என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.
என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?
குழந்தையை குளிப்பாட்டுவது
தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
நாப்கின் மாற்றுவது.
குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும். குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை.
தந்தை செய்ய வேண்டியவை
குழந்தையுடன் விளையாடுதல்
நல்லது சொல்லிக் கொடுத்தல்
குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
மரியாதை சொல்லி தருவது
குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.
என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?
குழந்தையை குளிப்பாட்டுவது
தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
நாப்கின் மாற்றுவது.
குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும். குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை.
தந்தை செய்ய வேண்டியவை
குழந்தையுடன் விளையாடுதல்
நல்லது சொல்லிக் கொடுத்தல்
குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
மரியாதை சொல்லி தருவது
குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
பைனாப்பிள், தயிர் சேர்த்து அருமையான சத்தான ரெய்தா செய்யலாம். இதை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெய்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பைனாப்பிள் - 1 துண்டு.
தயிர் - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,

செய்முறை :
பைனாப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.
இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
அதை சாலட் போன்றும் சாப்பிடலாம்.
பைனாப்பிள் - 1 துண்டு.
தயிர் - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
சீரகத்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :
பைனாப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தயிரை நீர் இல்லாமல் காட்டன் துணியில் வடிகட்டி கெட்டியான தயிரை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.
இதில் பைனாப்பிள் துண்டுகளையும் சீரகப் பொடியையும் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
அதை சாலட் போன்றும் சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகளை இப்போது பார்க்கலாம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளுதூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் பலர் மிக மிதமாகவும் ஒரு சிலர் சற்று சிரமத்துடனும் மிகச் சிலர் மிகக் கடினமாகவும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் கைட்லைன்ஸ் உங்களுக்காக..
40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. 25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும் அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.
முதியவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் மற்றும் சிறியதாக பளு தூக்குவது சாலச்சிறந்தவை. விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளு தூக்குதல் எனச் செய்து, அத்துடன் அவர்களது உடலுக்கும் விளையாட்டுக்கும் தேவையான உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது.
சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம்.
ஏரோபிக்ஸ், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் என மேலே கூறியவற்றை தினம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை - உங்கள் தினசரி வேலைப் பளுவை மனதில் கொண்டு செய்து, உடற்பயிற்சிக்கும் வேலைப்பளுவுக்கும் ஏற்றவாறு, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் கைட்லைன்ஸ் உங்களுக்காக..
40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. 25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும் அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.
முதியவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் மற்றும் சிறியதாக பளு தூக்குவது சாலச்சிறந்தவை. விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளு தூக்குதல் எனச் செய்து, அத்துடன் அவர்களது உடலுக்கும் விளையாட்டுக்கும் தேவையான உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது.
சராசரி மனிதர்கள் தங்களின் வேலைப்பளுவை மனதில் வைத்து தினசரி உடற்பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். மெதுவான, மிதமான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, செல்ல நாய்க்குட்டியோடு ஒரு பயிற்சி நடை, வீட்டு முற்றத்தில் குடும்பத்தினரோடு ஒரு சிறிய கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து என பல பயிற்சிகளை செய்யலாம்.
ஏரோபிக்ஸ், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் என மேலே கூறியவற்றை தினம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை - உங்கள் தினசரி வேலைப் பளுவை மனதில் கொண்டு செய்து, உடற்பயிற்சிக்கும் வேலைப்பளுவுக்கும் ஏற்றவாறு, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.
பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும்.
தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதனால் தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பல்வேறு நன்மைகள் இருப்பதால் உலக நல நிறுவனம் மருத்துவமனை பிரசவத்தை தான் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 38 சதவீதத்தினர் பிரசவத்திற்குப் பிந்தைய ரத்த போக்கால்தான் இறக்கின்றனர். 1990-ம் ஆண்டில், உயிரோடு குழந்தை பிறந்த 1 லட்சம் பிரசவங்களில் 516 தாய்மார்கள் இறந்தனர்.
அந்த இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 130 ஆக குறைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்ததே. பிரசவத்தில், தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. இவற்றில் எல்லாம் இன்றையை அறிவியல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியும் இம்மாற்றம் உருவாக காரணமாகியுள்ளது.
கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்ய முடியும். குறை பிரசவக் குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளைக் கூட காப்பாற்றிவிடும் ஆற்றல் பெற்றுள்ளோம். நவீன கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், புதிய மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் திடீரென சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, நல்ல மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிரசவத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை வழங்கி காப்பாற்ற முடியும்.
பிறக்கும் போது குழந்தைகளின் கழுத்தைச் நச்சுக் கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்கு வாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக் கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன் கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அடிப்படை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம்.
வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் காப்பாற்ற முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளின் தரம் குறைவாக உள்ளது. இது கூவத்தூர் போன்ற சம்பவங்களை உருவாக்குகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசியமான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குறைந்த பட்சம் 6 செவிலியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியரோ அல்லது இரு செவிலியரோ மட்டுமே உள்ளனர்.
பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். எப்போதும் தயார் நிலையில் உள்ள அறுவை அரங்கம் இருக்க வேண்டும். ரத்த வங்கியோ அல்லது ரத்த சேமிப்பு வங்கியோ நிச்சயம் தேவை. அல்ட்ராசவுண்டு ஸ்கேனும், சி.டி.ஜி (குழந்தையின் இதய துடிப்பை கண்டு பிடிப்பது) கருவி மிகவும் அவசியம். இவை இல்லாமல் பிரசவம் பார்க்கும் நிலையில், பிரசவத்தின் போது திடீர் சிக்கல்கள் ஏற்பட்டால், தாயையும் சேயையும் காப்பாற்ற முடியாது.
எந்த பிரசவமும், எந்த நேரத்திலும் சிக்கலாக மாற வாய்ப்புண்டு. தாய் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதே கூவத்தூர் போன்ற கொடுமைகளுக்குக் காரணம். பிரசவம் பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேவையான அவசியக் கட்டமைப்பு உள்ள மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். வட்டாரம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அல்லது நான்கு மையங்களை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுவே கூவத்தூர் போன்ற நிகழ்வுகளை தடுத்திடும்.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
அந்த இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 130 ஆக குறைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்ததே. பிரசவத்தில், தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. இவற்றில் எல்லாம் இன்றையை அறிவியல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியும் இம்மாற்றம் உருவாக காரணமாகியுள்ளது.
கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்ய முடியும். குறை பிரசவக் குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளைக் கூட காப்பாற்றிவிடும் ஆற்றல் பெற்றுள்ளோம். நவீன கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், புதிய மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் திடீரென சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, நல்ல மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிரசவத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை வழங்கி காப்பாற்ற முடியும்.
பிறக்கும் போது குழந்தைகளின் கழுத்தைச் நச்சுக் கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்கு வாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக் கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன் கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அடிப்படை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம்.
வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் காப்பாற்ற முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளின் தரம் குறைவாக உள்ளது. இது கூவத்தூர் போன்ற சம்பவங்களை உருவாக்குகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசியமான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குறைந்த பட்சம் 6 செவிலியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியரோ அல்லது இரு செவிலியரோ மட்டுமே உள்ளனர்.
பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். எப்போதும் தயார் நிலையில் உள்ள அறுவை அரங்கம் இருக்க வேண்டும். ரத்த வங்கியோ அல்லது ரத்த சேமிப்பு வங்கியோ நிச்சயம் தேவை. அல்ட்ராசவுண்டு ஸ்கேனும், சி.டி.ஜி (குழந்தையின் இதய துடிப்பை கண்டு பிடிப்பது) கருவி மிகவும் அவசியம். இவை இல்லாமல் பிரசவம் பார்க்கும் நிலையில், பிரசவத்தின் போது திடீர் சிக்கல்கள் ஏற்பட்டால், தாயையும் சேயையும் காப்பாற்ற முடியாது.
எந்த பிரசவமும், எந்த நேரத்திலும் சிக்கலாக மாற வாய்ப்புண்டு. தாய் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதே கூவத்தூர் போன்ற கொடுமைகளுக்குக் காரணம். பிரசவம் பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேவையான அவசியக் கட்டமைப்பு உள்ள மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். வட்டாரம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அல்லது நான்கு மையங்களை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுவே கூவத்தூர் போன்ற நிகழ்வுகளை தடுத்திடும்.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
வெயில் அதிகரித்ததும் உடலில் அதிகமாக வியர்க்கிறதா? வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...
வியர்வை ஏன்?
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.
வாசனை கிடையாது
வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகிறது. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணமாகும்.சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வியர்வையும், வெப்பமும்
வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.
வியர்வை எவ்வளவு?
வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியர்வை வியாதி
சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதீத வியர்வை வெளியேற்றப் பாதிப்பு ‘கைபர்விட்ராசிஸ்’ எனப்படுகிறது. உலகில் 3 சதவீதம் பேருக்கு இப்படி அதீத வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறதாம்.
அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

லட்சக்கணக்கில் வியர்வை சுரப்பிகள்
மனித உடலில் கண், வாய், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.
மஞ்சள் வியர்வை
கை உடலுடன் இணையும் பகுதியின் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.
சிவப்பு வியர்வை
நமது வியர்வைக்கு நிறம் கிடையாது. ஆனால் சில பொருட்களின் சேர்க்கையால் வியர்வை நிறம் மாறுவது உண்டு. உதாரணமாக நீர் யானைகளின் வியர்வை சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அதை வியர்வை என்று அறியாமல் பலவித கதைகள் புனையப்பட்டன. நவீன அறிவியல் அவற்றின் சிவப்பு வியர்வைக்கு காரணத்தை கண்டறிந்து கூறி உள்ளது. வியர்வையுடன் சிவப்பு நிறமிப் பொருளும் கலந்து வெளியேறுவதே அதன் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமாகும். மேலும் அவற்றின் சிவப்பு வியர்வை, சூரிய வெப்ப தாக்குதலை மிகுதியாக கட்டுப்படுத்துவதும், தீமை செய்யும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உணவும், வியர்வையும்...
சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது.
வியர்வையில் உப்பு
ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.
வியர்வை ஏன்?
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.
வாசனை கிடையாது
வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகிறது. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணமாகும்.சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வியர்வையும், வெப்பமும்
வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.
வியர்வை எவ்வளவு?
வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியர்வை வியாதி
சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதீத வியர்வை வெளியேற்றப் பாதிப்பு ‘கைபர்விட்ராசிஸ்’ எனப்படுகிறது. உலகில் 3 சதவீதம் பேருக்கு இப்படி அதீத வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறதாம்.
அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ராணுவ வீரர்கள் போரை எதிர்கொள்ளும் முன்பு அவர்களுக்கு வியர்வை சிவப்பாக வெளியேறும் என்று லியானார்டோ டாவின்சி தெரிவித்து உள்ளார். அதேபோல மாலுமிகள் புயல்சின்னம், கடும் அலைகளை எதிர்கொள்ள நேரிட்டால் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கருத்து உள்ளது. ஆனால் இவை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை.

லட்சக்கணக்கில் வியர்வை சுரப்பிகள்
மனித உடலில் கண், வாய், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.
மஞ்சள் வியர்வை
கை உடலுடன் இணையும் பகுதியின் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.
சிவப்பு வியர்வை
நமது வியர்வைக்கு நிறம் கிடையாது. ஆனால் சில பொருட்களின் சேர்க்கையால் வியர்வை நிறம் மாறுவது உண்டு. உதாரணமாக நீர் யானைகளின் வியர்வை சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அதை வியர்வை என்று அறியாமல் பலவித கதைகள் புனையப்பட்டன. நவீன அறிவியல் அவற்றின் சிவப்பு வியர்வைக்கு காரணத்தை கண்டறிந்து கூறி உள்ளது. வியர்வையுடன் சிவப்பு நிறமிப் பொருளும் கலந்து வெளியேறுவதே அதன் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமாகும். மேலும் அவற்றின் சிவப்பு வியர்வை, சூரிய வெப்ப தாக்குதலை மிகுதியாக கட்டுப்படுத்துவதும், தீமை செய்யும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உணவும், வியர்வையும்...
சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது.
வியர்வையில் உப்பு
ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.
தோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
புளி - பெரிய நெல்லி அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - தேவைக்கு
தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.
பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.
குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை சால்னா ரெடி.
பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
முட்டை - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
புளி - பெரிய நெல்லி அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 15 பல்
மஞ்சள் தூள் - தேவைக்கு
தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.
பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.
குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை சால்னா ரெடி.
பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட உலர் திராட்சையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன.
விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர்.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன.
விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது இந்தியாவில் பாரம்பரியமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கண்மை வைப்பது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை காரணமாக கண் மையைப் பல குழந்தைகளுக்கு தன் பெற்றோர் இடுகின்றனர்.
கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா?
குழந்தைக்கு கண்களில் மை வைக்கலாமா? எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஏன் கண் மையைக் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்?
குழந்தையின் கண்கள் இன்னும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கின்றனர்.
தொற்றுகள், சூரிய கதிர்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையாலும் சிலர் மை இடுகின்றனர்.
குழந்தைக்கு கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் மை வைக்கின்றனர்.
ஏன் குழந்தையின் கண்களில் மை வைக்க கூடாது?
கடைகளில் விற்க கூடிய கண் மையில் அதிக அளவு லெட் இருக்கிறது. இதனால் குழந்தையின் கண்களில் மை இட்டால், அதிக அளவு லெட்டின் தாக்கத்தால் மூளை, மற்ற உறுப்புகள், எலும்பு மஞ்சை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தசோகை, குறைந்த ஐ.கியூ போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.
சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.
குழந்தையை குளிக்க வைக்கும்போது சின்ன, குறுகிய துளைகளின் வழியாக மையில் உள்ள கெமிக்கல்கள் சென்று கண், மூக்கு போன்ற இடங்களில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்.
கண் மை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மிகவும் ரசாயனத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.
மேலும், உங்கள் விரல்களில் உள்ள தூசு, அழுக்கு, நகங்கள் மூலமாக குழந்தைக்கு பாதிப்பும் ஏற்படலாம்.
உங்கள் கை விரலில் உள்ள அழுக்கு, தொற்று மூலமாக கிருமிகள் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் உடல்நிலையைப் பாதிப்படைய செய்யும்.
கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா?
குழந்தைக்கு கண்களில் மை வைக்கலாமா? எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஏன் கண் மையைக் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்?
குழந்தையின் கண்கள் இன்னும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கின்றனர்.
தொற்றுகள், சூரிய கதிர்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையாலும் சிலர் மை இடுகின்றனர்.
குழந்தைக்கு கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் மை வைக்கின்றனர்.
ஏன் குழந்தையின் கண்களில் மை வைக்க கூடாது?
கடைகளில் விற்க கூடிய கண் மையில் அதிக அளவு லெட் இருக்கிறது. இதனால் குழந்தையின் கண்களில் மை இட்டால், அதிக அளவு லெட்டின் தாக்கத்தால் மூளை, மற்ற உறுப்புகள், எலும்பு மஞ்சை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தசோகை, குறைந்த ஐ.கியூ போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.
சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.
குழந்தையை குளிக்க வைக்கும்போது சின்ன, குறுகிய துளைகளின் வழியாக மையில் உள்ள கெமிக்கல்கள் சென்று கண், மூக்கு போன்ற இடங்களில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்.
கண் மை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மிகவும் ரசாயனத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.
மேலும், உங்கள் விரல்களில் உள்ள தூசு, அழுக்கு, நகங்கள் மூலமாக குழந்தைக்கு பாதிப்பும் ஏற்படலாம்.
உங்கள் கை விரலில் உள்ள அழுக்கு, தொற்று மூலமாக கிருமிகள் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் உடல்நிலையைப் பாதிப்படைய செய்யும்.
வெயிலில் சருமம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். வெந்தயத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.
வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.
வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - 1/2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
கேரட் - 1
ப்ரோக்கோலி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1/2 இன்சி
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பார்லி - 1/2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
கேரட் - 1
ப்ரோக்கோலி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1/2 இன்சி
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். அத்தகைய பெரும்பேறு பெற்றது தாய்மை. தாய்மார்களுக்கு குழந்தையின் வருகை ஒரு அற்புதமான நிகழ்வாகும். அதே சமயம் கடினமானதாகவும் மற்றும் நிறைய பொறுப்புகளும் இருக்கும். தூக்கத்திக்கு நேரம் இருக்காது, உணர்ச்சிகளின் ஏற்ற தாழ்வு அதிகமாக இருக்கும். நீங்கள் அனுபவிப்பது சாதாரணமாக எல்ல தாய்மார்களுக்கும் ஏற்படுவதாகும்.
ஆனால் சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் மனநிலையில் சமநிலை இல்லை என்றால் அவர்கள் பிரசவத்துக்குப்பின் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள். மற்றும் குறைவாகவே புன்னகைப்பார்கள். இந்த கோளாறு மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்படுகிறது. இதற்கான போதுமான விழிப்புணர்ச்சி நம்மிடையே இல்லை. பிரசவத்தின் பொழுது ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வு நிலை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சம நிலைக்கு வந்துவிடும். இதற்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் மற்றும் குழந்தை பிறந்த முதல் 12 மாதங்களில் தோன்றும்.
காரணங்கள் :
முந்தய பிரசவத்தின் பொழுது மன அழுத்தம்
குடும்ப பாரம்பரிய மன அழுத்தம்
கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிர்ச்சியான சம்பவம்
பிரசவத்தின் பொழுது சிக்கல் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சினை
பிரசவத்தை நினைத்து கலக்கம்
வலுவான ஆதரவு இன்மை
அறிகுறிகள் :
குடும்பத்தாரையும் நண்பர்களையும் முற்றிலும் தவிர்த்தல். உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க முடியாமல் போகுதல், குழந்தையுடன் நெருக்கமாக உணராமல் இருப்பது மற்றும் பிணைப்பு இல்லாமல் இருப்பது, தீவிரமாக மனம் அலை பாய்வது, பதற்றம் மற்றும் பீதி அடைதல்.
மிக குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது தினசரி செய்யும் வேலை களில் நாட்டம் இல்லாமல் இருத்தல், குழந்தையை காயப்படுத்துவது போன்ற எண்ணங்கள்.
தற்கொலையை தூண்டி விடும் எண்ணங்கள், மிக அதிக கோபம் மற்றும் எரிச்சல், குற்ற உணர்வு மற்றும் அவமானம் காரணமே இல்லாமல் அடிக்கடி அழுவது, தன்னை தானே தனிமை படுத்திக்கொள்வது
புள்ளிவிபரம் :
குழந்தையை பராமரிக்காமல் இருப்பது, உதாரணமாக பால் புகட்டுவது, டயபர் மாற்றாமல் இருப்பது, உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுக்காமல் இருத்தல், இந்த குழந்தை என்னுடையது இல்லை, போன்ற எண்ணங்கள்.
7 தாய்மார்களில் ஒருவருக்கு பிரசவத்துக்கு பின் மன அழுத்தம் உள்ளது.
50 சதவீதம் தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருக்கிறது என்று தெரியாது.
20 சதவீதம் தாய்மார்களின் தற்கொலைகள் (இந்த கோளாறினால் பாதிக்கபட்டவர்கள்), தாய்மார்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
10 சதவீதம் தந்தைகள் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல் பிரசவத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் இரண்டாம் பிரசவத்தின் பொழுது 50 சதவீதம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 49 சதவீதம் தாய்மார்கள் தங்கள் மனஅழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டார்கள்.
மகப்பேற்று சுகாதார நிலையை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள் :
ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் , போதுமான தண்ணீர் பருகவும்.
குழந்தை தூங்கும் பொழுது தூங்குதல், மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி, உங்கள் கணவருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,
தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளாமல் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருங்கள்.
உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மன அழுத்தத்தை பற்றி மனம் விட்டு பேசுங்கள். வெளியே இயற்கை சூழலில் சிறிது நேரத்தை செலவிடுங்கள் உங்களை நீங்கள் முதலில் பராமரித்து கொள்வது அவசியம்
சிகிச்சை
பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் மூன்று மாதத்திற்குள் சரி ஆகிவிடும், ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண செயல்பாடுகளில் இந்த பிரச்சினை தலையிடும் பொழுது, உடனே மன நல மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவுன்சிலிங் மற்றும் சைகோதெரபி மூலமாக குணப்படுத்த முடியும். மன அழுத்தம் தீவிரமாக இருந்தால் உங்கள் மன நல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் பரிந்துரைப்பார். பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்துக்கு ஆளான 90 சதவீதம் பேர் மருந்துகள் மூலமாக குணம் அடைந்து இருக்கிறார்கள்.
பிரசவத்துக்கு பின் ஏற்படும் கோளாறு தாய்மார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, சில தந்தைமார்களுக்கும் ஏற்படும்.
1-ல் 20 தந்தைமார்கள் மற்றும் 1-ல் 7 தாய்மார்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த நொடி ஒரு தாயும் பிறக்கிறாள், தாய்மையை போற்றுங் கள், குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் ஒரு உயிரை இந்த மண்ணில் அறிமுக படுத்தும் அதிசய பிறவி!!
vcopevandhana@gmail.com
ஆனால் சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் மனநிலையில் சமநிலை இல்லை என்றால் அவர்கள் பிரசவத்துக்குப்பின் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கண்ணை பார்த்து பேச மாட்டார்கள். மற்றும் குறைவாகவே புன்னகைப்பார்கள். இந்த கோளாறு மிகவும் குறைவான அளவிலேயே கண்டறியப்படுகிறது. இதற்கான போதுமான விழிப்புணர்ச்சி நம்மிடையே இல்லை. பிரசவத்தின் பொழுது ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வு நிலை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் சம நிலைக்கு வந்துவிடும். இதற்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் மற்றும் குழந்தை பிறந்த முதல் 12 மாதங்களில் தோன்றும்.
காரணங்கள் :
முந்தய பிரசவத்தின் பொழுது மன அழுத்தம்
குடும்ப பாரம்பரிய மன அழுத்தம்
கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிர்ச்சியான சம்பவம்
பிரசவத்தின் பொழுது சிக்கல் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சினை
பிரசவத்தை நினைத்து கலக்கம்
வலுவான ஆதரவு இன்மை
அறிகுறிகள் :
குடும்பத்தாரையும் நண்பர்களையும் முற்றிலும் தவிர்த்தல். உங்களையும் குழந்தையையும் பாதுகாக்க முடியாமல் போகுதல், குழந்தையுடன் நெருக்கமாக உணராமல் இருப்பது மற்றும் பிணைப்பு இல்லாமல் இருப்பது, தீவிரமாக மனம் அலை பாய்வது, பதற்றம் மற்றும் பீதி அடைதல்.
மிக குறைவாக அல்லது அதிகமாக தூங்குவது தினசரி செய்யும் வேலை களில் நாட்டம் இல்லாமல் இருத்தல், குழந்தையை காயப்படுத்துவது போன்ற எண்ணங்கள்.
தற்கொலையை தூண்டி விடும் எண்ணங்கள், மிக அதிக கோபம் மற்றும் எரிச்சல், குற்ற உணர்வு மற்றும் அவமானம் காரணமே இல்லாமல் அடிக்கடி அழுவது, தன்னை தானே தனிமை படுத்திக்கொள்வது
புள்ளிவிபரம் :
குழந்தையை பராமரிக்காமல் இருப்பது, உதாரணமாக பால் புகட்டுவது, டயபர் மாற்றாமல் இருப்பது, உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுக்காமல் இருத்தல், இந்த குழந்தை என்னுடையது இல்லை, போன்ற எண்ணங்கள்.
7 தாய்மார்களில் ஒருவருக்கு பிரசவத்துக்கு பின் மன அழுத்தம் உள்ளது.
50 சதவீதம் தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருக்கிறது என்று தெரியாது.
20 சதவீதம் தாய்மார்களின் தற்கொலைகள் (இந்த கோளாறினால் பாதிக்கபட்டவர்கள்), தாய்மார்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
10 சதவீதம் தந்தைகள் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல் பிரசவத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் இரண்டாம் பிரசவத்தின் பொழுது 50 சதவீதம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 49 சதவீதம் தாய்மார்கள் தங்கள் மனஅழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டார்கள்.
மகப்பேற்று சுகாதார நிலையை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள் :
ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் , போதுமான தண்ணீர் பருகவும்.
குழந்தை தூங்கும் பொழுது தூங்குதல், மிதமான நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி, உங்கள் கணவருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,
தன்னைத்தானே தனிமை படுத்திக்கொள்ளாமல் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருங்கள்.
உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் மன அழுத்தத்தை பற்றி மனம் விட்டு பேசுங்கள். வெளியே இயற்கை சூழலில் சிறிது நேரத்தை செலவிடுங்கள் உங்களை நீங்கள் முதலில் பராமரித்து கொள்வது அவசியம்
சிகிச்சை
பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் மூன்று மாதத்திற்குள் சரி ஆகிவிடும், ஆனால் அன்றாட வாழ்க்கையில் சாதாரண செயல்பாடுகளில் இந்த பிரச்சினை தலையிடும் பொழுது, உடனே மன நல மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவுன்சிலிங் மற்றும் சைகோதெரபி மூலமாக குணப்படுத்த முடியும். மன அழுத்தம் தீவிரமாக இருந்தால் உங்கள் மன நல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் பரிந்துரைப்பார். பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்துக்கு ஆளான 90 சதவீதம் பேர் மருந்துகள் மூலமாக குணம் அடைந்து இருக்கிறார்கள்.
பிரசவத்துக்கு பின் ஏற்படும் கோளாறு தாய்மார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, சில தந்தைமார்களுக்கும் ஏற்படும்.
1-ல் 20 தந்தைமார்கள் மற்றும் 1-ல் 7 தாய்மார்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்த அடுத்த நொடி ஒரு தாயும் பிறக்கிறாள், தாய்மையை போற்றுங் கள், குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் ஒரு உயிரை இந்த மண்ணில் அறிமுக படுத்தும் அதிசய பிறவி!!
vcopevandhana@gmail.com
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.
ஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியின் பெயர் பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ). இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.
விரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.
இப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.
பலன்கள்:
உடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.
தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.
வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்
விரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.
இப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.
பலன்கள்:
உடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.
தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.
வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்






