என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    அசைவ உணவு வகைகளில் மீன் தனக்கென நீங்கா இடம் பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு. மீன் வகைகளில் ஒன்றான கணவாய் மீனை பயன்படுத்தி யாழ்ப்பாண முறையில் பிரட்டல் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    கணவாய் மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 2
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    தேங்காய் பால் - 1 கப்
    ப.மிளகாய் - 5
    கடுகு - 2 தேக்கரண்டி
    சோம்பு  - 2 தேக்கரண்டி
    வெந்தயம் - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கணவாய் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் ப .மிளகாய், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் சிறிய துண்டுகளாக வெட்டிய கணவாய் மீன், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி பின் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேகவைத்து தேங்காய் பால் வற்றியதும் இறக்கினால் சுவையான கணவாய் பிரட்டல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ப்ரோக்கோலியில் சூப், பொரியல், சாலட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான வித்தியாசமான சுவையில் ப்ரோக்கோலி பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ப்ரோக்கோலி - 1 மற்றும் 1\2 கப்
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு- 1 மேசைக்கரண்டி
    மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
    பெருங்காயப் பொடி -1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா -1\4 தேக்கரண்டி
    சுவைக்கேற்ப உப்பு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    ப்ரோக்கோலிia சுத்தம் செய்து, வெட்டி, பூக்களாகப் பிரிக்கவும். பூக்கள் பெரியதாக இருந்தால், சிறிதாக வெட்டவும்.

    இதனை சூடான நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீரைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    வறுப்பதற்கு தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கவும்.

    ஒவ்வொரு பூவாக மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நன்றாகப் பொரித்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ப்ரோக்கோலி பகோடா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புலா‌வ் அரிசி - ½ கிலோ
    துண்டு மீன் - கால் கிலோ
    வெங்காயம் - 4
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    மல்லித்தூள்,
    ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - ½ ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்,
    சீரகம் -1 ஸ்பூன்
    எலுமி‌ச்சை - 1
    கொத்தமல்லி இலை - 1 சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு இதனுடன் மல்லித்தூள், சோம்பு, ‌சீரகத்தூள், எலுமிச்சம் சாற்றை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு வேகவிட்டு  எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் ஊற வைத்த அரிசி, உ‌ப்பு, ‌மிளகா‌ய்த் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு மேலாக மீனை வைத்து தம் போட்டு இறக்கினால் மீன் புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வாழைப்பூ நோய் தொற்று வராமல் பாதுகாக்கும். சர்க்கரை நோய், ரத்தசோகை ஏற்படாமலும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ - 1
    சின்ன வெங்காயம் - 1 கப்
    மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கேற்ப
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
    கடுகு - ½ ஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
    உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - ½ ஸ்பூன்
    கடலை பருப்பு - ½ ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    தனியா தூள் - ½ ஸ்பூன்

    செய்முறை:

    வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    பின்பு கடலை பருப்பு, தனியா தூள், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் பி.மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை கிளறவும்.

    அதன் பின்னர் வேகவைத்த வாழைப்பூவை போட்டு நன்றாக கிளறி 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய். இன்று இந்த கடலை மிட்டாயை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெல்லம் - 1 கிலோ
    நிலக்கடலை - 200 கிராம்
    தண்ணீர் - வெல்லப் பாகை எடுக்க
    உப்பு சிறிதளவு
    தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி - தேவைப்பட்டால்

    செய்முறை

    நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

    வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

    பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சவேண்டும்.

    இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.

    தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை தட்டையான தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

    அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மதுரை எனறால் நினைவுக்கு வருபவையில் ஜிகர்தண்டாவும் ஓன்று. இன்று வீட்டிலேயே சுவையான மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 1 தேக்கரண்டி
    பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
    கடல் பாசி / பாலாடை - தேவையான அளவு
    சர்பத் - 4 தேக்கரண்டி
    சர்க்கரை - தேவையான அளவு
    ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
    ஐஸ்கட்டி - தேவையான அளவு

    ஜிகர்தண்டா தேவையான பொருட்கள்

     செய்முறை

    பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும்.

    பாதாம் பிசினை கழுவி முதல் நாள் இரவே அது முழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

    ஒரு கண்ணாடி தம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு, ஊறி இருக்கும் பாதாம் பிசினை அதில் ஒரு தேக்கரண்டி விட வேண்டும்.

    அதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும்.

    அதன்மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு வித்தியாசமான வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் தக்காளி பாத் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 5
    இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு பிரியாணி இலை - தாளிக்க
    கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
    பிரியாணி மசாலா - ஒரு ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
    கொத்தமல்லி மற்றும் புதினா - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டுதாளித்த பின்னர்  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

    இப்போது நறுக்கி வைத்திருக்கும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    இப்போது இதில் மிளகாய்த்தூள், கரம்மசாலா, பிரியாணி மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்

    மசாலா நன்கு வதங்கியதும் இப்போது அரிசியை இதில் சேர்த்து கிளற வேண்டும்

    இப்போது அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீதமுள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

    இப்போது சுவையான தக்காளி பாத் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மீன் பிரியாணி செய்வதும் மிக எளிதான ஒன்றுதான். பிரியாணியை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு மீன் பிரியாணியும் கட்டாயம் பிடிக்கும்.
    தேவையான பொருள்கள்:

    வஞ்சிரம் மீன் துண்டுகள் - 1 கிலோ
    பாஸ்மதி அரிசி - கிலோ (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்)

    மசாலா பேஸ்ட் செய்யத் தேவையானவை:

    இஞ்சி - பெரிய துண்டு
    பூண்டு - 8 பல்
    பச்சை மிளகாய் - 3
    காய்ந்த மிளகாய் - 3
    துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
    தக்காளி - 3
    மஞ்சள் பொடி - தேக்கரண்டி
    காரப்பொடி - 1 தேக்கரண்டி
    தனியாப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி, புதினா - 1 கட்டு
    தேங்காய் பால் - லிட்டர்

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்கள்:

    மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
    காரப்பொடி - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வதக்கத் தேவையான பொருள்கள்:

    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    பிரிஞ்சு இலை - 3
    பட்டை - 2 துண்டுகள்
    கிராம்பு - 10
    ஏலக்காய் - 4
    வெங்காயம் (நடுத்தர அளவு) - 5

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.

    மீனை ஊறவைக்கத் தேவையான பொருள்களுடன் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாய் அகலமாக உள்ள குக்கரை பிரியாணி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் நெய் இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி அது காய்ந்ததும் அதில் பிரிஞ்சு இலை, பட்டை, கிராம்பு மற்றும் லேசாகத் தட்டிய ஏலக்காயை போட்டு அவை பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு அவை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த  இஞ்சி, பூண்டு விழுதை வெங்காயத்துடன் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும்.

    அடுத்து இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

    பின்பு மஞ்சள் பொடி, காரப்பொடி, தனியாப்பொடி, உப்பு இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் இத்துடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலாவானது தயாரானவுடன் வஞ்சிர மீன் துண்டுகளை மசாலாவின் மீது வைத்து மிகவும் கவனமாக மீன் துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். பிரியாணி செய்வதற்கு மீன் துண்டுகளை கனமான துண்டுகளாக வாங்கினால் அவை உடையாது. அதேபோல் அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கக் கூடாது.

    ஊற வைத்த பாஸ்மதி அரிசியை முக்கால் வேக்காடு வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை வேகவைக்கும் பொழுது 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றினால் சாதமானது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

    முக்கால் பாகம் வெந்த அரிசியை மீன் துண்டுகளின் மீது பரவலாகப் போட்டு தேங்காய்ப் பாலை ஊற்றி மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் கிளற வேண்டும். பின்பு குக்கர் மூடியை மூடி மேலே ஆவி வந்தபின் குக்கர் வெயிட்டைப் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

    பின்பு தீயை அணைத்து விட்டு ஆவி இறங்கிய பிறகு குக்கர் மூடியைத் திறந்து பிரியாணியை வேறு ஒரு அகலமான பாத்திரத்திலோ அல்லது ஹாட் பாக்ஸிலோ மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது சூடான, சுவையான மீன் பிரியாணி தயார்.

    மீன் பிரியாணிக்கு வெங்காயத் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் குழம்பு போன்றவை தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா. எளியமுறையில் செய்யக்கூடிய இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2

    அரைக்க வேண்டிய பொருட்கள்:

    சோம்பு - அரை ஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - அரை கப்
    இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    தாளிக்க ::

    எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - 2 கிராம்பு-2

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த, பின்னர் அதில் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    உருளைக்கிழங்கு குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    போன்லெஸ் சிக்கன் (தோல் நீக்கியது) - 250 கிராம்

    மசாலா தயாரிக்க:

    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    சுவைக்க - உப்பு

    கோட்டிங் செய்ய:

    பிரெட் க்ரம்ப் - 1/2 கப்
    முட்டை - 2
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - வறுக்க

    செய்முறை

    சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும். ஒவ்வொரு சிக்கன் துண்டும் 50 கிராம் அளவு இருக்க வேண்டும்.

    ஒரு பௌலில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

    இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

    அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

    மசாலா தடவிய சிக்கனை எடுத்து பிரெட் க்ரம்ப் மற்றும் முட்டையில் தொட்டு எடுத்து வைக்கவும்.

    பின் இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சாக்லேட் பிரியர்களுக்கு சாக்லேட் மார்குயுஸ் மிகவும் பிடித்தமானது. கடையில் வாங்கி சாப்பிட்ட சாக்லேட் மார்குயுஸை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 600  கிராம்
    சர்க்கரை -  175 கிராம்
    முட்டையின் மஞ்சள் கரு -  6 துண்டுகள்
    முட்டை -  6 துண்டுகள்
    கோகோ பவுடர் -  70 கிராம்
    லிட்டர் காபி -  10 மில்லி
    கிரீம் -  500 கிராம்
    பெர்ரீஸ் -  50 கிராம்
    டார்க் சாக்லேட் -  200 கிராம்
    ஃப்ரஷ் கிரீம் -  100 மில்லி லிட்டர்

    செய்முறை


    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதனுள் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

    அடுத்து அதில் கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையை ஒரு மோல்டில் ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

    சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.

    மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.

    அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.

    சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கத்தரிக்காய் - கால் கிலோ
    கேரட் - 2
    குடை மிளகாய் - 2
    பச்சை பட்டாணி - 2/4 கப்
    பெரிய அளவு வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
    தயிர் - 2 மேஜைக்கரண்டி
    பட்டை - 2
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
    தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    தேங்காய் பால் - அரை கப்
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - 1 அரை தேக்கரண்டி

    செய்முறை:

    காய்களை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் பொடி செய்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

    பிறகு கத்தரிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும்.

    தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தனியாத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    இப்போது குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

    காய்கள் வெந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×