search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தனித்துவம் வாய்ந்த மூங்கில் ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
    X
    தனித்துவம் வாய்ந்த மூங்கில் ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

    தனித்துவம் வாய்ந்த மூங்கில் ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

    மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன.
    மூங்கில்களை வீட்டு உபயோகப் பொருளாக மட்டுமின்றி ஆடைகளாக நெய்தும் அழகுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக மூங்கில் ஆடைகள் தயாரிப்பும், அதனை அணிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. காட்டன் ஆடைகளை விட மூங்கில் ஆடைகள் தனித்துவமாக தெரிகின்றன. அதனை அணிவதன் மூலம் ஏராளமான உடல் நல நன்மைகளையும் பெறலாம். அதனால் அந்த ஆடைக்கு மவுசு கூடிக்கொண்டிருக்கிறது.

    * மூங்கில் இழைகளுக்கு உறிஞ்சும் திறன் அதிகம். அது பருத்தியை விட மூன்று மடங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வியர்வை பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு மூங்கில் ஆடைகள் கை கொடுக்கும். ஈரப்பதத்தை விரைவாக வெளியேற்றுவதோடு நீண்ட நேரம் புத்துணர்ச்சியோடு செயல்படவும் வழிவகை செய்யும்.

    * மூங்கில் இழைகள் மென்மை கொண்டவை. அவை சருமத்திற்கு எரிச்சலோ, உறுத்தலோ ஏற்படுத்துவதில்லை. உள்ளாடைகள் தயாரிப்பில் மூங்கில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சரும ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மூங்கில் ஆடைகளை அணிவது சவுகரியமாக இருக்கும்.

    * மூங்கில் ஆடைகளை சலவை செய்து பயன்படுத்துவதற்கும் சவுகரியமாக இருக்கும். அயர்ன் செய்யாமல் கூட அணிந்து செல்ல முடியும். அதில் மடிப்புகள் அதிகம் ஏற்படாது.

    * மூங்கில் இழைகள் பாக்டீரியாவை எதிர்க்கும்தன்மை கொண்டவை. மூங்கில் ஆடைகளிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். தோல் அழற்சி, அரிப்பு போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுபவர்களுக்கு மூங்கில் ஆடை நிவாரணம் அளிக்கும்.
    Next Story
    ×