என் மலர்tooltip icon

    கேரளா

    • காரின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
    • 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது சேனலில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமா னார். அவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர்களது காரில் பிரச்சினை ஏற்பட்டதால் காரில் இருந்த தண்ணீரை சாலையில் வெளியேற்றினர்.

    அவர்களின் இந்த நடவடிக்கையால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஞ்சு டெக்கி இந்த காட்சிகளை யூடியூப்பில் நேரலையில் பதிவிட்டதால் அவர் நண்பர்களுடன் காருக்குள் குளித்தது, தண்ணீரை சாலையில் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் யூ-டியூப் நேரலையில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் சஞ்சு டெக்கி, அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், அபிலாஷ், ஸ்டான்லி கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அவர்கள் 3 பேரும் வருகிற 3-ந்தேதி முதல் மலப்புரம் எடப்பால் பகுதியில் உள்ள மோட்டார் வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டாய பயிற்சியில் பங்கேற்க வேண்டும், ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகவேலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரபி காதுன் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சுரபி காதுன் பலமுறை தங்கம் கடத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மற்றும் போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக விமான பணிப்பெண் ஒருவர், தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் சுரபி காதுன்.

    கொல்கத்தாவை சேர்ந்த இவர், மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று விமானம் கண்ணூர் விமான நிலையத்ததை வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சுரபு காதுனையும் வருவாய் புலனாய்வு இயக்குனரக பணியாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சுரபி காதுன் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சுரபி காதுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் கண்ணூர் பெண்கள் சிறையில் சுரபி காதுன் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தியதற்காக விமானக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இது தான். சுரபி காதுன் பலமுறை தங்கம் கடத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் கும்பலில் கேரளாவைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.
    • கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

    கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    குறிப்பாக, கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல பகுதிகள் வெள்ளக் காடானது.

    இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்கள் என ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் எனவும், கேரளாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
    • சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும், சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பேருந்துக்குள் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பேருந்து நிற்கும் இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியையும் பாராட்டி வருகின்றனர்.



    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.

    பிரதான சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதில் சில வாகனங்கள் பழுதாகி நடுவழியின் நின்றன. அதில் பயணித்தவர்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தண்ணீரில் இறங்கி நடந்தே சென்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு சிரமத்துடன் சென்றனர்.

    மேலும் சாலைகளில் ஓடிய தண்ணீர், வணிக நிறுவனங்களுக்குள்ளும் புகுந்தது. கட்டக்கடை பகுதியில் கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 5 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. ஆலப்புழா மாவட்டத்திலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழையின் போது வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீதும் விழுந்தது. இதில் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்தன.


    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 666 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் 877 பேரும், ஆலப்புழாவில் 752 பேரும், கோட்டயத்தில் 332 பேரும், எர்ணாகுளத்தில் 58 பேரும், திருவனந்தபுரத்தில் 35 பேரும், ஆலப்புழாவில் 107 பேரும், கோட்டயத்தில் 81 பேரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 184 பேர் குழந்தைகள் ஆவர்.

    மாநிலத்தில் எர்ணாகுளம், களமச்சேரி, காக்கநாடு பகுதிகளிலும் மழைக்கு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

    இந்த சூழலில் ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்றே (30-ந்தேதி) அதற்கான சாதகமான நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தென்மேற்கு பருவமழை மாநிலத்தில் இன்று தொடங்கியது.

    இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முதலில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் தொடங்கி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் என கேரள மாநிலம் முழுவதும் பெய்யும். தொடர்ந்து கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்றும், நாளையும் (30,31-ந்தேதிகள்) குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கு விசாரணை ஈரட்டுப்பேட்டை சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
    • அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது55). கராத்தே ஆசிரியரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் முண்டக்காயம் போலீசார் வழக்குப்பதிந்து மோகனனை கைது செய்தனர்.

    மோகனன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஈரட்டுப்பேட்டை சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட மோகனனுக்கு 110 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ2.75லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரோஷன் தாமஸ் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

    • இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஒமர் லுலு. இவர் 'ஹேப்பி வெட்டிங்', 'ஒரு அடார் லவ்', 'நல்ல சமயம்', 'தமாக்கா', 'சங்ஸ்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமானார்.

    இந்நிலையில் இயக்குனர் ஒமர் லுலு மீது இளம் நடிகை ஒருவர் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலியல் புகார் கொடுத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர். நடிகையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குனர் ஒமர் லுலு மீது 376 (கற்பழிப்பு) சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தன்மீது புகார் கொடுத்துள்ள நடிகையுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும், அந்த நட்பை இழந்ததன் காரணமாக தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மிரட்டி பணம் பறிப்பதற்காக நடிகை தன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளதாக இயக்குனர் ஒமர் லுலு தெரிவித்திருக்கிறார்.

    • டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
    • ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இயக்கப்படும் பல ரெயில்களில் விஷ பூச்சிக்கள் பயணிகளை கடிப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பெண் பயணி ஒருவரை பாம்பு கடித்ததாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண், ஆயுர்வேத டாக்டர் ஆவார். கேரள மாநிலம் நீலம்பூரைச் சேர்ந்த காயத்ரி (வயது 25) என்ற அந்த டாக்டர், நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார்.

    அந்த ரெயில வல்லப்புழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கைக்கு அடியில் காலில் ஏதோ கடிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கீழே குனிந்து பார்த்தபோது, அங்கு எதுவும் இல்லை. ஆனால் காலில் பல்லால் கடித்த காயம் காணப்பட்டது.

    பாம்பு கடித்தது போன்ற காயம் இருந்ததால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையில் ரெயில், வல்லப்புழா நிலையத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, உடலில் விஷம் ஏறவில்லை என தெரிய வந்தது.

    எனவே அவரை கடித்தது பாம்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடித்தது எது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.

    வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் எலி இருப்பது தெரியவந்தது. எனவே அது தான் டாக்டர் காயத்ரியை கடித்திருக்கலாம் என தெரிகிறது.

    • கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
    • மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. இது கனமழையாக மாறி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது.

    நேற்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் சுமார 1½ மணி நேரத்திற்கு விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    வெள்ளமாகச் சென்ற வீடுகள், வயல்வெளிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கோட்டயம் மாவட்டத்தில் தாழநாடு மூன்நிலவு அருகே உள்ள சோவ்வூர் மற்றும் மேலுகாவு கிழக்க மட்டம் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் மேலுகாவு தாலுகாவில் வீடுகள் சேதம் அடைந்தன. ஈரட்டுப்பேட்டை-வாகமன் சாலையில் கல்லம்பாக்கம் என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த கனமழைக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

    கொச்சி துறைமுகம் பகுதியில் கேரள அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி காயம் அடைந்தார். இதேபோல், திருவனந்தபுரம் காட்டன் ஹில் பள்ளியில் நின்ற ஒரு பஸ்சின் மீதும் மரம் விழந்தது. மழைக்கு மாநிலம் முழுவதும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம் முதலப்பொழி கடலில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆபிரகாம் ராபர்ட் (வயது 60) மீன் பிடித்தபோது படகு கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிள்ளியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட முக்கோலத்தை சேர்ந்த அசோகன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழையின் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சிலை ஆறு, திருவனந்தபுரம் கிள்ளியாறு போன்றவற்றில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், கனமழையால் நிலச்சரிவு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.
    • நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் எம்.பி. வீரேந்திரகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'உள்ளடக்கிய வளர்ச்சி கட்டுக்கதையும், யதார்த்தமும்' என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    ஒருவருக்கொருவர் பிரதிபலிக்கும் பொருளாதார மற்றும் சமூக படிநிலைகளை நாம் புரிந்து கொண்டு நமது கொள்கைகளை அடிமட்டத்தில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றியமைக்காவிட்டால் நம்மை சமத்துவ சமூகம் என்று அழைக்க முடியாது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்.

    தற்போதைய சமூகம் சமமானதாகவோ நியாயமானதாகவோ இல்லை. முதலாளித்துவ மற்றும் பணக்கார நாடுகள் சமத்துவ சமூகங்களை உருவாக்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியை உலகளாவியதாகவும், இலவசமாகவும் மாற்றுவதன் மூலம் சமத்துவ சமூகங்களை உருவாக்க முடியும்.

    பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சிறிய நோய் முதல் பெரிய அறுவை சிகிச்சை வரை இலவசம். எனவே நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.

    ஆனால் நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கே வழங்கி உள்ளனர். நம் நாட்டின் கொள்கைகள் ஏழைகளுக்கு முன்னோடியாக இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இது போன்று பல உதாரணங்களை கூற முடியும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    • ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர்.
    • மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே பெரிஞ்சனம் ஊராட்சி பகுதியில் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிரியாணி சாப்பிட்டனர். மேலும் ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர். ஆனால் அந்த ஓட்டலில் மீன் பிரியாணி சாப்பிட்ட 178 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் அந்த ஓட்டலை மூடி 'சீல்' வைத்தனர்.

    பெரிஞ்சனம் அருகே குற்றியக்கடவு பகுதியை சேர்ந்த நுசைபா (வயது 56) என்பவரும் அதே ஓட்டலில் 25-ந்தேதி மீன் பிரியாணி பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளார். மறுநாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    ×