என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலகக்கோப்பைக்கான 9 போட்டிகள் கொண்ட ராபின் ரவுண்டு லீக் சுற்றில் 7-ல் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    உலககோப்பை போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா 7-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பக்கு 264 ரன் எடுத்தது. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 3-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 113 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), திரிமானே 53 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் 265 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சதத்தால் இந்திய அணி 265 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா 94 பந்தில் 103 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), ராகுல் 118 பந்தில் 111 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வீராட்கோலி 34 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.

    இந்தியா பெற்ற 7-வது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    உலகக்கோப்பையில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் 7-1 என்ற கணக்கில் முடிவு அமையும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதாவது 7 ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது உண்மையிலேயே எனக்கு கிடைத்த கவுரவமாகும். இந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது அற்புதமானது.

    அரையிறுதி சிறப்பாகவோ அல்லது மோமாகவோ அமையலாம். எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் மோசமாக அமைவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் எங்களது மற்றொரு சிறப்பான ஆட்டத்தை அரை இறுதியிலும் வெளிப்படுத்துவோம்.

    அரையிறுதியில் எந்த அணியை சந்திப்பது என்பது வி‌ஷயமில்லை. நாங்கள் சிறப்பாக ஆடாவிட்டால் எந்த அணியும் எங்களை தோற்கடிக்கும். நாங்கள் சிறப்பாக ஆடினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டு பணி முக்கியமானது. அவர் ஒரு அற்புதமான வீரர். அணியை மேம்பாடு அடைய வைப்பதில் சிறந்தவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    12-வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒருமுறை மோதின. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. மொத்தம் 45 ‘லீக்’ ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ‘லீக்’ முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தன.

    முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு நுழைந்தன. பாகிஸ்தான் 11 புள்ளியுடன் 5-வது இடத்தை யும் இலங்கை 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தையும், வங்காள தேசம் 7 புள்ளிகள் பெற்று 8 இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் 5 புள்ளியுடன் 9-வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.

    இங்கிலாந்து ஆஸ்திரேலியா

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    2-வது அரையிறுதி ஆட்டம் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) பர்மிங்காமில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா- மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தனது 5-வது சதத்தினைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தார்.
    லீட்ஸ்:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் 5-வது சதம் இதுவாகும்.

    ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 102 ரன்களும், வங்காளதேசத்துக்கு எதிராக 104 ரன்களும் எடுத்து இருந்தார். இதன்மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

    இதற்கு முன் 2015-ம்ஆண்டு உலக கோப்பையில் இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை ரோகித் சர்மா முறியடித்தார்.

    189 ரன்கள் சேர்த்த ரோகித்-ராகுல் ஜோடி

    மேலும், 44 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 6 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். அந்த சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்தார். ரோகித் சர்மா கடந்த உலக கோப்பை போட்டியில் ஒரு சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நடப்பு உலகக் கோப்பை போட்டி தொடரில் ரோகித் சர்மா 8 ஆட்டத்தில் விளையாடி 647 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (8 ஆட்டத்தில் 606 ரன்கள்) 2-வது இடத்தில் உள்ளார்.

    2003-ம் ஆண்டு உலக கோப்பையில் தெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்ததே ஒரு உலக கோப்பையில் வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். அந்த அரிய சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 27 ரன்களே தேவையாகும்.

    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய இணை எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் டு பிளசிஸ் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா அணி.
    மான்செஸ்டர்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 

    மார்கிராம், குயிண்டன் டி காக் களமிறங்கினர். மார்கிராம் 34 ரன்னில் அவுட்டானார். டி காக் அரை சதமடித்த் 52 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் டு பிளசிசும், வான் டெர் ஹுசைனும் பொறுப்புடன் ஆடினார். இருவரும் கிடைத்த இடைவெளியில் தங்கள் அதிரடியை காட்டினர்.

    வான் டெர் ஹுசைன்

    இருவரும் இணைந்து 151 ரன்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் சதமடித்து 100 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வான் டெர் ஹுசைன் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. 

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய லீக் ஆட்டத்தில் மேத்யூசின் அபார சதத்தால் இந்தியா வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீட்சில் இன்று நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியா,  இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 
    திமுத் கருணரத்னே, குசால் பெராரா களமிறங்கினர்.

    இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அசத்தலாக பந்து வீசினர். இதனால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    அந்த அணியின் கருணரத்னே 10 ரன்னிலும், குசால் பெராரா 18 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    3 விக்கெட் வீழ்த்திய பும்ரா

    அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுடன் திரிமானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் இணைந்து 100 ரன்கள் சேர்த்தனர். 

    அரை சதமடித்த திரிமானே 53 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மேத்யூஸ் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியா வெற்றி பெற 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    மான்செஸ்டர்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ள 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீட்சில் இன்று நடைபெறவுள்ள 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியா அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

    இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இலங்கை அணி களமிறங்க உள்ளது.

    இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மொகமது ஷமி, சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
    அரைஇறுதி போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.

    ஐதராபாத்:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசையில் இடம் பெற்று இருப்பவர் ரவிந்திர ஜடேஜா. உலககோப்பை அணியில் அவருக்கு இதுவரை 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அரை இறுதி போட்டி யில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டர் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடக்கூடியவர். நல்ல சுழற்பந்து வீரர். அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அரை இறுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியிலேயே அவரை ஆட வைத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்துக்கு அவர் மிகுந்த பயன் உள்ளதாக இருப்பார். அரைஇறுதி ஆட்டம் முக்கியமானது. தேர்வு கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கூறியதாவது:-

    இந்திய அணி இங்கிலாந்துக்கு இணையாக சமபலத்துடன் இருப்பதாக நினைக்கவில்லை. அரை இறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். குல்தீப் யாதவ் அல்லது யசுவேந்திர சாஹலை நீக்கி விட்டு அவரை கொண்டு வரவேண்டும்.

    இந்திய அணியின் பேட்டிங் ரோகித்சர்மா, வீராட்கோலியை அதிகமாக நம்பி இருக்கிறது. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது. ஆனாலும் இதனால் எந்த பலனும் இல்லை. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் சதம் அடித்தார். அவர் 100 ரன்னும், பாபர் ஆசம் 96 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். முஷ்பிகுர் ரகுமான் 5 விக்கெட்டும், முகமது சைபுதீன் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 94 ரன்னில் வெற்றி பெற்றது.

    சகீப்-அல்-ஹசன் அதிக பட்சமாக 64 ரன்னும், லிட்டன் தாஸ், 32 ரன்னும் எடுத்தனர். வேகப்பந்து வீரர் ‌ஷகீன்ஷா அப்ரிடி 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். சதாப்கான் 2 விக்கெட்டும், முகமது அமீர், வகாப் ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பாகிஸ்தானின் இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லை. அந்த அணி மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டும். அதிசயம் நிகழ்ந்தால்தான் அப்படி செய்திருக்க முடியம்.

    6-வது வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்தைவிட ரன் ரேட்டில் பின்தங்கி இருந்ததால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இரு அணிகளும் தலா 11 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

    ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 4-வது இடத்தைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 5-வது இடத்துடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

    பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாதது குறித்து அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

    உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஒரு ஆட்டம் எங்களை மாற்றி விட்டது. வெஸ்ட்இன்டீசுக்கு எதிராக மோசமாக ஆடியதால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    எங்களது பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையும் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இமாம்-உல்- ஹக், பாபர்ஆசம், ஹாரிஸ் சோகைல் ஆகியோரும் பந்து வீச்சில் அமீர், சதாப், வகாப், ‌ஷகீன் அப்ரிடி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். நான் பார்த்த சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.
    லண்டன்:

    பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழ்நிலையுடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பகர் ஜமான் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் 400 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் சதம் அடித்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே அடித்தனர். 

    வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளும், சாய்புதீன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 8 ரன்னிலும் சவுமியா சர்கார் 22 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷகிப் அல்-ஹசன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் மற்றவீரர்கள் சரிவர விளையாடாததால் வங்காளதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

    பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிதி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது       
    வங்காள தேசத்திற்கு எதிராக 315 ரன்களே அடித்துள்ளதால், உலகக்கோப்பைக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழ்நிலையுடன் களம் இறங்கியது.

    பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் 400 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    பாபர் ஆசமை வீழ்த்திய சந்தோசத்தில் சாய்புதீன்

    ஆனால் அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய இமாம் உல் ஹக் சதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஹட்அவுட் மூலம் வெளியேறினார். இமாம் உல் ஹக் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.5 ஓவரில் 246 ரன்கள் சேர்த்திருந்தது.

    அதன்பின் வந்த முகமது ஹபீஸ் 27 ரன்னிலும், ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், சர்பராஸ் அகமது 2 ரன்னிலும் (ரிட்டையர்டு ஹர்ட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    முஷ்டாபிரஜூர் ரஹ்மான்

    கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் 26 பந்தில் 43 ரன்கள் விளாச பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள்  அடித்துள்ளது. வங்காள தேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுக்களும், சாய்புதீன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் சேர்த்த இளம் வீரரான இக்ரம் அலி கில் சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. பின்னர் சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் குவித்தார். 18 வயதேயாகும் இக்ரம் அலி கில், இதன்மூலம் உலகக்கோப்பையில் இளம் வயதில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்திருந்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

    இதுகுறித்து இக்ரம் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிகபட்ச ஸ்கோராக 86 ரன்கள் அடித்ததில் சந்தோசம்.  உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் 9 ஆட்டங்களில் விளையாடிள்ளன. இதில் யாருமே 86 ரன்களே தாண்டவில்லை. ஆனால், சதம் அடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு சதம் அடிப்பதற்கான உத்வேகமாக இருக்கும்.

    இக்ரம் அலி கில்

    கிரிக்கெட் போட்டியில் லெஜெண்ட் ஆன சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததால் மிகவும் பெருமையடைகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான நான், பேட்டிங் செய்ய வரும்போதெல்லாம் சங்ககராதான் என் மனிதில் இருப்பார். அவர்தான என் ரோல் மாடல்’’ என்றார்.
    ×