திரை.
    • 28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அபிஷேக பாக்கம் அருகே தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் ஆலயம் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உலக நன்மைக்காக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் தீர்த்தம் வழிபாட்டு மன்றம் சார்பில் பாதயாத்திரை நடைபெறும்.

    28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை புதுவை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து இன்று காலை தொடங்கியது.

    யாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமனார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைத்தார்.

    வேதநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் யாத்திரை சென்றது. இதில் பெரியாழ்வார் திருத்தொண்டு சபை, வணிக வைசிய ஸ்ரீஹரிகர பஜனைக்குழு, பாண்டுரங்க ரகுமாயி ஆன்மிக கைங்கர்ய சபா, வேங்டாத்திரி பஜனை கூடம், பாண்டவதூதன் சங்கீர்த்தன சபா உட்பட பல்வேறு சபை குழுவினர் பங்கேற்றனர்.

    மேலும் யாத்திரையில் தமிழகம்-புதுவையை சேர்ந்த திருமாலடி யார்களும், 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்களும் சிங்கிரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். யாத்திரை கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுவை, கடலூர் சாலை வழியாக சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை யாத்திரை சென்றடைந்தது. புனித யாத்திரையையொட்டி வைசியாள் வீதி வாசவி மண்டபத்தில் முருகுமணியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    பாத யாத்திரையை யொட்டி புதுவையில் இருந்து சிங்கிரிகோவில் வரை பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தேனீர் வழங்கப்பட்டது.

    புனித பாத யாத்திரைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ மேற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×