என் மலர்tooltip icon

    பீகார்

    • தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.

    பாட்னா:

    பீகாரில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் அரசியல் பகையால் பிரிந்து கிடக்கிறது. அவரது மகன்கள் தேஜ்பிரதாபும், தேஜஸ்வியும் எதிர் எதிராக களம் இறங்கிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    தந்தை லல்லு பிரசாத் யாதவ்வை பிரிந்துள்ள அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் ஜன்சக்தி ஜனதா தளம் (ஜே.ஜே.டி.) என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் மஹீவா சட்டசபை தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் இவர் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவருக்கு எதிராக அவரது தம்பியும் முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் ரவுசான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு அவர் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.

    தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் (தேஜஸ்வி யாதவ்) எனக்கு எதிராக பிரசாரம் செய்து இருப்பதால் அவர் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நான் அதையே செய்வேன். கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.

    மஹீவா மக்கள் விரும்பினால் இந்த முறை நான் முதல்-மந்திரி ஆவேன். எனது கட்சி 20-ல் இருந்து 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்

    ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பி இடையே நடந்து வரும் இந்த மோதல் பீகார் அரசியலை சூடாக்கி இருக்கிறது. தேஜ்பிரதாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மேலும் குடும்பத்தை விட்டும் அவர் பிரிந்தார். தற்போது அவருக்கு எதிரான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார்.
    • ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.

    காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதன்முறையாக பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜா பகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார். ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.

    அவரால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராட முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக அவரை முதல்வராக ஆக்கப்போவதில்லை என்பதை நிதிஷ் குமார் அறிந்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக பாஜக-வைச் சேர்ந்த சில Chela (Foot Soldier)-க்களுக்கு பதவியை கொடுக்கும்.

    பிரதமருக்கு உலகைச் சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களில் பிரச்சினைகளை பார்க்க நேரமில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே தென்படுகிறார். மாநகராட்சி தேர்தலில் கூட தெருக்களில் பிரதமர் மோடி கர்ஜிப்பதை உங்களால் பார்க்க முடியும். பீகார் தேர்தலில் மகனின் திருமணம் போல் பிசியாக இருக்கிறார்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

    • ஆர்.ஜே.டி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது.
    • நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.

    பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சியாஹரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    சீதாமரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    * நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றது.

    * பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்கால ராணுவத் தாக்குதல்களில், பீகாரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பு வழித்தடத்தில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    * ஆர்ஜேடி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது. நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்.

    * தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் திறக்கப்படும்.

    * சீதாமரியில் உள்ள சீதா கோயில் மத, கலாச்சார, கல்வி மையமாக மாறும்

    * லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்தது. நிதிஷ் குமார்- நரேந்திர மோடி ஜோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

    * லாலுவின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு பீகாருக்கு ரூ.2.80 லட்சம் கோடி வழங்கிய நிலையில், 10 ஆண்டுகளில் ரூ.18.70 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

    * நவம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, மதியம் 1 மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும். ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
    • காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.

    பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரதமர் மேதாடி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    * முதல் முறையாக வாக்களிப்பவர்கள், தங்களது வாக்குகள், பீகாரில் அடுத்த NDA அரசாங்கத்தை அமைப்பதற்கானது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

    * இந்திய மகள்கள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளனர். இந்த வெற்றி நாட்டின் பெண்களின் தன்னம்பிக்கையை குறிக்கிறது

    * ஒரு காலத்தில் 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ'வை கேலி செய்தவர்கள் இப்போது இந்தியாவின் மகள்களை அவமதித்ததைப் பற்றி சிந்திக்கிறார்கள்

    * விகாஸ்க்கு (வளர்ச்சி) பெயர் பெற்றது தேசிய ஜனநாயக கூட்டணி. அதே நேரத்தில் 'வினாஷ்'க்கு (அழிவு) பெயர் பெற்றது ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ்.

    * 2005 தேர்தல் தோல்விக்காக, பீகாரில் அனைத்து மத்திய திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தி பழிவாங்கியது.

    * கோசி நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க நீண்டகால தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

    * வெளிநாட்டு பயணத்தின்போது உலகத் தலைவர்களுக்கு நான் மக்கானா (makhana) பெட்டிகளை பரிசளிக்கிறேன். இது பீகாரின் விவசாயிகளின் கடின உழைப்பு என்று அவர்களிடம் சொல்லப்படும்.

    * ஆர்ஜேடி-யின் காட்டு ராஜ்ஜியத்தின் போது போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. டிஎஸ்பி சத்யபால் சிங் சட்டத்தை மீறுவதற்கு எதிராக செயல்பட்டதால் சஹர்சாவில் கொலை செய்யப்பட்டார்.

    * ஆட்சிக்கு வந்ததும் நாலந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டுவேன் என்று காங்கிரஸ் நாம்தார் (ராகுல்காந்தி) கூறுகிறார். பொய் சொல்வதற்கும் எல்லை உண்டு.

    * நாலந்தா பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் அரசு ரூ.20 கோடி வழங்கிய நிலையில், நாங்கள் ரூ.2,000 கோடி செலவிட்டோம்.

    * காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபமாக உள்ளனர். அவர்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.

    * காங்கிரஸ் 'அரச குடும்பம்' பல வெளிநாட்டு விழாக்களைக் கொண்டாடுகிறது. ஆனால் சாத் பூஜையை நாடகம் என்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
    • ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பீகார் தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு NDA என்ன செய்தது என்பது குறித்து முதலில் பதில் அளிக்க வேண்டும்.

    வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பாஜகவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும் பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். அவர் புதிய அமைச்சகத்தை (அவமதிப்பு அமைச்சகம்) உருவாக்க வேண்டும்.

    பீகார் அரசை நடத்துவது பிரதமர், மத்திய தலைவர்கள்தான், நிதீஷ் குமார் அல்ல.

    அரசு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பீகாரில் உள்ள NDA அச்சுறுத்துகிறது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    • தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
    • யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, "இப்போது இருப்பவர்களில் எனக்கு ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை திமுகவினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 56 அங்குல மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார்.
    • மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார்.

    பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று பேகுசராய் மற்றும் ககாரியா பகுதியில் பேரணி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசாரத்தில் பேசிய அவர், "பெரிய மார்பு இருப்பதால் மட்டும் நீங்கள் வலிமையானவராகிவிட மாட்டீர்கள். மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார், அந்தக் காலத்தின் வல்லரசான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்.

    ஆனால் 56 இன்ச் மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார். பின்னர், பாகிஸ்தானுடனான இராணுவ மோதல் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

    மோடி டிரம்பிற்கு பயப்படுவது மட்டுமல்லாமல், அம்பானி மற்றும் அதானி ஆகியோரால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார். 

    1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அமெரிக்கா அச்சுறுத்தியபோது, அவர் பயப்படவில்லை, சரியானதை செய்தார்.

    ஆனால் டிரம்ப் மோடியிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொன்னபோது, மோடி அதை நிறுத்தினார்" என்று விமர்சித்தார்.

    மேலும் மோடி அரசின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் சிறு வணிகங்களை அழித்து பெரிய வணிகர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

    • தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.
    • மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

    பீகார் மாநிலம் பேகுசராய் பகுதியில் தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.

    இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி அங்குள்ள உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும் அவர்களின் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராகுல் வாகக் கேட்டறிந்தார்.

    இந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், மீன் வளர்ப்புக்கு காப்பீட்டுத் திட்டம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி ஆகிய வாக்குறுதிகளை குறிப்பிட்டது.

     ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "மீனவர்கள் பீகார் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம். அவர்களின் உழைப்பும், தொழில் குறித்த ஆழமான புரிதலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்களின் உரிமை மற்றும் கௌரவத்திற்காக நான் உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது.
    • ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

    பாட்னா:

    பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன.

    வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

    பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தனர். சிந்தூர் நடவடிக்கையின் அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தானும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்னும் மீளவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370-வது பிரிவை ரத்துசெய்ய முடியாது. ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன்.

    பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவின் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    தேர்தலுக்கு பிறகு ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வியை முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது.

    மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டையாக இருக்கிறது. பொய்கள், வஞ்சகம் மறறும் மக்களை ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

    வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
    • ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார்.

    பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தல் வருகிற வியாழக்கிழமை 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியின் ராகுல் காந்தி பெகுசாராய் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேர்தலுக்குப் பின்னர் மக்களின் பேச்சை பிரதமர் மோடி கேட்கமாட்டார் என விமர்சனம் செய்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-

    நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார். பீகாருக்கு வருகிறார். வாக்குறுதிகள் தருகிறார். தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார். வெறுமன வெளியேறிவிடுவார்.

    நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை இப்பொழுதே செய்யுங்கள் என நான் சொல்கிறேன். பிரதமர் மோடி வாக்குகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நீங்கள் யோகா செய்யச் சொன்னால் சில ஆசனங்களை அவர் செய்வார். ஆனால் தேர்தலுக்கு பிறகு, அதானி மற்றும் அம்பானியால் அனைத்து பாடல்கள், நடனங்கள் நடத்தப்படும். இந்த எல்லா விசயங்களும் ஜஸ்ட் டிராமாதான்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.

    விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
    • ராகுல் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் இன்று பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். ரோடுஷோவிலும் பங்கேற்கிறார். பாட்னாவில் இன்று மெகா ரோடுஷோ நடத்துகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது 3-வது ரோடுஷோ இதுவாகும்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இங்கு ரோடு ஷோவில் ஈடுபட்டார். முன்னதாக ஆரா மற்றும் நவாடா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். மோடி ஏற்கனவே 2 முறை பீகாரில் பிரசாரம் செய்து இருந்தார்.

    இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூர் மற்றும் வைஷாலி ஆகிய 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி ஏற்கனவே பிரசாரம் செய்து இருந்தார். அவர் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    ×