என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- எல்லையில் “அக்ரான்” என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது.
- பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
ஸ்ரீநகர்:
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி இன்று (வெள்ளிக்கிழமை) காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
உதம்பூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு சென்று இந்திய ராணுவ வீரர்கள் எத்தகைய தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தார். இந்திய ராணுவத்தின் எல்லை பகுதி போர் பயிற்சி முறைகளையும் கேட்டு அறிந்தார்.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வை யிட்ட அவர் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் வீரர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அனந்த்நாக் மாவட்டத்துக்கும் அவர் சென்றார். அங்கும் ராணுவ படை வீரர்கள் தயாராக இருப்பதை ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் அவர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகல்காம் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
பகல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்தி ருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
பாகிஸ்தான் மீது தாக்கு தல் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின.
இந்த தடவையும் அதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு எல்லையில் "அக்ரான்" என்ற தீவிர போர் பயிற்சி நடந்து வருகிறது. இது பாகிஸ்தான் எல்லை பகுதியில் மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
இதற்கிடையே இந்திய கடற்படையையும் தயார் படுத்தி வருகிறார்கள். இந்தியாவின் மேற்கு மண்டலத்தில் உள்ள கடற்படை கப்பல் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியா வின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன் றான ஐ.என்.எஸ். விக்ரந்த் கப்பல் அரபிக் கடல் நோக்கி பயணிப்பது செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு செல்லும் போர் விமானங்கள் பாகிஸ்தானின் எந்த பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றவை. எனவே ஐ.என்.எஸ். விக்ரந்த் போர் கப்பலின் நகர்வு முக்கிய மானதாக கருதப்படுகிறது.
ஆனால் இது வழக்கமான நகர்வுதான் என்று கடற்படை அறிவித்துள்ளது. இதற்கிடையே அக்ரான் என்ற பெயரில் இந்திய விமானப்படை நடத்தி வரும் பயிற்சிகள் இன்று மேலும் தீவிரப்படுத்தப் பட்டன.
இன்று காலை அக்ரான் போர் பயிற்சிகள் மிக தீவிர மாக நடத்தப்பட்டன. இது மேலும் பதட்டத்தை உரு வாக்கி இருக்கிறது.
- தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
- எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
புதுடெல்லி:
காஷ்மீரில் பிரபல சுற்றுலா தலமான பகல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்ட னர்.
கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்திய 6 தீவிர வாதிகளையும் பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கி இருப்பதை இந்திய ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். இதை யடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 7 முக்கிய தடை அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியதும் தெரிய வந்தது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பயங்கர வாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. உலகின் பெரும்பாலான நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் இந்தியா எந்த நேரத்திலும் அதிரடி தாக்குலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணி கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூளைக்கு ஓடினாலும் தேடி பிடித்து வேரோடு அழிப்போம். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும்" என்று எச்சரித்தார்.
பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானில் நேற்று மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. இந்திய விமானங்கள் எந்த நேரத்திலும் வந்து குண்டு வீசலாம் என்று பாகிஸ்தான் ராணுவத்தில் பயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
அதற்கு பதிலடி நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணு வம் நேற்று திடீரென போர் பயிற்சிகளை தொடங்கியது. இது பாகிஸ்தானியர்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா ஏதோ ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முழுக்க தூங்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள். நேற்று நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நீடித்தது. இன்று அதிகாலை பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட தூரத்துக்கு பின்வாங்கி சென்றனர். அவர்கள் தரப்பில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது தெரிய வில்லை.
இந்திய பாதுகாப்பு படையினர் இதுகுறித்து கூறுகையில், "எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" என்ற னர்.
இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல் காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் ஆசீப்ஷேக், அதில் ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காஷ்மீரில் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத் தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை நோக்கி பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீர் உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படை சார்பில் தீர்மானிக் கப்பட்டது. அதன்படி முக்கிய லக்ஷர் இ தொய்பா தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அதுபோல அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருக்கும் மற்றொரு தீவிரவாதியான அதில் தோகர் என்பவன் வீடும் இன்று காலை குண்டு வைத்து தகர்த்து எறியப் பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடு வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு.
- 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை:
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ரெயில், விமானம் மூலம் சுற்றுலா சென்ற பயணிகளை கணக்கெடுத்து அவர்களை மீட்டு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பயண நாள் தள்ளி இருந்தாலும் அதனை முன் தேதிக்கு மாற்றி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது.
அதன்படி நேற்று 2 கட்டமாக டெல்லியில் இருந்து தமிழக சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அவர்கள் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்தது.
இந்த நிலையில் ரெயில் மூலம் 48 பேர் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்கள் பயணத்தை தொடங்கினர்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் உணவு, தங்கும் வசதி அளிக்கப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். அந்த ரெயில் இன்று காலை 6.30 மணிக்கும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
காஷ்மீர் சென்றவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்ததையொட்டி அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் குடும்பமாக வந்திருந்தனர். வியாசர்பாடி, மாதவரம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகு தியை சேர்ந்த அவர்களை உறவினர்கள் பார்த்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு, உணவு, குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கி அனுப்பி வைக்கப் பட்டனர்.
காஷ்மீர் சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விஜயகுமார், பாஸ்கர், முனியாண்டி, பிரபாவதி, தேன்மொழி ஆகியோர் கூறியதாவது:-
பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதல்நாள் அங்கு சென்று திரும்பினோம். ஒருநாள் முன்னதாக சென்றதால் இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்து உள்ளோம்.
சம்பவம் நடந்த உடனே எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். டெல்லிக்கு அழைத்துவரப் பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை திரும்பும் வரை எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரி களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து விமானம் மூலம் மேலும் 28 பேர் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். காஷ்மீர மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழர்களில் இது வரை 119 பேர் பத்திரமாக திரும்பியுள்ளனர்.
- ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர்
- பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் பாஜக நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்டவர் டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் பாஜக எம்எல்ஏக்கள் தேவிந்தர் மான்யால், ராஜீவ் ஜஸ்ரோதியா, பாரத் பூஷன் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாவில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர், எல்லை தாண்டி ஊடுருவலைத் தடுக்க புலானாய்வுத் துறை, மத்திய அரசு தோல்வி அடைந்ததன் பிரதிபலிப்பாக பயங்கரவாதத் தாக்குதல் உள்ளதா? என்று பாஜக எம்எல்ஏக்களிடம் கேட்டனர். இதனால் அவர்கள் கோபமடைந்தனர்.
இதற்கிடையில், ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர். போலீசார் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை அடி தொடர்ந்தது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கதுவாவில் உள்ள ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- மாநிலத்துக்குள் புதிதாக 4,107 பேர் வருகை புரிந்தனர்.
- விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கோடை கால வாசஸ்தலமான ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் தங்கள் திட்டங்களை ரத்து செய்து சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறியுள்ளனர். மாநிலத்துக்குள் புதிதாக 4,107 பேர் வருகை புரிந்தனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல முண்டியடிக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இ
- காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை காவல் துறையினரின் தரவுகளில் இடம்பெற்றவர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் அதே நேரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
- சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
- 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தன் கண்முன்னே அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பயங்கரவாதிகள் சையது அடிலை துப்பாக்கி சூட்டுக்கு இரையாக்கினர். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.
அவரது மறைவுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சையதின் துணிச்சலை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். சையது உடைய இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய வார், அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.
பிஸ்மில்லா பிஸ்மில்லா
இந்த தாக்குதலில் கண்முன் கணவரை இழந்த பல்லவி என்ற கர்நாடக பெண்மணி கூறுகையில், "என் கணவரை கொன்றவர்களிடமிருந்து நாங்கள் தப்பியபோது, 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
என் சகோதரர்கள் என்றே அவர்களை சொல்வேன். அவர்கள்தான் என்னையும் என் மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஒருவர் என் மகனை அரவணைத்து ஆறுதல் சொல்ல, மற்றவர்கள் என்னை தேற்றினர். அவர்களுக்கும் எங்கள் ஓட்டுநர் அப்ரீஸூக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.
- பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அனந்த்நாக் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
- உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாகிஸ்தான் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது, இது நம் அனைவர் மீதான தாக்குதல், அப்பாவிகளை கொலை செய்வது பயங்கரவாத செயல், அப்பாவிகளை கொலை செய்வதை நிறுத்தவும் போன்ற பதாதைகளை ஏந்தி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கண்டன பேரணியின்போது மெகபூபா முஃப்தி கூறியதவாது:-
பஹல்காம் தாக்குதல் நம் மீதான தாக்குதல். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து, விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் வெட்கப்படுகிறோம். காஷ்மீரிகள் வெட்கப்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அரசாங்கம் குற்றவாளிகளைப் பிடித்து, அவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- உமர் அப்துல்லா தலைமையில் இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைதான் முதுகெலும்பாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல், சுற்றுலாத்துறை கேள்விக்குறியதாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று மாலை சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இதனால் சுற்றுலாத்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர்.
- உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர். தங்கள் கண்முன்னே குடும்பத்தினர் கொல்லப்பட்டது அவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவத்தின் பின் தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பயந்துபோன சுற்றுலாப் பயணிகளை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றபோது, உயிர் பிழைத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர், வீரர்களை பயங்கரவாதிகள் என்று தவறாக நினைத்து அலறி அடித்து பின்வாங்கும் காணொளி வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி மற்றும் பயத்தில் அழுது அலறிய அவர்களிடம், "நாங்கள் இந்திய ராணுவம், உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்று கூறி சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
- அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
- பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், "நேற்று பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன்.
அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது. இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார்.






