என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
    • இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து அதிருப்தி குழுவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட் கூறும்போது, "சிவசேனா நாங்கள் இருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை சிவசேனா ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அணியினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரேக்கு மும்பையைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நேற்று கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.
    • ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.

    இந்த ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான். ஆற்றின் கரையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

    குளித்து கொண்டிருந்த சிறுவன், திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றான். அங்கு நின்றபடி அவன் அலறினான்.

    சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது சிறுவனை ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்று உயிரோடு விழுங்குவதை கண்டனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதலையின் பிடியில் இருந்து சிறுவனை மீட்க முயன்றனர். அதற்குள் முதலை சிறுவனை விழுங்கிவிட்டது.

    இதை கண்ட கிராம மக்கள் முதலையை வலைவீசி பிடித்தனர். பின்னர் அதனை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் முதலையை கிராம மக்கள் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர்.

    ஆனால் கிராம மக்கள் சிறுவனை விழுங்கிய முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான் என கூறினர். மேலும் சிறுவனை விழுங்கிய முதலை அவனை கக்கும் வரை முதலையை விடமாட்டோம் எனவும் கூறினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசப்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவர்களிடம் இருந்து முதலையை மீட்டு சென்றனர்.

    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.
    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

    இதேபோல சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேக்கு மும்பையை சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நேற்று உத்தவ் தாக்கரே கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

    கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் உத்தவ் தாக்கரே என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதும், 5 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் அர்த்தம் இல்லாதவை.
    • சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    அவுரங்காபாத் :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடத்திவந்த கூட்டணி ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. ஷிண்டே தலைமையில் பிரிந்துசென்ற சிவசேனா அதிருப்தி அணியினர், பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினர்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்தநிலையில் அவுரங்காபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து தான். முதலில் கட்சி தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்துவிட்டு, கூட்டணி கட்சிகளுடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் திடீர் மன மாற்றத்திகான காரணம் குறித்து நிலையான காரணத்தை இதுவரை கூறவில்லை. சில நேரங்களில் இந்துத்வா கொள்கையில் இருந்து தலைமை விலகி சென்றது தான் காரணம் என்கிறார்கள். சிலர் தங்கள் தொகுதிக்கு சரியான நிதி கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் இவர்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் ஒரு அர்த்தமும் இல்லாதவையாகும்.

    அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களில் பெயர் மாற்றுவது குறித்து மகா விகாஸ் அகாடி அரசு இயற்றிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு தான் எனக்கு தெரியும். இந்த முடிவு முன் ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்டது. அப்போதைய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலாக அவுரங்காபாத் நலன் குறித்து ஏதேனும் முடிவு எடுத்திருந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று ஊகிக்க விரும்பவில்லை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் ஓட்டு போடும் போது கட்சியின் சின்னத்தை மட்டும் பார்ப்பது இல்லை.
    • ஒன்று, 50 அல்லது 100 எம்.எல்.ஏ.க்கள் சென்றால் கூட கட்சி அழியாது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ளார்.

    கடந்த 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதில் கடந்த புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல் எம்.எல்.ஏ. சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை பயன்படுத்த அவர்களுக்கு தான் உரிமை உள்ளது என கூறினார்.

    இந்தநிலையில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை மாதோஸ்ரீயில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டத்தின்படி யாராலும் சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை பறிக்க முடியாது. சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகு தான் நான் இதை கூறுகிறேன். மக்கள் ஓட்டு போடும் போது கட்சியின் சின்னத்தை மட்டும் பார்ப்பது இல்லை.

    வேட்பாளர் யார், அவர் சிவசேனாவை சேர்ந்தவரா என்று தான் பார்ப்பார்கள். சிவசேனா கட்சி வேறு. சட்டசபை கட்சிக்கு வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன. ஒன்று, 50 அல்லது 100 எம்.எல்.ஏ.க்கள் சென்றால் கூட கட்சி அழியாது. சட்டசபை கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன. யாராலும் கட்சியின் தொண்டர்களை அவர்களுடன் எடுத்து செல்ல முடியாது.

    எனது தலைமையிலான அரசு கவிழ மக்கள் தான் அனுமதிக்க வேண்டும். இடைத்தேர்தலை நடத்த வேண்டும். நாங்கள் தவறு செய்தால், மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே உங்களுக்கு தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல சிவேசனா அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியுடன் இணைய பா.ஜனதாவுடன் உத்தவ் தாக்கரே பேச வேண்டும் என அவர்கள் கூறியது குறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், "கடந்த 2½ ஆண்டுகளாக பா.ஜனதா எங்கள் குடும்பத்தையும், என்னையும் அவதூறாக பேசிய போது நீங்கள் (அதிருப்தி அணி) அமைதியாக இருந்தீர்கள்.

    நீங்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்து சொந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். நீங்கள் என் மீதும், எனது குடும்பம் மீதும் வைத்திருந்த பாசம் நிஜம் தானா என தோன்றுகிறது. தாக்கரே குடும்பத்தை மோசமாக விமர்சித்தவர்கள் அருகில் நீங்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்களை கட்டி அணைக்கிறீர்கள். அவர்கள் எனது மகனின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சி செய்தவர்கள்.

    எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிவசேனாவுக்கு மட்டுமல்ல, ஐனநாயகம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதையும் தீர்மானிக்க உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கூற உள்ளது என்பதை நாடே பார்த்து கொண்டு இருக்கிறது.

    ஏனெனில் அந்த தீர்ப்பு நாட்டில் வருங்காலத்தில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்ட உள்ளது. அந்த தீர்ப்பின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தின் 4 தூண்களும் சரியாக அதன் வேலையை செய்கிறார்களா என்பதையும் காட்டும். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

    • மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
    • ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து உள்ளார்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பி பா.ஜனதாவுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து உள்ளார். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியினர், அவர்கள் மீண்டும் சிவசேனாவுடன் சேர உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் பேச வேண்டும் என கூறி உள்ளனர்.

    மும்பையில் பத்திரிகையாளர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி மீண்டும் சிவசேனாவுடன் இணையுமா? என அந்த அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கரிடம் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சியில் இந்த பிளவு ஏற்பட காரணமாக இருந்தவர்களிடம் (சஞ்சய் ராவத்) இருந்து உத்தவ் தாக்கரே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். நாங்களும், பா.ஜனதாவும் தற்போது இணைந்து உள்ளோம். அவர் (உத்தவ் தாக்கரே) எங்களை அழைக்கும் போது, அவர் பா.ஜனதாவுடனும் பேச வேண்டும். எங்களை வாழ்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் ஒரு லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும்.
    • மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக எத்தனால் இருக்கும்.

    மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது:

    டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மும்பையை, டெல்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருகிறது.

    ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். பெட்ரோலுக்கு இணையான கலோரி ஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளது. ஃப்ளெக்ஸ் வகை எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

    பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும், மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மகாராஷ்ராவில் முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் கூறும்போது, ஜூலை 11-ந்தேதி பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் என்றனர்.

    சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் கூறும்போது, 11-ந்தேதி விசாரணைக்கு வரவிருக்கும் புதிய மனுவுடன் நிலுவையில் உள்ள மற்ற மனுக்களையும் பட்டியலிட கோரி இருக்கிறோம் என்றார்.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

    மும்பை :

    நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார். இந்தநிலையில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே, கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவசேனா மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் ராகுல் செவாலே, உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் குறித்து நேற்று தானேயில் சிவசேனா அதிருப்தி அணி தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்து உள்ளார். அவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை மற்றும் கவுரவம் ஆகும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் நானும் பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.

    மும்பை :

    சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் புதிய அரசின் மந்திரி சபை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "மந்திரி சபை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும். மந்திரிகள் இலாகா பங்கீடு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் மந்திரி இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதிக்க சிறிது நேரம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் நாங்கள் சரியாக சுவாசிக்க முயற்சிக்கிறோம். மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. நானும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அமர்ந்து இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்போம். பா.ஜனதாவின் தேசிய தலைவர்களிடம் இருந்தும் இதுகுறித்து ஆலோசனைகளை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியது தொடர்பான வழக்கு, சிவசேனா கட்சியின் கொறடாவை மாற்றிய சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஆகியவை வருகிற 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

    ×