என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு- விடிய விடிய துப்பாக்கி சண்டை
- தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
- எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
புதுடெல்லி:
காஷ்மீரில் பிரபல சுற்றுலா தலமான பகல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்ட னர்.
கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்திய 6 தீவிர வாதிகளையும் பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கி இருப்பதை இந்திய ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். இதை யடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 7 முக்கிய தடை அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் இருந்து ஊடுருவியதும் தெரிய வந்தது. இதனால் அந்த தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பயங்கர வாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. உலகின் பெரும்பாலான நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் இந்தியா எந்த நேரத்திலும் அதிரடி தாக்குலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணி கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உலகின் எந்த மூளைக்கு ஓடினாலும் தேடி பிடித்து வேரோடு அழிப்போம். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும்" என்று எச்சரித்தார்.
பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானில் நேற்று மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. இந்திய விமானங்கள் எந்த நேரத்திலும் வந்து குண்டு வீசலாம் என்று பாகிஸ்தான் ராணுவத்தில் பயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
அதற்கு பதிலடி நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்திய ராணு வம் நேற்று திடீரென போர் பயிற்சிகளை தொடங்கியது. இது பாகிஸ்தானியர்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா ஏதோ ஒரு பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முழுக்க தூங்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறினார்கள். நேற்று நள்ளிரவு சில முகாம்கள் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நீடித்தது. இன்று அதிகாலை பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட தூரத்துக்கு பின்வாங்கி சென்றனர். அவர்கள் தரப்பில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது தெரிய வில்லை.
இந்திய பாதுகாப்பு படையினர் இதுகுறித்து கூறுகையில், "எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" என்ற னர்.
இதற்கிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து அழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல் காமில் தாக்குதல் நடத்த உதவி செய்ததாக காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் ஆசீப்ஷேக், அதில் ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காஷ்மீரில் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னர் என்ற இடத் தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் ஒருங்கிணைந்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை நோக்கி பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீர் உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படை சார்பில் தீர்மானிக் கப்பட்டது. அதன்படி முக்கிய லக்ஷர் இ தொய்பா தீவிரவாதியான ஆசீப் ஷேக்கின் வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
அதுபோல அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெரா என்ற இடத்தில் இருக்கும் மற்றொரு தீவிரவாதியான அதில் தோகர் என்பவன் வீடும் இன்று காலை குண்டு வைத்து தகர்த்து எறியப் பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகளின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை வேட்டையாடு வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.






