என் மலர்
மணிப்பூர்
- மெய்தி சமூகத்தினர் தொடர்பான விழா வருகிற 20ஆம் தொடங்குகிறது.
- குகி சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்களை கடந்து மெய்தி சமூகத்தினர் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவ்டத்தில் 5ஆவது மாநில அளவிலான ஷிருய் லில்லி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் மெய்தி சமூகத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என டெல்லி குகி மாணவர்கள் அமைப்பு தலைவர் பயோஜாகுப் கைதே மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முடிந்தவரை அவரை உடனடியாக கைது செய்யும்படி அருகில் உள்ள மாநிலங்களான மிசோரம், அசாம், நாகாலந்து, மேகாலயா மாநிலங்களுக்கு மணிப்பூர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஷிருய் விழாவில் மக்கள் கலந்து கொள்ள போதுமான பாதுகாப்பை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
"மெய்தி தங்குல் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ஷிருய் விழாவை நடத்த உள்ளனர். விழாவிற்கு வரும் எந்த மெய்தியும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உயிருடன் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது" என பயோஜாகுப் கைதே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஷிருய் விழா வருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேவை வரை நடைபெற இருக்கிறது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி- குகி சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடங்கியது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- மணிப்பூரில் மெய்தி- குதி பிரிவினருக்கு இடையில் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
- வன்முறை நடைபெற்று 2 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் போராட்டத்திற்கு வலியுறுத்தல்.
மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.
இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.
மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர்.
- ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வன்முறை நடைபெற்று வந்த நிலையில் முதல்வராக இருந்த பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் அமைதி திரும்ப ஜனநாயக அரசை அமையுங்கள் என அமித் ஷாவுக்கு 13 பாஜக எம்.எல்.ஏ.-க்கள், 3 என்பிபி, 3 நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மணிப்பூர் மக்கள் ஜனாதிபதி ஆட்சியை வரவேற்றனர். எனினும், ஜனாதிபதி ஆட்சி 3 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வெளிப்படையான நடவடிக்கை ஏதும் இல்லை.
மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்ற உறுதியான அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. ஏராளமான அமைப்புகள் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிரான வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியுள்னர்.
ஒரு ஜனநாயக அரசு அமைப்பதற்கு உரிமை கோராததற்காகவும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான பொறுப்பை நிர்ணயித்ததற்காகவும் ஆளும் எம்.எம்.ஏ.-க்களை குற்றம்சாட்டி பேரணிகள் நடத்தப்படுகின்றன.
ஜனநாயக அரசு அமைப்பதன் மூலமாக மட்டுமே மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப முடியும் என உணர்கிறோம். மணிப்பூர் மக்களின் நலன் கருதி விரைவில் ஜனநாயக ஆட்சி அமைய உள்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தங்கியுள்ள சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிய மணிப்பூர் காவல்துறை மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளதைக் கண்டறிய, சரிபார்ப்பு இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்பால் பள்ளத்தாக்கின் லிலாங், மினுதோங், குவாக்டா, மாயாங் இம்பால், சோரா, கைராங் போன்ற பகுதிகளிலும், உரிய விசாக்கள் அல்லது அரசின் நுழைவு அனுமதிச் சீட்டு (ILP) இல்லாமல் சட்டவிரோத வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் தங்கியிருப்பதாகச் சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
அங்கீகரிக்கப்படாமல் வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் இருப்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகளால் உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
- மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக தலைவர் வீடு எரிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.
இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குராய் குமிடோக் பஜாரில் இன்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாஜக சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதையும், பொதுமக்கள் துப்பாக்கிகள், வாள்கள், குச்சிகள், கற்கள் அல்லது பிற ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடைசெய்தது.
- பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவராக அஸ்கர் அலி உள்ளார்.
- பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. இந்நிலையில் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பாஜக சிறும்பான்மை தலைவரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.
மணிப்பூரில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவர் அஸ்கர் அலி நேற்று முன் தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் நேற்று கும்பல் ஒன்று பவம் தௌபல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் தனது முந்தைய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.
முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இத்தகடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
- மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரிடையே நிகழ்ந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் சுமார் 260 பேர் வரை கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்டது, வன்புணர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட மனித குலத்திற்கே வெட்கக்கேடான கொடுமைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு ஓட வேண்டியிருந்தது. காவல்நிலையத்தில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் ஓய்ந்தபின்னும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.
கடந்த வருட இறுதியில் மக்கள் போராட்டத்தால் மீண்டும் கலவரமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாநில ஆளும் பாஜக அரசு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல்வர் பைரன் சிங் ராஜிநாமாவால் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகின்றது. இந்நிலையில் குக்கி, மெய்தேய் குழு பிரதிநிதிகளை வைத்து கூட்டம் ஒன்றை மத்திய அரசு இன்று நடத்தியுள்ளது.
ஆல் மணிப்பூர் யுனைடெட் கிளப்ஸ் ஆர்கனைசேஷன் (AMUCo) மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் சிவில் சொசைட்டி ஆர்கனைசேஷன் (FOCS) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆறு பேர் கொண்ட மெய்தேய் குழுவும், ஒன்பது பேர் கொண்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் உளவுத்துறைப் பணியகத்தின் ஓய்வுபெற்ற சிறப்பு இயக்குநர் ஏ.கே. மிஸ்ரா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
முன்னதாக மக்களவையில் மணிப்பூர் குறித்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியிருந்தார். மேலும் விரைவில் இரு குழுக்களையும் சேர்ந்து கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 11 நாட்களுக்கு முன்னதாக முகேஷ் என்ற வாலிபர் காணாமல் போனார்.
- போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. மாநில அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் செயல்படுவதாக மற்றொரு சமூகத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக முதல்வர் பைரன் சிங் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆகவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக 20 வயது இளைஞர் லுவாங்தெம் முகேஷ் திடீரென காணாமல் போனார். இவர் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறது.
இந்த நிலையில் தேடுதல் முயற்சியை விரைவுப்படுத்த வேண்டும் என சபம் நிஷிகாந்த் என்ற எம்.எல்.ஏ., மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. சபம் நிஷிகாந்த் கூறுகையில் "நான் ஆளுநரை சந்தித்து முகேஷ் விசயமாக ஆலோசனை நடத்தினேன். ஆளுனர் இந்த விசயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். தற்போதைய அப்டேட் உடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். கெய்சம்தோங் என்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சபம நிஷிகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.
முகேஷ் கடைசியாக பிஷ்னுபூர் மாவட்த்தில் உள்ள சினிகோன் பகுதியில் தென்பட்டுள்ளார். கடைசியாக அவர் செல்போன் குகி பிரிவனர் அதிக வசிக்கும் நோனி மாவட்டம் ஜோயுஜாங்டெக் பகுதியில் லொகேசன் காட்டியுள்ளது. ஆனாலர் சரியான இடத்தை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
"எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இழக்கும் வேதனையைத் தாங்கக்கூடாது. என் மகனின் உயிருக்காக நான் கெஞ்சுகிறேன்" என முகேஷின் தாயார் மகனை கண்டுபிடித்து தரக்கோரி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
- இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
- 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,
நீதிபதிகள் வருகை
மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

ஜனாதிபதி ஆட்சி
கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மோடி எப்போ வருவார்?
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
- சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
- இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
- கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.
மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.
இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.
அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இன்று முதல் மக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
- மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர். இந்த வன்முறைக்கு சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வன்முறை காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு வருகிற 8-ந்தேதி (இன்றுமுதல்) முதல் அனைத்து சாலைகளும் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 8-ந்தேதியான இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது.
சேனாபதி மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்து கக்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குகி போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியதுடன் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
குகி பிரிவினர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனி நிர்வாகம் வேண்டும். அதுவரை சுதந்திரமான நடமாட்டத்தை விரும்பவில்லை என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.






