என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்று இணையதளத்தில் மகிழ்ச்சி என்ற பெயரில் வேடிக்கை செய்து தங்கள் மதிப்பையும், அடையாளத்தையும் அலங்கோலப்படுத்திக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகிறது.
நமது தோற்றமே நம்மை பிறருக்கு அறிமுகம் செய்கிறது. ஆளுமை வெற்றியை பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதை முந்தியதாக நம்மை பிறருக்கு அடையாளம் காட்டுவது நம் தோற்றமே. நன்மதிப்பு பெற்றுத் தருவதாக அமைய வேண்டும் நமது தோற்றம். இன்று இணையதளத்தில் மகிழ்ச்சி என்ற பெயரில் வேடிக்கை செய்து தங்கள் மதிப்பையும், அடையாளத்தையும் அலங்கோலப்படுத்திக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகிறது. மாணவர்களான நீங்கள் உங்கள் ’இமேஜை’ (மதிப்பை) இணைய வேடிக்கையில் இழந்துவிடாமல் இருக்க இதை கொஞ்சம் கவனிங்க...
தோற்றத்தின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவது தவறு என்றாலும், தோற்றம் ஒருவருக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. உடையில் அழுக்கு இருப்பது நீங்கள் கறை படிந்தவர் என்பதன் அடையாளம் அல்ல. ஆனால் உடையில் சுருக்கங்கள் இருந்தால் நீங்கள் ஆடை விஷயத்தில் அதிக அக்கறையற்றவர் என்பதை காட்டிக் கொடுக்கும். அது உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது. சுகாதாரமற்றவர் என்று எதிர்மறையாக எண்ண வைக்கக்கூடியதல்லவா? எனவே உடையில் கவனம் செலுத்துவது அவசியமே.
அணியும் உடையில் அவ்வளவு கவனம் தேவையென்றால், அகிலமே கவனிக்கும் இணைய வெளியில் எவ்வளவு ஒழுக்கம் பேண வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஏனெனில் உங்களின் சகல நடவடிக்கைகளையும் இந்த உலகம் இணையத்தின் வழியே கூர்ந்து கவனிக்கிறது. அதன் அடிப்படையில் உங்களைப் பற்றிய கருத்துகளை பார்ப்பவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அது நல்லவிதமானதா, மோசமானதா என்பதை உங்களின் இணைய செயல்பாட்டைப் பொறுத்தது.
ஆம், உங்கள் இணைய செயல்பாடு உங்களுக்கென்று ஒரு இணைய ‘இமேஜை’ உருவாக்கித் தருகிறது. அது உங்கள் நட்பு வட்டத்தை தாண்டியது என்பதை நீங்கள் உணர வேண்டும். நண்பர்களிடம்தானே சகஜமாக இருக்கிறோம் என்ற வகையில் என்று அவசியமற்ற பதிவுகளை வெளியிடுவது உங்கள் இமேஜை வேறுவகையில் மதிப்பிடவும், வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் கூடியது.
நீங்கள் பொது வெளியில் சிறந்த பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் நல்ல மாணவராக இருக்கலாம். அதே நேரத்தில் நண்பர்கள் மத்தியில் ஜாலியாக இருக்கிறோம் என்ற பெயரில் வேடிக்கைகள் செய்வதும், அதை இணையத்தில் வெளியிடுவதும் கூடாது.
உதாரணமாக முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம் இல்லாவிட்டாலும் வேடிக்கையாக அப்படி செய்து காட்டுவதுபோல போஸ் கொடுத்து படம் பிடிப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை இணையத்தில் வெளியிடுவது எதிர்வினை ஆற்றக்கூடியது. உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது.
பெண்களைப் பற்றி, காதலைப் பற்றி, சாதி, மதங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது என வேடிக்கையான, முரணான கருத்துகளை பதிவு செய்வது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றில் பலவற்றை நீங்கள் இன்று வேடிக்கையாக செய்துவிட்டு மறந்து போனாலும், நாளை அது உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கும்.
உதாரணமாக நீங்கள் படித்து முடித்துவிட்டு ‘லிங்ட் இன்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், வர்த்தக தளங்களின் வழியே வேலை தேடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது வேலை வழங்குபவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பயோடேட்டா மூலமாக மட்டும் தெரிந்து கொள்ளமாட்டார்கள். சொந்த ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்களை இணையத்தின் வழியாகவும் தேடி தெரிந்து கொள்வார்கள். நீங்கள் நண்பர்களுடன் ஜாலியாக எடுத்த புகைப்படங்கள், வேடிக்கையாக செய்தவைகள், உங்கள் கருத்துகள் போன்றவற்றையும் ஆராய்வார்கள். நீங்கள் மறந்துபோன பல விஷயங்கள் அவர்களின் தேடலில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
வேண்டுமானால், உங்களைப் பற்றி நீங்களே கூகுளில் தேடி, ‘நீங்கள் எவ்வளவு பிரபலம்’ என்று ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் வெளியிட்ட கருத்துகளும், வேடிக்கையாய் வெளியிட்ட படங்களும் கிடைக்கும். அப்படியென்றால் உங்கள் இணைய கணக்கின் முகவரி ஒருவருக்கு கிடைத்து விட்டால் இன்னும் உங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் என்பது புரிகிறதல்லவா?.
எனவே இணையத்தில் வேடிக்கையாக புகைப்படமோ, கருத்துகளோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். நல்ல மதிப்பைத் தரும் கருத்துகள், புகைப்படங்கள், கட்டுரைகளை பதிவு செய்யுங்கள். உங்களுக்கென தனி இணைய தளம் தொடங்கினால்கூட தவறு இல்லை. ஆனால் பதிவுகள் ஒவ்வொன்றும், உங்கள் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இனி உங்கள் இணைய இமேஜ் உயரட்டும்.
தோற்றத்தின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவது தவறு என்றாலும், தோற்றம் ஒருவருக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. உடையில் அழுக்கு இருப்பது நீங்கள் கறை படிந்தவர் என்பதன் அடையாளம் அல்ல. ஆனால் உடையில் சுருக்கங்கள் இருந்தால் நீங்கள் ஆடை விஷயத்தில் அதிக அக்கறையற்றவர் என்பதை காட்டிக் கொடுக்கும். அது உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது. சுகாதாரமற்றவர் என்று எதிர்மறையாக எண்ண வைக்கக்கூடியதல்லவா? எனவே உடையில் கவனம் செலுத்துவது அவசியமே.
அணியும் உடையில் அவ்வளவு கவனம் தேவையென்றால், அகிலமே கவனிக்கும் இணைய வெளியில் எவ்வளவு ஒழுக்கம் பேண வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஏனெனில் உங்களின் சகல நடவடிக்கைகளையும் இந்த உலகம் இணையத்தின் வழியே கூர்ந்து கவனிக்கிறது. அதன் அடிப்படையில் உங்களைப் பற்றிய கருத்துகளை பார்ப்பவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அது நல்லவிதமானதா, மோசமானதா என்பதை உங்களின் இணைய செயல்பாட்டைப் பொறுத்தது.
ஆம், உங்கள் இணைய செயல்பாடு உங்களுக்கென்று ஒரு இணைய ‘இமேஜை’ உருவாக்கித் தருகிறது. அது உங்கள் நட்பு வட்டத்தை தாண்டியது என்பதை நீங்கள் உணர வேண்டும். நண்பர்களிடம்தானே சகஜமாக இருக்கிறோம் என்ற வகையில் என்று அவசியமற்ற பதிவுகளை வெளியிடுவது உங்கள் இமேஜை வேறுவகையில் மதிப்பிடவும், வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் கூடியது.
நீங்கள் பொது வெளியில் சிறந்த பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் நல்ல மாணவராக இருக்கலாம். அதே நேரத்தில் நண்பர்கள் மத்தியில் ஜாலியாக இருக்கிறோம் என்ற பெயரில் வேடிக்கைகள் செய்வதும், அதை இணையத்தில் வெளியிடுவதும் கூடாது.
உதாரணமாக முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம் இல்லாவிட்டாலும் வேடிக்கையாக அப்படி செய்து காட்டுவதுபோல போஸ் கொடுத்து படம் பிடிப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை இணையத்தில் வெளியிடுவது எதிர்வினை ஆற்றக்கூடியது. உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது.
பெண்களைப் பற்றி, காதலைப் பற்றி, சாதி, மதங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது என வேடிக்கையான, முரணான கருத்துகளை பதிவு செய்வது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றில் பலவற்றை நீங்கள் இன்று வேடிக்கையாக செய்துவிட்டு மறந்து போனாலும், நாளை அது உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கும்.
உதாரணமாக நீங்கள் படித்து முடித்துவிட்டு ‘லிங்ட் இன்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், வர்த்தக தளங்களின் வழியே வேலை தேடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது வேலை வழங்குபவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பயோடேட்டா மூலமாக மட்டும் தெரிந்து கொள்ளமாட்டார்கள். சொந்த ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்களை இணையத்தின் வழியாகவும் தேடி தெரிந்து கொள்வார்கள். நீங்கள் நண்பர்களுடன் ஜாலியாக எடுத்த புகைப்படங்கள், வேடிக்கையாக செய்தவைகள், உங்கள் கருத்துகள் போன்றவற்றையும் ஆராய்வார்கள். நீங்கள் மறந்துபோன பல விஷயங்கள் அவர்களின் தேடலில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
வேண்டுமானால், உங்களைப் பற்றி நீங்களே கூகுளில் தேடி, ‘நீங்கள் எவ்வளவு பிரபலம்’ என்று ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் வெளியிட்ட கருத்துகளும், வேடிக்கையாய் வெளியிட்ட படங்களும் கிடைக்கும். அப்படியென்றால் உங்கள் இணைய கணக்கின் முகவரி ஒருவருக்கு கிடைத்து விட்டால் இன்னும் உங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் என்பது புரிகிறதல்லவா?.
எனவே இணையத்தில் வேடிக்கையாக புகைப்படமோ, கருத்துகளோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். நல்ல மதிப்பைத் தரும் கருத்துகள், புகைப்படங்கள், கட்டுரைகளை பதிவு செய்யுங்கள். உங்களுக்கென தனி இணைய தளம் தொடங்கினால்கூட தவறு இல்லை. ஆனால் பதிவுகள் ஒவ்வொன்றும், உங்கள் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இனி உங்கள் இணைய இமேஜ் உயரட்டும்.
உலகில் முதல் முறையாக, சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித தோல் உயிரணுக்களை நேரடியாக டென்ரைட்டிக் செல்களாக மாற்றி அசத்தியுள்ளனர்.
‘தன் கையே தனக்குதவி’ என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, ‘தன் நோய் எதிர்ப்பு மண்டலமே தனக்குதவி’ என்று நாம் தைரியமாகச் சொல்லலாம். ஏனெனில், ஒருவன் எவ்வளவு பெரிய மாவீரனாக அல்லது பலசாலியாக இருந்தாலும், அவனுடைய நோய் எதிர்ப்பு மண்டலமும் அதன் முக்கிய உயிரணுக்களான டி செல், டென்ரைட்டிக் செல் உள்ளிட்டவை சரியாக வேலை செய்யவில்லை என்றால், எவ்வளவு பலம்பொருந்தியவனாக இருந்தாலும் அது வீண்தான்.
நம் உடலில் உள்ள அந்நிய பொருட்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் மற்றும் புற்றுநோய் செல்களை தேடிக்கண்டுபிடித்து கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் புரதங்களை டி செல்களுக்கு அடையாளம் காட்டும் மகத்தான ஒரு பணியை டென்ரைட்டிக் செல்கள் (Dendritic cells) எனும் ஒரு குறிப்பிட்ட வகை உயிரணுக்கள்தான் செய்கின்றன. ஆக, உடலுக்குள் ஊடுருவும் நோய்க்கிருமிகளில் எது ‘எதிரி’ என்று டி செல்களுக்கு காட்டிக் கொடுப்பதே இந்த டென்ரைட்டிக் செல்கள்தான்.
இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச்சென்ற ஜேம்ஸ் பி.ஆலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இம்மியூனோ தெரபி (Immuno therapy) என்று கூறப்படும், நோயாளியின் நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான சிகிச்சை முறைக்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்திவரும் இந்த இம்மியூனோ தெரபி சிகிச்சை வேகமாக முன்னேறி வருகிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்மியூனோ தெரபிக்கு அவசியமான டென்ரைட்டிக் செல்களை புற்றுநோயானது செயலற்றுப்போகும்படி மாற்றி விடும் என்பதால், பல சமயங்களில் இம்மியூனோதெரபியானது பலனளிக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கலுக்கான தீர்வுகளை உருவாக்க பல ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் முதல் முறையாக, சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித தோல் உயிரணுக்களை நேரடியாக டென்ரைட்டிக் செல்களாக மாற்றி அசத்தியுள்ளனர். இதன் மூலமாக, பல நன்மைகள் உண்டு.
முதலாவதாக, நோயாளியினுடைய தோல் செல்களில் இருந்து டென்ரைட்டிக் செல்கள் உருவாக்கப்படுவதால் நோயாளியின் உடல் அவற்றை ஏற்காமல் போக வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, நோயாளியினுடைய தோல் உயிரணுக்களை டென்ரைட்டிக் செல்களாக மாற்ற வெறும் 9 நாட்கள் போதும் என்பது பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், இதுபோன்ற பெரும்பாலான சிகிச்சைகளுக்கான செல்களை சோதனைக்கூடங்களில் தயார் செய்ய மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். அதற்குள் நோயாளி பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உயிர்ச்சேதம் கூட ஏற்பட்டுவிடக்கூடும்.
மூன்றாவதாக, தோல் செல்களில் இருந்து உருவாக்கப்படும் டென்ரைட்டிக் செல்களை நோயாளியின் உடலுக்குள் செலுத்துவதற்கு முன்னர், நோயாளியின் உடலில் உள்ள குறிப்பிட்ட செல்களை தாக்கி அழிக்கும் வண்ணம் அவற்றை புரோகிராம் செய்ய முடியும் என்பது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும்.
மொத்தத்தில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான இம்மியூனோ தெரபி சிகிச்சைகள் உருவாக்கப்படலாம் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பிலிப்பே பெரைரா.
டைரெக்ட் புரோகிராமிங் (direct reprogramming) எனும் தொழில்நுட்பத்தின் மூலமாக, நோயாளியின் தோல் திசுவின் ஒரு பகுதியை எடுத்து, பின்னர் தோல் செல்களுக்குள் PU.1, IRF8 and BATF3 ஆகிய மூன்று புரதங்கள் செலுத்தப்படும். இந்த மூன்று புரதங்கள் மூலமாக தோல் செல்கள் டென்ரைட்டிக் செல்களாக மாற்றப்படும் அல்லது ரீபுரோகிராம் (reprogram) செய்யப்படும் என்பது.
இந்த ஆய்வு மூலமாக, இம்மியூனோதெரபிக்கு தேவையான லட்சக்கணக்கான டென்ரைட்டிக் செல்களை சோதனைக்கூடத்தில் வெறும் 9 நாட்களில் உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வு முறையின் மிகப்பெரிய பலம் என்கிறார் பெரைரா.
இந்த வருடத்தின் நோபல் பரிசை வென்றுள்ள இம்மியூனோதெரபி சிகிச்சையை இந்த தோல் செல் ரீபுரோகிராமிங் தொழில்நுட்பமானது மேலும் மேம்படுத்தும் என்பதும், ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும் தேவையான, ஒவ்வாமை ஆபத்தில்லாத மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் டென்ரைட்டிக் நோய் எதிர்ப்பு உயிரணு சிகிச்சையை விரைவில் நோயாளிகளுக்கு கொண்டு சேர்க்க லண்ட் பல்கலைக்கழகமும், பிலிப்பே பெரைரா குழுவினரும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் உடலில் உள்ள அந்நிய பொருட்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் மற்றும் புற்றுநோய் செல்களை தேடிக்கண்டுபிடித்து கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் புரதங்களை டி செல்களுக்கு அடையாளம் காட்டும் மகத்தான ஒரு பணியை டென்ரைட்டிக் செல்கள் (Dendritic cells) எனும் ஒரு குறிப்பிட்ட வகை உயிரணுக்கள்தான் செய்கின்றன. ஆக, உடலுக்குள் ஊடுருவும் நோய்க்கிருமிகளில் எது ‘எதிரி’ என்று டி செல்களுக்கு காட்டிக் கொடுப்பதே இந்த டென்ரைட்டிக் செல்கள்தான்.
இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச்சென்ற ஜேம்ஸ் பி.ஆலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் இம்மியூனோ தெரபி (Immuno therapy) என்று கூறப்படும், நோயாளியின் நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான சிகிச்சை முறைக்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்திவரும் இந்த இம்மியூனோ தெரபி சிகிச்சை வேகமாக முன்னேறி வருகிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்மியூனோ தெரபிக்கு அவசியமான டென்ரைட்டிக் செல்களை புற்றுநோயானது செயலற்றுப்போகும்படி மாற்றி விடும் என்பதால், பல சமயங்களில் இம்மியூனோதெரபியானது பலனளிக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கலுக்கான தீர்வுகளை உருவாக்க பல ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் முதல் முறையாக, சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித தோல் உயிரணுக்களை நேரடியாக டென்ரைட்டிக் செல்களாக மாற்றி அசத்தியுள்ளனர். இதன் மூலமாக, பல நன்மைகள் உண்டு.
முதலாவதாக, நோயாளியினுடைய தோல் செல்களில் இருந்து டென்ரைட்டிக் செல்கள் உருவாக்கப்படுவதால் நோயாளியின் உடல் அவற்றை ஏற்காமல் போக வாய்ப்பே இல்லை. இரண்டாவதாக, நோயாளியினுடைய தோல் உயிரணுக்களை டென்ரைட்டிக் செல்களாக மாற்ற வெறும் 9 நாட்கள் போதும் என்பது பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், இதுபோன்ற பெரும்பாலான சிகிச்சைகளுக்கான செல்களை சோதனைக்கூடங்களில் தயார் செய்ய மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். அதற்குள் நோயாளி பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உயிர்ச்சேதம் கூட ஏற்பட்டுவிடக்கூடும்.
மூன்றாவதாக, தோல் செல்களில் இருந்து உருவாக்கப்படும் டென்ரைட்டிக் செல்களை நோயாளியின் உடலுக்குள் செலுத்துவதற்கு முன்னர், நோயாளியின் உடலில் உள்ள குறிப்பிட்ட செல்களை தாக்கி அழிக்கும் வண்ணம் அவற்றை புரோகிராம் செய்ய முடியும் என்பது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும்.
மொத்தத்தில், இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான இம்மியூனோ தெரபி சிகிச்சைகள் உருவாக்கப்படலாம் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பிலிப்பே பெரைரா.
டைரெக்ட் புரோகிராமிங் (direct reprogramming) எனும் தொழில்நுட்பத்தின் மூலமாக, நோயாளியின் தோல் திசுவின் ஒரு பகுதியை எடுத்து, பின்னர் தோல் செல்களுக்குள் PU.1, IRF8 and BATF3 ஆகிய மூன்று புரதங்கள் செலுத்தப்படும். இந்த மூன்று புரதங்கள் மூலமாக தோல் செல்கள் டென்ரைட்டிக் செல்களாக மாற்றப்படும் அல்லது ரீபுரோகிராம் (reprogram) செய்யப்படும் என்பது.
இந்த ஆய்வு மூலமாக, இம்மியூனோதெரபிக்கு தேவையான லட்சக்கணக்கான டென்ரைட்டிக் செல்களை சோதனைக்கூடத்தில் வெறும் 9 நாட்களில் உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வு முறையின் மிகப்பெரிய பலம் என்கிறார் பெரைரா.
இந்த வருடத்தின் நோபல் பரிசை வென்றுள்ள இம்மியூனோதெரபி சிகிச்சையை இந்த தோல் செல் ரீபுரோகிராமிங் தொழில்நுட்பமானது மேலும் மேம்படுத்தும் என்பதும், ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும் தேவையான, ஒவ்வாமை ஆபத்தில்லாத மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் டென்ரைட்டிக் நோய் எதிர்ப்பு உயிரணு சிகிச்சையை விரைவில் நோயாளிகளுக்கு கொண்டு சேர்க்க லண்ட் பல்கலைக்கழகமும், பிலிப்பே பெரைரா குழுவினரும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை பார்க்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளின் பட்டியல்:
ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.
மழை காலத்தில் வழக்கமான டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதோடு காய்ச்சல், மார்பு சளி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும். இஞ்சியை சமையலிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் பூண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தம், தமனிகளின் செயல்பாடுகளை சீராக பராமரிக்கும் தன்மையும் பூண்டுவுக்கு உண்டு.
முட்டை கோஸ், கீரை போன்ற பச்சைக்காய்கறிகளில் வைட்டமின் சி, இ மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. பிராக்கோலி, பீன்ஸ், புடலங்காய், பட்டாணி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பப்பெற்றவை. அவைகளை தவறாமல் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தயிர், மோர், லசி போன்ற பால் பொருட்கள் எளிதில் ஜீரணமாக உதவி புரிபவை. அவை குடலுக்கு நலம் சேர்ப்பவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய் தொற்றுகள், வீக்கம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கும் தன்மை கொண்டவை. வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துபவை.
மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களும் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் கொண்டவை. ரோஸ்மேரி, துளசி, ஓமம் போன்ற மூலிகைகள் காய்ச்சல் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவை.
மூலிகை டீ பருகி வருவதும் நல்லது. அது நோய்கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவும்.
சளி முதல் புற்றுநோய் வரை அனைத்துவிதமான வியாதிகளிலும் இருந்து உடல் நலனை பாதுகாப்பதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் சிவப்பு குடமிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் நோய் எதிர்ப்பு நிறைந்துள்ளது.
வான்கோழி பிரியாணி எப்படி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். வான்கோழி வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5
மசாலாவிற்கு...
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த வான்கோழியை போட்டு அதனுடன், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப் (துருவியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 5
மசாலாவிற்கு...
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த வான்கோழியை போட்டு அதனுடன், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
சுவையான வான்கோழி வறுவல் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.
அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.
குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.
பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.
அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.
குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.
பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.
சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு ஒரு கட்டத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.
ஆகவே சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துங்கள். சரி, இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு, வெள்ளை மிளகு மற்றும் சூடத்தை ஒன்றாக சேர்த்து பொடி செய்து, அதில் சிறு துளி மண்ணெண்ணெய் சேர்த்து கலந்து, கால்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்தால், கால்களில் உள்ள முடியானது உதிர்ந்துவிடும்.
சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை ப்ரௌன் நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும். எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின், சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகவே சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துங்கள். சரி, இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு, வெள்ளை மிளகு மற்றும் சூடத்தை ஒன்றாக சேர்த்து பொடி செய்து, அதில் சிறு துளி மண்ணெண்ணெய் சேர்த்து கலந்து, கால்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்தால், கால்களில் உள்ள முடியானது உதிர்ந்துவிடும்.
சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை ப்ரௌன் நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும். எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின், சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம்.
மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் பத்து நாட்களுக்குள் மார்பகத்தை பரிசோதித்து கொள்ளலாம். மார்பில் கட்டிகள், தடித்த பகுதிகள், வீக்கங்கள் இருக்கிறதா என கூர்ந்து கவனித்தல் வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் முடிச்சுகள் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இரு மார்பகங்களின் அளவு வடிவ மாற்றங்களை கவனித்தல் வேண்டும்.
இவை அனைத்தும் பரிசோதித்த பின்னர் படுக்கையில் படுத்தபடி பரிசோதிப்பது அவசியம். ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு மறு கையை வைத்து எதிர் மார்பகத்தை ஒரு வட்ட சுழற்சிபோல் தடவி பார்க்க வேண்டும். இப்பரிசோதனையில் மார்பக காம்பு மற்றும் அக்குள் பகுதியையும் தடவி பார்த்தல் வேண்டும். மார்பக கட்டி அழுத்தமாகவும் ஓரங்கள் ஓழுங்கற்றும் வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தல் வேண்டும்.

மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல். மார்பின் தோல் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள மிகச்சிறிய குழிகள் போன்று காணப்படுதல். வலியுடனோ அல்லது வலியில்லாமலோ அக்குகளில் காணப்படும் வீங்கிய நீணநீர் முடிச்சுகள். குணமாகாத சிவந்த தோலோ அல்லது புண்னோ தென்படுதல்.
முலைகாம்பிலிருந்து இயல்புக்கு மாறான கசிவுகள் வெளிப்படுதல். ஆரம்ப நிலையில் வலியோ எரிச்சலோ இருக்காது. பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும். பரிசோதித்தல் மாமோகிராம் என்பது மார்பகத்தை சிறப்பு முறையில் கதிர்வீச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக் கூட எளிதில் கண்டறிய இயலும். இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்பகால கட்டத்திலே கண்டறிந்து குணமாக்க முடியும்.
40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம். 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் செய்தல் வேண்டும்.
50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம். மாமோகிராம் பரிசோதனை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்று கட்டி என்பது உறுதிசெய்யப்படும். மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
இவை அனைத்தும் பரிசோதித்த பின்னர் படுக்கையில் படுத்தபடி பரிசோதிப்பது அவசியம். ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு மறு கையை வைத்து எதிர் மார்பகத்தை ஒரு வட்ட சுழற்சிபோல் தடவி பார்க்க வேண்டும். இப்பரிசோதனையில் மார்பக காம்பு மற்றும் அக்குள் பகுதியையும் தடவி பார்த்தல் வேண்டும். மார்பக கட்டி அழுத்தமாகவும் ஓரங்கள் ஓழுங்கற்றும் வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தல் வேண்டும்.
மறையாத கட்டிகளையும் மாற்றமின்றி காணப்படும் கட்டிகளையும் நன்கு தடவி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும். சில கட்டிகள் திடீரென தோன்றி அளவில் பெரிதாக காணப்படும். தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருத்தல். கர்ப்பம் தரிக்காதவர்கள். 35 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம் தரித்தவர்கள். சிறு வயதிலே மாதவிலக்கு நின்று போனவர்கள். மாதவிலக்கு முற்று பெற்றவர்கள். இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.

மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல். மார்பின் தோல் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள மிகச்சிறிய குழிகள் போன்று காணப்படுதல். வலியுடனோ அல்லது வலியில்லாமலோ அக்குகளில் காணப்படும் வீங்கிய நீணநீர் முடிச்சுகள். குணமாகாத சிவந்த தோலோ அல்லது புண்னோ தென்படுதல்.
முலைகாம்பிலிருந்து இயல்புக்கு மாறான கசிவுகள் வெளிப்படுதல். ஆரம்ப நிலையில் வலியோ எரிச்சலோ இருக்காது. பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும். பரிசோதித்தல் மாமோகிராம் என்பது மார்பகத்தை சிறப்பு முறையில் கதிர்வீச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக் கூட எளிதில் கண்டறிய இயலும். இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்பகால கட்டத்திலே கண்டறிந்து குணமாக்க முடியும்.
40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம். 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் செய்தல் வேண்டும்.
50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம். மாமோகிராம் பரிசோதனை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்று கட்டி என்பது உறுதிசெய்யப்படும். மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
சத்து நிறைந்த ப்ரோக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. இன்று ப்ராக்கோலி பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரை செய்வதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
ப்ரோக்கோலியை நன்றா சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால்,
ப்ரோக்கோலி பெப்பர் பிரை ரெடி!!!
ப்ரோக்கோலி - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரை செய்வதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ப்ரோக்கோலியை நன்றா சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால்,
ப்ரோக்கோலி பெப்பர் பிரை ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் முத்திரை அல்லது யோகாசனத்தை செய்து நல்லது. இன்று அலர்ஜியை கட்டுப்படுத்தும் பிரம்மார முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :
இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.
தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.
இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.
பலன்கள் :
அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.
இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.
தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.
இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.
பலன்கள் :
அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.
பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
பெரும்பாலானவர்கள் இப்போது நினைவாற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். அலுவலக பணிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அதனால் தேவையற்ற மனஅழுத்தத்தி்ற்கும் உள்ளாகுவார்கள். நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால், மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.
பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். கடினமான உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலேபோதும். ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
‘‘மூளையின் செயல்பாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்போதுதான் அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சினைகள் உருவாகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம். அதற்காக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட போதுமானது. அது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை உயர்த்தும்’’ என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.
ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான். சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும்.
சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.
அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.
உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?
பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.
இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.
ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.
வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.
மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும்.
சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.
அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.
உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?
பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.
இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.
ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.
வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.
மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும்.
சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.
அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.
துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான அரிசி தட்டை ரெடி.
அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.
அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.
துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சூப்பரான அரிசி தட்டை ரெடி.
இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






