search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபர் ஆசம்"

    • பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
    • இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பி ரிக்கா, வங்காளதேசம், நியூ சிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

    இதற்கிடையே பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

    அக்டோபர் 20-ந்தேதி பெங்களூருவில் நடை பெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி 23-ந்தேதி சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ் தானுக்கு எதிரான போட்டிகளின் மைதானங்களை மாற்றுமாறு வலியுறுத்தியது.

    ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது.

    உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஒட்டு மொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அதில் கவனம் செலுத்துவோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வர இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணையும் எங்களிடம் உள்ளது. போட்டிகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    இப்போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டி எங்கு நடந்தாலும் அங்கு நாங்கள் விளையாட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர் கொள்ள உற்சாகமாக இருக்கிறோம்.

    பாகிஸ்தான் அணி தனது பலம் மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளின் நிலைமையை மனதில் கொண்டு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.
    • அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் பாபர் ஆசம்.

    கராச்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் தனது 18-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 10 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்தார். மேலும் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

    அகா சல்மான் 46 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மசூத் 44 ரன்னும் எடுத்தனர். மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 43.2 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி 4-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 60 ரன்னும், மார்க் சேப்மேன் 46 ரன்னும் எடுத்தனர். உஸ்மான் மிர் 4 விக்கெட்டும், முகமது ஹசிப் 3 விக்கெட்டும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நாளை நடக்கிறது.

    • இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

    அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர். 

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    • அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
    • ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கிரிக்கெட்டில் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.

    பாபர் ஆசமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவ போட்டிகளில் அவர் கேப்டன் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும் என்றார்.

    • ஷகீன்ஷா அப்ரிடி முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.
    • பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷகீன்ஷா அப்ரிடி.

    நேற்றைய இறுதி போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்சை அவுட் செய்தார்.

    13-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக்சின் கேட்சை பிடிக்கும் போது ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் களத்தை விட்டு வெளியே சென்றார்.

    அவர் 2.1 ஓவர் தான் வீசி இருந்தார். எஞ்சிய 11 பந்துகளை ஷகீன் ஷா அப்ரிடியால் வீச முடியாமல் போனது. அவர் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார். ஷகீன் ஷா அப்ரிடி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

    பாபர் ஆசமுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.

    பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது. அவர்கள் 150 முதல் 155 ரன்கள் வரை எடுத்து இருந்தால் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    ஷகீன்ஷா வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை ஷகீன்ஷா வீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.

    எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1998-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
    • இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே

    இந்த போட்டிக்கு முந்தைய நாளான இன்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார். நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், ஐ.பி.எல். குறித்து கேள்வி கேட்கிறாரே? என பாபர் ஆசமிற்கு சங்கடமாகிவிட்டது. கேள்வி கேட்டதும், அவர் பாகிஸ்தான் அணியின் மீடியா மானேஜர் நோக்கி தனது பார்வையை நோக்கினார். உடனடியாக அவர் தலையிட்டு பதில் அளித்தார்.

    பத்திரிகையாளர் ஒருவர் ''ஐ.பி.எல். விளையாடுவதன் நன்மைகளைப் பற்றி பேசுங்கள், அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அதுகுறித்து உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நம்பிக்கை உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

    உடனடியாக பாபர் ஆசம் அவரது மீடியா மானேஜர் பக்கம் திரும்பினார். அவர் இடைமறித்து ''தற்போது நாம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கேள்விகள் எடுத்து வருகிறோம்'' என்றார்.

    அதன்பின் உலகக் கோப்பை குறித்த கேள்விகள் தொடர்ந்தன.

    உலகளவில் ஐ.பி.எல். மிக பணக்கார லீக்காகவும், பெரிய லீக்காகவும் அறியப்படுகிறது. இதில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தங்களது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே....

    • கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தியது
    • உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ''இந்த ஞாயிறு 152/0 vs 170/0'' என ட்டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் தொடக்க சுற்றில் பாகிஸ்தானை இந்தியா விக்கெட் இழப்பின்று 152 ரன்கள் எடுத்து வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் இங்கிலாந்து இந்தியாவை விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வீழ்த்தியது.

    இதை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்திருந்தார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டி குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டியளித்தார்.

    அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாபர் ஆசம் அளித்த பதில் பின்வறுமாறு:-

    அவரது டுவிட்டால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் சொல்வதற்கு மன்னிக்கவும், நான் அவரது டுவிட்டை பார்க்கவில்லை. ஆகவே, அது குறித்த அறிவு இல்லை. ஆனால், நாங்கள் எதிரணிக்கு எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

    உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது. நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். அணியை வழி நடத்தும் எனக்கு குறிப்பாக இந்த பெரிய மைதானத்தில் வெல்வது சிறந்த தருணம். எங்களுடைய 100 சதவீத முயற்சி வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அதன்பின் சிறந்த முறையில் கம்-பேக் ஆனோம். பாகிஸ்தான் வீரர்கள் புலி போன்று போரிட்டனர். அங்கேயிருந்து தொடர்ந்து எங்கயுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பார்ப்போம்'' என்றார்.

    • 1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
    • இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார்

    1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் (ஒருநாள் போட்டி) உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தது. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே மண்ணில் 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் எதிர் கொள்வதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளரு மான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் உலக கோப்பையை வென்றால் இன்னும் 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2048ல் பாபர் ஆசம் பாகிஸ்தான் பிரதமராக வருவார் என்று வர்ணனையின் போது கவாஸ்கர் தெரிவித்தார். 1992-ல் உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் அதன் பின் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமரானார். அதே போன்று இந்த உலக கோப்பையை வென்றால் பாபர் ஆசம் பிரதமர் ஆவார் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

    • இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது.
    • நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.

    டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் சாம்பியனுக்கு போட்டியிடும்.

    நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 153 இலக்கை 19.1 ஓவரில் எட்டியது.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த வெண்டும் என கோடான கோடி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில், நேற்றைய போட்டிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ''நீங்கள் சிறந்த முறையில் தோல்வியில் இருந்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளீர்கள். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுன் என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற போட்டிகளில் நாம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய திட்டம் என்ன?'' என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் ''இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது. எந்த அணி வருவது என்பது விஷயம் அல்ல. நாங்கள் எங்களுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த தொடரில் நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்.

    இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டால், நீங்கள் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டம். இதுபோன்ற ஆட்டத்தைத்தான் நாங்கள் 3-4 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதை அப்படியோ தொடர் பார்ப்போம்'' என்றார்.

    • பாபர் மிடில் ஆர்டரில் இறக்க வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வற்புறுத்தல்.
    • நீங்கள் கேப்டனாக இருந்தால், உங்கள் அணியை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.

    உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது

    அதன் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.

    ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.

    கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் பகர் ஜமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய பகர் ஜமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.

    பாகிஸ்தான் 13.5 ஓவரில் 92 ரன் இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் பாபர் ஐந்து பந்தில் நான்கு ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வரும் வியாழன் அன்று நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    இந்த போட்டியில் பாபர் ஆசம் 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த போட்டிகளில் பாபர் ஆசம் மிடில்-ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்றவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் பகர் ஜமானை தொடக்க வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அது சுயநலம் என்று அழைக்கப்படுகிறது; ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர்,ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×