என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
    • மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.

    * வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்

    * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

    * மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது

    * மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்

    * ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்

    * நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    * மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
    • மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.

    * இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

    * இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

    * 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

    * இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.

    * மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:

    * வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

    * வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.

    * மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.

    * மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    * முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இனக்கலவரம் நடந்தது.
    • மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    • எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
    • துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் தளவாடங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், காங்போக்பி, பெர்சாவ்ல், தெங்காப்பால் மற்றும் சந்தேல் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடனதப்பட்டது.

    காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய தகவலின்படி, மொத்தம் 155 துப்பாக்கிகள் மற்றும் 1,652 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிநவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அடங்கும்.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் எட்டு ஏகே சீரிஸ் ரைபிள்கள், இரண்டு இன்சாஸ் ரைபிள்கள், நான்கு கார்பைன்கள், ஒரு எஸ்.எல்.ஆர், எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.

    துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதில் 31 பம்பி (உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள்), 39 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IEDs) மற்றும் 13 கையெறி குண்டுகள் அடங்கும். மேலும், பாதுகாப்புப் படையினர் 15 தகவல் தொடர்பு சாதனங்களையும், நான்கு தொலைநோக்கிகளையும் மீட்டுள்ளனர்.

    எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    • இனக்​கல​வரத்​தால் மணிப்பூர் கடுமையாக பாதிக்​கப்​பட்டது.
    • கடந்த பிப்​ர​வரி​யில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்​பட்​டது.

    இம்பால்:

    இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இனக்குழுக்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவ்பால், காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டம் ஆகிய பகுதிகளின் பல்வேறு இடங்களில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர்.

    இந்தச் சோதனையில் 86 துப்பாக்கிகள், 9 கையெறி குண்டு லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்பட 974 வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.
    • 60 வயது பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு.

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மோங்ஜாங் கிராமத்தில் மர்ம நபர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மதியம் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமம் அருகே காரில் 4 பேர் சென்றுள்ளனர். அப்போது கார் மீது மர்ம நபர்கள் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவர் 60 வயது பெண் ஆவார்.

    இச்சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதிக்கு போலீசார், கூடுதல் பாதுகாப்புப்படையினர் விரைந்துள்ளனர்.

    • ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
    • அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன.

    கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனப் பெண் கொல்லப்பட்டார்.

    கொல்லப்பட்டவர் சுராசந்த்பூரின் லங்சிங்மன்பி கிராமத் தலைவரின் மனைவி ஹோய்கோல்ஹிங் என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை கண்டித்து குகி பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் (ITLF) காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

    ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.

    இந்நிலையில் காலவரையற்ற முழு அடைப்பால் நேற்று முதல் மணிப்பூரின் சுராசந்த்பூர் மற்றும் குகி பெரும்பான்மைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன. மணிப்பூரில் 2023இல் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையே வெடித்த இனக்கலவரம், மோதல்கள் தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.

    • விமான விபத்தில் 2 விமானி மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
    • மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமனப் பணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

    விபத்தில் இரண்டு விமானிகள், 10 பணியாளர்களும் உயிரிழந்தனர். மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு விமான பணிப்பெண்கள் இதில் அடங்குவார்கள். அதில் ஒருவர் லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார்.

    மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இவருடைய ஒருவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த துயர விபத்து ஏற்பட்டுள்ளது.

    லாம்னுந்தெம் சிங்சன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். தந்தை இறந்த நிலையில் விதவை தாய் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

    தனது தாயாரிடம் வியாழக்கிழமை (விபத்து நடந்த நாள்) லண்டனுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் முன்னதாக தூங்கச் செல்கிறேன் என புதன்கிழமை பேசியுள்ளார். அதன்பின்தான் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அவரது சகோதரர் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் குஜராத் அகமதாபாத் விரைந்துள்ளார். அவரின் மற்றொரு சகோதரர் மற்றும் உறவினர் நாகலாந்து திமாபூர் சென்று அங்கிருந்து அகமதாபாத் செல்ல இருக்கிறார்.

    இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மனமுடைந்து போனோம். விபத்து பற்றிய செய்திகள் வெளியானதிலிருந்து அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார், சாப்பிட மறுத்துவிட்டார் என உறவினர் கிப்ஜென் தெரிவித்துள்ளார்.

    நேற்றிரவு விமானப் பணிப்பெண்ணின் தாயாராக்கு போன் செய்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    • கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

    மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (AT) என்ற மெய்தேய் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    "நாங்கள் ஆயுதங்களை திரும்ப வழங்கினோம், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம், இப்போது நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்களா?" என்று அவர்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டினர்.

    முன்னதாக தலைவர் கைதைக் கண்டித்து, சனிக்கிழமை இரவு டயர்களை எரித்து சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்பாலின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சனிக்கிழமை இரவு 11:45 மணிக்கு அமலுக்கு வந்தது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும்.   

    • மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியது.
    • ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது.

    நேற்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் நடுவில் டயர்களை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

    நிலைமையைக் கட்டுப்படுத்த, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த 2023 இல் மணிப்பூரில் குக்கி - மெய்தேய் இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதுநாள் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்துள்ளார். 9 எம்.எல்.ஏ.க்களுடன் தொக்கோம் ராதேஷியாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார்.

    அதன்பின் தொக்கோம் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-

    மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாாக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    நாங்கள் சொன்னதை ஆளுநகர் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனுக்கான நடவடிக்கை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சபாநாயகர் தி. சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை.

    ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்தார்.

    எந்தவொரு சமாதான முன்னெடுப்பிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என மெய்தி பிரிவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குகி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.

    • மெய்தி மக்களின் ஷிருய் விழா விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
    • பத்திரிகையாளர்களுடன் மாநில பேருந்தில் மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு.

    மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக அஜய் குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் டெல்லிக்கு சென்றிருந்தார்.

    இவருக்கு எதிராக மெய்தி சமூகத்தினர் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். இதனை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தியதுடன். கலைந்து செல்ல கண்ணீர் புகைக்குண்டு வீசியது பேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மெய்தி சமூகத்தினரின் ஷிருய் விழா கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்பாலில் இருந்து உக்ருல் மாவட்ட தலைநகருக்கு பல்வேறு குகி கிராமங்களை கடந்து 80 கி.மீ. செல்ல வேண்டும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

    20ஆம் தேதி பத்திரிகையாளர்களுடன் சென்ற மணிப்பூர் மாநில அரசு பேந்தில், மணிப்பூர் பெயர் மறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு மெய்தி சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், டெல்லி சென்றுள்ள கவர்னர் இம்பால் திரும்பி ராஜ் பவனுக்கு செல்லும் வழியில் போராட்ட பேரணி நடத்தவும், சாலைகளின் இருபுறமும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் அஜய் குமார் பல்லா இன்று இம்பால் திரும்பினார். அப்போது மெய்தி சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்ட பேரணி நடத்த இருந்தனர். அதை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அத்துடன் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தில் இருந்து ராஜ் பவன் சென்றார் ஆளுநர்.

    பேருந்தில் மணிப்பூர் பெயரை மறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "மணிப்பூர் அடையாளம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. மணிப்பூர் மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் மெய்தி மக்கள் ஈடுபட்டனர்.

    ×