என் மலர்
நீங்கள் தேடியது "இமாம் உல் ஹக்"
- தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.
இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சீனுரான் முத்துசாமி 2 விக்கெட் வீழத்தினார். ரபடா, சுப்புராயன், ஹார்மன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் 2-வது போட்டியில் பகர் ஜமான் 138 ரன்களும், 1999-ல் இஜாஸ் அகமது 137 ரன்களும், 1987-ல் மியான்தத் 113 ரன்களும் அடித்துள்ளனர்.
பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.

இமாம்-உல்-ஹக்
அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி டர்பனில் நாளைமறுதினம் (22-ந்தேதி நடக்கிறது.
அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

ஷான் மசூத்
இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் முதல்நாள் நாள் மதிய உணவு இடைவேளை பாகிஸ்தான் 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டெயின், பிலாண்டர், ரபாடா, ஆலிவியர் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று நினைத்த இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சர்பிராஸ் அகமது
ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். முகமது அமிர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க யாசிர் ஷா (5), முகமது அப்பாஸ் (0), ஷாஹீன் அப்ரிடி (3) அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இமாம்-உல்-ஹக் 8 ரன்னிலும், பகர் சமான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து விளையாட அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்னிலும், பாபர ஆசம் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினாரகள்.

இதனால் பாகிஸ்தான் 54 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இருவரும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். பாகிஸ்தான் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 17 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.

மசூத்
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

இமாம் உல் ஹக்
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.

நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
இதனால் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் அபுதாபி டெஸ்டில் இமாம்-உல்-ஹக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 48 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம்-உல்-ஹக்கிற்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பகர் சமான் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். 37 வயதாகும் முகமது ஹபீஸ் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து தற்போதுதான் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். அணியில் இடம்பிடித்த அவருக்கு தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நாதன் லயன் ஆகியோர் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இருவரும் முதல் செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் 31 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தது. இமாம்-உல்-ஹக் 36 ரன்னுடனும், முகமது ஹபீஸ் 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முகமது ஹபீஸ் 96 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய இமாம்-உல்-ஹக்கும் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
அரைசதம் அடித்த முகமது ஹபீஸ் அதை செஞ்சூரியாக மாற்றினார். 172 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அணியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

2-வது செசனிலும் இந்த ஜோடி விக்கெட்டை இழக்கவில்லை. தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 199 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
இமாம்-உல்-ஹக் 188 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் முகமது ஹபீஸ் 208 பந்தில் 15 பவுண்டரியுடன் 126 குவித்து ஆட்டமிழந்தார்.
புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.

அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் இதற்கு முன்பு 385 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அது தற்போது 399 ரன்னாக உயர்ந்ததுள்ளது. ஒருநாள் போட்டியில் எந்தவொரு தொடக்க ஜோடியும் முச்சதத்தை தொட்டது கிடையாது. முதன்முறையாக பகர் சமான் - இமாம்-உல்-ஹக் ஜோடி 304 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதன்பின் தெண்டுல்கர் - டிராவிட் 331 ரன்களும், கங்குலி - டிராவிட் 318 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இந்த ஜோடி 304 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுதான். இதற்கு முன் சோஹைல் - இன்சமாம் உல் ஹக் ஜோடி 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.






