என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெரும்பாலான இளம் பெண்கள் இப்போது தவறான உணவுப் பழக்கத்தையும், தவறான நேரத்தில் உணவு உண்ணுவதையும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
    திருமணத்திற்கு தயாராகும் எல்லா பெண்களுக்குமே அழகு அவசியமானதாக இருக்கிறது. அழகு என்றதும் ‘மேக்அப்’ செய்து கொள்வது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். திருமண நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அழகை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் மணப் பெண்களின் நிஜமான அழகு அவர்களது ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது.

    மணப்பெண் உற்சாகம், உவகை, சுறுசுறுப்போடு வலம்வரவேண்டும் என்றால் ஆரோக்கியம் மிக அவசியம். அந்த அழகு நிறைந்த ஆரோக்கியத்தை பெறுவதற்கு திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்கள் ‘வெட்டிங் டயட்’ என்ற உணவுமுறையை பின்பற்றவேண்டும். வாய்ப்பிருந்தால், திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கிவிடும்போதிலிருந்து (அதாவது ஒரு வருடத்திற்கு முன்பிருந்து) இந்த வெட்டிங் டயட் உணவுப் பழக்கத்திற்கு பெண்கள் மாறிவிடுவது மிக நல்லது.

    பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் உடலை பற்றிய உண்மைகளை தாங்களே புரிந்துகொள்வதில்லை. உடலை புரிந்துகொள்வது என்பது உடல் எடை, உயரம், உடலில் இருக்கும் நோய்கள், பார்க்கும் வேலை- வேலை பார்க்கும் நேரம்- அதன் தன்மை, தூங்கும் நேரம், எடுத்துக்கொள்ளும் ஓய்வு, உங்களிடம் இருக்கும் உற்சாகம் அல்லது சோர்வு, நீங்கள் உண்ணும் உணவு, பருகும் பானங்கள்.. போன்ற பல விஷயங்களையும் உள்ளடக்கியது.

    இவைகளை எல்லாம் ஆராய்ந்து இதில் பெண்கள் தெளிவு பெற்றால்தான், ஒவ்வொரு பெண்ணும் அவரவர் உடலை பற்றி அறிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதை அறிந்துகொண்டால்தான் உங்களுக்கு பொருத்தமான உணவு எது? பொருந்தாத உணவு எது? என்பதை கண்டறிய முடியும். உங்கள் வாழ்க்கை முறையில் எது சரி; எதை மாற்றியமைக்கவேண்டும் என்ற முடிவுக்கும் வர முடியும்.

    பொதுவாக நல்ல உணவுப் பழக்கம் என்றாலே, காய்கறி மற்றும் பழ வகைகளை சாப்பிடுவதுதான் என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலருக்கு சில வகை காய்கறிகளும், சில வகை பழங்களும் பிடிக்காது. அதனை கண்டறியவேண்டும். குறிப்பாக திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், உடல் எடை அதிகரிக்கவும், அசிடிட்டி ஏற்படவும் காரணமான உணவுகளை கண்டறிந்து தவிர்த்திடவேண்டும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய் கறிகளும் மாம்பழம், பலா பழம் போன்றவைகளையும் மிக குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடவேண்டும்.

    பெரும்பாலான இளம் பெண்கள் இப்போது தவறான உணவுப் பழக்கத்தையும், தவறான நேரத்தில் உணவு உண்ணுவதையும் கடைப்பிடித்து வருகிறார்கள். திருமணத்திற்கு தயாராகும்போதே அவர்கள் முதல் வேலையாக சரியான உணவுப் பழக்கத்திற்கு திரும்பவேண்டும். அதற்கு அவர்கள் செய்யவேண்டிய முதல் காரியம், அனுபவம் வாய்ந்த ஊட்டச் சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவதுதான். அவர் உங்கள் உடல்நிலை, மனநிலை, தொழில்நிலை போன்ற அனைத்தையும் கருத்தில்கொண்டு உங்களுக்கான வெட்டிங் டயட்டை பரிந்துரைப்பார். திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அதனை பின்பற்றினால் அவர்களுக்கு ஆரோக்கியத்தோடு அழகும், புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

    திருமணம் நிச்சயம் செய்யப்படும் காலகட்டத்தில் பெற்றோரும், குடும்பத்தினரும் மணப்பெண் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள். அதிக அளவில் ருசியான உணவை சமைத்து வழங்குவதுதான் அதிக பாசத்தின் வெளிப்பாடு என்று தவறாக கருதிக்கொண்டு, நிறைய உணவை சாப்பிடும்படி அவர்களிடம் திணிக்கிறார்கள். அதோடு விருந்து, உபசரணை என்ற பெயர்களில் அவர்களது இயல்பான உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றிவிடுகிறார்கள். நண்பர்களும், தோழிகளும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் ‘பார்ட்டி’வைத்து புதியவகை உணவுகளை அதிக அளவில் உண்ண வற்புறுத்துகிறார்கள்.

    அது மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் மணப்பெண்களை ஷாப்பிங் மற்றும் திருமண வேலைகள் சூழ்ந்துகொள்ளும். அந்த வேலைப்பளுவால் அவர்களது உணவு நேரம் மாறிவிடுகிறது. அது நல்லதல்ல. திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் உணவு உண்ணவேண்டிய நேரத்திலும், உணவின் அளவிலும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இஷ்டத்துக்கு வெளி உணவுகளை சாப்பிடாமல், வீட்டு உணவினை மட்டுமே சாப்பிட முயற்சிக்கவேண்டும்.

    சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகிவிடுவதை தவிர்க்க, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகிவிடுங்கள். அதுபோல் தினமும் விழித்ததும் வெறும் வயிற்றில், மிதமாக சுடும் நீரை இரண்டு கப் அளவுக்கு பருகும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது எட்டு கப் நீரை பருகிவிடவும் வேண்டும். பழச்சாறுவை பருகுவதற்கு பதில், அவ்வப்போது பழங்களை நன்றாக மென்று சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

    பசியும் கட்டுக்குள் இருக்கும். உணவின் அளவைப் பொறுத்தவரையில் தினமும் மூன்று நேரம் உண்ணும் உணவை பிரித்து ஆறு நேரமாக சாப்பிட முன்வரவேண்டும். சாதம், இறைச்சி வகைகளின் அளவை குறைத்துவிடலாம். பழங்கள், காய்கறி, கீரை, மீன், முட்டையின்வெள்ளைக்கரு போன்றவை உடலுக்கு ஏற்றது. மணப்பெண்கள் கண் மற்றும் சருமப்பொலிவை விரும்புவார்கள். அதற்கு ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கிய கேரட், தக்காளி மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

    லவ் மேரேஜ் ன்றாலும் அரேஞ்டு மேரேஜ் என்றாலும் மணப்பெண்களுக்கு முகூர்த்தம் முடியும் வரை ஏதாவது ஒருவிதத்தில் மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். அதிக மனஅழுத்தம் மலச்சிக்கலை தோற்றுவிக்கும். அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு, மலச்சிக்கல் ஏற்படாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும். அதுபோல் மணப் பெண்கள் சரியான தூக்கமின்றியும் அவதிப்படுவார்கள். அத்தகைய நெருக்கடிகளை போக்க முளைவிட்ட தானியங்கள், வெண்டைக்காய், பாதாம் போன்ற கொட்டை வகைகள், பேரீச்சம் பழம், மாதுளை, பூண்டு, கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    பெண்களில் பலர் வயதுக்கு ஏற்ற சீரான உடல் அமைப்பையும், உடல் எடையையும் கொண்டிருப்பதில்லை. பெரும்பாலானவர்கள் சற்று குண்டாகவோ அல்லது மிக ஒல்லியாகவோ காட்சியளிக்கிறார்கள். குண்டாக இருப்பவர்கள், உணவுப் பழக்கத்தால் மேலும் எடை அதிகரித்துவிடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு தக்கவாறு தங்கள் ஊட்டச்சத்தியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டு உணவுமுறையை வகுத்துக்கொள்ளவேண்டும். உணவை பெருமளவு குறைத்துவிட்டால் உடல் எடை குறையும் என்று நினைப்பது தவறு. உணவின் அளவை அதிரடியாக குறைத்தாலும் உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்படும். வெட்டிங் டயட் என்ற பெயரில் பொருந்தாத உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் தலைசுற்றுதல், தலைவலி, மூட்டு வலி, முடி உதிர்தல், சோர்வு போன்ற பல்வேறு தொந்தரவுகள் தோன்றும்.

    ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு தயாராகும் போது குடும்பத்தினரின் பெரும் நச்சரிப்பிற்கு உள்ளாகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சிறுமி போல் இருக்கிறாள் என்றும், நோய்வாய்ப்பட்டவள் போன்று காணப்படுகிறாள் என்றும், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுவாள் என்றும் சொல்லி, நிறைய சாப்பிட கட்டாயப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட அவசியம் எதுவும் தேவையில்லை. ஒல்லியாக இருப்பது குறையல்ல. அவர்கள் சமச்சீரான சத்துணவுகளை போதுமான அளவு உட்கொண்டால் போதுமானது. ஒல்லியான பெண்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் திருமணத்திற்கு பின்பு சற்று பூசிமொழுகினாற் போன்ற உடல்வாகுக்கு மாறிவிடுகிறார்கள். தலைப்பிரசவத்திற்கு பிறகு, சராசரி பெண்களைப் போல் அவர்களும் உடல் எடையை குறைக்கவேண்டிய நிலையை அடைந்துவிடுகிறார்கள். அதனால் ஒல்லியாக இருப்பவர்களும், சமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவர்களை அப்படியே தொடர அனுமதியுங்கள்.

    உணவில் பெண்களுக்கு எதிரியாக இருப்பவை இனிப்பு, உப்பு, எண்ணெய் போன்றவை. ஒவ்வொருமுறை நீங்கள் உணவின் முன்னால் உட்காரும் போதும் இந்த மூன்றும் எந்த அளவுக்கு உங்கள் உடலுக்குள் செல்கிறது என்பதை கவனித்து, முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். எண்ணெய்யில் வறுத்த, இனிப்பும்- உப்பும் அதிகம் சேர்த்த உணவுகளை நீங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியாது. இரவில் அதிகம் தாமதிக்காமல் அரை வயிற்றுக்கு சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறி, சப்பாத்திபோன்றவை போதுமானது. திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும்.

    மணப்பெண்கள் அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆரோக்கியம், முறையான உணவு மூலம்தான் கிடைக்கும். ஆரோக்கியமாக இருந்தால்தான் மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.

    கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல்

    ஆலோசகர்) சென்னை.
    பட்டாணி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
    தேவையான பொருட்கள்

    பட்டாணி - கால் கிலோ
    பச்சை பயிறு - கால் கிலோ
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - அரை கட்டு
    வெங்காயம் - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பட்டாணி பச்சை பயிறு அடை ரெடி.

    நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது.
    உடல் உபாதைகளுக்கு டாக்டர் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பெரிதாக இருந்தால் அதனை இரண்டாக உடைத்து விழுங்குவதை பார்த்திருப்போம்.

    இது மிகவும் தவறான செயலாகும். மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஏனெனில் மாத்திரைகளை இரண்டாக உடைப்பதனால், சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடக் கூடும்.

    மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது. இதனை உட்கொள்வதனால் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ரத்த அழுத்தம், கை, கால் நடுக்கம் உள்ளவர்கள், ஆர்த்ரைட்டீஸ், இதயநோயாளிகள் ஆகியோர் மாத்திரைகளை உட்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும்.

    நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும்.

    மாத்திரைகளை 2-ஆக உடைத்து உட்கொண்டால், வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நமது உள்ளுறுப்புகளில் செல்லும். இதனால் நமது உடலில் வேறு சில உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.

    சில மாத்திரைகளில் ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை 2-ஆக உடைக்கிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைப்பதனாலோ மாத்திரையின் முக்கியத்தன்மை இழந்து சிதைந்துவிடும். இதையெல்லாம் நினைவில் கொள்வது நல்லது.
    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.
    செட்டிநாடு என்பது தனக்கென பல்வேறு வகையான தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது. பல நூறாண்டுகளுக்கு முன்னரே செட்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்று வந்தார்கள் என்பதை வரலாற்று நூல்கள் மூலம் அறியலாம். கடல் கடந்து சென்று வந்த அவர்கள் பல கலாச்சாரங்களை நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வீடுகள் கட்டுமானம், நகைகள் வடிவமைப்பு போன்றவற்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இன்று வரையிலும் செட்டிநாட்டு நகைகள் உறுதி வாய்ந்தவையாகவும், பாரம்பரியம் மிக்கவையாகவும் கருதப்பட்டு அவர்களது திருமண நிகழ்ச்சிகளில் கட்டாயம் அணியப்படுகின்றன. அதில் கழுத்திரு சோடிப்பு திருமாங்கல்யம், கௌரி சங்கம், வைர மாங்கல்யசரம், கெம்ப்பு செட்டுகள், அட்டிகைகள், காப்புகள், காதணிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    செட்டிநாட்டு நகைகளை மத, சடங்கு மற்றும் அலங்கார நகைகளாக வகைப்படுத்துகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விலையுயர்ந்த வைரம், முத்து ரூபி போன்ற கற்களைக் கொண்டு வந்து தங்களுடைய வீடுகளுக்கே பொற்கொல்லர்களை வரவழைத்து உறுதியான, அழகான மற்றும் பாரம்பரியமான நகைகளை வடிவமைத்து அணிந்து கொண்டவர்கள் செட்டிநாட்டு மக்கள் என்றால் அது மிகையாகது.

    அழகிய கெம்ப்புக் கற்களைக் கொண்டு செய்யப்படும் நகைகளை கைகாளலேயே டிசைன்களை வரைந்து வடிவமைத்து செய்வது தனிச்சிறப்பான விஷயமாகக் கருதப்படுகின்றது. செட்டிநாட்டு நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டு பின்புறம் மூடப்பட்டு வருபவை. உறுதியானவையாகவும், பல தலைமுறைகள் தாண்டி உழைப்பவையாகவும் இருக்கின்றன. கெம்ப்பு அட்டிகைகள், வளையல்கள், கம்மல்கள் மட்டுமல்லாது ஒட்டியாணம், வங்கி போன்றவையும் தனித்தனியாகவும், செட்டாகவும் கிடைக்கின்றன. கெம்புக் கற்களினால் செய்யப்படும் நகைகளை அனு அனுவாக ரசித்து அணிபவர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

    ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.

    வைர நகைகளை இன்றளவும் செட்டிநாட்டிற்குச் சென்று வாங்கி வருகிறார்கள் என்றால் அதன் தரமும், விலையும் அந்த நகைகளின் கட்டமைப்புமே அதற்கு காரணம் என்று சொல்லலாம். நகை செய்யக்கூடிய தங்கக் கட்டிகளை குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது அதற்கென இருக்கும் கல்லின் மேல் வைத்து அடித்து தங்கத்தை இறுக்குகிறார்கள். அதன் பின்னர் அந்த தங்கக் கட்டிகளின் மேல் டிசைன்கள் வரையப்பட்டு, துவாரங்களைப் போட்டு வைரக் கற்களானது பதிக்கப்படுகின்றது. இவ்வாறு உறுதியாக செய்யப்படும் வைரநகைகள் எத்தனை ஆண்களானாலும் ஜொலி ஜொலிப்பு குறையாமல் ஒளிர்கின்றன. ஏழு கல் வைரத்தோடு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

    கௌரிசங்கம்:- செட்டிநாட்டிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வழி வழியாக அணியக்கூடிய நகை என்று கூறப்படும் இந்த நகையானது பெரிய ஹாரம் போன்று மார்பை அலங்கரிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வயது எட்டும் ஆண்கள் குருமார்களிடம் மந்திர உபதேசம் பெற்றுக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். உருத்திராட்ச மாலையான இதில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள். பெரிய பெண்டன்ட்டுகள் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகின்றது. இந்த பெண்டன்ட்டில் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதாரராக அமர்ந்திருக்கும் ரிசபருக்கு வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

    கழுத்திரு:- திருமணத்தன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யமே கழந்திருவாகும். நகரத்தார தாலி என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த நகையானது இன்றளவும் இருபது முதல் இருபத்தைந்து சவரன் தங்கத்தால் செய்யப்படுவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

    மங்களச்சரம்:- தாலி மட்டுமல்லாது தாலிச் சங்கிலி முழுவதுமே வைரக்கற்களால் பதிக்கப்பட்டு செய்யப்படும் மங்களமான கழத்தாலியாகும்.

    கண்டசரம், பூச்சரம்:- கழுத்தை ஒட்டி அணியக்கூடிய அட்டிகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டசரமாகும். பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரக்கற்களால் பதித்து செய்யப்படும் கழுத்தணியே பூச்சரம் என்று அழைக்கப்படுகின்றது.

    காப்புகள்:- வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட கை காப்பானது வைரக்காப்பென்றும், தங்கத்தினால் நெளி நெளியாக வளைந்து செய்யப்பட்ட காப்பு தங்கக்காப்பென்றும், நீலக்காப்பு, சிவப்பு கல்லு காப்பு, பச்சைக்கல்லுக்காப்பு, முத்துக்காப்பு, கருகுமணி போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பாசி பதிக்கப்பட்டு வரும் பாசிக்காப்பு என காப்புகளின் பலவகைக் காப்புகளை அந்தக் காலத்திலேயே அணிந்திருக்கிறார்கள்.

    அருப்புதடை:- வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு யானை முடி பதிக்கப்பட்டு செய்யப்படும் விரலில் அணியும் மோதிரம்.

    இவை மட்டுமல்லாமல் ஒற்றை வடசங்கிலி இரட்டை வடசங்கிலி, மாங்காய் மாலை, தலையில் குத்தும் கொண்டை ஊசி, சேலையில் குத்தக் கூடிய ஊக்குகள் என அனைத்திலும் தங்கமானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

    இன்று பிரேசிலெட் என்று அழைக்கப்படும் மணிக்கட்டில் அணியப்படும் நகையானது பல நூற்றாண்களுக்கு முன்னரே குருமாத்து என்ற பெயரில் கைக்காப்பாக ெசட்டிநாட்டு மக்களால் அணியப்பட்டிருக்கின்றது.
    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
    குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.

    குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது. உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறிபுரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

    தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.

    வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.

    உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.
    உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.
    முதல் குழந்தையை பெற்றேடுக்க போகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு எனும் சடங்கை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

    கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

    கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளும் இத்தகைய உடல் மாற்றங்களை கண்டு குழப்பம், பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநல பிரச்சனைகளும் ஏற்படும். இந்த நேரத்தில்  பெரும்பாலான கர்ப்பிணிகள் வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் உணர்வு காரணமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட்டு அவர்களை சிரமப்படுத்தும்.

    வளைகாப்பு வைபவம்

    கருவுற்ற ஏழாவது மாதத்தில் உறவினர்களும், நண்பர்களும் பெண்ணின் புகுந்த வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள். கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கணணாடி வளையல்களை அணிவித்து ஆரத்தி எடுத்து அட்சதை தூவுவார்கள்.

    கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும். சுற்றமும்-நட்பும் சூழ அந்த பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

    தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும் பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

    கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனை ஏழாவது மாதத்திற்குள் பெரும்பாலும் நின்று விடும். வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை, போன்ற சோறு வகைகளையும், இனிப்பு காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசை தீர சாப்பிடுவார்கள்.

    கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும். அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

    மேலும் ஏழாம் மாதத்தற்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதன் மூலம் கணவன் தன்னை பார்க்க வரும் நாளில் கூட அப்பெண் பாதுகாப்பாக நடந்து கொள்வதற்கு அந்த வளையல்களே காப்பாக அமையும்.

    ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் நம்மையும் நம் தாய் இப்படித்தான் தாங்கியிருப்பாள்? என்று நினைத்து தாயின் மீது அதிக பாசம் கொள்வார்கள். தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவே தான் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.
    உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் உண்மை.
    உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் உண்மை.

    மனிதன், சமையல் செய்து சாப்பிட தொடங்கிய நாளில் இருந்தே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்றே சொல்லலாம். உணவு தயாரிப்பதை 6 வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும். பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து 'சாலட்' முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்கும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.

    உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் உண்மை. இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

    பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பிறகு அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்.

    செரிமானத்தில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால், அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே. உப்பு, காரம், வாசனை ஆகியவற்றுக்காக, பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
    எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
    வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.

    தேவையான பொருட்கள்
    :

    வெள்ளரி - 1
    எலுமிச்சை பழம் - 2
    தண்ணீர் - 4 டம்ளர்
    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

    செய்முறை:

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.

    கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும்.

    புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும்.

    சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம்.

    நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.
    இந்தியாவில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    டெபிட் கார்டுக்கும், கிரெடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:-

    வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

    உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

    எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.
    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
    பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

    சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள். 19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது. இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும். கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன. டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.

    இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.

    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும். எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

    இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

    ‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.
    உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது.
    உலகம் உன்னை மதிக்க வேண்டும் என்றால் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். உழைப்பவனையே உச்சியில் வைத்து ஆடும் இந்த உலகம். தொடர்ந்து, கடினமாக உழைத்தால் குறிக்கோளை அடைய முடியும். உழைப்பு பிழைப்புக்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். இடையில் ஏற்படும் தடைகள் உன்னை கண்ணீர் வடிக்க செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்க தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

    உழைத்துத்தான் வழியை தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்று பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும். உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள்.

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காக்ஸ்டன், அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்பகாலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர் உழைப்பு. ரெயில் எந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பினால் மட்டுமே.
    ×