என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வெல்ல சீடை
Byமாலை மலர்27 Aug 2021 8:59 AM GMT (Updated: 27 Aug 2021 8:59 AM GMT)
திங்கள் கிழமை (30.8.21) கிருஷ்ண ஜெயந்தி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று விதவிதமான நைவேத்தியம் படைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இன்று வெல்ல சீடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 2 கப்
உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
வெல்லம் - 1 1/2 கப்
எள் - கொஞ்சம்
ஏலப்பொடி பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பொரிக்க - எண்ணெய்
செய்முறை :
முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.
கொஞ்சம் ஆறியதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பச்சரிசி - 2 கப்
உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
வெல்லம் - 1 1/2 கப்
எள் - கொஞ்சம்
ஏலப்பொடி பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பொரிக்க - எண்ணெய்
செய்முறை :
முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.
கொஞ்சம் ஆறியதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கரகரப்பான 'வெல்ல சீடை' ரெடி.
இதையும் படிங்க..கர்நாடகா ஸ்பெஷல் வாங்கி பாத்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X