என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    விநாயகருக்கு பிடித்தது கொழுக்கட்டை. இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் நைவேத்தியம் படைக்க எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    எள்ளு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
     
    வெள்ளை எள் - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1 கப்
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    மேல் மாவு:
     
    ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க  விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை  பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
     
    எள்ளு பூரணம்:
     
    ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதிலேயே  வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
     
    விரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை  விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச்  சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து வைக்கவும்.

    இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை  ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான எள்ளு பூரணம் கொழுக்கட்டை ரெடி.

    சிலோன் சிக்கன் பரோட்டாவை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    பச்சை மிளகாய், வெங்காயம் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 2
    சிலோன் கறி பவுடர்  - கால் தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    தேங்காய் பால் - 2 கப்
    எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - தேவையான அளவு

    சிலோன் கறி பவுடர் செய்ய :

    தனியா, சீரகம் - தலா 2 மேசைக்கரண்டி
    அரிசி, சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி
    வெந்தயம் - கால் தேக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய், கிராம்பு - 4
    கறிவேப்பிலை - சிறிதளவு

    பரோட்டா செய்ய :

    மைதா மாவு - 2 கப் ,
    முட்டை - 2
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    பால் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

    சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.

    அதே நெயில் வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை, [பாட்டி மசாலா] ளகாய் தூள், சிலோன் கறி பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.

    தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.

    பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.

    தவாவில் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

    இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான்.

    இப்போது சூப்பரான சிலோன் பரோட்டா ரெடி.
    காராமணியில் சுண்டல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காராமணியை வைத்து மொறுமொறுப்பான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காராமணி - 1 கப்
    இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 1
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை எட்டு மணி நேரம் ஊறவையுங்கள்.

    ஊறிய காராமணியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இடித்த கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள்.

    பிசைந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான காராமணி வடை ரெடி.
    தோசை, இட்லி, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 2
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - அலங்கரிக்க

    அரைக்க

    தேங்காய் - கால் மூடி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    செய்முறை


    வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமாக கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    பின்னர் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் மிதமாக வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    காய்கள் வெந்து எண்ணெய் மேற்பகுதியில் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் ரெடி.

    கச்சோரியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மட்டர் (பட்டாணி) வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 1/2 கப்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவையான அளவு,
    பட்டாணி - 1 1/2 கப்,
    பச்சைமிளகாய் - 3,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    தனியா - 1 டீஸ்பூன்,
    சிவப்பு மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன்,
    ஆம்சூர் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், உ
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்.

    செய்முறை

    மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பூரி மாவு போல பிசையவும்.

    தண்ணீர் சேர்க்காமல் இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் பட்டாணி அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

    தனியா, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் அனைத்தையும் தனியாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து அரைத்த பட்டாணி கலவை சேர்க்கவும்.

    பிறகு மிளகாய்தூள், மல்லித்தூள், ஆம்சூர்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இறுதியாக அரைத்த மசாலாவைத் தூவவும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    மாவை பூரி போல் இட்டு நடுவில் ஒரு கரண்டி பட்டாணி மசாலா வைத்து மூடி மறுபடியும் பூரி போல் இட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டர் கச்சோரி ரெடி.

    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 4,
    கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:


    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவை போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் சீஸ் பால் ரெடி.


    கேரள மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் சுவையான மலபார் பரோட்டாவை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - அரை கிலோ,
    முட்டை (விருப்பப்பட்டால்) - ஒன்று,
    பால் - 100 மில்லி,
    தயிர் - 50 மில்லி,
    தூள் உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து எடுக்கவும்.

    பின்னர் மீண்டும் பரோட்டாவாக தட்டி வைக்கவும்...

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.

    சூப்பரான மலபார் பரோட்டா ரெடி.
    கோகுலாஷ்டமியான இன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று கிருஷ்ணருக்கு படைக்க ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 டம்ளர்
    சர்க்கரை - 2 1/4 டம்ளர்
    நெய் - அரை டம்ளர்
    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

    நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.

    இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

    இப்போது சூப்பரான ரவா லட்டு ரெடி.

    குறிப்பு :

    பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.

    ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று அவல் பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டி அவல் - 1/2 கப்
    வெல்லம் - 1/4 கப்
    பால் - 2 கப்
    ஏலக்காய் - 1
    முந்திரிப்பருப்பு - 5
    நெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.

    பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

    பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.

    1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

    வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

    சூப்பரான அவல் பாயாசம் ரெடி.

    கவனத்திற்கு

    அவல் நன்கு  வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது. 

    கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. கிருஷ்ண ஜெயந்திக்கு நைவேத்தியம் படைக்க அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    அவல் - 1 கப்
    பொட்டுக்கடலை (உடைத்தக்கடலை )- கப்
    முந்திரி - 6
    திராட்சை - 6
    ஏலப்பொடி - சிறிதளவு
    பால் - அரை கப்
    சர்க்கரை - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, காய்ந்த திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

    சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை பிடித்து வைக்கவும்.

    உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    திங்கள் கிழமை (30.8.21) கிருஷ்ண ஜெயந்தி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று விதவிதமான நைவேத்தியம் படைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இன்று வெல்ல சீடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
    வெல்லம் - 1 1/2 கப்  
    எள் - கொஞ்சம்
    ஏலப்பொடி பொடி - 1/4 டீஸ்பூன்
    நெய் -  1 டேபிள் ஸ்பூன்
    பொரிக்க - எண்ணெய்

    செய்முறை :

    முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.

    எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.

    பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.

    கொஞ்சம் ஆறியதும் அழுத்தி பிசையவும்.

    ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கரகரப்பான 'வெல்ல சீடை' ரெடி.

    கர்நாடகாவில் கத்தரிக்காய் சாதம் என்கிற வாங்கி பாத் மிகவும் பிரபலமான உணவுவாகும். இந்த உணவை செய்வதும் எளிது. இன்று வாங்கி பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    கத்திரிக்காய் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    முந்திரி பருப்பு - 15
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    பெருங்காயப்பொடி - 2 பின்ச்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
    புளித்தண்ணீர் - கால் கப்
    உப்பு - தேவைக்கு.

    வாங்கி பாத் பொடி :

    முழு மல்லி - 3 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 2 ,
    பட்டை -  சிறு துண்டு,
    கிராம்பு - 1
    கொப்பரை தேங்காய் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.

    கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

    இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்த்து இறக்கவும்.

    சுவையான வாங்கி பாத் ரெடி.

    வாங்கி பாத் பொடி கடைகளில் கிடைக்கும்.

    ×