என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகள் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் சில்லி பிரெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் ஸ்லைஸ் - 10
    தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
    சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கீறிய பச்சை மிளகாய் - 3
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    நெய் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :


    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வாணலியில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.

     வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    பின்னர் வறுத்த பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான சில்லி பிரெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இன்று சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    தேங்காய் துருவல் - கால் கப்
    பொட்டுக்கடலை - 1/2 கப்
    சோம்பு - 1 ஸ்பூன்
    கசகசா - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1ஸ்பூன்
    மல்லி தூள் - 1/4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    பட்டை - 4 துண்டு
    கிராம்பு - 6
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கறியுடன் உப்பு, மஞ்சள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

    பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து வாணலியில் சோம்பு , பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்

    வேக வைத்த மட்டனை உதிர்த்து, பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் பிசைந்து வைத்த மட்டனை சேர்த்து கிளறவும்.

    நன்கு உதிரியாக வந்ததும்  எலுமிச்சை சாறி பிழிந்து இறக்கினால் சுவையான மட்டன் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மெது வடை என்றால் யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா என்ன? இன்று ரொம்பவும் சுவையான ஆலு மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்து - 100 கிராம்
    உருளைக் கிழங்கு - 3
    அரிசி மாவு - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 100 கிராம்,
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு
    இஞ்சி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உளுந்தினை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம். ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துகொள்ளவும்.

    அடுத்து மிக்சியில் உளுந்தினை சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து வேகவைத்த உருளைக் கிழங்கினையும் அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து, உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, அரிசி மாவு சேர்த்துவடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு மெது வடை ரெடி!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்களை செய்து கொடுத்து அவர்களை குஷிப்படுத்தலாம். இன்று ராகி, டார்க் சாக்லேட் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    டார்க் சாக்லேட் - 100 கிராம் (தூளாக்கவும்)
    ராகி மாவு - அரை கப்
    முட்டை - 2
    சர்க்கரை - தேவைக்கு
    வெண்ணெய் - அரை கப்
    பேக்கிங் பவுடர் - சிறிதளவு

    செய்முறை:

    மைக்ரோ ஓவனை 100 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து அதில் சாக்லேட்டை வைத்து உருக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

    கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் உருக்கிய சாக்லேட், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் ராகி மாவு மற்றும் பேக்கிங் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

    பின்னர் டிரேயில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 150 டிகிரி வெப்பநிலையில் கால் மணி நேரம் வைத்து எடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ராகி டார்க் சாக்லேட் கேக் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு கேசரி மோதகம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 200 கிராம்
    தண்ணீர் - 150 மில்லி லிட்டர்
    உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - 30 கிராம்
    துருவிய தேங்காய் - 150 கிராம்
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
    வறுக்கப்பட்ட முந்திரி - தேவையான அளவு
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் உப்பு, ஒரு தேக்கரண்டி, குங்குமப்பூ மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.

    ஒரு ஈரத்துணியால் இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    ஒரு கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.

    எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.

    கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்த மாவை எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவை கையில் எடுத்து தட்டி அதில் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வைத்து கொள்ளவும்.

    மாவின் உள்ளே இந்த இனிப்பு கலவையை வைத்து அதன் ஓரத்தை மூடிவிட வேண்டும். இந்த மோதகம் காய்ந்து போகாமல் இருக்க ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.

    இட்லி தட்டில் வாழை இலைகளை வைத்து, பிடித்து வைத்த மோதகத்தை அதில் வைத்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.

    சூப்பரான கேசரி மோதகம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மீதமான இட்லியை வைத்து மாலையில் சுவையான மசாலா இட்லி செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி - 8
    பட்டை, சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    சிவப்பு நிறமூட்டி- சிறிதளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - 9

    செய்முறை:

    இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.

    தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்து பின் அரைத்தக் கலவையை போட்டு பச்சை வாடை போக வதக்கவும்.

    இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் 65, கோபி மஞ்சூரியனுக்கு மாற்றாக பன்னீர், முட்டை, பேபி கார்ன், சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் - 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 10 கதிர்கள்
    சாட் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் -கால் கப்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    சமையல் சோடா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    பேபி கார்ன்

    செய்முறை:

    பேபி கார்னை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சமையல் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்

    இந்த கலவைக்குள் பேபி கார்னை புரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

    அதன் மீது சாட் மசாலாவை தூவி ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் - 65 ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான வால்நட் பிரவுனியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 500 மிலி
    மைதா மாவு - 750 கிராம்
    பேக்கிங் பவுடர் - 10 கிராம்
    பேக்கிங் சோடா - 10 கிராம்
    வால்நட் - 220 கிராம்
    டார்க் சாக்லேட் - 360 கிராம்
    வெண்ணெய் - 360 கிராம்
    சர்க்கரை - 260 கிராம்
    பிரவுன் சுகர் - 260 கிராம்

    வால்நட் பிரவுனி

    செய்முறை

    வெண்ணெய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிரீம் பதத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி, அதை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றை இதில் கலந்து, நன்றாக பிசையும்.

    இந்தக் கலவையை, பேக்கிங் டிரேவில் வைத்து, 35 நிமிடங்களுக்கு 175 டிகிரி செல்சியசில் சமைக்கவும்.

    விருப்பமான வடிவங்களில், வால்நட் பிரவுனியை வெட்டி, வெனிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

    சூப்பரான வால்நட் பிரவுனி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையான சில்லி நண்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - அரை கிலோ
    பூண்டு - 10 பல்
    உப்பு - தேவையான அளவு
    தக்காளி - 2
    சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
    சோளமாவு - 2 மேசைக்கரண்டி
    அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
    முட்டை - ஒன்று

    சில்லி நண்டு
     
    செய்முறை :

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

    நண்டை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும்.

    அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

    அடுத்து அதில் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போடவும்.

    ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

    சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.

    சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

    சூப்பரான சில்லி நண்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
    நாட்டு சர்க்கரை தூள் - 2 டேபிள்ஸ்பூன்
    கெட்டியான பால் - 1 கப்
    லவங்க பட்டை தூள் - சிறிதளவு

    ஹாட் சாக்லேட் மில்க்

    செய்முறை:


    முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும்.

    அகன்ற கிண்ணத்தில் சிறிதள்வு பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை, பட்டை தூள், கோகோ பவுடர் ஆகியவற்றை போட்டு கட்டி பிடிக்காமல் நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

    இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.

    அதேபோல் மீதமிருக்கும் பாலையும் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க தொடங்கியதும் இறக்கி சாக்லேட் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நுரை வரும்வரை அடித்து கலக்கி பரிமாறலாம்.

    சூப்பரான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    சீஸ் துண்டுகள் - 10
    வேகவைத்த சென்னா - 1 கப்
    பெ.வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1
    கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
    கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    தக்காளி சாஸ் - சிறிதளவு

    பிரெட் சென்னா சீஸ் ரோல்

    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேக வைத்த சென்னாவை மிக்சியில் போட்டு லேசாக மசித்துகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும்.

    சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டிவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக்கொள்ளவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுக்கவும்.

    அதன் மீது தக்காளி சாஸ் ஊற்றி ருசிக்கலாம்.
     
    சூப்பரான பிரெட் சென்னா சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நல்லி எலும்பில் செய்யும் நல்லி நிஹாரி தோசை, இட்லி, புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை அறிந்த கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சதையுடன் நல்லி எலும்பு - கால் கிலோ
    வெங்காயம் - அரை கப்
    இஞ்சி-  சிறிய துண்டு
    நெய் - 2 ஸ்பூன்
    உப்பு- தேவையான அளவு
    சீரகம் -  1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    பிரியாணி இலை- 2
    மிளகு - 1 ஸ்பூன்
    இலவங்கப்பட்டை- 2
    ஜாதிக்காய்- 1
    அன்னாசி பூ- 1
    கிராம்பு- 2
    ஏலக்காய் - 4
    பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
    கசகசா - 1 ஸ்பூன்
    மிளகாய் - 5
    இஞ்சி பேஸ்ட்- 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    நல்லி நிஹாரி

    செய்முறை

    சதையுடன் நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லி எலும்பை போட்டு அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து விசில்விட்டு வேகவைக்கவும்

    அடுத்து வாணலியில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, மிளகாய் வத்தல் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வேக வைத்த நல்லியை சேர்த்து அரைத்த மசாலா தூள், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்

    கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் நல்லி நிஹாரி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×