என் மலர்
ஆரோக்கியம்
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த சிவப்பு அவலை வைத்து சத்தான சுவையான டிபனை பத்து நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பீன்ஸ் - 5
கேரட் - 1
பட்டாணி - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்தவுடன் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் அவலை போட்டு வேக விடவும்.
அவல் நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான அவல் வெஜிடபிள் உப்புமா ரெடி.
சிவப்பு அவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பீன்ஸ் - 5
கேரட் - 1
பட்டாணி - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்தவுடன் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் அவலை போட்டு வேக விடவும்.
அவல் நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான அவல் வெஜிடபிள் உப்புமா ரெடி.
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம்.
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம். குறிப்பாக மருத்துவ துறையில் நிறைய துணை படிப்புகள் இருக்கின்றன. மருத்துவமனைகளில் பணியாற்ற பொது மருத்துவம் மட்டுமே படிக்கவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மிக குறைந்த செலவிலான துணைப்படிப்புகளும், மருத்துவமனையில் பணியாற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக முதியோர் நலன் பாதுகாப்பு, ஆப்டோமெட்ரிஸ்ட், செவிலி உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர்கள் போன்ற வேலைகளுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுபற்றி விளக்கமாக விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
முதியோர் நலன் பாதுகாப்பு
குழந்தைகள் நல மருத்துவர்களை ‘பிடியாட்ரிஷன்’ என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ‘ஜிடியாட்ரிஷன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாளை ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுத்தரும் டிப்ளமோ படிப்பு இது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீடியாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆப்டோமெட்ரிஸ்ட்
கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் முடியும். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.
செவிலி உதவியாளர்
மருத்துவமனைகளில் செவிலி யருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. நோயாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள். இந்த ஓராண்டு படிப்பை முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.
பிசியோதெரபிஸ்ட்
முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பேச்சு பயிற்சியாளர்கள்
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
முதியோர் நலன் பாதுகாப்பு
குழந்தைகள் நல மருத்துவர்களை ‘பிடியாட்ரிஷன்’ என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ‘ஜிடியாட்ரிஷன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாளை ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுத்தரும் டிப்ளமோ படிப்பு இது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீடியாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆப்டோமெட்ரிஸ்ட்
கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் முடியும். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.
செவிலி உதவியாளர்
மருத்துவமனைகளில் செவிலி யருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. நோயாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள். இந்த ஓராண்டு படிப்பை முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.
பிசியோதெரபிஸ்ட்
முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பேச்சு பயிற்சியாளர்கள்
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது.
இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் பாரம்பரியமாக ஆண்கள் அணியும் ஆடைகளில் குர்த்தாக்களும் இடம் பெற்றுள்ளது என்பதை நாம் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் உணரமுடியும். வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பருவங்களில் காட்டன் குர்த்தாக்களும், பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு அணிய பட்டு மற்றும் சில்க் காட்டன் போன்ற துணிகளால் வடிவமைக்கப்பட்ட குர்த்தாக்களும் அணிவதை விரும்புகிறார்கள்.
குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது. இவை பட்டு வேஷ்டிகளுடன் அணியும் பொழுது பாரம்பரிய நவீனத் தோற்றத்தைத் தருகின்றது.
ஷார்ட் குர்த்தாக்களானது ஆண்கள் அன்றாடம் அணிந்து கொள்ளவும், முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் ஆடையாகி விட்டது. குர்த்தாக்களின் பல வகையான வெட்டுகள் (கட்ஸ்), கை வடிவமைப்பு, கழுத்து வடிவமைப்பு, வண்ணங்கள், மாதிரிகள், அலங்கார வேலைப்பாடுகள் இவற்றை நம்முடைய விருப்பத்திற்கேற்பவும், அணிந்து கொள்ள வசதியாக இருப்பவற்றையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அணிய பாரம்பரிய குர்த்தா மற்றும் பைஜாமாவானது மிகவும் ஏற்ற ஆடையாக இருக்கும். பிரைட்டான லினென் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் காலர் வைத்த கழுத்தில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு நூலில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வருபவை வெள்ளை பைஜாமா மற்றும் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட காலணிகளுடன் அணிய ஏற்றவை. சீனக்கழுத்து (மாண்டரின் நெக்) வடிவமைப்பில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட பிரகாசமான மஞ்சள் நிற முழுக்கை குர்த்தாக்களுடன் க்ரீம் நிறப் பைஜாமாவை சிங்கிள் டோ செருப்புகளுடன் அணியும்பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
தென்னிந்தியத் திருமணங்களில் ஷார்ட் குர்த்தாக்களை ஆண்கள் பிரதானமான உடையாக அணிகிறார்கள். பளபளப்பான ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, க்ரீம் போன்ற வண்ணங்களில் வரும் ஷார்ட் குர்த்தாக்களை வேஷ்டிகளுடன் அணிகிறார்கள். ஒரு கையில் பிரேசிலெட் மற்றொரு கையில் மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச் மற்றும் கழுத்தில் செயினுடன் இந்த வேஷ்டி குர்த்தாவானது அணியப்படும்பொழுது அவை ஒரு மிடுக்கான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன.
கல்லூரி நாள் விழா மற்றும் அலுவலக விழாக்களுக்கு அணிய கட்டங்கள் மற்றும் பிரிண்ட்டுகள் செய்யப்பட்ட குர்த்தாக்களானது மிகவும் சரியான தேர்வாகவும் ஒரு கூலான தோற்றத்தை தருபவையாகவும் இருக்கும். லெதர் சாண்டல்கள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுகளுடன் அணியும் பொழுது ஆணழகன் பட்டத்திற்கு ஏற்றவராக இருப்பீர்கள்.
குட்டை கைகள், மாண்டரின் கழுத்துடன் வரும் பச்சை நிற ஷார்ட் குர்த்தாக்களை கருப்பு நிற க்ராப் பேன்ட் மற்றும் போட் ஷூக்களுடன் அணியும் பொழுது ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இவை இருக்கும். அதேபோல் வளைந்த கழுத்துகளுடன் வரும் பிரண்டட் குர்த்தாக்களுக்கு சாண்டல் மற்றும் குளிர்கண்ணாடிகள் அணியும் பொழுது அவை அதிகமான ஸ்டைலான தோற்றத்தை தரும்.
இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களால் மட்டுமே குர்த்தாக்கள் அணியப்பட்டு வந்தது. அதேபோல், 1960 மற்றும் 1970களில் தொளதொள குர்த்தாக்களை அன்றைய இளைஞர்கள் அணிவதை பெருமையாக நினைத்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வகையான துணிகளில் தைக்கப்பட்ட குர்த்தாக்களை முறையான (ஃபார்மல்) மற்றும் முறைசாரா (இன்ஃபார்மல்) நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது, தினந்தோறும் அணிந்து கொள்வது என வகைப்படுத்தி ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள்.
அதுவும் அப்பழுக்கற்ற தரமான மற்றும் வரம்பற்ற பாணிகளில் ஆண்கள் அணிவதற்கேற்ற பல்வேறு அம்சங்களுடன் கலக்கலாக குர்த்தாக்கள் வந்திருக்கின்றன. நீளம், வெட்டு, அலங்காரம், கழுத்து வடிவமைப்பு மற்றும் பல்வேறு மாதிரிகளில் வந்திருக்கும் குர்த்தாக்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வாங்க இணையதளங்களில் தங்கள் விற்பனையை கடைகள் துவங்கியுள்ளன.
தங்கநிற குர்த்தாக்கள், மணி வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள், சிக்கன்காரி, காந்த்தா மற்றும் சீக்வின்ஸ் போன்ற பல்வேறு வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் அணிய ஏற்றவையாகும்.
திருமண வரவேற்புகளுக்கு அணிய கம்பீரமான டிசைனர் குர்த்தா செட்டுகள் ஏற்றவையாக இருக்கும். கருப்பு சுரிதாருடன் ஒரு அழகான ஊதா மற்றும் கருப்பு செல்ஃப் டிசைன் செய்யப்பட்ட மாண்டரின் காலருடன் வரும் குர்த்தாக்களுக்கு ஸ்லிப் ஆன் ஷுக்கள் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் அணியும் பொழுது அபாரமாக இருக்கின்றது என்று பாராட்டத் தோன்றும்.
இப்பொழுது பிரபலமாகி வருபவை பதானி குர்த்தாக்களாகும். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ்களுடன் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் பதானி குர்த்தாக்களை நேரு ஜாக்கெட்டுகளுடன் அணிந்து மிகவும் க்ளாசிக் தோற்றத்தைத் தருவதாக இருக்கும். இவை சங்கீத் நிகழ்ச்சிகளுக்கு அணிய சிறந்த ஆடைகளாகும்.
குஜராத்தி ஸ்டைல் குர்த்தாக்கள், பிளையிட் குர்த்தா மஃப்ளர் ஸ்டைல் குர்த்தா, பட்டன்டு ஸ்லீவ் குர்த்தா, கௌல் ட்ரேப்டு குர்த்தா, சைடு ஓபன் குர்த்தா, பாரம்பரிய ரா சில்க் குர்த்தா, ப்ரோகேட் குர்த்தா, எம்பிராய்டரி நெக் குர்த்தா, ஸ்ட்ரெயிட் குர்த்தா, காட்டன் குர்த்தா, சைட் பட்டன்களுடன் வரும் ஷேர்வானி குர்த்தா, லினென் ஷார்ட் குர்த்தா, பாகிஸ்தானி குர்த்தா, மாண்டரின் காலர்களுடன் வரும் லாங் குர்த்தா, பிரிண்டட் குர்த்தா, எம்பிராய்டர்டு ஜோத்புரி குர்த்தா என்று குர்த்தாக்களின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது. இவை பட்டு வேஷ்டிகளுடன் அணியும் பொழுது பாரம்பரிய நவீனத் தோற்றத்தைத் தருகின்றது.
ஷார்ட் குர்த்தாக்களானது ஆண்கள் அன்றாடம் அணிந்து கொள்ளவும், முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் ஆடையாகி விட்டது. குர்த்தாக்களின் பல வகையான வெட்டுகள் (கட்ஸ்), கை வடிவமைப்பு, கழுத்து வடிவமைப்பு, வண்ணங்கள், மாதிரிகள், அலங்கார வேலைப்பாடுகள் இவற்றை நம்முடைய விருப்பத்திற்கேற்பவும், அணிந்து கொள்ள வசதியாக இருப்பவற்றையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அணிய பாரம்பரிய குர்த்தா மற்றும் பைஜாமாவானது மிகவும் ஏற்ற ஆடையாக இருக்கும். பிரைட்டான லினென் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் காலர் வைத்த கழுத்தில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு நூலில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வருபவை வெள்ளை பைஜாமா மற்றும் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட காலணிகளுடன் அணிய ஏற்றவை. சீனக்கழுத்து (மாண்டரின் நெக்) வடிவமைப்பில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட பிரகாசமான மஞ்சள் நிற முழுக்கை குர்த்தாக்களுடன் க்ரீம் நிறப் பைஜாமாவை சிங்கிள் டோ செருப்புகளுடன் அணியும்பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
தென்னிந்தியத் திருமணங்களில் ஷார்ட் குர்த்தாக்களை ஆண்கள் பிரதானமான உடையாக அணிகிறார்கள். பளபளப்பான ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, க்ரீம் போன்ற வண்ணங்களில் வரும் ஷார்ட் குர்த்தாக்களை வேஷ்டிகளுடன் அணிகிறார்கள். ஒரு கையில் பிரேசிலெட் மற்றொரு கையில் மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச் மற்றும் கழுத்தில் செயினுடன் இந்த வேஷ்டி குர்த்தாவானது அணியப்படும்பொழுது அவை ஒரு மிடுக்கான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன.
கல்லூரி நாள் விழா மற்றும் அலுவலக விழாக்களுக்கு அணிய கட்டங்கள் மற்றும் பிரிண்ட்டுகள் செய்யப்பட்ட குர்த்தாக்களானது மிகவும் சரியான தேர்வாகவும் ஒரு கூலான தோற்றத்தை தருபவையாகவும் இருக்கும். லெதர் சாண்டல்கள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுகளுடன் அணியும் பொழுது ஆணழகன் பட்டத்திற்கு ஏற்றவராக இருப்பீர்கள்.
குட்டை கைகள், மாண்டரின் கழுத்துடன் வரும் பச்சை நிற ஷார்ட் குர்த்தாக்களை கருப்பு நிற க்ராப் பேன்ட் மற்றும் போட் ஷூக்களுடன் அணியும் பொழுது ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இவை இருக்கும். அதேபோல் வளைந்த கழுத்துகளுடன் வரும் பிரண்டட் குர்த்தாக்களுக்கு சாண்டல் மற்றும் குளிர்கண்ணாடிகள் அணியும் பொழுது அவை அதிகமான ஸ்டைலான தோற்றத்தை தரும்.
இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களால் மட்டுமே குர்த்தாக்கள் அணியப்பட்டு வந்தது. அதேபோல், 1960 மற்றும் 1970களில் தொளதொள குர்த்தாக்களை அன்றைய இளைஞர்கள் அணிவதை பெருமையாக நினைத்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வகையான துணிகளில் தைக்கப்பட்ட குர்த்தாக்களை முறையான (ஃபார்மல்) மற்றும் முறைசாரா (இன்ஃபார்மல்) நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது, தினந்தோறும் அணிந்து கொள்வது என வகைப்படுத்தி ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள்.
அதுவும் அப்பழுக்கற்ற தரமான மற்றும் வரம்பற்ற பாணிகளில் ஆண்கள் அணிவதற்கேற்ற பல்வேறு அம்சங்களுடன் கலக்கலாக குர்த்தாக்கள் வந்திருக்கின்றன. நீளம், வெட்டு, அலங்காரம், கழுத்து வடிவமைப்பு மற்றும் பல்வேறு மாதிரிகளில் வந்திருக்கும் குர்த்தாக்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வாங்க இணையதளங்களில் தங்கள் விற்பனையை கடைகள் துவங்கியுள்ளன.
தங்கநிற குர்த்தாக்கள், மணி வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள், சிக்கன்காரி, காந்த்தா மற்றும் சீக்வின்ஸ் போன்ற பல்வேறு வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் அணிய ஏற்றவையாகும்.
திருமண வரவேற்புகளுக்கு அணிய கம்பீரமான டிசைனர் குர்த்தா செட்டுகள் ஏற்றவையாக இருக்கும். கருப்பு சுரிதாருடன் ஒரு அழகான ஊதா மற்றும் கருப்பு செல்ஃப் டிசைன் செய்யப்பட்ட மாண்டரின் காலருடன் வரும் குர்த்தாக்களுக்கு ஸ்லிப் ஆன் ஷுக்கள் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் அணியும் பொழுது அபாரமாக இருக்கின்றது என்று பாராட்டத் தோன்றும்.
இப்பொழுது பிரபலமாகி வருபவை பதானி குர்த்தாக்களாகும். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ்களுடன் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் பதானி குர்த்தாக்களை நேரு ஜாக்கெட்டுகளுடன் அணிந்து மிகவும் க்ளாசிக் தோற்றத்தைத் தருவதாக இருக்கும். இவை சங்கீத் நிகழ்ச்சிகளுக்கு அணிய சிறந்த ஆடைகளாகும்.
குஜராத்தி ஸ்டைல் குர்த்தாக்கள், பிளையிட் குர்த்தா மஃப்ளர் ஸ்டைல் குர்த்தா, பட்டன்டு ஸ்லீவ் குர்த்தா, கௌல் ட்ரேப்டு குர்த்தா, சைடு ஓபன் குர்த்தா, பாரம்பரிய ரா சில்க் குர்த்தா, ப்ரோகேட் குர்த்தா, எம்பிராய்டரி நெக் குர்த்தா, ஸ்ட்ரெயிட் குர்த்தா, காட்டன் குர்த்தா, சைட் பட்டன்களுடன் வரும் ஷேர்வானி குர்த்தா, லினென் ஷார்ட் குர்த்தா, பாகிஸ்தானி குர்த்தா, மாண்டரின் காலர்களுடன் வரும் லாங் குர்த்தா, பிரிண்டட் குர்த்தா, எம்பிராய்டர்டு ஜோத்புரி குர்த்தா என்று குர்த்தாக்களின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள், கிருமி தொற்று, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பல விதமான விஷ தொற்று மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு துளசி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது.
உலகத்தின் பல இடங்களில் கிடைக்கும் மூலிகை துளசி. முக்கியமாக இந்தியா, இத்தாலி, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் துளசி செடி அதிகம் காணப்படுகிறது. இதன் பிறப்பிடம் இந்தியாவாகும்.
பல வகையான ஆயுர்வேத குறிப்புகளில் துளசியில் 3 வகைகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ராம துளசி, ஷயமா துளசி மற்றும் வன துளசி ஆகும். இந்த ராமதுளசி என்பது பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். சியாமா துளசி என்பது லேசான நீல நிறத்தில் இருக்கும். மற்றொன்றை காட்டுத்துளசி என்று கூறுவார்கள். இந்த 3 துளசிகளிலும் பல்வேறு வகையான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பச்சைத் துளசி பல இடங்களிலும் பயன்படுகிறது. பல வீடுகளிலும் கிடைக்கிறது. இந்த துளசியில் இருக்கும் நறுமணமானது மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல சுவையும் உடையது.
துளசியின் சாறு என்பது பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள், கிருமி தொற்று, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பலவிதமான விஷ தொற்று மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு துளசி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாக ஆயுர்வேத முறைகளிலும் செய்யப்படுகிறது. இதை மூலிகை தேநீராகவும் கொடுக்கலாம். இது பொடி வடிவிலும் கிடைக்கிறது. அல்லது பச்சை இலையையும் சாப்பிடலாம், நெய் கலந்தும் சாப்பிடலாம். துளசி இலையை தேன், இஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். துளசி இலையை தண்ணீரில் கொதிக்கவிட்டு சாப்பிடும்போது தொண்டை புகைச்சல் போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
துளசி உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் 12 இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். துளசி என்பது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. அல்சர் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்கிறது.
துளசியின் விதையை பாலில் கலந்து குடிக்கும்போது நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலில் உள்ள அனைத்து விதமான கிருமிகளையும் அழித்துவிடுகிறது. துளசி சிறுநீரகத்தை வலுப்படுத்துகிறது. துளசி இலை மற்றும் தேனை தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். துளசியை சந்தனத்துடன் சேர்த்து அதை அரைத்து அதை நெற்றியில் தடவி வந்தால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது.
பல வகையான ஆயுர்வேத குறிப்புகளில் துளசியில் 3 வகைகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ராம துளசி, ஷயமா துளசி மற்றும் வன துளசி ஆகும். இந்த ராமதுளசி என்பது பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். சியாமா துளசி என்பது லேசான நீல நிறத்தில் இருக்கும். மற்றொன்றை காட்டுத்துளசி என்று கூறுவார்கள். இந்த 3 துளசிகளிலும் பல்வேறு வகையான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பச்சைத் துளசி பல இடங்களிலும் பயன்படுகிறது. பல வீடுகளிலும் கிடைக்கிறது. இந்த துளசியில் இருக்கும் நறுமணமானது மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல சுவையும் உடையது.
துளசியின் சாறு என்பது பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள், கிருமி தொற்று, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பலவிதமான விஷ தொற்று மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு துளசி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாக ஆயுர்வேத முறைகளிலும் செய்யப்படுகிறது. இதை மூலிகை தேநீராகவும் கொடுக்கலாம். இது பொடி வடிவிலும் கிடைக்கிறது. அல்லது பச்சை இலையையும் சாப்பிடலாம், நெய் கலந்தும் சாப்பிடலாம். துளசி இலையை தேன், இஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். துளசி இலையை தண்ணீரில் கொதிக்கவிட்டு சாப்பிடும்போது தொண்டை புகைச்சல் போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
துளசி உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் 12 இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். துளசி என்பது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. அல்சர் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்கிறது.
துளசியின் விதையை பாலில் கலந்து குடிக்கும்போது நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது. உடலில் உள்ள அனைத்து விதமான கிருமிகளையும் அழித்துவிடுகிறது. துளசி சிறுநீரகத்தை வலுப்படுத்துகிறது. துளசி இலை மற்றும் தேனை தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள். துளசியை சந்தனத்துடன் சேர்த்து அதை அரைத்து அதை நெற்றியில் தடவி வந்தால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது.
அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள்.
அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு ஆப்பிள், பப்பாளி, தக்காளி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.
வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.
பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கறுப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.
மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
இளமைக்கு தர்பூசணி கலவை
தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.
ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.
தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.
சுருக்கத்தைபோக்கும் தக்காளி
தக்காளி சாறும், சம அளவில் எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். பத்து நிமிடங்கள் கடந்ததும் கழுவி அப்புறப்படுத்தவேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் நிறம் மேம்படும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து சருமத்தில் தேய்க்கவேண்டும். ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.
அழகுதரும் ‘ஆப்பிள் பேக்’
ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும். அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் சருமம் பொலிவுபெறும்.
வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.
பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கறுப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.
மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
இளமைக்கு தர்பூசணி கலவை
தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.
ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.
தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.
சுருக்கத்தைபோக்கும் தக்காளி
தக்காளி சாறும், சம அளவில் எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். பத்து நிமிடங்கள் கடந்ததும் கழுவி அப்புறப்படுத்தவேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் நிறம் மேம்படும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து சருமத்தில் தேய்க்கவேண்டும். ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.
அழகுதரும் ‘ஆப்பிள் பேக்’
ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும். அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் சருமம் பொலிவுபெறும்.
காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும்.
முன்பெல்லாம் பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டை கொண்டு சொத்தையை அடைப்பார்கள். அல்லது அந்த பல்லை நீக்கிவிடுவார்கள்.
இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘பில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது என்றும், சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளை கொண்டு நிரப்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித்தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்கு பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும் எனவும் கூறுகிறார்கள்..
காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. ஆரோக்கியமான பற்களுக்கு பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
வைட்டமின்-சி, வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு போன்றவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச்சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பற்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘பில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது என்றும், சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளை கொண்டு நிரப்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித்தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்கு பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும் எனவும் கூறுகிறார்கள்..
காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. ஆரோக்கியமான பற்களுக்கு பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
வைட்டமின்-சி, வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு போன்றவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச்சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பற்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலியை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
பெண்களின் வீட்டு வேலைகளை செய்வது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி. இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்
* உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்
* காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.
* ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.
* அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.
குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
* ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
* நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும். இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.
* வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
* பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்
* உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்
* காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.
* ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.
* அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.
குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
* ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
* நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும். இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.
* வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
* பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
நவராத்திரி முதல் நாளான இன்று இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க சத்தான பட்டாணி சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
பட்டாணி - 1 கப் ( Yellow peas )
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 2
தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
தாளிக்க:
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறி விட்டு, தேங்காய்ப் பூ, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூப்பரான பட்டாணி சுண்டல் ரெடி.
பட்டாணி - 1 கப் ( Yellow peas )
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 2
தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
தாளிக்க:
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறி விட்டு, தேங்காய்ப் பூ, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூப்பரான பட்டாணி சுண்டல் ரெடி.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும். பிரபல நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சயில் பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில சிரமங்கள் இருந்தாலும் இந்த முறையை சரியாக கையாள்வதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே..
கடன் அட்டையை பயன்படுத்துதல்
தற்போது வங்கிகள் வாடிக்கையாளரை கவர்வதற்காக கடன் அட்டையை வழங்கி வருகின்றன. இதன் மூலம் மாதந்தோறும் 100 முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும். பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் அட்டைகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு சலுகைகள் அறிவிக்கும். இதை பயன்படுத்தி மளிகைப்பொருட்கள் வாங்கும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். செலவு செய்யும் தொகைக்கு வங்கிகள் வட்டி விகிதம் நிர்ணயித்தாலும் கடன் அட்டை மூலம் சேமிக்கும் பணத்தில் அதை திருப்பிச்செலுத்தலாம்.
இது தவிர பெட்ரோலுக்கான கடன் அட்டையும் உள்ளது. இதை உபயோகப்படுத்தும் போது கேஷ்பேக் சலுகைகளை பெற முடியும்.
கூப்பன்களை பயன்படுத்துதல்
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை பலரும் விரும்புகின்றனர். இதில் வாடிக்கையாளரை கவர்வதற்கு தள்ளுபடி கூப்பன்கள் அறிவிக்கப்படும். பிராண்டுகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடன் அட்டைக்கு வங்கிகள் சார்பிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். இவற்றை பயன்படுத்துவதால் 30 சதவீதம் வரை எளிதாக பணத்தை சேமிக்கலாம். மேலும் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும்.
விற்பனையின் முதல் நாளே பயன்படுத்துதல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும். பிரபல நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். இந்த விற்பனையின் முதல் நாளில் பல்வேறு விதமான சலுகைகள் இருப்பதால் அன்றைய தினத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் லாபத்தை அடையலாம்.
விலையை ஆய்வு செய்தல்
ஆன்லைனின் பொருட்கள் வாங்குவது என முடிவு செய்த பின்பு முதலில் குறிப்பிட்ட 3 மாதங்களில் அந்த பொருளின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். விலை சற்று குறைவாக இருக்கும் போது அந்த பொருளை வாங்குவது நல்லது.
புள்ளிகளை பயன்படுத்துதல்
வங்கிகள் தாம் வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தும் போது வாடிக்கையாளரை கவுரவிக்கும் வகையில் சில புள்ளிகள் வழங்குகின்றன. இவற்றை குறிப்பிட்ட இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
மின் கட்டணம் முதல் எந்த வித கட்டணமாக இருந்தாலும் இப்போது ஆன்லைனில் செலுத்தலாம். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுததும் போது வாடிக்கையாளர் 5 முதல் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
கடன் அட்டையை பயன்படுத்துதல்
தற்போது வங்கிகள் வாடிக்கையாளரை கவர்வதற்காக கடன் அட்டையை வழங்கி வருகின்றன. இதன் மூலம் மாதந்தோறும் 100 முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும். பண்டிகை காலங்களில் வங்கிகள் கடன் அட்டைகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு சலுகைகள் அறிவிக்கும். இதை பயன்படுத்தி மளிகைப்பொருட்கள் வாங்கும் போது 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.
கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். செலவு செய்யும் தொகைக்கு வங்கிகள் வட்டி விகிதம் நிர்ணயித்தாலும் கடன் அட்டை மூலம் சேமிக்கும் பணத்தில் அதை திருப்பிச்செலுத்தலாம்.
இது தவிர பெட்ரோலுக்கான கடன் அட்டையும் உள்ளது. இதை உபயோகப்படுத்தும் போது கேஷ்பேக் சலுகைகளை பெற முடியும்.
கூப்பன்களை பயன்படுத்துதல்
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை பலரும் விரும்புகின்றனர். இதில் வாடிக்கையாளரை கவர்வதற்கு தள்ளுபடி கூப்பன்கள் அறிவிக்கப்படும். பிராண்டுகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடன் அட்டைக்கு வங்கிகள் சார்பிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். இவற்றை பயன்படுத்துவதால் 30 சதவீதம் வரை எளிதாக பணத்தை சேமிக்கலாம். மேலும் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும்.
விற்பனையின் முதல் நாளே பயன்படுத்துதல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்படும். பிரபல நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். இந்த விற்பனையின் முதல் நாளில் பல்வேறு விதமான சலுகைகள் இருப்பதால் அன்றைய தினத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் லாபத்தை அடையலாம்.
விலையை ஆய்வு செய்தல்
ஆன்லைனின் பொருட்கள் வாங்குவது என முடிவு செய்த பின்பு முதலில் குறிப்பிட்ட 3 மாதங்களில் அந்த பொருளின் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். விலை சற்று குறைவாக இருக்கும் போது அந்த பொருளை வாங்குவது நல்லது.
புள்ளிகளை பயன்படுத்துதல்
வங்கிகள் தாம் வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தும் போது வாடிக்கையாளரை கவுரவிக்கும் வகையில் சில புள்ளிகள் வழங்குகின்றன. இவற்றை குறிப்பிட்ட இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
மின் கட்டணம் முதல் எந்த வித கட்டணமாக இருந்தாலும் இப்போது ஆன்லைனில் செலுத்தலாம். இதற்காக பல இணையதளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுததும் போது வாடிக்கையாளர் 5 முதல் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. காய்கறிகள், பழங்களைவிட இறைச்சி வகைகளில்தான் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் சிறுவயதிலேயே குழந்தைகளை இறைச்சி உணவு வகைகளை சாப்பிட பழக்கலாம். எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.
ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.
இறைச்சி உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் இரண்டு வயதுவரை தாய்ப்பாலும் கொடுக்கலாம்.
6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.
ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.
மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.
இறைச்சி உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் இரண்டு வயதுவரை தாய்ப்பாலும் கொடுக்கலாம்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. கிரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.
3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.
4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.
5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள்.
3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள்.
4. அதனையும் நன்கு கலந்து முகம் முழுவதும் பூசுங்கள்.
5. 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடுங்கள்.
6. முதலில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
7. பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறையில் சருமத்தை மெருகேற்றிக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். எனினும் இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால் பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்ல வாய்ப்பில்லை.
தம்பதிகளிடம் இல்லற இன்பத்தை அனுபவிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாக, உலகளாவிய நிலையில் நடைபெற்ற பாலியல் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கும் சுமார் 200 ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, பாலியல் நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். “இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்லவாய்ப்பில்லை” என்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மரியா ஹோன்ட்ஸ் அதற்கு விளக்கம் தருகிறார்.
ஆர்வம் குறைவதற்கான காரணங்களை அடுக்கி அவர்கள் நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
சமூக சூழல் சரியில்லாமை, குடும்பத்தில் நிலவும் மன இறுக்கம், மகிழ்ச்சியின்மை, பண நெருக்கடி, வேலை இழப்பு, நிம்மதியின்மை, உடல் ஆரோக்கியமின்மை, உடலுறவு காட்சிகளை அதிகமாக இணையதளங்களில் பார்த்தல் என்பன போன்ற பலவிதமான காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.
அதே நேரத்தில் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இணக்கமாக இருக்கும் தம்பதிகள் வழக்கம்போல் இல்லற இன்பத்தில் திளைக்கிறார்கள். மன நெருக்கம் கொண்டவர் களாலே மிக நெருக்கமாக இன்பத்தை அனுபவிக்க முடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார்கள்.
‘தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒன்றாக வாழப்பிடிக்கவில்லை. பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொல்லும் தம்பதிகளிடமும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். “அவர்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவர்கள் பிரிய விரும்புவதற்கு அவர்களுக்குள் தாம்பத்ய திருப்தியின்மை தோன்றியிருப்பதும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். பெண்களைவிட ஆண்களே தாம்பத்ய திருப்தியின்மைக்காக பிரிகிறோம் என்று வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெண்கள், தாம்பத்யத்தில் தங்களை திருப்தி செய்யவேண்டியது கணவரின் கடமை என்பதை உணர்த்துகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.
அமெரிக்காவில் 30 முதல் 60 சதவீதம் ஆண்கள் பாலியல் திருப்தியின்மைக்கு உள்ளாகியிருப்பதாக இந்த ஆய்வுத் தகவல் சொல்கிறது. அங்குள்ள பெண்களில் 40 முதல் 55 சதவீதம் பேர் இந்த பிரச்சினையை தாங்கள் எதிர்கொள்வதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் நடுத்தர வயதில் தாங்கள் அதிக இன்பம் அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.
‘நீங்கள் அனுபவிக்கும் இன்பத்தின் அளவு என்ன?’ என்ற கேள்விக்கு, கனடா பெண்கள் துல்லியமாக பதிலளித்திருக்கிறார்கள். அதோடு தங்கள் கணவர் எந்த அளவுக்கு திருப்தி யடைகிறார் என்பதையும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார்கள்.
‘தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா?’ என்ற கேள்விக்கு கணவன்-மனைவி இருவருமே மாறுபட்ட கருத்துக்களை கூறி, இப்போதும் இந்த விஷயத்தில் உலகளாவிய நிலையில் குழப்பம் நீடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சிகளின் முத்தாய்ப்பாக பாலியல் நிபுணர்கள் சில தீர்வுகளை கூறியிருக்கிறார்கள். அதன் விவரம்:
“உலகளாவிய நிலையில் இப்போது தம்பதிகளிடம் பாலியல் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. பசி, தாகம் போன்றதுதான் பாலியல் தேவையும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கணவரை திருப்திபடுத்த மனைவியும், மனைவியை திருப்தி படுத்த கணவரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். தங்களுக்குள் திருப்தியான உறவு இல்லை என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ‘அவ்வப்போது அவர்கள் உறவில் உச்சகட்டத்தை அடையத்தான் செய்கிறார்கள்.’ அதுவே அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை பூதாகரமாக்காமல், தணித்துக்கொண்டிருக்கிறது. இதை தம்பதிகள் உணர்ந்து, திருப்திக்கான வழிமுறைகளை ஆராய்ந்து உறவை மேம்படுத்தவேண்டும்.
தாம்பத்யத்திறனை மேம்படுத்த பேச்சு மிக அவசியம். பேச்சு பாலியல் பற்றிய சூடான கதைகளை குறித்தும் இருக்கலாம். அத்தகைய பேச்சுடன், செயலில் இறங்கும் தம்பதிகள் இன்பத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் அதிகமாக நெருக்கமும் இருக்கிறது. அதனால் உங்கள் இணையோடு அந்தரங்கமாகவும் நிறைய பேசுங்கள்.
அது மட்டுமின்றி, இணையின் விருப்பங்களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள். விருப்பங்களை மனந்திறந்து சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக பெண்ணின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது இருவருக்குமே தாம்பத்ய செயல்பாடு அதிக மகிழ்ச்சியை தரும். தம்பதிகள் வயதினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா வயதிலும் அவர்கள் படுக்கை அறையில் தங்களை இளைஞராகவே பாவித்துக்கொள்ள வேண்டும். அந்த நினைப்பே அவர்களுக்கு கூடுதல் பலத்தையும், மகிழ்ச்சியையும் தரும்” என்றும் சொல்கிறார்கள்.
ஆர்வம் குறைவதற்கான காரணங்களை அடுக்கி அவர்கள் நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
சமூக சூழல் சரியில்லாமை, குடும்பத்தில் நிலவும் மன இறுக்கம், மகிழ்ச்சியின்மை, பண நெருக்கடி, வேலை இழப்பு, நிம்மதியின்மை, உடல் ஆரோக்கியமின்மை, உடலுறவு காட்சிகளை அதிகமாக இணையதளங்களில் பார்த்தல் என்பன போன்ற பலவிதமான காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.
அதே நேரத்தில் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இணக்கமாக இருக்கும் தம்பதிகள் வழக்கம்போல் இல்லற இன்பத்தில் திளைக்கிறார்கள். மன நெருக்கம் கொண்டவர் களாலே மிக நெருக்கமாக இன்பத்தை அனுபவிக்க முடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார்கள்.
‘தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒன்றாக வாழப்பிடிக்கவில்லை. பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொல்லும் தம்பதிகளிடமும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். “அவர்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவர்கள் பிரிய விரும்புவதற்கு அவர்களுக்குள் தாம்பத்ய திருப்தியின்மை தோன்றியிருப்பதும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். பெண்களைவிட ஆண்களே தாம்பத்ய திருப்தியின்மைக்காக பிரிகிறோம் என்று வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெண்கள், தாம்பத்யத்தில் தங்களை திருப்தி செய்யவேண்டியது கணவரின் கடமை என்பதை உணர்த்துகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.
அமெரிக்காவில் 30 முதல் 60 சதவீதம் ஆண்கள் பாலியல் திருப்தியின்மைக்கு உள்ளாகியிருப்பதாக இந்த ஆய்வுத் தகவல் சொல்கிறது. அங்குள்ள பெண்களில் 40 முதல் 55 சதவீதம் பேர் இந்த பிரச்சினையை தாங்கள் எதிர்கொள்வதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் நடுத்தர வயதில் தாங்கள் அதிக இன்பம் அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.
‘நீங்கள் அனுபவிக்கும் இன்பத்தின் அளவு என்ன?’ என்ற கேள்விக்கு, கனடா பெண்கள் துல்லியமாக பதிலளித்திருக்கிறார்கள். அதோடு தங்கள் கணவர் எந்த அளவுக்கு திருப்தி யடைகிறார் என்பதையும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார்கள்.
‘தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா?’ என்ற கேள்விக்கு கணவன்-மனைவி இருவருமே மாறுபட்ட கருத்துக்களை கூறி, இப்போதும் இந்த விஷயத்தில் உலகளாவிய நிலையில் குழப்பம் நீடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சிகளின் முத்தாய்ப்பாக பாலியல் நிபுணர்கள் சில தீர்வுகளை கூறியிருக்கிறார்கள். அதன் விவரம்:
“உலகளாவிய நிலையில் இப்போது தம்பதிகளிடம் பாலியல் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. பசி, தாகம் போன்றதுதான் பாலியல் தேவையும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கணவரை திருப்திபடுத்த மனைவியும், மனைவியை திருப்தி படுத்த கணவரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். தங்களுக்குள் திருப்தியான உறவு இல்லை என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ‘அவ்வப்போது அவர்கள் உறவில் உச்சகட்டத்தை அடையத்தான் செய்கிறார்கள்.’ அதுவே அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை பூதாகரமாக்காமல், தணித்துக்கொண்டிருக்கிறது. இதை தம்பதிகள் உணர்ந்து, திருப்திக்கான வழிமுறைகளை ஆராய்ந்து உறவை மேம்படுத்தவேண்டும்.
தாம்பத்யத்திறனை மேம்படுத்த பேச்சு மிக அவசியம். பேச்சு பாலியல் பற்றிய சூடான கதைகளை குறித்தும் இருக்கலாம். அத்தகைய பேச்சுடன், செயலில் இறங்கும் தம்பதிகள் இன்பத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் அதிகமாக நெருக்கமும் இருக்கிறது. அதனால் உங்கள் இணையோடு அந்தரங்கமாகவும் நிறைய பேசுங்கள்.
அது மட்டுமின்றி, இணையின் விருப்பங்களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள். விருப்பங்களை மனந்திறந்து சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக பெண்ணின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது இருவருக்குமே தாம்பத்ய செயல்பாடு அதிக மகிழ்ச்சியை தரும். தம்பதிகள் வயதினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா வயதிலும் அவர்கள் படுக்கை அறையில் தங்களை இளைஞராகவே பாவித்துக்கொள்ள வேண்டும். அந்த நினைப்பே அவர்களுக்கு கூடுதல் பலத்தையும், மகிழ்ச்சியையும் தரும்” என்றும் சொல்கிறார்கள்.






