என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
குழந்தைகள் பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.
குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.
1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…
* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

* குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.
* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.
* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.
* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.
1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…
* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.
* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.
* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - கால் கட்டு
முட்டை - 2
தக்காளி - 2
மிளகுத் தூள் - தேவையான அளவு

செய்முறை:
பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.
முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.
பசலைக்கீரை - கால் கட்டு
முட்டை - 2
தக்காளி - 2
மிளகுத் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.
முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.
பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
சில கர்ப்பிணிகளுக்கு வயிறு பெரியதாக இருக்கும். பொதுவாக நம் ஊரில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை எனச் சொல்வதுண்டு. உண்மையில் இது மட்டும்தான் காரணமா? இல்லை வயிறு பெரியதாக இருக்க நிறைய காரணங்கள் உள்ளன. வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
* முதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையை பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்கு பிறகு, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும். இது நார்மல்தான்.
* ஆம்நியாடிக் திரவம் வயிற்றுக்குள் இருக்கும். அதில்தான் குழந்தை மிதந்து கொண்டிருக்கும். இந்தத் திரவம் அதிக அளவில் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். நார்மலான அளவு 800-1000 மி.லி. இந்த அளவைவிட 2 லிட்டர் அதிகமாக இருந்தால், தாயானவள் கொஞ்சம் அசௌகரியமாக உணரக் கூடும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே பயப்பட வேண்டாம். இது அதிகமாக இருப்பதற்கு, எதாவது சின்ன சின்ன காரணங்கள் இருக்கலாம். அதை மருத்துவர்கள் சரி செய்துவிடுவார்கள்.

* முதல் முறையாகக் கர்ப்பமான பிறகும் குழந்தை பிறந்த பிறகும் வயிற்றுத் தசைகள் நார்மலாக மீண்டும் இறுக்கமாகியிருக்காது. முதல் கர்ப்பம்போல சரியான அளவில் இல்லாமல் சற்று கீழ் இறங்கி வயிறு காணப்படும். இதனால் குழந்தையின் நிலையும் மாறி இருக்கலாம். இதன் காரணமாக வயிறு பெரிதாக தெரியும்.
* தாய் உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவை சரியான நிலையில் இல்லை என்றாலும் வயிற்று தசைகள் தளர்ந்து வயிறு பெரிதாக தெரியலாம். இதன் காரணமாகவும் வயிறு பெரிதாக இருக்கும்.
* டிவின்ஸ் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். வயிற்று தசைகள் குழந்தைகளுக்கு ஏற்றதுபோல தளர்வடையும்; பெரிதாகும். ஆதலால் வயிறு பெரிதாக தெரியும்.
* குழந்தையின் அளவு பெரிதாக இருந்தால், வயிறு பெரிதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை பெரிதாக இருக்கும். ஆதலால் வயிறும் பெரிதாகும். கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள், கொஞ்சம் கூடுதல் கவனமும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதும் முக்கியம். ஸ்கேன்களும் கொஞ்சம் கூடுதலாக எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதிக்க வேண்டி இருக்கும்.
* அதிகமான ஆம்னியாட்டிக் திரவமோ கர்ப்பக்கால சர்க்கரை நோயோ இருந்தால் பாலிஹைட்ராமினாஸ் வரலாம். வயிறு இயல்புக்கு மீறி பெரிதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துவிடும். மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தைரியமாக இருங்கள்.
* முதல் குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் சரியான உடல் எடையை சீராக பராமரிக்காமல் தவற விட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக தெரியும். உங்கள் இடுப்பை சுற்றி தசைகள் தளர்ந்து தொங்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக இருக்கும். முதல் முறை தாயான பிறகு 4-5 ஆண்டுகளாவது இடைவேளி விட்டு அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லது. பாதுகாப்பனதும்கூட.
* முதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையை பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்கு பிறகு, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும். இது நார்மல்தான்.
* ஆம்நியாடிக் திரவம் வயிற்றுக்குள் இருக்கும். அதில்தான் குழந்தை மிதந்து கொண்டிருக்கும். இந்தத் திரவம் அதிக அளவில் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். நார்மலான அளவு 800-1000 மி.லி. இந்த அளவைவிட 2 லிட்டர் அதிகமாக இருந்தால், தாயானவள் கொஞ்சம் அசௌகரியமாக உணரக் கூடும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே பயப்பட வேண்டாம். இது அதிகமாக இருப்பதற்கு, எதாவது சின்ன சின்ன காரணங்கள் இருக்கலாம். அதை மருத்துவர்கள் சரி செய்துவிடுவார்கள்.
* பொதுவாக இரண்டாவது முறை தாயானவர்கள், இந்தத் தவறை அதிகம் செய்வார்கள். தேதி தவறாக கணக்கிட்டு இருப்பீர்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீண்டும் கருவுற்றால் கரு கணித்த தேதியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான்.

* முதல் முறையாகக் கர்ப்பமான பிறகும் குழந்தை பிறந்த பிறகும் வயிற்றுத் தசைகள் நார்மலாக மீண்டும் இறுக்கமாகியிருக்காது. முதல் கர்ப்பம்போல சரியான அளவில் இல்லாமல் சற்று கீழ் இறங்கி வயிறு காணப்படும். இதனால் குழந்தையின் நிலையும் மாறி இருக்கலாம். இதன் காரணமாக வயிறு பெரிதாக தெரியும்.
* தாய் உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவை சரியான நிலையில் இல்லை என்றாலும் வயிற்று தசைகள் தளர்ந்து வயிறு பெரிதாக தெரியலாம். இதன் காரணமாகவும் வயிறு பெரிதாக இருக்கும்.
* டிவின்ஸ் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். வயிற்று தசைகள் குழந்தைகளுக்கு ஏற்றதுபோல தளர்வடையும்; பெரிதாகும். ஆதலால் வயிறு பெரிதாக தெரியும்.
* குழந்தையின் அளவு பெரிதாக இருந்தால், வயிறு பெரிதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை பெரிதாக இருக்கும். ஆதலால் வயிறும் பெரிதாகும். கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள், கொஞ்சம் கூடுதல் கவனமும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதும் முக்கியம். ஸ்கேன்களும் கொஞ்சம் கூடுதலாக எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதிக்க வேண்டி இருக்கும்.
* அதிகமான ஆம்னியாட்டிக் திரவமோ கர்ப்பக்கால சர்க்கரை நோயோ இருந்தால் பாலிஹைட்ராமினாஸ் வரலாம். வயிறு இயல்புக்கு மீறி பெரிதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துவிடும். மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தைரியமாக இருங்கள்.
* முதல் குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் சரியான உடல் எடையை சீராக பராமரிக்காமல் தவற விட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக தெரியும். உங்கள் இடுப்பை சுற்றி தசைகள் தளர்ந்து தொங்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக இருக்கும். முதல் முறை தாயான பிறகு 4-5 ஆண்டுகளாவது இடைவேளி விட்டு அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லது. பாதுகாப்பனதும்கூட.
வாரத்தில் மூன்று முதல் 5 நாட்கள், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மனநலத்திற்கு நன்மை சேர்க்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாரத்தில் மூன்று முதல் 5 நாட்கள், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன நலத்திற்கு நன்மை சேர்க்கும் என்பது ஆய்வுத்தகவல். அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழகம், மாசசூடெட்ஸ் மருத்துவமனை, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மூளை சம்பந்தமான ஆராய்ச்சி நடத்தும் லோரிசெட் இன்ஸ்டி டியூட் ஆகியவை இணைந்து 10 லட்சம் பேரிடம் ஆய்வு செய்து இதை கண்டறிந்திருக்கிறது.
குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுவேலை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவது, மீன் பிடிப்பது, பனிச்சறுக்கு விளையா ட்டு, குழு விளையாட்டுகள் உள்பட 75 வகையான உடற்பயிற் சிகளை மேற்கொள்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக் கிறார்கள். வயதோ, பாலினமோ கருத்தில் கொள்ளப்படவில்லை. எந்த வயதினராக இருந்தாலும் அதற்கு ஏற்றபடியான உடற்பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதயநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை குறைக்கலாம் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி எதுவும் செய்யாதவர்கள் மாதத்தில் 11 நாட்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு 7 நாட்களாக குறையும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
குறைந்த பட்சம் வாரம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்து வருவது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நலம் சேர்க்கும்.
குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுவேலை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவது, மீன் பிடிப்பது, பனிச்சறுக்கு விளையா ட்டு, குழு விளையாட்டுகள் உள்பட 75 வகையான உடற்பயிற் சிகளை மேற்கொள்பவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக் கிறார்கள். வயதோ, பாலினமோ கருத்தில் கொள்ளப்படவில்லை. எந்த வயதினராக இருந்தாலும் அதற்கு ஏற்றபடியான உடற்பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதயநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற அபாயங்களை குறைக்கலாம் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி எதுவும் செய்யாதவர்கள் மாதத்தில் 11 நாட்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு 7 நாட்களாக குறையும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
குறைந்த பட்சம் வாரம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்து வருவது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நலம் சேர்க்கும்.
பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காலை முதல் இரவு வரை பணி செய்யும் இடத்திலேயே காலத்தினை செலவழிப்பவர்கள் இன்று பலர் உள்ளனர். மிகவும் சோர்ந்து இரவு வீடு திரும்பும் இவர்களுக்கு வீடுதான் சொர்க்கம். அவர்கள் வீட்டில் விடும் மூச்சுதான் நிதானமான மூச்சு. ஆரோக்கியமான காற்று தான் அவர்களின் முதல் சக்தி. இந்த காற்று தூய்மையானதாக இல்லாவிட்டால் அதுவே அவர்களை மேலும் சோர்வாக்கி நோயாளி ஆக்கி விடும். பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர்.
வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டினுள்ளேயே வேலை செய்து காலத்தினை கடப்பவர்களும் உண்டு. அத்தகையோர் கூடுதலாக உடல் பாதிப்பினை அடைகின்றனர். ஆக வீட்டினுள் காற்று சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
* வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினை குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும்.
* வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள். வெளிக்காற்று தூசு வராமலிருக்க அவற்றினை வலைகளின் மூலம் தடுத்து விடுங்கள். அதிக ரசாயனப் பொருட்களை கொண்டு வீடு, பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அந்த கடினமான வாசனை-உடனே காற்றில் வெளியேற வேண்டும். இல்லையெனில் நச்சு வாசனை உடலில் அலர்ஜி மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெளியில் அணிந்து செல்லும் ஷீ, செருப்புகளோடு வீட்டிற்குள் நுழையாதீர்கள். பல வகை கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள். அடிக்கடி உங்கள் ஷீ, செருப்புகளை முறையாக கழுவி விடுங்கள்.
* கார்பெட் எனும் தரை விரிப்பு பார்க்க மிக அழகுதான். ஆனால் அதனை அக்கறை எடுத்து சுத்தம் செய்யாவிட்டால் எண்ணற்ற கிருமிகளின் இருப்பிடம் ஆகி விடும். நோய்க்கு குறைவே இருக்காது. எனவே கார்பெட் உபயோகிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை பராமரிக்க வேண்டும்.
* அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காதீர்கள். உங்கள் கேஸ் ஸ்டவ், ஹீட்டர், சிம்னி இவைகளை முறையாய் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இயற்கை முறையில் மூளையினை ஆரோக்கியமாக வைக்கும் வழிகள் ஒருவரது மூளை அவரது உடலின் முக்கியமான உறுப்பு. மூளையினையும் மனதினையும் இங்கு பிரித்து பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படுவது மூளையினைப் பற்றிதான்.
* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மூளை, மனது, உடல் மூன்றினையும் பாதுகாக்கும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் கலாச்சாரத்தில் பிணைந்த இது மிகப்பெரிய இயற்கை மருந்து. வயிறு காலியாய் இருக்கும் நேரத்தில், அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து, முதுகு நிமிர அமர்ந்து, கண்களை மூடி மூச்சினை மட்டும் கவனித்தால் போதும் மூச்சு நிதானமாய் நிகழ வேண்டும். இதனை காலையில் செய்வது மிகவும் நல்லது.
* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். அப்பொழுதுதான் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.
* பகலில் 20 நிமிடங்கள் நாற்காலி (அ) சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி ஓய்வு எடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்திறனை வெகுவாய் கூட்டும்.
* குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள் இவைகளைச் செய்யுங்கள்.
* ஒரு நேரத்தில் செய்யும் வேலை ஒன்றின் மீதே கவனம் செலுத்துங்கள். போன் பேசிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே அப்படியே டிவியும் பார்ப்பது போன்ற செயல்களால் மூளையால் எதனையும் முழுமையாய் கையாள முடியாது.
* புதுமொழி ஒன்றினைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. இது மூளைக்கான சிறந்த பயிற்சி.
* ஆரோக்கியமான உணவினை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* எழுதுங்கள். கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதனை விட எழுதுவது வலது பக்க மூளையினை நன்கு தூண்டும்.
* எதனையும் ஆக்கப் பூர்வமாகவே சிந்திக்கப் பழகுங்கள்.
* பட்டை தூளினை சிறிது, நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இது உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும்.
வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டினுள்ளேயே வேலை செய்து காலத்தினை கடப்பவர்களும் உண்டு. அத்தகையோர் கூடுதலாக உடல் பாதிப்பினை அடைகின்றனர். ஆக வீட்டினுள் காற்று சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
* வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினை குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும்.
* வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள். வெளிக்காற்று தூசு வராமலிருக்க அவற்றினை வலைகளின் மூலம் தடுத்து விடுங்கள். அதிக ரசாயனப் பொருட்களை கொண்டு வீடு, பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அந்த கடினமான வாசனை-உடனே காற்றில் வெளியேற வேண்டும். இல்லையெனில் நச்சு வாசனை உடலில் அலர்ஜி மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெளியில் அணிந்து செல்லும் ஷீ, செருப்புகளோடு வீட்டிற்குள் நுழையாதீர்கள். பல வகை கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள். அடிக்கடி உங்கள் ஷீ, செருப்புகளை முறையாக கழுவி விடுங்கள்.
* கார்பெட் எனும் தரை விரிப்பு பார்க்க மிக அழகுதான். ஆனால் அதனை அக்கறை எடுத்து சுத்தம் செய்யாவிட்டால் எண்ணற்ற கிருமிகளின் இருப்பிடம் ஆகி விடும். நோய்க்கு குறைவே இருக்காது. எனவே கார்பெட் உபயோகிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை பராமரிக்க வேண்டும்.
* அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காதீர்கள். உங்கள் கேஸ் ஸ்டவ், ஹீட்டர், சிம்னி இவைகளை முறையாய் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இயற்கை முறையில் மூளையினை ஆரோக்கியமாக வைக்கும் வழிகள் ஒருவரது மூளை அவரது உடலின் முக்கியமான உறுப்பு. மூளையினையும் மனதினையும் இங்கு பிரித்து பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படுவது மூளையினைப் பற்றிதான்.
* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மூளை, மனது, உடல் மூன்றினையும் பாதுகாக்கும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் கலாச்சாரத்தில் பிணைந்த இது மிகப்பெரிய இயற்கை மருந்து. வயிறு காலியாய் இருக்கும் நேரத்தில், அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து, முதுகு நிமிர அமர்ந்து, கண்களை மூடி மூச்சினை மட்டும் கவனித்தால் போதும் மூச்சு நிதானமாய் நிகழ வேண்டும். இதனை காலையில் செய்வது மிகவும் நல்லது.
* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். அப்பொழுதுதான் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.
* பகலில் 20 நிமிடங்கள் நாற்காலி (அ) சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி ஓய்வு எடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்திறனை வெகுவாய் கூட்டும்.
* குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள் இவைகளைச் செய்யுங்கள்.
* ஒரு நேரத்தில் செய்யும் வேலை ஒன்றின் மீதே கவனம் செலுத்துங்கள். போன் பேசிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே அப்படியே டிவியும் பார்ப்பது போன்ற செயல்களால் மூளையால் எதனையும் முழுமையாய் கையாள முடியாது.
* புதுமொழி ஒன்றினைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. இது மூளைக்கான சிறந்த பயிற்சி.
* ஆரோக்கியமான உணவினை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* எழுதுங்கள். கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதனை விட எழுதுவது வலது பக்க மூளையினை நன்கு தூண்டும்.
* எதனையும் ஆக்கப் பூர்வமாகவே சிந்திக்கப் பழகுங்கள்.
* பட்டை தூளினை சிறிது, நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இது உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும்.
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பைனாப்பிள் ப்ளெயின் கேக் பொடித்தது - 1/2 கப்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
கிரீம் சீஸ் - 1/2 கப்,
பவுடர் சுகர், பால் பவுடர் - தலா 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

செய்முறை :
ஒரு பவுலில் 2 டீஸ்பூன் கிரீம் சீஸ், 1 டீஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் உதிர்த்த கேக், 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் சமமாக பரப்பவும்.
மற்றொரு பவுலில் மீதியுள்ள கிரீம் சீஸ், பால் பவுடர், வெனிலா எசென்ஸ், பவுடர் சுகர், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கேக் கலவையில் பரப்பவும்.
நடுவில் ஒரு கோடு போல் ஜாம் வைத்து, பட்டர் பேப்பரை நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்த பின்னர் வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
பைனாப்பிள் ப்ளெயின் கேக் பொடித்தது - 1/2 கப்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
கிரீம் சீஸ் - 1/2 கப்,
பவுடர் சுகர், பால் பவுடர் - தலா 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
விருப்பமான ஜாம் - 2 டீஸ்பூன்.

செய்முறை :
ஒரு பவுலில் 2 டீஸ்பூன் கிரீம் சீஸ், 1 டீஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் உதிர்த்த கேக், 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் சமமாக பரப்பவும்.
மற்றொரு பவுலில் மீதியுள்ள கிரீம் சீஸ், பால் பவுடர், வெனிலா எசென்ஸ், பவுடர் சுகர், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கேக் கலவையில் பரப்பவும்.
நடுவில் ஒரு கோடு போல் ஜாம் வைத்து, பட்டர் பேப்பரை நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்த பின்னர் வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
சூப்பரான பைனாப்பிள் சுவிஸ் ரோல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய பெண்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.
இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என எல்லோருடைய பொன்னான நேரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது இணைய தளம் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தான்.
அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.
அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.
இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!
தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.
பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.
8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.

சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.
இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.
ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.
தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.
முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.
இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.
அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!
எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்
அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.
அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.
இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!
தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.
பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.
8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.
இணையதளத்தில் வரும் பதிவுகளில் 90 சதவீதம் அபத்தம். இந்த அபத்தங்களை உண்மை என்று நம்பி அதை ஆதரித்து பதிவிடுபவர்கள் 50 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.

சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.
இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.
ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.
தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.
முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.
இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.
அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!
எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்
நம் உடலில் உள்ள உஷ்ணம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.
* உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.
உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.
* உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.
* நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற்சூடு பிரச்சனை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும்தான்.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.
உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த சுவிஸ் ரோலை ஸ்நாகஸாக கொடுத்து அனுப்பலாம். இன்று இந்த சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொடித்த மேரி பிஸ்கெட் - 4 கப்,
சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
பால் - 4 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 டீஸ்பூன்,

செய்முறை :
ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.
அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.
சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.
சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
பால் - 4 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 டீஸ்பூன்,
பட்டர் பேப்பர் - தேவைக்கு.

செய்முறை :
ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.
அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.
சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ... நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
* சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.

* வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்.
* தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.
* இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்.
* ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.
* சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.
* ஆயில்பாத்தை கடமைக்குச் செய்யாமல் அனுபவித்துச் செய்யுங்கள். நல்லெண்ணெய்யோ, தேங்காயெண்ணெய்யோ தலையில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். அதற்கு மேல் ஊறினால், சிலருக்குத் தலைவலி வந்துவிடும். 15 நிமிடங்கள் கழித்து சீயக்காய்த்தூளுடன் செம்பருத்தி இலையை அரைத்து, வடிகட்டிய சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். கண்டிஷனரே தேவையில்லாமல் கூந்தல் பளபளக்கும்; ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், சீயக்காய் தேய்த்துக் குளிக்கும்போது, நிறையத் தண்ணீர்விட்டு முடியை அலச வேண்டும். இல்லையென்றால் பொடுகு வரலாம்.

* வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்.
* தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.
* இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்.
* ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.
6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்று பார்க்கலாம்…
குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.
எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?
* கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

* அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.
* நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.
* குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.
* குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.
* தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.
* சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.
* இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.
* குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.
குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.
எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?
* கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.
* ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

* அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.
* நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.
* குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.
* குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.
* தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.
* சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.
* இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.
* குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.
இந்த சாலட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த சாலட்டில் பொட்டாசியம், மல்டிவிட்டமின்கள் நிறைந்துள்ளன. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நேந்திரம் பழம் - 1
ஆப்பிள் - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.
ஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.
இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.
நேந்திரம் பழம் - 1
ஆப்பிள் - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.
ஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.
இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.
20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும். இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






