என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
Byமாலை மலர்20 Jan 2019 3:38 AM GMT (Updated: 20 Jan 2019 3:38 AM GMT)
போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். #SAvPAK
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ஹசிம் அம்லா (108), வான் டெர் டஸ்சன் (93), ஹென்ரிக்ஸ் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது.
பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.
இமாம்-உல்-ஹக்
அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி டர்பனில் நாளைமறுதினம் (22-ந்தேதி நடக்கிறது.
பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரரான பகர் சமான் 25 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 86 ரன்கள் குவித்தார். பாபர் ஆசம் 49 ரன்கள் அடித்தார்.
இமாம்-உல்-ஹக்
அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 63 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி டர்பனில் நாளைமறுதினம் (22-ந்தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X