என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது சுரைக்காய் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - 1
    மோர் - 1 கப்
    எலுமிச்சை பழம் - 1
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    சுரைக்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவிக் கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுரைக்காயைப் போட்டு லேசாக வதக்கி ஆற வைக்கவும். (எண்ணெய் ஊற்றக் கூடாது)

    வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டிய ஜூஸில் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.

    சுரைக்காய் ஜூஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களை பாதிக்கும் PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புக்கு சில எளிய உணவுமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOS என்கிற சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருக்கிறது என்றும், 18 சதவீதம் பெண்களுக்கு இதனாலேயே மலட்டுத் தன்மை உண்டாகிறது’ என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி PCOS கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்கும் பொருட்டு பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, வெள்ளை ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, ரவை) மட்டுமில்லாமல் முழு தானியங்களையும் (ராகி, கம்பு, சோளம்) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடவும்.

    * நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு சீராக இருக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவை அதிக நார் மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களும்
    பெற்றுள்ளன.

    * புரதம் நிறைந்த உணவுகளை கார்போஹைட்ரேட் உணவுடன் சேர்த்து உண்ணும்பொழுது ரத்த குளுக்கோஸ் உயர்வதை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இட்லி-சாம்பார், பொங்கல்-சாம்பார், சப்பாத்தி-முட்டைகறி, புட்டு-கடலைகறி போன்றவற்றை குறிப்பிடலாம்.

    * ஒரு நாளைக்கு 2400 மில்லி கிராமுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ளும் பழக்கத்தை பழகிக் கொள்வது நல்லது. உப்புக்குப் பதிலாக எலுமிச்சை சாறு, வினிகர், மிளகு, மூலிகைகள் பயன்படுத்தலாமே!

    * 4 அல்லது 5 வகை எண்ணெய்களை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். கடலை, எள், கடுகு ஆலிவ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வெவ்வேறு உணவுகளுக்கு உபயோகிக்க பழகுங்கள்.

    * பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதை(Flax seeds) நல்ல வகை கொழுப்புக்கள் நிறைந்திருக்கிறது. இவ்வகையான உணவுகள் சிற்றுண்டிக்கு சரியான தேர்வாகிறது.

    * ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 முறை மீன் சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களைப் பெற உதவுகிறது.



    * அனைத்து விதத்திலும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், சர்க்கரை வகைகளை தவிர்ப்பது மிக அவசியமாகும்.

    * தினமும் 2 - 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதில் வெள்ளரி, புதினா அல்லது எலுமிச்சை சேர்ப்பதன் மூலம் உங்கள் குடிநீரை சுவையள்ளதாக மாற்றலாம்.

    இன்னும் சில டிப்ஸ்...

    * இரவு தூக்கம் குறைந்தது 6 - 8 மணி நேரம் இருப்பது அவசியம். ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் அளவையும் செயல்பாட்டையும் நிச்சயம் பாதிக்கும்.

    * உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி அவசியம். ஏரோபிக் பயிற்சிகளும் வலிமை பயிற்சியையும் இணைந்து செய்யும் பொழுது நல்ல பயனைக் கொடுக்கும்.

    * உங்கள் மாதவிடாய் நாட்களை குறிப்பு வைக்க தொடங்குங்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி அதாவது இரு சுழற்சிக்கு 40 - 50 நாட்களுக்கு மேல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    இப்பொழுது உங்களுக்கு PCOS டயட் பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உணவை அக்கறையோடு தேர்வு செய்தால் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்!
    பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.
    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    இந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார்த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.

    ஆனால் எண்ணிக்கையை துறப்பதன் மூலம் தனக்கான பொறுப்பிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொள்கிறதோ? என்கிற சந்தேகத்தை இந்த கருத்துக் கணிப்பு குறித்த அதீதமான எதிர்வினைகள் ஏற்படுத்தியிருக்கிறன.

    இந்த கருத்துக் கணிப்பு வெளியான பிறகு நம் கவனத்திற்கு வந்த வன்முறை சம்பவங்களில், மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

    சமீபத்தில் ஜெய்ப்பூர் அருகில் 70 வயது பெண் ஒருவரை 21 வயது ஆண் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கும் போது, அந்த பெண் அதை தடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு காயம் பட்டு, சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

    இது சென்னையில் நடந்தது. பத்து வயது சிறுமியை பாலியல் ரீதியில் சீண்டி துன்புறுத்தியதற்காக 99 வயது நபர் ஒருவர் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



    இந்த துயரம் அடங்குவதற்குள், சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள் என 15-க்கும் மேற்பட்டோர் 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு மேல் இன்னும் என்ன நடக்க வேண்டும்?

    இப்படி, ஒவ்வொரு நிமிடமும் நாம் கேள்விப்படும் எண்ணற்ற வன்முறைகளில் இது மூன்றையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வயதையும், முதல் இரண்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களின் வயதும் தான் காரணம். அதாவது, எவ்வளவு வயதானாலும் பெண்ணுக்கு பாதுகாப்பும் இல்லை, ஆணுக்கு பொருட்டும் இல்லை.

    இந்த இரண்டு பெண்களில் யாரிடமும் சென்று இந்தியா பெண் மீதான வன்முறையில் முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் தவறு இருக்கிறது என்று வகுப்பெடுப்பது எவ்வளவு அபத்தமானதாக, பொறுப்பற்ற செயலாக இருக்கும்? இங்கு வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தியா அந்த அநீதியைத்தான் இழைத்திருக்கிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் மீதான வன்முறை என்பது அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. பெண் கருக்கொலை இப்போதும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெண் பாகுபாட்டை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    கல்வி, தொடர்ந்து வேலைவாய்ப்பு, திருமணம், பதவி உயர்வு போன்ற பல விசயங்களிலும் தொடர்ந்து பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள் கூடுதலான உழைப்பை செலுத்திதான் ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிய வேண்டியிருக்கிறது.

    பாகுபாடு என்னும் வன்முறையை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் மீதும் எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி இந்திய சமூகம் ஒவ்வொரு நொடியும் ஏவிக்கொண்டிருக்கிறது. இது தவிர, பாலியல் சீண்டல்களையும் வன்முறைகளையும் குடும்பத்திற்குள்ளும், வெளியிடங்களிலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளாத பெண்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள் அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள்.

    பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் ஒரு இயல்பாக இருக்கிறது. சமூக ரீதியாகவே பாகுபாட்டை இந்தியா வளர்த்தெடுக்கிறது. பாகுபாடு, வன்முறைக்கு வழிவகுக்கிறது. நிர்பயா போன்ற மிக மோசமான வன்முறைகளுக்கு ஆளானோருக்கு கிடைக்கும் கவனமும் அழுத்தமும் ஒவ்வொரு நொடியும் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிற இந்தியப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இங்கு ஆகப்பெரிய அநீதி.

    நிர்பயாவுக்கு கிடைத்த நீதியை குறை சொல்வது இங்கு நோக்கமல்ல; அந்த நீதியின் வெளிச்சம் பிற இந்தியப் பெண்கள் மீதும் கொஞ்சம் படர வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    இதை எல்லாம் பற்றி நியாயமான கவலை கொள்ளும் ஒரு அரசு, முதலிடமா? மூன்றாம் இடமா? என்பதில் புழுங்காமல் தீர்வு நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் இயல்பாக மாறியிருக்கும் பாகுபாட்டை கலைக்கும் திட்டத்தை உருவாக்கி அதை எல்லா நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும். பெண் மீதான வன்முறை சட்டம் மூலமாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.

    அது வரை பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் மீதான தீராத களங்கமாக சர்வதேச அரங்கில் தொடரும். அதை துடைத்தெறிவதற்கான வழி, எண்ணிக்கையில் இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது.

    ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
    Vertigo எனப்படும் தலைசுற்றல், மயக்கத்தின் முக்கிய காரணம் உள் காது பிரச்சினைதான். நரம்பு மண்டல செயல்பாட்டின் முறையின்மை காரணமாகவும் இருக்கலாம்.
    எப்பொழுதாவது நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அறை மிக வேகமாக சுற்றுவது போல் இருந்திருக்கின்றதா? பொதுவில் அதிக தூர பிரயாணம், வேகமான அசைவுகளுக்கு பிறகு கண்ணை திறக்க இயலாதபடி தலை சுற்றல் ஏற்படலாம். இது பலருக்கு அடிக்கடி வந்து போகலாம். ஏதாவது ஒரு செயல் இதனைத் தூண்டி விடலாம். வேகமாய் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, மனஉளைச்சல், அதிக உடற்பயிற்சி ஆகிய காரணங்களால் ஏற்படலாம்.

    Vertigo எனப்படும் தலைசுற்றல், மயக்கம். சிலவகை பிரிவுகள் தானாகவே சரியாகும். இது Vertigo தான் என்பதனை எப்படி உணருவது? Vertigo வின் முக்கிய காரணம் உள் காது பிரச்சினைதான். நரம்பு மண்டல செயல்பாட்டின் முறையின்மை காரணமாகவும் இருக்கலாம்.

    Vertigoவின் அறிகுறிகள்:

    * எதிரிலுள்ளவை வேகமாய் சுற்றுவது போல் தோன்றுதல்
    * உடல் நிலை தடுமாறுதல்
    * ஒரு பக்கமாய் இழுப்பது போல் இருத்தல்
    * வயிற்று பிரட்டல்
    * வாந்தி,
    * அதிக வியர்வை,
    * தலைவலி,
    * காதில் சத்தம் (அ) காது கேளாமை
    ஆகியவை ஆகும்.

    உள் காது பாதிப்பு வீக்கம், கிருமி, தாக்குதலில் ஏற்பட்ட அடி, மருந்தின் நச்சு ஆகியவைகளின் காரணமாக இருக்கலாம். மேலும் சில மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.

    முறையான மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் மிக அவசியம். கூடவே யோகா முறையில் இதற்கு மிகச் சிறந்த முன்னேற்றம் அளிக்க முடிகின்றதனை அனுபவ ரீதியாக காண முடிவதால் முறையான யோகா பயிற்சியாளரிடம் பயிற்சி பெறவும்.

    எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 1
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை  :

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
    அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

    வெந்நீர்:

    அசைவம் சாப்பிடும் போது குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்கிறது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு செரிப்பது எளிமையாகிறது. கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், காலையில் மலப்பிரச்சனை ஏற்படாமல் எளிதாகிறது.

    பப்பாளி:

    பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம்  அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்.



    சீரகம்:

    அசைவ உணவு செரிக்காமல் அவஸ்தைப்படும் போது, சீராக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். மேலும் இது, மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

    புதினா ஜூஸ்:

    புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. அசைவ சாப்பாட்டிற்கு பின் புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால், அவை செரிமான பிரச்சனையை சரி செய்வதுடன், அவை வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க உதவும்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது. இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

    க்ரீன் டீ:

    சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என  அருந்தலாம்.
    விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
    திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

    தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

    கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

    கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.



    ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

    முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

    முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது.

    வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்.
    ஆப்பத்தில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - மூன்று டம்ளர்
    தேங்காய் துருவல் - 2  கப்
    உளுந்து - 3 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சமையல் சோடா - 3 சிட்டிகை
    உப்பு  சிறிதளவு

    முட்டை மசாலாவிற்கு :

    முட்டை - மூன்று
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
    நெய் - இரண்டு மேசைக்கரண்டி



    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

    அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் மென்மையாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

    ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

    பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    சுவையான மிளகு சேர்த்த முட்டை ஆப்பம் ரெடி.

    இதற்கு காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது ஜாக்கிங்.
    மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஜாக்கிங். எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது ஜாக்கிங். அதற்கென்று நீங்கள் உசைன் போல்ட்டை போல எல்லாம் ஓட வேண்டும் என்றில்லை. மிதமான வேகத்தில் ஜாக்கிங் போல ஓடி பயற்சி செய்தாலே போதுமானது.இனி, ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

    மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம்.

    தினமும் 10 - 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 - 60% குறைகிறதாம்.

     
    தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடை குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.

    தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப்பிரச்சனைகள் வருகிறது.

    ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும்.

    தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும்.

    குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

    தினமும் ஜாக்கிங் செய்வதனால் உங்கள் எலும்புகள் வலுமை அடைகின்றன. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

    தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும்.
    சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக இருக்கும். இதன் எதிரொலியாக முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. இந்த சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

    PCOS சில அறிகுறிகள்:

    * முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)

    * சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.

    * முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி

    * முகப்பரு

    * எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.

    * கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).

    * இடுப்பு வலியோடு மன அழுத்தம்.

    மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.



    PCOS எதனால் ஏற்படுகிறது?

    PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.

    மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.

    * ஹார்மோன் சமநிலைபடுத்துதல்

    * டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.

    * மாதவிடாய் முறைப்படுத்துதல்

    * உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

    * உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.
    கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை பிரட்டை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    கோதுமை பிரட் துண்டுகள் - 6
    தக்காளி - 1
    லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
    தண்ணீர் - 100 மில்லி
    மிளகாய் தூள் - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு  

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை

    கோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

    இறுதியில் லெமன் ஜூஸ், கொத்தமல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    சுவையான கோதுமை பிரட் உப்புமா ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை தவிர்க்கவும்.
    பெற்றோர்களின் பொறுமையின்மையும், நேரம் செலவழிக்க முடியாத போக்குமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்கள். டி.வி.யை போட்டுவிட்டு நம் வேலையை செய்யலாம் என்ற வி‌ஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம். தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துகள் உள்ளே இருக்கின்றன.

    இதனால் நாள் ஒன்றிற்கு இத்தனை மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம். என்ன நிகழ்ச்சி, எந்த சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனை பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்த சேனலை டி.வி. பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம். சில நிகழ்ச்சிகளில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.

    தொலைக்காட்சியை பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினை கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும்.



    அவற்றை பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம். கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒரு வியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேர்ள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.

    நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும். முடிந்தமட்டில் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம். டி.வி.யில் காட்சி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும் தடுமாற்றம் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, பெற்றோர் விவரிக்க வேண்டும். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.

    தொலைக்காட்சியை கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரமாண்டத்தை, அழகினை, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்க்கையில் வேண்டிய நம்பிக்கையை குழந்தைகளுக்கு காட்டலாம். கற்பனை வளத்தை கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம். 
    ×