என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுதங்கள் பறிமுதல்"
- எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
- துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் தளவாடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், காங்போக்பி, பெர்சாவ்ல், தெங்காப்பால் மற்றும் சந்தேல் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடனதப்பட்டது.
காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய தகவலின்படி, மொத்தம் 155 துப்பாக்கிகள் மற்றும் 1,652 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிநவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அடங்கும்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் எட்டு ஏகே சீரிஸ் ரைபிள்கள், இரண்டு இன்சாஸ் ரைபிள்கள், நான்கு கார்பைன்கள், ஒரு எஸ்.எல்.ஆர், எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் 31 பம்பி (உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள்), 39 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IEDs) மற்றும் 13 கையெறி குண்டுகள் அடங்கும். மேலும், பாதுகாப்புப் படையினர் 15 தகவல் தொடர்பு சாதனங்களையும், நான்கு தொலைநோக்கிகளையும் மீட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- இனக்கலவரத்தால் மணிப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- கடந்த பிப்ரவரியில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இம்பால்:
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இனக்குழுக்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவ்பால், காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டம் ஆகிய பகுதிகளின் பல்வேறு இடங்களில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் 86 துப்பாக்கிகள், 9 கையெறி குண்டு லாஞ்சர்களை கைப்பற்றினர். மேலும் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்பட 974 வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
- கமுதி அருகே கொலை செய்ய பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு மின்சார அலுவலகம் பகுதியில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது. சுதாரித்து கொண்ட போலீசார் 7 பேரையும் சுற்றி வளைத்தனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை சோதனை செய்த போது 5 கத்திகள், வாள், மிளகாய் ெபாடி ஆகியவை இருந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (33), சரவணகுமார் என்ற தக்கலை சரவணன்(24), வல்லரசு (22), காளீசுவரன் (33), சிவசங்கர் என்ற சிவகுமார் (22), உசைன் (24) என தெரிய வந்தது.
இவர்கள் மண்டல மாணிக்கம் மறக்குளத்தை சேர்ந்த பாலகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
- அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த மாதம் குக்கர் வெடிகுண்டு, கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமர்ஷெரீப் (வயது 42) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சில மணி நேர சோதனையின் பின் உமர்ஷெரீப்பை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனும் விசாரணை நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ. சோதனை யின்போது அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






