என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ருசியான பிரெட் சென்னா சீஸ் ரோல்
Byமாலை மலர்11 Sep 2020 10:31 AM GMT (Updated: 11 Sep 2020 10:31 AM GMT)
குழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 10
சீஸ் துண்டுகள் - 10
வேகவைத்த சென்னா - 1 கப்
பெ.வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்த சென்னாவை மிக்சியில் போட்டு லேசாக மசித்துகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டிவைத்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக்கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுக்கவும்.
அதன் மீது தக்காளி சாஸ் ஊற்றி ருசிக்கலாம்.
பிரெட் துண்டுகள் - 10
சீஸ் துண்டுகள் - 10
வேகவைத்த சென்னா - 1 கப்
பெ.வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தக்காளி சாஸ் - சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்த சென்னாவை மிக்சியில் போட்டு லேசாக மசித்துகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டிவைத்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக்கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுக்கவும்.
அதன் மீது தக்காளி சாஸ் ஊற்றி ருசிக்கலாம்.
சூப்பரான பிரெட் சென்னா சீஸ் ரோல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X