என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்பபடி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்

செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
நெய் - சிறிதளவு

செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
ருசியான பன்னீர் பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காயுடன் முட்டை சேர்த்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
வெண்டைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
முட்டை - 4
வெண்டைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - சுவைக்கு

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஓட்ஸ் வைத்து எளிய முறையில் சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
ஓட்ஸ் - 200 கிராம்
சர்க்கரை ( சீனி ) - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 4 மேஜைக்கரண்டி
மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
ஓட்ஸ் - 200 கிராம்
சர்க்கரை ( சீனி ) - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
நெய் - 4 மேஜைக்கரண்டி
மஞ்சள் புட்கலர் - 1/4 தேக்கரண்டி
வெந்நீர் - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஓட்ஸ், முந்திரிப்பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். புட்கலரை ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் திரித்து வைத்துள்ள ஓட்ஸ் முந்திரிப்பருப்பு தூள், சர்க்கரைத் தூள், நெய், புட்கலரை கரைத்து வைத்துள்ள தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பதம் சரியாக வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான ஓட்ஸ் லட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மழை காலத்துக்கு இதமான சாப்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து சுவைக்கலாம். முட்டை வைத்து சாப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
ப.மிளகாய் - 3 (நறுக்கவும்)
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் தூள் - 1 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டைகளை நன்றாக வேகவைத்து ஓட்டை நீக்கி விட்டு நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் சோள மாவை கொட்டி அதனுடன் கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
முட்டை துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரெட் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதிக்க தொடங்கியதும் முட்டை கலவையை போட்டு பொரித்தெடுக்கவும்.
முட்டை - 5
ப.மிளகாய் - 3 (நறுக்கவும்)
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் தூள் - 1 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டைகளை நன்றாக வேகவைத்து ஓட்டை நீக்கி விட்டு நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் சோள மாவை கொட்டி அதனுடன் கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
முட்டை துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பின்பு பிரெட் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதிக்க தொடங்கியதும் முட்டை கலவையை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான முட்டை சாப்ஸ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் நண்டு செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை
நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அதில் பச்சை மிளகாயைக் கீறியும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
அதன்பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நண்டு நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா தயார்.
நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை
நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அதில் பச்சை மிளகாயைக் கீறியும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
அதன்பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நண்டு நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் - தேவையான அளவு
ஒயிட் சாக்லேட் - தேவையான அளவு

செய்முறை
முதலில் டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட்டை தனித்தனி பௌலில் போட்டு உருக்கி கொள்ள வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். பின், ஸ்ட்ராபெர்ரியை உருக்கி வைத்த டார்க் சாக்லேட்டில் தொட்டு எடுத்து, பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
டார்க் சாக்லேட் - தேவையான அளவு
ஒயிட் சாக்லேட் - தேவையான அளவு
ஸ்ட்ராபெர்ரி - 15

செய்முறை
முதலில் டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட்டை தனித்தனி பௌலில் போட்டு உருக்கி கொள்ள வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். பின், ஸ்ட்ராபெர்ரியை உருக்கி வைத்த டார்க் சாக்லேட்டில் தொட்டு எடுத்து, பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
சில மணிநேரங்கள் கழித்து, ஒயிட் சாக்லேட் கொண்டு ஜிக்ஜாக் வடிவில் அலங்கரித்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாதி, நாண், பூரிக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் ப்ரோக்கோலி வறுவல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பெருட்கள்:
ப்ரோக்கோலி - ஒரு கப்
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
சிக்கன் - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
முதலில் ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.
அத்துடன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து அதில் ப்ரோக்கோலியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிப்போட்டு வேகவிடவும்.
ப்ரோக்கோலி பாதியளவு வெந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறிவிடவும்.
அத்துடன், ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்த்து கிளறி வேகவிடவும்.
இறுதியாக, மிளகுத்தூள் தூவி 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
ப்ரோக்கோலி - ஒரு கப்
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
சிக்கன் - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.
அத்துடன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து அதில் ப்ரோக்கோலியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிப்போட்டு வேகவிடவும்.
ப்ரோக்கோலி பாதியளவு வெந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறிவிடவும்.
அத்துடன், ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்த்து கிளறி வேகவிடவும்.
இறுதியாக, மிளகுத்தூள் தூவி 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான சிக்கன் ப்ரோக்கோலி ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும். 10 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
அப்பளம் - 2,
கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும்.
பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
அப்பளம் - 2,
கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும்.
பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூப்பரான அப்பள புளிக்குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இன்று முட்டை சேர்க்காமல் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 150 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம்
சூரியகாந்தி எண்ணெய் - 25 மில்லி
பால் - அரை கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
பேரீச்சை - 10
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு கைப்பிடி அளவு
முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடியளவு
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை:
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
கிராம்பு, பட்டை, ஏலக்காயை தட்டி வைக்கவும்.
பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும்.
இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில் கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.
இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் - உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.
மைதா - 150 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம்
சூரியகாந்தி எண்ணெய் - 25 மில்லி
பால் - அரை கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
பேரீச்சை - 10
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு கைப்பிடி அளவு
முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடியளவு
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
கிராம்பு, பட்டை, ஏலக்காயை தட்டி வைக்கவும்.
பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும்.
இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில் கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.
இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் - உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.
இப்போது சூப்பரான முட்டை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணியை எளியமுறையில் செய்வது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி

செய்முறை :
அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
மட்டனை 5 முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக தக்காளி குழைய வதங்கியதும் தயிர் சேர்க்கவும்.
அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை - அரை பழம்

செய்முறை :
அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
மட்டனை 5 முறை கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக தக்காளி குழைய வதங்கியதும் தயிர் சேர்க்கவும்.
அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.
சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எளிய முறையில், ரம் உபயோகப்படுத்தாமல் பிரஷர் குக்கரிலேயே சுவையான பிளம் கேக்குகளை தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/4 கப்
உலர்ந்த கருப்பு திராட்சை - 1/4 கப்
உலர்ந்த பொன்நிற திராட்சை - 1/4 கப்
டூட்டி, ப்ரூட்டி - 1/4 கப்
சிறிதாக நறுக்கிய செர்ரீஸ் - 1/4 கப்
திராட்சை (அ) ஆரஞ்சு பழரசம் - 1 கப்
பழப்பு நிறச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை (ஒரு இன்ச் நீளம்) - 1
நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா - 1 ஸ்பூன்
முட்டை - 2
மைதா - 1 பெரிய கப்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 ஸ்பூன்

செய்முறை:
சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், டூட்டி, ப்ரூட்டி செர்ரீஸ், கருப்பு உலர்திராட்சை, உலர்ந்த பொன்நிற திராட்சை இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் திராட்சை (அ) ஆரஞ்சு சாறை உலர் பழங்கள் போட்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி நன்றாகக் கலந்து குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும் உலர் பழங்கள் ஊற ஊற அவற்றின் அளவு பெரியாதவதுடன் மிகுந்த சுவையையும் கொடுக்கும்.
மிக்ஸி ஜாரில் பழுப்புநிறசர்க்கரை (ப்ரெளன்சுகர்), ஏலக்காய், கிராம்புபட்டை, இவற்றைச் சேர்த்து நன்கு பெளவுடராகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சோத்துக் கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவுடன் இவற்றைக்கலக்கி வைப்பதால் கேக்கை பேக் செய்யும் போது இந்த நட்ஸ்கள் கேக்கின் அடியில் சென்று நிற்காமல் மேற்புறம் இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவற்றை பிளென்டர் உதவியுடன் நன்றாக அடித்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த முட்டைக் கலவையில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பழுப்பு சர்க்கரைப் பொடியை சலித்து (சல்லடையில்) சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளென்டரில் இவற்றைக் கலக்கும் பொழுது முட்டையும், சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்துவிடும்.
மைதா, பேக்கிங் பெளடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சேர்த்துக் அவற்றை சல்லடையில் சலித்து பின்பு முட்டைகலவையில் சேர்த்து உருக்கி வைத்திருக்கும் வெண்ணையையும் அதில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கலக்கி கேக் செய்வதற்கான மாவுக் கலவையைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.
இந்த கேக் செய்வதற்கான மாவில் ஊற்றிய உலர் பழங்களைச் சேர்த்து நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியைச் சேர்த்துவெண்ணிலா எசென்சையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வட்டவடிவமான பிரஷர் குக்கரின் உள்ளே பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரத்தில் உட்புறம் முழுவதும் வெண்ணையைத் தடவி உட்புறம் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து கேக் கலவையை அதில் ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பாத்திரத்தை நன்கு தட்டி சமன் செய்து கொள்ள வேண்டும்.
புரஷர் குக்கரில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு சூடேரிய பிறகு அதனுள் சிறிய ஸ்டாண்டை வைத்து அதன்மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரின் மூடியை மூடிவிடவேண்டும்.
மிதமான தீயில் 40 முதல் ஐம்பது நிமிடங்கள் வைத்து பின்பு குக்கா மூடியை திறந்தால் சுவையான ஃப்ரெஷ்ஷான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளெம் கேக் ரெடி.
கேக் சூடு ஆறியவுடன் ஒரு தட்டில் தலைகீழாக கேக் பாத்திரத்தை வைத்தால் கேக் தனியாக வந்துவிடும்.
சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 1/4 கப்
உலர்ந்த கருப்பு திராட்சை - 1/4 கப்
உலர்ந்த பொன்நிற திராட்சை - 1/4 கப்
டூட்டி, ப்ரூட்டி - 1/4 கப்
சிறிதாக நறுக்கிய செர்ரீஸ் - 1/4 கப்
திராட்சை (அ) ஆரஞ்சு பழரசம் - 1 கப்
பழப்பு நிறச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை (ஒரு இன்ச் நீளம்) - 1
நறுக்கிய பாதாம் - 1 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 1 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா - 1 ஸ்பூன்
முட்டை - 2
மைதா - 1 பெரிய கப்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1/2 ஸ்பூன்
பார்ச்மென்ட் பேப்பர்

செய்முறை:
சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், டூட்டி, ப்ரூட்டி செர்ரீஸ், கருப்பு உலர்திராட்சை, உலர்ந்த பொன்நிற திராட்சை இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் திராட்சை (அ) ஆரஞ்சு சாறை உலர் பழங்கள் போட்டு மூழ்கும் அளவிற்கு ஊற்றி நன்றாகக் கலந்து குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும் உலர் பழங்கள் ஊற ஊற அவற்றின் அளவு பெரியாதவதுடன் மிகுந்த சுவையையும் கொடுக்கும்.
மிக்ஸி ஜாரில் பழுப்புநிறசர்க்கரை (ப்ரெளன்சுகர்), ஏலக்காய், கிராம்புபட்டை, இவற்றைச் சேர்த்து நன்கு பெளவுடராகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை சோத்துக் கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவுடன் இவற்றைக்கலக்கி வைப்பதால் கேக்கை பேக் செய்யும் போது இந்த நட்ஸ்கள் கேக்கின் அடியில் சென்று நிற்காமல் மேற்புறம் இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவற்றை பிளென்டர் உதவியுடன் நன்றாக அடித்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த முட்டைக் கலவையில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பழுப்பு சர்க்கரைப் பொடியை சலித்து (சல்லடையில்) சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பிளென்டரில் இவற்றைக் கலக்கும் பொழுது முட்டையும், சர்க்கரையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்துவிடும்.
மைதா, பேக்கிங் பெளடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சேர்த்துக் அவற்றை சல்லடையில் சலித்து பின்பு முட்டைகலவையில் சேர்த்து உருக்கி வைத்திருக்கும் வெண்ணையையும் அதில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கலக்கி கேக் செய்வதற்கான மாவுக் கலவையைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.
இந்த கேக் செய்வதற்கான மாவில் ஊற்றிய உலர் பழங்களைச் சேர்த்து நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியைச் சேர்த்துவெண்ணிலா எசென்சையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வட்டவடிவமான பிரஷர் குக்கரின் உள்ளே பயன்படுத்தப்படும் அலுமினியப் பாத்திரத்தில் உட்புறம் முழுவதும் வெண்ணையைத் தடவி உட்புறம் பார்ச்மென்ட் பேப்பரை வைத்து கேக் கலவையை அதில் ஊற்றி காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு பாத்திரத்தை நன்கு தட்டி சமன் செய்து கொள்ள வேண்டும்.
புரஷர் குக்கரில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு சூடேரிய பிறகு அதனுள் சிறிய ஸ்டாண்டை வைத்து அதன்மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரின் மூடியை மூடிவிடவேண்டும்.
மிதமான தீயில் 40 முதல் ஐம்பது நிமிடங்கள் வைத்து பின்பு குக்கா மூடியை திறந்தால் சுவையான ஃப்ரெஷ்ஷான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளெம் கேக் ரெடி.
கேக் சூடு ஆறியவுடன் ஒரு தட்டில் தலைகீழாக கேக் பாத்திரத்தை வைத்தால் கேக் தனியாக வந்துவிடும்.
சூப்பரான பிளம் கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சுவையான கேக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
மைதா - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
வால்நெட் முந்திரி பருப்பு - தேவையான அளவு

செய்முறை
பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 20
மைதா - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
வால்நெட் முந்திரி பருப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை
பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான பேரீச்சம் பழ கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






