search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnancy health problem"

    வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
    சில கர்ப்பிணிகளுக்கு வயிறு பெரியதாக இருக்கும். பொதுவாக நம் ஊரில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை எனச் சொல்வதுண்டு. உண்மையில் இது மட்டும்தான் காரணமா? இல்லை வயிறு பெரியதாக இருக்க நிறைய காரணங்கள் உள்ளன. வயிறு பெரிதாக இருந்தாலோ சின்னதாக இருந்தாலோ பயம் வேண்டாம். அது பொருட்டல்ல. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

    * முதல் முறை கர்ப்பமான பிறகு, குழந்தையை பெற்றெடுத்த பின் வயிற்றுத் தசைகள் இயல்பான முறையில் பழைய படி சேர்ந்திருக்காது. சற்று தளர்வாகவே இருக்கும். முதல் குழந்தைக்கு பிறகு, வெகு விரைவிலே இரண்டாவது முறை தாயானால் வயிறு பெரியதாக இருக்கும். பெரும்பாலோனோருக்கு இரண்டாம் முறை தாயானால், வயிறு பெரிதாக இருக்கும். இது நார்மல்தான்.

    * ஆம்நியாடிக் திரவம் வயிற்றுக்குள் இருக்கும். அதில்தான் குழந்தை மிதந்து கொண்டிருக்கும். இந்தத் திரவம் அதிக அளவில் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். நார்மலான அளவு 800-1000 மி.லி. இந்த அளவைவிட 2 லிட்டர் அதிகமாக இருந்தால், தாயானவள் கொஞ்சம் அசௌகரியமாக உணரக் கூடும். இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே பயப்பட வேண்டாம். இது அதிகமாக இருப்பதற்கு, எதாவது சின்ன சின்ன காரணங்கள் இருக்கலாம். அதை மருத்துவர்கள் சரி செய்துவிடுவார்கள்.

    * பொதுவாக இரண்டாவது முறை தாயானவர்கள், இந்தத் தவறை அதிகம் செய்வார்கள். தேதி தவறாக கணக்கிட்டு இருப்பீர்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீண்டும் கருவுற்றால் கரு கணித்த தேதியைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான்.



    * முதல் முறையாகக் கர்ப்பமான பிறகும் குழந்தை பிறந்த பிறகும் வயிற்றுத் தசைகள் நார்மலாக மீண்டும் இறுக்கமாகியிருக்காது. முதல் கர்ப்பம்போல சரியான அளவில் இல்லாமல் சற்று கீழ் இறங்கி வயிறு காணப்படும். இதனால் குழந்தையின் நிலையும் மாறி இருக்கலாம். இதன் காரணமாக வயிறு பெரிதாக தெரியும்.

    * தாய் உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவை சரியான நிலையில் இல்லை என்றாலும் வயிற்று தசைகள் தளர்ந்து வயிறு பெரிதாக தெரியலாம். இதன் காரணமாகவும் வயிறு பெரிதாக இருக்கும்.

    * டிவின்ஸ் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் வயிறு பெரிதாக தெரியும். வயிற்று தசைகள் குழந்தைகளுக்கு ஏற்றதுபோல தளர்வடையும்; பெரிதாகும். ஆதலால் வயிறு பெரிதாக தெரியும்.

    * குழந்தையின் அளவு பெரிதாக இருந்தால், வயிறு பெரிதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருந்தால், குழந்தை பெரிதாக இருக்கும். ஆதலால் வயிறும் பெரிதாகும். கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள், கொஞ்சம் கூடுதல் கவனமும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதும் முக்கியம். ஸ்கேன்களும் கொஞ்சம் கூடுதலாக எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதிக்க வேண்டி இருக்கும்.

    * அதிகமான ஆம்னியாட்டிக் திரவமோ கர்ப்பக்கால சர்க்கரை நோயோ இருந்தால் பாலிஹைட்ராமினாஸ் வரலாம். வயிறு இயல்புக்கு மீறி பெரிதாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் தெரிந்துவிடும். மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தைரியமாக இருங்கள்.

    * முதல் குழந்தை பிறந்த பின், நீங்கள் மீண்டும் சரியான உடல் எடையை சீராக பராமரிக்காமல் தவற விட்டு மீண்டும் கர்ப்பமாகி இருக்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக தெரியும். உங்கள் இடுப்பை சுற்றி தசைகள் தளர்ந்து தொங்கலாம். இதனாலும் வயிறு பெரிதாக இருக்கும். முதல் முறை தாயான பிறகு 4-5 ஆண்டுகளாவது இடைவேளி விட்டு அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லது. பாதுகாப்பனதும்கூட.

    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

    நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.

    கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.



    தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.

    சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.



    கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

    கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

    சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும்  இதம் தரும்.
    கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
    கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

    கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.

    இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
    எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.

    முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.
    ×