
புலாவ் அரிசி - ½ கிலோ
துண்டு மீன் - கால் கிலோ
வெங்காயம் - 4
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள்,
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்,
சீரகம் -1 ஸ்பூன்
எலுமிச்சை - 1
கொத்தமல்லி இலை - 1 சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு இதனுடன் மல்லித்தூள், சோம்பு, சீரகத்தூள், எலுமிச்சம் சாற்றை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.