search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். குறித்த கேள்வி: என்னையா இது? என மீடியா மானேஜர் பக்கம் திரும்பிய பாபர் ஆசம்
    X

    ஐ.பி.எல். குறித்த கேள்வி: என்னையா இது? என மீடியா மானேஜர் பக்கம் திரும்பிய பாபர் ஆசம்

    • 1998-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
    • இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே

    இந்த போட்டிக்கு முந்தைய நாளான இன்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார். நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், ஐ.பி.எல். குறித்து கேள்வி கேட்கிறாரே? என பாபர் ஆசமிற்கு சங்கடமாகிவிட்டது. கேள்வி கேட்டதும், அவர் பாகிஸ்தான் அணியின் மீடியா மானேஜர் நோக்கி தனது பார்வையை நோக்கினார். உடனடியாக அவர் தலையிட்டு பதில் அளித்தார்.

    பத்திரிகையாளர் ஒருவர் ''ஐ.பி.எல். விளையாடுவதன் நன்மைகளைப் பற்றி பேசுங்கள், அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அதுகுறித்து உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நம்பிக்கை உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

    உடனடியாக பாபர் ஆசம் அவரது மீடியா மானேஜர் பக்கம் திரும்பினார். அவர் இடைமறித்து ''தற்போது நாம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கேள்விகள் எடுத்து வருகிறோம்'' என்றார்.

    அதன்பின் உலகக் கோப்பை குறித்த கேள்விகள் தொடர்ந்தன.

    உலகளவில் ஐ.பி.எல். மிக பணக்கார லீக்காகவும், பெரிய லீக்காகவும் அறியப்படுகிறது. இதில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தங்களது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே....

    Next Story
    ×