என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.
இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துவரம்பருப்பு - கால் கப்
பூண்டு - 5 பல்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.
இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிலர் நன்றாக உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் முடி மெல்லியதாக ஆரோக்கியமற்று இருக்கும். அவர்களுக்கு என்னதான் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான கூந்தலாக சிறப்பாக மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப் போல முடியினை மிக நீண்ட கூந்தலாக வளர வைப்பது என்பது ஏமாற்று வேலை. ஏனெனில் சிலரின் முடி வளர்ச்சி பரம்பரை தொடர்பானது.
பொடுகு இல்லாமல் பொடுகை கட்டுப்படுத்தும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்புகளைப் பயன்படுத்துதல், தரமற்ற விலைக் குறைவான ஷாம்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால் முடி கொட்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் அதில் உள்ள ரசாயன மாற்று முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.
ஷாம்புவை பயன்படுத்தும்போது, தலையினை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுத்து அழுக்கை வெளியேற்றாமல், நுரை வந்ததும் அலசி விடுவதாலும் முடி கொட்டத் துவங்கும். உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலை அழுத்தி தேய்த்து, மசாஜ் கொடுப்பதன் மூலமே இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.

நமது உடலில் செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் உள்ள இறந்த செல்களால் நமது தோலில் கருமை நிறம் தானாகத் தோன்றும். அதேபோல் தலைகளிலும் டெட் செல் எனப்படும் இறந்த செல்கள் இருக்கும். எனவே தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே ரத்த ஓட்டம் சரியாகி புது செல் உருவாகும்.
அதுவே முடி வளர்ச்சிக்கான தூண்டுதல். நமது அம்மாக்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் இயற்கை மூலிகைகளான சீகைக்காயைப் பயன்படுத்தி நமது தலையில் அழுத்தம் கொடுத்து அழுக்கை வெளியேற்றுவது என்பது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான மசாஜாகத் தானாகவே மாறுகிறது. இயற்கையே ஆரோக்கியமான, கருமையான முடிவளர்ச்சிக்கு உகந்தது.
பொடுகு இல்லாமல் பொடுகை கட்டுப்படுத்தும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்புகளைப் பயன்படுத்துதல், தரமற்ற விலைக் குறைவான ஷாம்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால் முடி கொட்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் அதில் உள்ள ரசாயன மாற்று முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.
ஷாம்புவை பயன்படுத்தும்போது, தலையினை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுத்து அழுக்கை வெளியேற்றாமல், நுரை வந்ததும் அலசி விடுவதாலும் முடி கொட்டத் துவங்கும். உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலை அழுத்தி தேய்த்து, மசாஜ் கொடுப்பதன் மூலமே இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.

நமது உடலில் செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் உள்ள இறந்த செல்களால் நமது தோலில் கருமை நிறம் தானாகத் தோன்றும். அதேபோல் தலைகளிலும் டெட் செல் எனப்படும் இறந்த செல்கள் இருக்கும். எனவே தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே ரத்த ஓட்டம் சரியாகி புது செல் உருவாகும்.
அதுவே முடி வளர்ச்சிக்கான தூண்டுதல். நமது அம்மாக்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் இயற்கை மூலிகைகளான சீகைக்காயைப் பயன்படுத்தி நமது தலையில் அழுத்தம் கொடுத்து அழுக்கை வெளியேற்றுவது என்பது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான மசாஜாகத் தானாகவே மாறுகிறது. இயற்கையே ஆரோக்கியமான, கருமையான முடிவளர்ச்சிக்கு உகந்தது.
பெற்றோரே உலகம் என்று இருக்கும் குழந்தைகள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
குழந்தைகள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு தயாராக வேண்டிய தருணம் இது. பெற்றோரே உலகம் என்று இருக்கும் அவர்கள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. ஏகப்பட்ட பணத்தை அள்ளிக்கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டாலும், பெற்றோரால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. ‘குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு செல்லுமா? இல்லை என்றால் அழுது அடம்பிடிக்குமா..’ என்ற கவலை அவர்களை சூழ்ந்துகொண்டிருக்கும். அந்த கவலை தீர இதை படியுங்கள்.
பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு முதலில் பள்ளியைப் பற்றிய விவரங்களை முழுமையாக சொல்லிக் கொடுங்கள். ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளவேண்டிய முறையை பக்குவமாக உணர்த்துங்கள்.
ஒழுங்காக படிக்காவிட்டால், ஒழுங்காக ஹோம் ஒர்க் செய்யாவிட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று ஒருபோதும் மிரட்டாதீர்கள். ஆசிரியர்கள் பற்றி கவுரவமான, உற்சாகமான விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்கு சென்றால் அழகான விளையாட்டு பொருட்களும், நிறைய புதிய நண்பர் களும் கிடைப்பார்கள். அவர்களுடனும் நீ சேர்ந்து விளையாடலாம் என்று கூறி, பள்ளி ஒரு அழகான அன்பான உலகம் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.
அவர்களோடு பள்ளியில் புதிதாய் சேர்ந்திருக்கும் சக மாணவ, மாணவிகளை வாய்ப்பிருந்தால் குழந்தைகளுக்கு இப்போதே அறிமுகம் செய்துவையுங்கள்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக இப்போதே தயாராகுங்கள்.
சிறிது நேரம் வெளிவிளையாட்டுகள் விளையாட அனுமதியுங்கள். அதன் பிறகு வீட்டுப் பாடங்களை செய்தால்போதும்.
குழந்தைகளுக்கு எப்படி படிக்க வேண்டும்? எப்படி வரைய வேண்டும் என்பதையெல்லாம் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
பள்ளி திறப்பதற்கு முன்பு முடிந்தால், ஒரு முறை குழந்தைகளை அவர்களது ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவைக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான பயம் நீங்கும்.
புதிய சீருடைகள் வாங்கவும், புத்தகங்கள் வாங்கவும் குழந்தையோடு செல்லுங்கள். புத்தகபை, டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற உபகரணங்கள் வாங்கவும் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.

பள்ளிக்கூட வாழ்க்கைக்கு குழந்தைகளை வீட்டிலே பழக்கப்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை கழுவுதல், கீழே சிந்தாமல் சாப்பிடுதல், பின்பு பாத்திரங்களை அடுக்குதல், சுத்தப்படுத்துதல் போன்றவைகளை எல்லாம் சுயமாக செய்ய கற்றுத்தாருங்கள். வீட்டிலே சில நாட்கள் அப்படி பழக்குவது நல்ல பலனைத் தரும். பள்ளி வாழ்க்கையை அவர்கள் சிறப்பாக நடத்த இந்த பயிற்சி உதவும்.
பள்ளி திறப்பதற்கு முன்பே ஒருசில முறை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பள்ளியை சுற்றி காண்பித்து வகுப்பு அறை, மைதானம், நூல் நிலையம் போன்றவைகளை காட்டி ஆர்வப்படுத்துங்கள்.
பள்ளி திறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே குழந்தைகளை காலையிலே விழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
முதல் நாளில் மற்ற குழந்தைகள் அழுவதைப் பார்த்து உங்கள் குழந்தையும் அழத் தொடங்கலாம். அது பழக பழக சரியாகி விடும். பள்ளியிலே விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.
முதலில் பள்ளியில் விடும்போது, ‘நான் இங்கேயே அதோ அந்த மரத்தடியில் தான் இருப்பேன். நீ போய் விளையாடிவிட்டு வா’ என்று அனுப்பி வைக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் அழுவதை நிறுத்திவிட்டு வகுப்பறைக்குள் செல்வார்கள். இல்லையென்றால் அருகில் யாரும் இல்லை என்ற தவிப்பு அவர்களுக்கு அதிக பயத்தை உருவாக்கிவிடும்.
பள்ளியில் யாராவது குழந்தையை அடித்திருக்கலாம். ஏதாவது ஒரு பொருளை பிடுங்கி இருக்கலாம். அதனால் அவர்களுக்கு கோபமோ, பயமோ ஏற்பட்டிருக்கலாம். அதை போக்கும் விதத்தில் தினமும் வீட்டிற்கு வந்ததும் அருகில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து தேவையான ஆலோசனைகளை பக்குவமாக எடுத்துக்கூறுங்கள்.
எக்காரணத்தை கொண்டும் பிள்ளைகளிடம் ஆசிரியரைப் பற்றி தவறாக பேசவோ, கடிந்துக் கொள்ளவோ கூடாது. அது அவர்கள் மனதில் வேற்றுமையை உருவாக்கிவிடும்.
அவர்களுக்கு பிரியமான நண்பர்களுடன் பழகவிடுங்கள், அப்போது தான் சிரித்து பேசி நட்புடன் இருப்பார்கள். நல்ல நண்பர்கள் உங்கள் குழந்தையின் தனிமையை போக்குவார்கள். அதன் மூலம் பாதுகாப்பையும் உணர்வார்கள். நட்பு குழந்தைகளை பள்ளிக்கூடத்தை நோக்கி ஈர்க்கும்.
பள்ளிதான் அவர்களது முதல் வெளி உலகம். அங்கே எல்லா குழந்தைகளாலும் உடனடியாக பொருந்திப்போக முடியாது என்ற உண்மையை உணர்ந்து, நிதானமாக குழந்தைகளிடம் நடந்துகொள்ளுங்கள். மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவைகளை கைவிட்டு அன்பாக நடந்துகொள்ளுங்கள். அனைத்தும் சாத்தியமாகும்.
பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு முதலில் பள்ளியைப் பற்றிய விவரங்களை முழுமையாக சொல்லிக் கொடுங்கள். ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளவேண்டிய முறையை பக்குவமாக உணர்த்துங்கள்.
ஒழுங்காக படிக்காவிட்டால், ஒழுங்காக ஹோம் ஒர்க் செய்யாவிட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று ஒருபோதும் மிரட்டாதீர்கள். ஆசிரியர்கள் பற்றி கவுரவமான, உற்சாகமான விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்கு சென்றால் அழகான விளையாட்டு பொருட்களும், நிறைய புதிய நண்பர் களும் கிடைப்பார்கள். அவர்களுடனும் நீ சேர்ந்து விளையாடலாம் என்று கூறி, பள்ளி ஒரு அழகான அன்பான உலகம் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.
அவர்களோடு பள்ளியில் புதிதாய் சேர்ந்திருக்கும் சக மாணவ, மாணவிகளை வாய்ப்பிருந்தால் குழந்தைகளுக்கு இப்போதே அறிமுகம் செய்துவையுங்கள்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக இப்போதே தயாராகுங்கள்.
சிறிது நேரம் வெளிவிளையாட்டுகள் விளையாட அனுமதியுங்கள். அதன் பிறகு வீட்டுப் பாடங்களை செய்தால்போதும்.
குழந்தைகளுக்கு எப்படி படிக்க வேண்டும்? எப்படி வரைய வேண்டும் என்பதையெல்லாம் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
பள்ளி திறப்பதற்கு முன்பு முடிந்தால், ஒரு முறை குழந்தைகளை அவர்களது ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவைக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான பயம் நீங்கும்.
புதிய சீருடைகள் வாங்கவும், புத்தகங்கள் வாங்கவும் குழந்தையோடு செல்லுங்கள். புத்தகபை, டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற உபகரணங்கள் வாங்கவும் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.

பள்ளிக்கூட வாழ்க்கைக்கு குழந்தைகளை வீட்டிலே பழக்கப்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை கழுவுதல், கீழே சிந்தாமல் சாப்பிடுதல், பின்பு பாத்திரங்களை அடுக்குதல், சுத்தப்படுத்துதல் போன்றவைகளை எல்லாம் சுயமாக செய்ய கற்றுத்தாருங்கள். வீட்டிலே சில நாட்கள் அப்படி பழக்குவது நல்ல பலனைத் தரும். பள்ளி வாழ்க்கையை அவர்கள் சிறப்பாக நடத்த இந்த பயிற்சி உதவும்.
பள்ளி திறப்பதற்கு முன்பே ஒருசில முறை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பள்ளியை சுற்றி காண்பித்து வகுப்பு அறை, மைதானம், நூல் நிலையம் போன்றவைகளை காட்டி ஆர்வப்படுத்துங்கள்.
பள்ளி திறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே குழந்தைகளை காலையிலே விழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
முதல் நாளில் மற்ற குழந்தைகள் அழுவதைப் பார்த்து உங்கள் குழந்தையும் அழத் தொடங்கலாம். அது பழக பழக சரியாகி விடும். பள்ளியிலே விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.
முதலில் பள்ளியில் விடும்போது, ‘நான் இங்கேயே அதோ அந்த மரத்தடியில் தான் இருப்பேன். நீ போய் விளையாடிவிட்டு வா’ என்று அனுப்பி வைக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் அழுவதை நிறுத்திவிட்டு வகுப்பறைக்குள் செல்வார்கள். இல்லையென்றால் அருகில் யாரும் இல்லை என்ற தவிப்பு அவர்களுக்கு அதிக பயத்தை உருவாக்கிவிடும்.
பள்ளியில் யாராவது குழந்தையை அடித்திருக்கலாம். ஏதாவது ஒரு பொருளை பிடுங்கி இருக்கலாம். அதனால் அவர்களுக்கு கோபமோ, பயமோ ஏற்பட்டிருக்கலாம். அதை போக்கும் விதத்தில் தினமும் வீட்டிற்கு வந்ததும் அருகில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து தேவையான ஆலோசனைகளை பக்குவமாக எடுத்துக்கூறுங்கள்.
எக்காரணத்தை கொண்டும் பிள்ளைகளிடம் ஆசிரியரைப் பற்றி தவறாக பேசவோ, கடிந்துக் கொள்ளவோ கூடாது. அது அவர்கள் மனதில் வேற்றுமையை உருவாக்கிவிடும்.
அவர்களுக்கு பிரியமான நண்பர்களுடன் பழகவிடுங்கள், அப்போது தான் சிரித்து பேசி நட்புடன் இருப்பார்கள். நல்ல நண்பர்கள் உங்கள் குழந்தையின் தனிமையை போக்குவார்கள். அதன் மூலம் பாதுகாப்பையும் உணர்வார்கள். நட்பு குழந்தைகளை பள்ளிக்கூடத்தை நோக்கி ஈர்க்கும்.
பள்ளிதான் அவர்களது முதல் வெளி உலகம். அங்கே எல்லா குழந்தைகளாலும் உடனடியாக பொருந்திப்போக முடியாது என்ற உண்மையை உணர்ந்து, நிதானமாக குழந்தைகளிடம் நடந்துகொள்ளுங்கள். மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவைகளை கைவிட்டு அன்பாக நடந்துகொள்ளுங்கள். அனைத்தும் சாத்தியமாகும்.
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இன்று காய்கறிகள் சிறுதானிய மாவில் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்
விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சுடுநீர் சோ்த்து இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சோ்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சோ்த்து மேலும் வதக்கவும்.
அடுத்து அதில் காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் வேகவைத்த இடியாப்ப நுாடுல்ஸ் சோ்த்துக் கிளறி இறக்கவும்.
சூப்பரான சத்தான சிறுதானிய வெஜ் நுாடுல்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்
விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சுடுநீர் சோ்த்து இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சோ்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சோ்த்து மேலும் வதக்கவும்.
அடுத்து அதில் காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் வேகவைத்த இடியாப்ப நுாடுல்ஸ் சோ்த்துக் கிளறி இறக்கவும்.
சூப்பரான சத்தான சிறுதானிய வெஜ் நுாடுல்ஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய சாப்பிடுவதும், இதற்கு முக்கிய காரணங்கள். கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல; உடல் உள்இயக்கம் சீராக இருப்பதற்கும் தேவை.
சினைப்பையில், நிறைய கருமுட்டைகள், மாதந்தோறும் உருவாகும். அதில், முழு வளர்ச்சி அடைந்த ஒரு முட்டை உடைந்து, ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. கருமுட்டை, குறிப்பிட்ட நாளில் முழுமையான வளர்ச்சி அடைய, இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், முழு வளர்ச்சி அடையாத கருமுட்டைகள், நீர்க்கட்டிகளாகி தங்கிவிடுன்றன.
இதனால், டீன் பருவத்தில், சீரற்ற மாதவிடாய் வருகிறது. ‘ஆண்ட்ரோஜென்’ என்ற ஆண் உடலில் சுரக்கும் ஹார்மோன், பெண்ணின் உடலிலும் சுரக்கும். வழக்கத்தைவிடவும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால், கருமுட்டைகள், முழுமையாக வளர்ச்சி அடைவதைத் தடுக்கும். கருமுட்டை, உடைந்து வெளியில் வருவதிலும் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு காரணம், இன்சுலின் அளவு அதிகமாக இருப்பது.

இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் இன்னொரு பிரச்சனை, டீன் பருவப் பெண்களுக்கு உடல் முழுவதும், குறிப்பாக, மேல் உதடு, மேல் கை, கால், வயிற்றுப் பகுதியில் முடி வளரும். முகத்தில் பருக்கள் தோன்றும். தலையின் முன் பக்கத்தில் முடி உதிரும். உடல் பருமனும் அதிகரித்துக் கொண்டே போகும். டீன் பருவத்தில் ஏற்படும் இந்த பிரச்சனையால், 20 வயதிற்கு மேல், திருமணம் ஆன பின், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 30 வயதில், நீரிழிவு பிரச்சனை, கொழுப்பு அதிகமாகுதல் ஏற்பட்டு, இதன் விளைவாக, பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து, 50 வயதில், பெண்களுக்கு, ‘ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்’ போன்றவை வர வாய்ப்பாகி விடுகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியும். உடல் பருமனைக் குறைக்க, முறையான வழிமுறைகளையும், சரியான உணவு பழக்கங்களையும் பின்பற்றுவது முக்கியம்.
சினைப்பையில், நிறைய கருமுட்டைகள், மாதந்தோறும் உருவாகும். அதில், முழு வளர்ச்சி அடைந்த ஒரு முட்டை உடைந்து, ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. கருமுட்டை, குறிப்பிட்ட நாளில் முழுமையான வளர்ச்சி அடைய, இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், முழு வளர்ச்சி அடையாத கருமுட்டைகள், நீர்க்கட்டிகளாகி தங்கிவிடுன்றன.
இதனால், டீன் பருவத்தில், சீரற்ற மாதவிடாய் வருகிறது. ‘ஆண்ட்ரோஜென்’ என்ற ஆண் உடலில் சுரக்கும் ஹார்மோன், பெண்ணின் உடலிலும் சுரக்கும். வழக்கத்தைவிடவும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால், கருமுட்டைகள், முழுமையாக வளர்ச்சி அடைவதைத் தடுக்கும். கருமுட்டை, உடைந்து வெளியில் வருவதிலும் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு காரணம், இன்சுலின் அளவு அதிகமாக இருப்பது.

இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் இன்னொரு பிரச்சனை, டீன் பருவப் பெண்களுக்கு உடல் முழுவதும், குறிப்பாக, மேல் உதடு, மேல் கை, கால், வயிற்றுப் பகுதியில் முடி வளரும். முகத்தில் பருக்கள் தோன்றும். தலையின் முன் பக்கத்தில் முடி உதிரும். உடல் பருமனும் அதிகரித்துக் கொண்டே போகும். டீன் பருவத்தில் ஏற்படும் இந்த பிரச்சனையால், 20 வயதிற்கு மேல், திருமணம் ஆன பின், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 30 வயதில், நீரிழிவு பிரச்சனை, கொழுப்பு அதிகமாகுதல் ஏற்பட்டு, இதன் விளைவாக, பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து, 50 வயதில், பெண்களுக்கு, ‘ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்’ போன்றவை வர வாய்ப்பாகி விடுகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியும். உடல் பருமனைக் குறைக்க, முறையான வழிமுறைகளையும், சரியான உணவு பழக்கங்களையும் பின்பற்றுவது முக்கியம்.
30 வயதை நெறுங்கும் பெண்கள் சரிவிகித உணவுடன் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் தசைகள் வலுவாகும்; உடலும் ஃபிட்டாகும்.
பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. தாய்மை, ஹார்மோன் மாற்றம், தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களுடன் போதிய உடற்பயிற்சி இல்லாதது உடல்பருமன், தசைகள் வலுவிழத்தல் போன்றவற்றுக்கு முக்கியக் காரணங்களாகிவிடுகின்றன.
எனவே, சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப் பகுதியில் தசைகள் வலுவாகும்; உடல் ஃபிட்டாகும். ஆனால், பணிச்சூழல், நேரமின்மை போன்ற காரணங்களால் ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை என்று பலரும் அலுத்துக்கொள்கிறார்கள். ஜிம்முக்குச் சென்றுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்பதில்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளின் மூலம் உடலை உறுதியாக்கலாம்.
நீ புஷ்அப் (Knee Pushup)
விரிப்பில் குப்புறப் படுக்கவும். முட்டிபோட்டது போல கால்களை வைத்துக்கொண்டு, கால்களை எக்ஸ் வடிவில் மடக்கிவைக்கவும். கைகளை மார்புப் பகுதிக்கு நேராக ஊன்றி, முழு உடலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்போது இதே நிலையில் `புஷ்அப்’ எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: முழங்கால் பகுதி உறுதியாகும். உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். கைத்தசைகள் வலிமையாகும்.

சைடு பெண்ட்ஸ் (Side Bends)
தரையில் கால்களை விரித்துவைத்துக்கொண்டு நேராக நிற்கவும். முதலில் வலது கையை வலது காலிலோ அல்லது இடுப்பிலோ வைத்துக்கொள்ள வேண்டும். இடதுகையை மேல் நோக்கித் தூக்கியவாறு வலதுபுறமாகச் சாய வேண்டும். மீண்டும் பழையநிலைக்குக் கொண்டு வரவும். இது ஒரு செட். இதேபோல் அடுத்த பக்கமும் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப்புறத் தசைகள் வலிமையாக உதவும். ஹெர்னியா போன்ற குடல் இறக்கப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
ப்ளாங்க் (Plank)
தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு கைகளை மடக்கி, முன்னங்கைகளை நிலத்தில் பதித்து, உடல் முழுவதையும் உயர்த்த வேண்டும். முழு உடலையும் கைகளும் கால் விரல்களும் தாங்கும்படி இருக்க வேண்டும். இதேநிலையில் 10 முதல் 15 விநாடிகள் இருந்தபடி, மூச்சை சீராக இழுத்துவிட வேண்டும்.
பலன்கள்: முழங்கை எலும்புகள் வலுப்பெறும். மேலும் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி வராமல் தடுக்கும். முதுகுத்தண்டு, இடுப்பு, தோள்பட்டை வலி இருந்தால் அனைத்தும் நீங்கும்.
எனவே, சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப் பகுதியில் தசைகள் வலுவாகும்; உடல் ஃபிட்டாகும். ஆனால், பணிச்சூழல், நேரமின்மை போன்ற காரணங்களால் ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை என்று பலரும் அலுத்துக்கொள்கிறார்கள். ஜிம்முக்குச் சென்றுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்பதில்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளின் மூலம் உடலை உறுதியாக்கலாம்.
நீ புஷ்அப் (Knee Pushup)
விரிப்பில் குப்புறப் படுக்கவும். முட்டிபோட்டது போல கால்களை வைத்துக்கொண்டு, கால்களை எக்ஸ் வடிவில் மடக்கிவைக்கவும். கைகளை மார்புப் பகுதிக்கு நேராக ஊன்றி, முழு உடலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இப்போது இதே நிலையில் `புஷ்அப்’ எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: முழங்கால் பகுதி உறுதியாகும். உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். கைத்தசைகள் வலிமையாகும்.

சைடு பெண்ட்ஸ் (Side Bends)
தரையில் கால்களை விரித்துவைத்துக்கொண்டு நேராக நிற்கவும். முதலில் வலது கையை வலது காலிலோ அல்லது இடுப்பிலோ வைத்துக்கொள்ள வேண்டும். இடதுகையை மேல் நோக்கித் தூக்கியவாறு வலதுபுறமாகச் சாய வேண்டும். மீண்டும் பழையநிலைக்குக் கொண்டு வரவும். இது ஒரு செட். இதேபோல் அடுத்த பக்கமும் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிற்றுப்புறத் தசைகள் வலிமையாக உதவும். ஹெர்னியா போன்ற குடல் இறக்கப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
ப்ளாங்க் (Plank)
தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு கைகளை மடக்கி, முன்னங்கைகளை நிலத்தில் பதித்து, உடல் முழுவதையும் உயர்த்த வேண்டும். முழு உடலையும் கைகளும் கால் விரல்களும் தாங்கும்படி இருக்க வேண்டும். இதேநிலையில் 10 முதல் 15 விநாடிகள் இருந்தபடி, மூச்சை சீராக இழுத்துவிட வேண்டும்.
பலன்கள்: முழங்கை எலும்புகள் வலுப்பெறும். மேலும் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி வராமல் தடுக்கும். முதுகுத்தண்டு, இடுப்பு, தோள்பட்டை வலி இருந்தால் அனைத்தும் நீங்கும்.
ஆயுர்வேதத்தில் ஜலதோஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜலதோஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜலதோஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே உடல் சரியானால்தான் ஜலதோஷம் சரியாகும்.
பெயரிலேயே இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த நீர், மழை, குளிர் காற்று ஆகிய காரணங்களால் ஜலதோஷம் உடனே வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன என்பது வியப்பாக இருக்கும். ஜலதோஷம் இருப்பவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள் மீதும் படிந்து விடுகின்றன.
காற்றிலிருந்தோ அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோஷம் சரியாகி விடும். ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும். ஆயுர்வேதத்தில் ஜலதோஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.
மூக்கடைப்பு
* ஓமத்தைக்கசக்கி, பருத்தித்துணியில் கட்டி, தலையணை அருகே வைக்கலாம்.
* ஏலக்காய் விதைகளை தணலில் போட்டு புகையை உறிஞ்சலாம்.
இருமல்
தூசு மற்றும் கிருமிகள் மூக்கு வழியாக உள்ளே வரும்போது, அவற்றை வெளியே அனுப்ப உடல் எடுக்கும் முயற்சி தும்மல். தும்மல் மூலம் வெளியே அனுப்ப முடியாதபோது, ஜலதோஷம் வருகிறது. இந்த சளியை வெளியே அனுப்ப நமது உடல் எடுக்கும் நடவடிக்கையே இருமல்.
இருமலே ஒரு நோய் என்று, அதை தடுக்க மருந்து சாப்பிடுகிறோம். உண்மையில் வெளியில் இருந்து உடலுக்குள் வந்த ஒவ்வாதபொருட்களை வெளியில் அனுப்பும் நல்ல காரியமே இருமல் என்பதைப்புரிந்து, சளியைக்குணமாக்க முயல வேண்டும்.
இருமலுக்கான சில வீட்டு முறை வைத்தியங்கள்
* 10 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலுடன், 1 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன்பு குடிக்க வேண்டும்.
* தேன், இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தினமும் 2, 3 முறை 1 டீஸ்பூன் வீதம் குடிக்கலாம்.
* 3 மிளகு, ஒரு துளி கருஞ்சீரகம், ஒரு துளி உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
* சம எடை அளவு மிளகுத்தூள், கற்கண்டு சேர்த்து கலந்து, தேவையான அளவு நெய் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, தினமும், 3,4 முறை ஒவ்வொரு உருண்டையாக உட்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன் துளசி சாறை, தினமும் 2,3 முறை கொடுக்கலாம்.
* வெதுவெதுப்பான பாலில் ஒரு துளி மஞ்சள்தூள் சேர்த்து இரவில் குடிக்கலாம்.
கக்குவான் இருமல்
* 10 கிராம் துளசியையும், 10 கிராம் மிளகையும், அரைத்து, தேன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, தினமும் 4 முறை சாப்பிடவும். இதை அப்படியே விழுங்காமல், மெதுவாக சாப்பிட வேண்டும்.
* வறண்ட இருமலுக்கு துளசி, இஞ்சி, வெங்கா யம் இவற்றின் சாற்றுடன் தேன் சேர்த்து எடுக்க வேண்டும்.
* சளியுடன் வரும் இருமலுக்கு கற்கண்டையும் சேர்க்க வேண்டும்.

சளியுடன் கூடிய இருமல்
* தினமும் 3,4 முறை சம அளவு வெங்காயச் சாறும், தேனும் கலந்து குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை வராமலிருக்க, முன் எச்சரிக்கை மருந்தாக எடுக்கலாம்.
இப்பிரச்சினையால் சிரமப்படும் குழந்தை களுக்கு, கபத்தை உண்டாக்கும். பால், நெய், இனிப்புகள், அரிசி, மைதாவால் செய்யப்பட்ட பொருட்கள், சர்க்கரை ஆகிய பொருட்களைக் கொடுக்கக் கூடாது.
சில வீட்டு முறை சிகிச்சைகள்:
* கிராம்பை, ஒரு துளி உப்புடன் மெல்லலாம். தொண்டையிலிருக்கும் கரகரப்பு நீங்கும். சளி அகலும்.
* இஞ்சிப்பொடி, கிராம்புப் பொடி, பட்டைப் பொடி மூன்றும் ½ ஸ்பூன் அளவு எடுத்து அதன் மீது 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி, 1 ஸ்பூன் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.
தொண்டை கட்டுவது, குரல் கம்முவது
* இவை இரண்டுக்குமே மா விலை நல்ல மருந்து, மாவிலைக் கொழுந்தை சுத்தமான தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, வடித்து, அதில் சில துளி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
* மாம்பூவை நெருப்பில் போட்டு, அந்தப் புகையைச் சுவாதித்தாலும், தொண்டைக் கட்டு சரியாகும்.
மூக்கடைப்பு
* பச்சை ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் இவற்றையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, அதை அடிக்கடி மூக்கில் உரிஞ்ச வேண்டும்.
மூக்கில் நீர்வடிதல்:
* ஜாதிக்காயைப் பொடியுடன் சேர்த்து கல்லில் அரைத்து, நெற்றியிலும், மூக்கிலும் பற்றாகப் போடலாம்.
தும்மல்
வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன் 1 கப் நீரில் கொதிக்க விட்டு, பாதியாகக்குறைந்ததும், வடிகட்டி, காலை, மாலை இரு வேளையும், 1 டேபிள் ஸ்பூன் அளவு தினமும் சில நாட்களுக்கு அருந்தவும்.
பெயரிலேயே இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த நீர், மழை, குளிர் காற்று ஆகிய காரணங்களால் ஜலதோஷம் உடனே வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன என்பது வியப்பாக இருக்கும். ஜலதோஷம் இருப்பவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள் மீதும் படிந்து விடுகின்றன.
காற்றிலிருந்தோ அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோஷம் சரியாகி விடும். ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும். ஆயுர்வேதத்தில் ஜலதோஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.
மூக்கடைப்பு
* ஓமத்தைக்கசக்கி, பருத்தித்துணியில் கட்டி, தலையணை அருகே வைக்கலாம்.
* ஏலக்காய் விதைகளை தணலில் போட்டு புகையை உறிஞ்சலாம்.
இருமல்
தூசு மற்றும் கிருமிகள் மூக்கு வழியாக உள்ளே வரும்போது, அவற்றை வெளியே அனுப்ப உடல் எடுக்கும் முயற்சி தும்மல். தும்மல் மூலம் வெளியே அனுப்ப முடியாதபோது, ஜலதோஷம் வருகிறது. இந்த சளியை வெளியே அனுப்ப நமது உடல் எடுக்கும் நடவடிக்கையே இருமல்.
இருமலே ஒரு நோய் என்று, அதை தடுக்க மருந்து சாப்பிடுகிறோம். உண்மையில் வெளியில் இருந்து உடலுக்குள் வந்த ஒவ்வாதபொருட்களை வெளியில் அனுப்பும் நல்ல காரியமே இருமல் என்பதைப்புரிந்து, சளியைக்குணமாக்க முயல வேண்டும்.
இருமலுக்கான சில வீட்டு முறை வைத்தியங்கள்
* 10 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலுடன், 1 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன்பு குடிக்க வேண்டும்.
* தேன், இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தினமும் 2, 3 முறை 1 டீஸ்பூன் வீதம் குடிக்கலாம்.
* 3 மிளகு, ஒரு துளி கருஞ்சீரகம், ஒரு துளி உப்பு சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
* சம எடை அளவு மிளகுத்தூள், கற்கண்டு சேர்த்து கலந்து, தேவையான அளவு நெய் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, தினமும், 3,4 முறை ஒவ்வொரு உருண்டையாக உட்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன் துளசி சாறை, தினமும் 2,3 முறை கொடுக்கலாம்.
* வெதுவெதுப்பான பாலில் ஒரு துளி மஞ்சள்தூள் சேர்த்து இரவில் குடிக்கலாம்.
கக்குவான் இருமல்
* 10 கிராம் துளசியையும், 10 கிராம் மிளகையும், அரைத்து, தேன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, தினமும் 4 முறை சாப்பிடவும். இதை அப்படியே விழுங்காமல், மெதுவாக சாப்பிட வேண்டும்.
* வறண்ட இருமலுக்கு துளசி, இஞ்சி, வெங்கா யம் இவற்றின் சாற்றுடன் தேன் சேர்த்து எடுக்க வேண்டும்.
* சளியுடன் வரும் இருமலுக்கு கற்கண்டையும் சேர்க்க வேண்டும்.

சளியுடன் கூடிய இருமல்
* தினமும் 3,4 முறை சம அளவு வெங்காயச் சாறும், தேனும் கலந்து குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை வராமலிருக்க, முன் எச்சரிக்கை மருந்தாக எடுக்கலாம்.
இப்பிரச்சினையால் சிரமப்படும் குழந்தை களுக்கு, கபத்தை உண்டாக்கும். பால், நெய், இனிப்புகள், அரிசி, மைதாவால் செய்யப்பட்ட பொருட்கள், சர்க்கரை ஆகிய பொருட்களைக் கொடுக்கக் கூடாது.
சில வீட்டு முறை சிகிச்சைகள்:
* கிராம்பை, ஒரு துளி உப்புடன் மெல்லலாம். தொண்டையிலிருக்கும் கரகரப்பு நீங்கும். சளி அகலும்.
* இஞ்சிப்பொடி, கிராம்புப் பொடி, பட்டைப் பொடி மூன்றும் ½ ஸ்பூன் அளவு எடுத்து அதன் மீது 1 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி, 1 ஸ்பூன் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.
தொண்டை கட்டுவது, குரல் கம்முவது
* இவை இரண்டுக்குமே மா விலை நல்ல மருந்து, மாவிலைக் கொழுந்தை சுத்தமான தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, வடித்து, அதில் சில துளி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
* மாம்பூவை நெருப்பில் போட்டு, அந்தப் புகையைச் சுவாதித்தாலும், தொண்டைக் கட்டு சரியாகும்.
மூக்கடைப்பு
* பச்சை ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் இவற்றையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, அதை அடிக்கடி மூக்கில் உரிஞ்ச வேண்டும்.
மூக்கில் நீர்வடிதல்:
* ஜாதிக்காயைப் பொடியுடன் சேர்த்து கல்லில் அரைத்து, நெற்றியிலும், மூக்கிலும் பற்றாகப் போடலாம்.
தும்மல்
வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன் 1 கப் நீரில் கொதிக்க விட்டு, பாதியாகக்குறைந்ததும், வடிகட்டி, காலை, மாலை இரு வேளையும், 1 டேபிள் ஸ்பூன் அளவு தினமும் சில நாட்களுக்கு அருந்தவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சிக்கனில், எத்தனை வகையான உணவுகளை வேண்டுமானாலும் தயார் செய்யலாம். சிக்கன் வடை செய்வது குறித்து இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கீமா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் -150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமாவை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு பிளேட்டில் பிரட் தூளையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் முக்கி பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் கீமா வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் கீமா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் -150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமாவை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு பிளேட்டில் பிரட் தூளையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் முக்கி பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் கீமா வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.
இயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.
உடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.

உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.
சைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.
நீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.
உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.
உடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.

உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.
சைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.
நீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.
உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.
வெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.
குளிர்காலத்தில், மழைக்காலத்தில் நம் உடலுக்கு வெப்பம் தேவை. அப்போது காரமான, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், அவை உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைக் கொடுக்கும். அதே நேரத்தில் கோடைக்காலத்தில் இயல்பாகவே உடலில் நீர்வறட்சி ஏற்படும். அப்போது காரமான உணவுகளைச் சாப்பிட்டால் உடல் சூடாகி, மேலும் நீர் வறட்சியே ஏற்படும். அதனால், ஏப்பம், வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். சிலருக்கு ரத்த வாந்திகூட வரலாம்.
கோடைக்காலத்தில், காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் உணவு கலந்து அல்சர் பாதிப்புகள் உண்டாகும். இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுச் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறு குடலுக்கு, உணவை உட்கிரகிக்கும் திறன் குறைந்துபோகும்.
வெயில் காலத்தில் காரமில்லாத, எளிதில் செரிமானமாகக்கூடிய, எண்ணெயில் பொரிக்காத உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

கோடைக்காலத்தில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அசிடிட்டி அதிகமாகும். இதனால் உடல்சூடு, வயிற்றில் புண்கள், செரிமானக் கோளாறுகள், வயிற்று மந்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பொதுவாக, வெளியில் உள்ள தட்பவெப்பநிலையைச் சமாளிக்கும்விதமாக நம் உணவு முறை இருக்க வேண்டும். வெயில் காலத்தில் இனிப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். இவை, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இளநீர், நுங்கு, பதநீர் போன்ற துவர்ப்பும், இனிப்பும் நிறைந்த பானங்கள் உடலுக்கு மிகவும் நல்லவை. காரம், புளிப்பு, உப்பு ஆகிய சுவையுடைய உணவுப் பொருள்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது.
கோடைக்காலத்தில், சாதம், கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றை முதல் நாள் தயாரித்து ஒருநாள் வைத்திருந்து சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
நீர் ஆகாரங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பழங்கள் இனிப்புச் சுவையுடன்தான் இருக்கும். அதனால் அனைத்து வகைப் பழங்களையும் சாப்பிடலாம். அதேபோல எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அது, வயிற்று மந்தம், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
கோடைக்காலத்தில், காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் உணவு கலந்து அல்சர் பாதிப்புகள் உண்டாகும். இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுச் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறு குடலுக்கு, உணவை உட்கிரகிக்கும் திறன் குறைந்துபோகும்.
வெயில் காலத்தில் காரமில்லாத, எளிதில் செரிமானமாகக்கூடிய, எண்ணெயில் பொரிக்காத உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

கோடைக்காலத்தில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அசிடிட்டி அதிகமாகும். இதனால் உடல்சூடு, வயிற்றில் புண்கள், செரிமானக் கோளாறுகள், வயிற்று மந்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பொதுவாக, வெளியில் உள்ள தட்பவெப்பநிலையைச் சமாளிக்கும்விதமாக நம் உணவு முறை இருக்க வேண்டும். வெயில் காலத்தில் இனிப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். இவை, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இளநீர், நுங்கு, பதநீர் போன்ற துவர்ப்பும், இனிப்பும் நிறைந்த பானங்கள் உடலுக்கு மிகவும் நல்லவை. காரம், புளிப்பு, உப்பு ஆகிய சுவையுடைய உணவுப் பொருள்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது.
கோடைக்காலத்தில், சாதம், கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றை முதல் நாள் தயாரித்து ஒருநாள் வைத்திருந்து சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
நீர் ஆகாரங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பழங்கள் இனிப்புச் சுவையுடன்தான் இருக்கும். அதனால் அனைத்து வகைப் பழங்களையும் சாப்பிடலாம். அதேபோல எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அது, வயிற்று மந்தம், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
கேரளா மாநிலத்தில் சக்கர உப்பேறி மிகவுல் பிரபலம். இன்று இந்த சக்கர உப்பேறியை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நேந்திரங்காய் - 3,
வெல்லம் பொடித்தது - 2 கப்,
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
நெய் - கால் கப்.

செய்முறை :
நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.
வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).
சூப்பரான கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நேந்திரங்காய் - 3,
வெல்லம் பொடித்தது - 2 கப்,
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
நெய் - கால் கப்.

செய்முறை :
நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.
வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).
சூப்பரான கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பெண்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். உலர்ந்த பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், எண்ணெய் பொருட்களை சாப்பிடக்கூடாது. தினமும் பழங்களையும், காய்கறிகளையும் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும்.
* முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
* முற்பகல் 11 மணிவாக்கில் தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரி பச்சடி என்று நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுங்கள். 'நீங்கள் சொல்லியிருப்பவை எதுவும் தற்போது வீட்டில் இல்லை. என்னால் உடனே கடைக்குப் போய்வாங்கி வரவும் முடியாது' என்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து பச்சடியாகச் சாப்பிட்டு விடுங்கள். உடல் ஜில்லென்றாகிவிடும்.

* வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், தோசைக்காய் மாதிரியான நீர்க்காய்களை பாசிப்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிடுங்கள். வயிறு நிறைவதோடு, வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளையும் மீட்டு விடலாம்.
* சிலருக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். இவர்கள் வெயிலில் சென்று வந்த பிறகு உடலில் உப்பு படிந்து காணப்படும். இது இப்படியே தொடர்ந்தால் 5 அல்லது 6 வருடங்களில் அந்தப் பெண்களுக்கு நரம்புகள் பலவீனமாகி விடும். அதனால், உப்புப் படிகிற அளவுக்கு வியர்க்கிற உடல்வாகு கொண்ட கர்ப்பிணிப் பெண்களும் சரி, நார்மல் பெண்களும் சரி, சாத்துக்குடியை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வர வேண்டும். சாத்துக்குடியைப் பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். ஆனால், ஜூஸாக குடித்தால்தான் அதில் இருக்கிற தாது உப்புகள் உடனடியாக ரத்தத்தில் கலக்கும். அதனால், தினமும் சாத்துக்குடி ஜூஸை வீட்டிலேயேப் போட்டு குடித்து வாருங்கள். முடியாத நாள்களில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 'வியர்த்துக் கொட்டுகிறது, சாத்துக்குடியும் இல்லை, எலுமிச்சையும் இல்லை' என்கிற கர்ப்பிணிகள் குளூக்கோஸையாவது அவசியம் குடிக்க வேண்டும்.
* வெயில் தணிந்திருக்கும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள். அந்த நேரத்திலும் அதிகமாக வியர்த்துப் படபடப்பாக வந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் குடியுங்கள். சற்று ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
* மூலம் போன்ற பிரச்சனை இருக்கிற கர்ப்பிணிகள், இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊற வைத்து குடிக்க, பிரச்சனை தணியும்.
* வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஆனால், உடம்பு சூடாகி விடும். இதனால் மண்பானை தண்ணீரை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும்.
* முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
* முற்பகல் 11 மணிவாக்கில் தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரி பச்சடி என்று நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுங்கள். 'நீங்கள் சொல்லியிருப்பவை எதுவும் தற்போது வீட்டில் இல்லை. என்னால் உடனே கடைக்குப் போய்வாங்கி வரவும் முடியாது' என்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து பச்சடியாகச் சாப்பிட்டு விடுங்கள். உடல் ஜில்லென்றாகிவிடும்.

* வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், தோசைக்காய் மாதிரியான நீர்க்காய்களை பாசிப்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிடுங்கள். வயிறு நிறைவதோடு, வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளையும் மீட்டு விடலாம்.
* சிலருக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். இவர்கள் வெயிலில் சென்று வந்த பிறகு உடலில் உப்பு படிந்து காணப்படும். இது இப்படியே தொடர்ந்தால் 5 அல்லது 6 வருடங்களில் அந்தப் பெண்களுக்கு நரம்புகள் பலவீனமாகி விடும். அதனால், உப்புப் படிகிற அளவுக்கு வியர்க்கிற உடல்வாகு கொண்ட கர்ப்பிணிப் பெண்களும் சரி, நார்மல் பெண்களும் சரி, சாத்துக்குடியை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வர வேண்டும். சாத்துக்குடியைப் பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். ஆனால், ஜூஸாக குடித்தால்தான் அதில் இருக்கிற தாது உப்புகள் உடனடியாக ரத்தத்தில் கலக்கும். அதனால், தினமும் சாத்துக்குடி ஜூஸை வீட்டிலேயேப் போட்டு குடித்து வாருங்கள். முடியாத நாள்களில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 'வியர்த்துக் கொட்டுகிறது, சாத்துக்குடியும் இல்லை, எலுமிச்சையும் இல்லை' என்கிற கர்ப்பிணிகள் குளூக்கோஸையாவது அவசியம் குடிக்க வேண்டும்.
* வெயில் தணிந்திருக்கும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள். அந்த நேரத்திலும் அதிகமாக வியர்த்துப் படபடப்பாக வந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் குடியுங்கள். சற்று ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
* மூலம் போன்ற பிரச்சனை இருக்கிற கர்ப்பிணிகள், இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊற வைத்து குடிக்க, பிரச்சனை தணியும்.
* வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஆனால், உடம்பு சூடாகி விடும். இதனால் மண்பானை தண்ணீரை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.






