search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "azharuddin"

    • கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அவரிடம் தொடர்ச்சியாக நல்ல திறமையை வெளிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
    • உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.

    இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தவர் கே.எல்.ராகுல். பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல், தொடக்க வீரராக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதற்கு பின்னர் நடந்த போட்டிகளிலும் ராகுலின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வந்தது. இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் பிசிசிஐயின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ராகுல் நீக்கப்பட்டார். இன்னொரு பக்கம் அணியை வழிநடத்தும் பொறுப்பு பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துணை கேப்டன் பொறுப்பையும் பாண்ட்யா ஏற்றுள்ளார்.

    சில வாரங்கள் ஓய்வுக்கு பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில், ராகுல் நேற்று விளையாடினார். இதில் நல்ல ரன்கள் குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் அவரால் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    தொடர்ந்து அவர் தடுமாறி வருவதால் இந்திய அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் பேட்டி அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அவரிடம் தொடர்ச்சியாக நல்ல திறமையை வெளிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.

    இதனை அவரால் சரி செய்ய முடியும். அதற்கு முக்கியமாக பயிற்சியாளர்கள் தான் உதவ வேண்டும். பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் ராகுலுக்கு பிரச்னை இருக்கிறது. இதுதான் அவர் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமாக நினைக்கிறேன்.

    மேலும் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் திறமையான வீரர்கள். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர்கள் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிரிக்கெட் கேப்டனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #imrankhan #Azharuddin
    ஐதராபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ‘தெஹ்ரிக் இ இன்சாப்’ கட்சியின் வெற்றியின் மூலம் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் விரைவில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், இம்ரான் கான் மீதான தனது எதிர்பார்ப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த நிலைக்கு இம்ரான் கான் வளர்ந்து வந்துள்ள அரசியல் பாதை ரோஜாப்பூக்களால் ஆனதல்ல, முட்கள் நிறைந்த கரடுமுரடனான பாதையை அவர் கடந்து வந்துள்ளார் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. (அவரது நாட்டின் பிரதமரான பிறகும்) இதேபோன்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும்.

    ஆனால், இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதில் அவர் என்ன செய்கிறார்? என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றால் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் ஆட்சியை பிடிப்பது மிகவும் அரிதான காரியம். முதல்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டியுள்ளது, அதன் பிறகுதான் மற்ற பிரச்சனைகள் தொடர்பாக அவர் திரும்பிப் பார்க்க முடியும்.

    ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே இத்தனை பூசல்களும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல்களும் தொடர்ந்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிரமம் என்றே நான் கருதுகிறேன். முதலில் இதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பல்வேறு விவகாரங்களை நேர்படுத்த வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #imrankhan #Azharuddin
    ×