என் மலர்
ஆரோக்கியம்
கடந்த சில நூற்றாண்டுகளில் உலகம் எங்குமே உள்ள பெண்கள் அரசியல், பொருளாதாரம் ராணுவம், காவல்துறை, மருத்துவம் வாணிபம் புரட்சி போராட்டங்கள் என்று பல துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த துவங்கி விட்டனர்.
ஆணுக்கென்று சில கடமைகளும் பொறுப்புகளும் என்றும் பெண்ணுக்கென்று சில கடமைகள் பொறுப்புகள் என்றும் நம் சமுதாயத்தில் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. இதில் பெரும்பான்மையான, பெண்களுக்கான பொறுப்புகள் குடும்பம் சார்ந்ததாகவும், சமூக நலத்திற்கான பெண்களுக்கான கடமைகளும் கூட குடும்பம் மூலமாகவே செயல்படுவதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளில் உலகம் எங்குமே உள்ள பெண்கள் அரசியல், பொருளாதாரம் ராணுவம், காவல்துறை, மருத்துவம் வாணிபம் புரட்சி போராட்டங்கள் என்று பல துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த துவங்கி விட்டனர்.
புராண காலம் தொட்டே பெண் இலக்கியவாதிகள், அரசிகள், துறவிகள், போராளிகள் இருந்திருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில், எடுத்துக்காட்டாக மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. எல்லாத்துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
குடும்பத்தில் குழந்தை பராமரிப்பு, பெரியவர்கள் நோயாளிகள் பராமரிப்பு, சமையல் என்று மட்டுமே தங்கள் கடமையை செய்து வந்த பெண்கள் இன்று குடும்ப பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் வேலைக்கு சென்றும், சொந்தமாக தொழில் செய்தும் சம்பாதிக்கின்றனர். இன்று குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தாங்களே எடுப்பது, சொத்துக்களை வாங்குவது, பராமரிப்பது, முதலீடுகள் செய்வது, தனியாக வெளியூர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வது என்று ஆணை சாராமல் சுயமாக தனித்து செயல்படுகிறாள் பெண்.
இன்று எல்லாம் பெண்களுமே பள்ளிப் படிப்பை முடித்து விடுகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் கல்லூரி பட்டப்படிப்பையும், முதுநிலை பட்டப்படிப்பையும் முடிக்கின்றனர். பல பெண்கள் இன்று தொழில்நுட்பக் கல்வியை சுலபமாகவும் விரும்பியும் படிக்கின்றனர். விமானம் ஓட்டுதல், வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுதல், காவல்துறையில் கடினமான பணிகளை செய்வது, ராணுவத்தில் பணியாற்றுவது, போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஓட்டுதல், ஆழ்கடலில் நீந்தி மூழ்கி செய்யும் பணிகள், விண்வெளியில் பயணம் செய்தல் என்று எல்லாவிதமான வேலைகளையும் விரும்பியும், திறமையாகவும் சிறப்பாகவும் செய்து வருகின்றனர் பெண்கள். பெரிய தொழிலதிபர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களாகவும் என்று இவர்களின் பங்களிப்பு சமுதாயத்தில் நீண்டு கொண்டே போகிறது.
அரசியலில் இன்று பல பெண்கள் ஈடுபடுகின்றனர். கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், மருத்துவம், பாதுகாப்பு, நிதி மேலாண்மை போன்ற பல துறைகளில் தேசிய மற்றும் உலக அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கும் பல அமைப்புகளிலும் பெண்களின் பங்கு இருந்து வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து, மற்றவரின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, பொறுமையாகவும், நேர்மையாகவும், கருணையோடும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் இன்றைய பெண்கள் சிறப்பாக செயல்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வருகின்றனர்.
புராண காலம் தொட்டே பெண் இலக்கியவாதிகள், அரசிகள், துறவிகள், போராளிகள் இருந்திருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில், எடுத்துக்காட்டாக மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. எல்லாத்துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
குடும்பத்தில் குழந்தை பராமரிப்பு, பெரியவர்கள் நோயாளிகள் பராமரிப்பு, சமையல் என்று மட்டுமே தங்கள் கடமையை செய்து வந்த பெண்கள் இன்று குடும்ப பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் வேலைக்கு சென்றும், சொந்தமாக தொழில் செய்தும் சம்பாதிக்கின்றனர். இன்று குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தாங்களே எடுப்பது, சொத்துக்களை வாங்குவது, பராமரிப்பது, முதலீடுகள் செய்வது, தனியாக வெளியூர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வது என்று ஆணை சாராமல் சுயமாக தனித்து செயல்படுகிறாள் பெண்.
இன்று எல்லாம் பெண்களுமே பள்ளிப் படிப்பை முடித்து விடுகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் கல்லூரி பட்டப்படிப்பையும், முதுநிலை பட்டப்படிப்பையும் முடிக்கின்றனர். பல பெண்கள் இன்று தொழில்நுட்பக் கல்வியை சுலபமாகவும் விரும்பியும் படிக்கின்றனர். விமானம் ஓட்டுதல், வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுதல், காவல்துறையில் கடினமான பணிகளை செய்வது, ராணுவத்தில் பணியாற்றுவது, போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஓட்டுதல், ஆழ்கடலில் நீந்தி மூழ்கி செய்யும் பணிகள், விண்வெளியில் பயணம் செய்தல் என்று எல்லாவிதமான வேலைகளையும் விரும்பியும், திறமையாகவும் சிறப்பாகவும் செய்து வருகின்றனர் பெண்கள். பெரிய தொழிலதிபர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களாகவும் என்று இவர்களின் பங்களிப்பு சமுதாயத்தில் நீண்டு கொண்டே போகிறது.
அரசியலில் இன்று பல பெண்கள் ஈடுபடுகின்றனர். கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், மருத்துவம், பாதுகாப்பு, நிதி மேலாண்மை போன்ற பல துறைகளில் தேசிய மற்றும் உலக அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கும் பல அமைப்புகளிலும் பெண்களின் பங்கு இருந்து வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து, மற்றவரின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, பொறுமையாகவும், நேர்மையாகவும், கருணையோடும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் எங்கெல்லாம் தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் இன்றைய பெண்கள் சிறப்பாக செயல்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வருகின்றனர்.
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.
மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.
ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம்.
சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள்.
பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள்.
எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.
தன்மானத்தை காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள்.
எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.
அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தான் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை போற்றுவோம்.
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.
ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம்.
சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள்.
பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள்.
எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.
தன்மானத்தை காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள்.
எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.
அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தான் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை போற்றுவோம்.
இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இனிப்பு இல்லாத சுயிங்கம் மெல்லுவது பற்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை உண்டாக்கும். குறிப்பாக பற்களில் அழுக்கு படிவதை தவிர்க்கும், பற்சிதைவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘‘சுயிங்கம் மெல்லும்போது பற்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் உமிழ்நீர் சுரப்பது அதிகரிக்கும்.
தொடர்ந்து மென்று கொண்டே இருக்கும்போது பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கும். பல் சொத்தைக்கும், சர்க்கரை கலக்காத சுயிங்கத்திற்கும் இடையே தொடர்பு இருக்கிறது. வாய் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயிங்கத்தின் பயன்பாடு பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர், அவிஜித் பானர்ஜி.
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பகுப்பாய்வு, இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம் உள்பட பல விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதியில் சர்க்கரை இல்லாத சுயிங்கம் பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பை 28 சதவீதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து மென்று கொண்டே இருக்கும்போது பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கும். பல் சொத்தைக்கும், சர்க்கரை கலக்காத சுயிங்கத்திற்கும் இடையே தொடர்பு இருக்கிறது. வாய் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயிங்கத்தின் பயன்பாடு பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர், அவிஜித் பானர்ஜி.
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பகுப்பாய்வு, இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம் உள்பட பல விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதியில் சர்க்கரை இல்லாத சுயிங்கம் பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பை 28 சதவீதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது.
உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சர்வதேச அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான துறைதான் மொழியியல். மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது. இது ஒரு தனித்த மொழியைப் பற்றி மட்டும் படிப்பதல்ல. மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகள் குறித்தும் கற்பதாகும்.
மொழிகளின் ஒலி, வடிவம், பொருள், செயல்பாடு குறித்து பயில்வது. இந்தத் துறை மொழியை ஆய்வு செய்து விளக்குகிறது. மொழி குறித்த அறிவியல் ரீதியான கல்வி பெறுபவரையே மொழியியலாளர் (linguists) என்கிறோம். இவர்கள் மொழிகளின் அனைத்து வகைகளிலும், உலகின் அனைத்து மொழிகளிலும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பர். சமூக அமைப்பு, புவி மண்டலம், வரலாற்று காலம், மொழிக்கும் மனதுக்கும் உள்ள உறவு உள்ளிட்ட பல கருத்துக்களில் மொழியியலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.
மொழியியல் கல்வி 3 முக்கியப் பிரிவுகளை கொண்டது. அவை: சின்க்ரோனிக் மற்றும் டயாக்ரோனிக், தியரிட்டிகல் மற்றும் அப்லைட், கன்டெக்சுவல் மற்றும் இண்டிபென்டன்ட். இதில், சின்க்ரோனிக் என்பது மொழியின் தற்போதைய நிலை குறித்தும், டயாக்ரோனிக் என்பது மொழிகளின் வரலாறு, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் படிப்பதாகும். தியரிட்டிகல் என்பது ஒரு மொழி குறித்த விளக்கத்திற்கான வரம்புகளையும், அதன் உலகளாவிய கோட்பாடுகளையும் உருவாக்குவது.
`அப்லைட்' என்பது மொழியின் செயல்பாடு மற்றும் உரையாடல் குறித்த கல்வியாகும். இது வெறுமனே கோட்பாட்டு மொழியியல் பயன்பாடாக மட்டும் இல்லாமல், அந்த மொழிக்கான ஒழுங் கமைப்பு மற்றும் தத்துவங்களைக் கொண்டதாக இருக்கும்.
``கன்டெக்சுவல்'' என்பது ஒரு மொழி எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உணரப்படுகிறது, அதன் செயல்பாடுகளால் அது உலகோடு எவ்வாறு ஒன்றிப் போகிறது என்பதை விளக்குவது. இண்டிபென்டன்ட் என்பது ஒரு மொழி தொடர்பான புறநிலைகள் இல்லாமல், சொந்த நலனை மட்டுமே அந்த மொழி கொண்டிருப்பதாகும்.
மொழியியல் கோட்பாட்டில், மொழியின் வேறுபட்ட ஒலிகள், அடிப்படை ஒலிமுறை, வார்த்தை வடிவம், வாக்கியங்களில் வார்த்தைகளின் ஒருங்கமைப்பு, வார்த்தை களின் பொருள், உச்சரிப்பு, மொழியின் நளினம் ஆகியவை இடம்பெறும். பயன்பாட்டு மொழியியல் மொழி கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், பேச்சு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
மருத்துவ அறிவியலில், உளவியல் மற்றும் நரம்பியலுடன் மொழியியல் தொடர்புடையதாக உள்ளது. எனவே, மொழியியல் கற்பது, கல்வி, பதிப்பகம், ஊடகம், சமூக சேவை, தகவல் தொடர்பு, கணினி மொழி, குரல் பகுப்பாய்வு, பேச்சுக் கோளாறு மற்றும் மொழி தொடர்பான அனைத்து பணியிடங்களிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகங்களில் அயல்மொழி பாடங்கள், பயிற்சிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருவதால், மொழியியல் படிப்பவர்களுக்கு கல்வித் துறை மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். பல்வேறு அரசு முகமைகள் மொழி பயிற்சித் திட்டங்களை மேற் பார்வையிட மொழியியலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. குழந்தைகளுக்கான மொழியியல் குறைபாடுகளை மதிப்பிடுவது, சரி செய்வது, மேம்படுத்துவதில் மொழியியலாளர்களின் பங்களிப்புக்கான தேவை வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மொழிகளின் ஒலி, வடிவம், பொருள், செயல்பாடு குறித்து பயில்வது. இந்தத் துறை மொழியை ஆய்வு செய்து விளக்குகிறது. மொழி குறித்த அறிவியல் ரீதியான கல்வி பெறுபவரையே மொழியியலாளர் (linguists) என்கிறோம். இவர்கள் மொழிகளின் அனைத்து வகைகளிலும், உலகின் அனைத்து மொழிகளிலும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பர். சமூக அமைப்பு, புவி மண்டலம், வரலாற்று காலம், மொழிக்கும் மனதுக்கும் உள்ள உறவு உள்ளிட்ட பல கருத்துக்களில் மொழியியலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.
மொழியியல் கல்வி 3 முக்கியப் பிரிவுகளை கொண்டது. அவை: சின்க்ரோனிக் மற்றும் டயாக்ரோனிக், தியரிட்டிகல் மற்றும் அப்லைட், கன்டெக்சுவல் மற்றும் இண்டிபென்டன்ட். இதில், சின்க்ரோனிக் என்பது மொழியின் தற்போதைய நிலை குறித்தும், டயாக்ரோனிக் என்பது மொழிகளின் வரலாறு, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் படிப்பதாகும். தியரிட்டிகல் என்பது ஒரு மொழி குறித்த விளக்கத்திற்கான வரம்புகளையும், அதன் உலகளாவிய கோட்பாடுகளையும் உருவாக்குவது.
`அப்லைட்' என்பது மொழியின் செயல்பாடு மற்றும் உரையாடல் குறித்த கல்வியாகும். இது வெறுமனே கோட்பாட்டு மொழியியல் பயன்பாடாக மட்டும் இல்லாமல், அந்த மொழிக்கான ஒழுங் கமைப்பு மற்றும் தத்துவங்களைக் கொண்டதாக இருக்கும்.
``கன்டெக்சுவல்'' என்பது ஒரு மொழி எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உணரப்படுகிறது, அதன் செயல்பாடுகளால் அது உலகோடு எவ்வாறு ஒன்றிப் போகிறது என்பதை விளக்குவது. இண்டிபென்டன்ட் என்பது ஒரு மொழி தொடர்பான புறநிலைகள் இல்லாமல், சொந்த நலனை மட்டுமே அந்த மொழி கொண்டிருப்பதாகும்.
மொழியியல் கோட்பாட்டில், மொழியின் வேறுபட்ட ஒலிகள், அடிப்படை ஒலிமுறை, வார்த்தை வடிவம், வாக்கியங்களில் வார்த்தைகளின் ஒருங்கமைப்பு, வார்த்தை களின் பொருள், உச்சரிப்பு, மொழியின் நளினம் ஆகியவை இடம்பெறும். பயன்பாட்டு மொழியியல் மொழி கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், பேச்சு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
மருத்துவ அறிவியலில், உளவியல் மற்றும் நரம்பியலுடன் மொழியியல் தொடர்புடையதாக உள்ளது. எனவே, மொழியியல் கற்பது, கல்வி, பதிப்பகம், ஊடகம், சமூக சேவை, தகவல் தொடர்பு, கணினி மொழி, குரல் பகுப்பாய்வு, பேச்சுக் கோளாறு மற்றும் மொழி தொடர்பான அனைத்து பணியிடங்களிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகங்களில் அயல்மொழி பாடங்கள், பயிற்சிகள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருவதால், மொழியியல் படிப்பவர்களுக்கு கல்வித் துறை மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். பல்வேறு அரசு முகமைகள் மொழி பயிற்சித் திட்டங்களை மேற் பார்வையிட மொழியியலாளர்களை பணியில் அமர்த்துகின்றன. குழந்தைகளுக்கான மொழியியல் குறைபாடுகளை மதிப்பிடுவது, சரி செய்வது, மேம்படுத்துவதில் மொழியியலாளர்களின் பங்களிப்புக்கான தேவை வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன.
மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக மூங்கில் ஆடைகள் தயாரிப்பும், அதனை அணிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன. அதனை அணிவதன் மூலம் ஏராளமான உடல் நல நன்மைகளையும் பெறலாம். அதனால் அந்த ஆடைக்கு மவுசு கூடிக்கொண்டிருக்கிறது.
* மூங்கில் இழைகளுக்கு உறிஞ்சும் திறன் அதிகம். அது பருத்தியை விட மூன்று மடங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வியர்வை பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு மூங்கில் ஆடைகள் கை கொடுக்கும். ஈரப்பதத்தை விரைவாக வெளியேற்றுவதோடு நீண்ட நேரம் புத்துணர்ச்சியோடு செயல்படவும் வழிவகை செய்யும்.
* மூங்கில் இழைகள் மென்மை கொண்டவை. அவை சருமத்திற்கு எரிச்சலோ, உறுத்தலோ ஏற்படுத்துவதில்லை. உள்ளாடைகள் தயாரிப்பில் மூங்கில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சரும ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மூங்கில் ஆடைகளை அணிவது சவுகரியமாக இருக்கும்.
* மூங்கில் ஆடைகளை சலவை செய்து பயன்படுத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். அயர்ன் செய்யாமல் கூட அணிந்து செல்ல முடியும். அதில் மடிப்புகள் அதிகம் ஏற்படாது.
* மூங்கில் இழைகள் பாக்டீரியாவை எதிர்க்கும்தன்மை கொண்டவை. மூங்கில் ஆடைகளிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். தோல் அழற்சி, அரிப்பு போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுபவர்களுக்கு மூங்கில் ஆடை நிவாரணம் அளிக்கும்.
* மூங்கில் இழைகளுக்கு உறிஞ்சும் திறன் அதிகம். அது பருத்தியை விட மூன்று மடங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வியர்வை பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு மூங்கில் ஆடைகள் கை கொடுக்கும். ஈரப்பதத்தை விரைவாக வெளியேற்றுவதோடு நீண்ட நேரம் புத்துணர்ச்சியோடு செயல்படவும் வழிவகை செய்யும்.
* மூங்கில் இழைகள் மென்மை கொண்டவை. அவை சருமத்திற்கு எரிச்சலோ, உறுத்தலோ ஏற்படுத்துவதில்லை. உள்ளாடைகள் தயாரிப்பில் மூங்கில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சரும ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மூங்கில் ஆடைகளை அணிவது சவுகரியமாக இருக்கும்.
* மூங்கில் ஆடைகளை சலவை செய்து பயன்படுத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். அயர்ன் செய்யாமல் கூட அணிந்து செல்ல முடியும். அதில் மடிப்புகள் அதிகம் ஏற்படாது.
* மூங்கில் இழைகள் பாக்டீரியாவை எதிர்க்கும்தன்மை கொண்டவை. மூங்கில் ஆடைகளிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். தோல் அழற்சி, அரிப்பு போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுபவர்களுக்கு மூங்கில் ஆடை நிவாரணம் அளிக்கும்.
எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
முள்ளங்கி - 2 கப்
வெங்காயம் - 2
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு பல் - 2 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், முள்ளங்கியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, தனியா, பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
முள்ளங்கி - 2 கப்
வெங்காயம் - 2
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு பல் - 2 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், முள்ளங்கியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, தனியா, பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.
புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.
* சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும்.
* உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட் அறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
* சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர்.
* கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.
* நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.
* சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
* சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
* கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.
* கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது.
* ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம்.
* பொதுவாக பத்திரங்களை கம்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.
* சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும்.
* உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட் அறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
* சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர்.
* கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.
* நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.
* சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
* சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
* கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.
* கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது.
* ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம்.
* பொதுவாக பத்திரங்களை கம்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது கருவிற்கு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி விவரமாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப கால தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து ரத்னா மருத்துவமனையின் டாக்டர் சாந்தி மகிழன் கூறியதாவது:-
தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-
தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.
பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்
1. Hepatitis A Vaccine
2. Hepatitis B Vaccine
3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)
மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-
தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.
தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.
பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்
1. Hepatitis A Vaccine
2. Hepatitis B Vaccine
3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)
மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா? என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு பொருட்களின் தோற்றம் மாறாமல் கலப்படம் செய்கிறார்கள். எந்த உணவுப் பொருளில் எதை கலக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க...
நெய்: இதில் வனஸ்பதி, வெஜிடபிள் ஆயில், ஸ்டார்ச் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன. அப்படி கலப்படம் செய்யப்பட்டிருப்பின் எளிமையான இரு சோதனைகள் மூலம் கண்டறிந்துவிடலாம்.
சோதனை 1: உள்ளங்கையில் சிறிதளவு நெய்யை வையுங்கள். சிறிது நேரத்தில் அது தானாகவே உருகினால் அது சுத்தமானது. கலப்படமற்றது.
சோதனை 2: அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி லேசான தீயில் வையுங்கள். நெய் உடனடியாக உருகி அடர் பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அது சுத்தமானது. அது உருகி வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால் கலப்படமானது.
பட்டாணி: வெதுவெதுப்பான நீரில் பட்டாணியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அழுத்தி தேய்க்கவும். அப்போது நீர் பச்சை நிறத்திற்கு மாற தொடங்கினால் அதில் செயற்கை நிற கலவை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.
மஞ்சள் தூள்: பல்வேறு மருத்துவ குணம் நிரம்பிய மஞ்சளில் கலப்படம் சேர்ப்பது துரதிருஷ்டவசமானது. மெட்டானில் எனும் ஒருவகை மஞ்சள் தூள், குரோமேட் எனும் மஞ்சள் நிற பவுடர், சுண்ணாம்பு தூள் போன்றவை கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதனுள் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டுவிட்டு சுமார் 20 நிமிடம் கழித்து பாருங்கள். மஞ்சள் தூள் அடியில் தங்கினால் மஞ்சள் சுத்தமானது. மேகமூட்டம் போல் நீரின் நிறம் மாறி இருந்தால் அது கலப்படமானது.
குங்குமப்பூ: விலை மதிப்புள்ள குங்குமப்பூவில் சோளாக்கதிர் கலப்படம் செய்யப்படுகிறது. மக்காச்சோள கதிரை சர்க்கரை பாகில் ஊறவைத்து நிலக்கரி தார் நிறத்துடன் சேர்த்து செயற்கை குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. அத்தகைய கலப்பட குங்குமப்பூவை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். தூய குங்குமப்பூவாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு பிறகு நீரின் நிறம் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மாறும். ஆனால் குங்குமப்பூவை போட்டதும் தண்ணீரின் நிறம் உடனடியாக மாறினாலோ அல்லது நிறம் மாறாமல் இருந்தாலோ அது கலப்பட குங்குமப்பூ என்பதை அறிந்துவிடலாம்.
மிளகாய் தூள்: இதில் பெரும்பாலும் செயற்கை நிறங்களும், செங்கல் பவுடரும் கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மிளகாய் தூள் போட்டு கலக்கலவும். கலப்பட தூளாக இருந்தால் கண்ணாடியின் அடிப்பகுதியில் கலப்படப்பொருட்கள் படிந்துவிடும்.
தேன்: குளுக்கோஸ், சர்க்கரை பாகு, பிரக்டோஸ் கார்ன் சிரப் போன்றவை தேனில் முக்கியமாக கலப்படம் செய்யப்படுகின்றன. ஒரு டம்ளர் தண்ணீருக்குள் ஒரு டீஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். தேன் உடனடியாக கரைந்துவிட்டால் அதில் குளுக்கோஸ்/ சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். தூய தேன் என்றால் அடர்த்தியாக இருக்கும். கரைவதற்கு பதிலாக அடிப்பகுதியை நோக்கி இறங்க தொடங்கும்.
சோதனை 1: உள்ளங்கையில் சிறிதளவு நெய்யை வையுங்கள். சிறிது நேரத்தில் அது தானாகவே உருகினால் அது சுத்தமானது. கலப்படமற்றது.
சோதனை 2: அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி லேசான தீயில் வையுங்கள். நெய் உடனடியாக உருகி அடர் பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அது சுத்தமானது. அது உருகி வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால் கலப்படமானது.
பட்டாணி: வெதுவெதுப்பான நீரில் பட்டாணியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அழுத்தி தேய்க்கவும். அப்போது நீர் பச்சை நிறத்திற்கு மாற தொடங்கினால் அதில் செயற்கை நிற கலவை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.
மஞ்சள் தூள்: பல்வேறு மருத்துவ குணம் நிரம்பிய மஞ்சளில் கலப்படம் சேர்ப்பது துரதிருஷ்டவசமானது. மெட்டானில் எனும் ஒருவகை மஞ்சள் தூள், குரோமேட் எனும் மஞ்சள் நிற பவுடர், சுண்ணாம்பு தூள் போன்றவை கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதனுள் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டுவிட்டு சுமார் 20 நிமிடம் கழித்து பாருங்கள். மஞ்சள் தூள் அடியில் தங்கினால் மஞ்சள் சுத்தமானது. மேகமூட்டம் போல் நீரின் நிறம் மாறி இருந்தால் அது கலப்படமானது.
குங்குமப்பூ: விலை மதிப்புள்ள குங்குமப்பூவில் சோளாக்கதிர் கலப்படம் செய்யப்படுகிறது. மக்காச்சோள கதிரை சர்க்கரை பாகில் ஊறவைத்து நிலக்கரி தார் நிறத்துடன் சேர்த்து செயற்கை குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. அத்தகைய கலப்பட குங்குமப்பூவை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். தூய குங்குமப்பூவாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு பிறகு நீரின் நிறம் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மாறும். ஆனால் குங்குமப்பூவை போட்டதும் தண்ணீரின் நிறம் உடனடியாக மாறினாலோ அல்லது நிறம் மாறாமல் இருந்தாலோ அது கலப்பட குங்குமப்பூ என்பதை அறிந்துவிடலாம்.
மிளகாய் தூள்: இதில் பெரும்பாலும் செயற்கை நிறங்களும், செங்கல் பவுடரும் கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மிளகாய் தூள் போட்டு கலக்கலவும். கலப்பட தூளாக இருந்தால் கண்ணாடியின் அடிப்பகுதியில் கலப்படப்பொருட்கள் படிந்துவிடும்.
தேன்: குளுக்கோஸ், சர்க்கரை பாகு, பிரக்டோஸ் கார்ன் சிரப் போன்றவை தேனில் முக்கியமாக கலப்படம் செய்யப்படுகின்றன. ஒரு டம்ளர் தண்ணீருக்குள் ஒரு டீஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். தேன் உடனடியாக கரைந்துவிட்டால் அதில் குளுக்கோஸ்/ சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். தூய தேன் என்றால் அடர்த்தியாக இருக்கும். கரைவதற்கு பதிலாக அடிப்பகுதியை நோக்கி இறங்க தொடங்கும்.
எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று வித விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும்.
தற்போது ஹேர் டை பயன்பாடு வழக்கமாகிவிட்டது. ஆனால் முதன் முறை பயன்படுத்தும் போது எந்த விதமான ஹேர் டையாக இருந்தாலும் அதை முதலில் சருமத்தில் பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். ஆனால் எப்படியாவது முடி கருப்பாக இருந்தால் போதும் என்று ஒவ்வொருமுறை ஒவ்வொரு விதமான ஹேர் டை பயன்படுத்தும் போது அது தலைமுடியில் அபாயகரமான விளைவையும் ஒவ்வாமை எதிர்வினையையும் உண்டு செய்யும். இந்த அலர்ஜிக்கான அறிகுறி மற்றும் தீர்வு குறித்து இப்போது பார்க்கலாம்.
அறிகுறிகளின் தீவிரம் ஒவ்வொருவரது தோல் ஒவ்வாமைக்கேற்ப மாறுபடும். ஹேர் டை பயன்பாட்டுக்கு பிறகு 48 மணி நேரங்களில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்கிவிடும். உடலில் சிவப்பான தடிப்புகள், உச்சந்தலை மற்றும் கழுத்தில் ஒருவித நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வீக்கம், கொப்புளங்கள், கண் இமைகள் மற்றும் உதடுகளில் அழற்சி, கால்கள் கைகளிலும் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.
ஹேர்டை பயன்பாட்டுக்கு பிறகு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசுவதன் மூலம் ஓரளவு குறைக்கலாம். சருமத்தில் மாய்சுரைசர் மற்றூம் க்ரீம் வகைகள் சருமத்தின் வீக்கத்தை குறைக்க உதவும். ஆனால் வெகு அரிதான சமயங்களில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கலாம்.
அது தொண்டை வீக்கம், தோல் அலர்ஜி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றையும் உண்டு செய்யலாம். இயன்றவரை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைக்கான அறிகுறி இலேசாக இருந்தால் இந்த கைவைத்தியம் நிச்சயம் உதவும்.
இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயை ( சுத்தமானதாக இருக்கட்டும்) தடவி உச்சந்தலை முழுக்க விரல்களால் இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு கூந்தலை அப்படியே விட்டு மறுநாள் காலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் வரை செய்துவரலாம்.
தேங்காய் எண்ணெய் தோல் எரிச்சலுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ள இயற்கையான பொருள். இது ஹேர் டை ஒவ்வாமையை உருவாக்கும் வீக்கம், சிவத்தல் மற்றும் வலியை குறைக்க உதவும்.
4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முழுக்க தடவி விடுங்கள். குறிப்பாக தலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுக்க தடவி இரவு முழுவதும் தலையில் ஊறவிட்டு மறுநாள் ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள்.
இரவு தேய்க்க சிரமமாக இருந்தால் தலை குளியலுக்கு ஒரு மணி நேரம் முன்பு தடவி ஊறவிடலாம். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது ஹேர் டை ஒவ்வாமை அறிகுறிகளை போக்க கூடும்.
4 டீஸ்பூன் நல்லெண்ணெயை இலேசாக சூடேற்றி உச்சந்தலையில் தலைப்பகுதியில் தடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தலையை ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இதுவும் ஆலிவ் எண்ணெய் போன்று இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறினால் போதுமானது.
நல்லெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவப்பு மற்றும் தடிப்பு அரிப்பையும் போக்கும். சரும வீக்கத்தை குறைத்து சருமத்தை சமநிலைப்படுத்தும். ஹேர் டை ஒவ்வாமைக்கு இவை பெரிதும் உதவும்.
மேற்கண்டவைகள் உங்கள் ஹேர் டை அலர்ஜியை போக்க கூடியவை என்றாலும் முதல் முறை நீங்கள் பயன்படுத்தும் போது சரும பராமரிப்பு மருத்துவர் அல்லது கூந்தல் நிபுணரை சந்தித்து உங்களுக்கு ஏற்ற ஹேர்டையை தேர்வு செய்யலாம். இதனால் ஹேர்டையை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜியை தவிர்க்க முடியும்.
அறிகுறிகளின் தீவிரம் ஒவ்வொருவரது தோல் ஒவ்வாமைக்கேற்ப மாறுபடும். ஹேர் டை பயன்பாட்டுக்கு பிறகு 48 மணி நேரங்களில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்கிவிடும். உடலில் சிவப்பான தடிப்புகள், உச்சந்தலை மற்றும் கழுத்தில் ஒருவித நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வீக்கம், கொப்புளங்கள், கண் இமைகள் மற்றும் உதடுகளில் அழற்சி, கால்கள் கைகளிலும் வீக்கம் போன்றவை உண்டாகலாம்.
ஹேர்டை பயன்பாட்டுக்கு பிறகு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசுவதன் மூலம் ஓரளவு குறைக்கலாம். சருமத்தில் மாய்சுரைசர் மற்றூம் க்ரீம் வகைகள் சருமத்தின் வீக்கத்தை குறைக்க உதவும். ஆனால் வெகு அரிதான சமயங்களில் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கலாம்.
அது தொண்டை வீக்கம், தோல் அலர்ஜி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றையும் உண்டு செய்யலாம். இயன்றவரை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைக்கான அறிகுறி இலேசாக இருந்தால் இந்த கைவைத்தியம் நிச்சயம் உதவும்.
இரவு தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயை ( சுத்தமானதாக இருக்கட்டும்) தடவி உச்சந்தலை முழுக்க விரல்களால் இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு கூந்தலை அப்படியே விட்டு மறுநாள் காலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் வரை செய்துவரலாம்.
தேங்காய் எண்ணெய் தோல் எரிச்சலுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ள இயற்கையான பொருள். இது ஹேர் டை ஒவ்வாமையை உருவாக்கும் வீக்கம், சிவத்தல் மற்றும் வலியை குறைக்க உதவும்.
4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முழுக்க தடவி விடுங்கள். குறிப்பாக தலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுக்க தடவி இரவு முழுவதும் தலையில் ஊறவிட்டு மறுநாள் ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள்.
இரவு தேய்க்க சிரமமாக இருந்தால் தலை குளியலுக்கு ஒரு மணி நேரம் முன்பு தடவி ஊறவிடலாம். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. இந்த கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது ஹேர் டை ஒவ்வாமை அறிகுறிகளை போக்க கூடும்.
4 டீஸ்பூன் நல்லெண்ணெயை இலேசாக சூடேற்றி உச்சந்தலையில் தலைப்பகுதியில் தடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தலையை ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இதுவும் ஆலிவ் எண்ணெய் போன்று இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறினால் போதுமானது.
நல்லெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவப்பு மற்றும் தடிப்பு அரிப்பையும் போக்கும். சரும வீக்கத்தை குறைத்து சருமத்தை சமநிலைப்படுத்தும். ஹேர் டை ஒவ்வாமைக்கு இவை பெரிதும் உதவும்.
மேற்கண்டவைகள் உங்கள் ஹேர் டை அலர்ஜியை போக்க கூடியவை என்றாலும் முதல் முறை நீங்கள் பயன்படுத்தும் போது சரும பராமரிப்பு மருத்துவர் அல்லது கூந்தல் நிபுணரை சந்தித்து உங்களுக்கு ஏற்ற ஹேர்டையை தேர்வு செய்யலாம். இதனால் ஹேர்டையை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜியை தவிர்க்க முடியும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும் என்று தெரிவதில்லை. அதிக நேரம் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்றாவிட்டால் பல்வேறு உடல் பிரச்சனைகள் வரலாம்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களை சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களையே சார்ந்து உள்ளனர். தற்போது நாப்கின்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
சானிட்டரி நாப்கின், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப் என அனைத்தும் தற்போது கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது சானிட்டரி நாப்கின்களைத் தான். ஏனெனில் சானிட்டரி நாப்கின்களை ரீமூவ் செய்வதும் பயன்படுத்துவதும் எளிது. நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி நாப்கின்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று நினைக்கின்றனர்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் (28 நாட்களுக்கு ஒரு முறை) சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஏனெனில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும்.
உங்க மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கு இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும்.
எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். ஈரமான உள்ளாடைகள் உங்களுக்கு நோய்த்தொற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை கெமிக்கல்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் தடிப்புகள் காணப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானிட்டரி நாப்கின்களை சரியாக அகற்றி குப்பையில் போடுங்கள்.
சானிட்டரி நாப்கின் மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் பெண்கள் பொதுவாக இதனை பின்பற்றுவதில்லை.
சானிட்டரி நாப்கின், டம்பான்கள் மற்றும் மாதவிடாய் கப் என அனைத்தும் தற்போது கிடைக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது சானிட்டரி நாப்கின்களைத் தான். ஏனெனில் சானிட்டரி நாப்கின்களை ரீமூவ் செய்வதும் பயன்படுத்துவதும் எளிது. நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி நாப்கின்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று நினைக்கின்றனர்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் (28 நாட்களுக்கு ஒரு முறை) சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஏனெனில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி நாப்கின்’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும்.
உங்க மாதவிடாய் காலங்களில் இரத்த போக்கு இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும்.
எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணியுங்கள். ஈரமான உள்ளாடைகள் உங்களுக்கு நோய்த்தொற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை கெமிக்கல்கள் நிறைந்த சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக ஆர்கானிக் நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
உங்க பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் தடிப்புகள் காணப்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானிட்டரி நாப்கின்களை சரியாக அகற்றி குப்பையில் போடுங்கள்.
சானிட்டரி நாப்கின் மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் பெண்கள் பொதுவாக இதனை பின்பற்றுவதில்லை.
தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 150 கிராம்
பட்டாணி - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்து வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் வற்றிய உடன் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல் ரெடி.
முட்டைக்கோஸ் - 150 கிராம்
பட்டாணி - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்து வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் வற்றிய உடன் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






