என் மலர்
ஆரோக்கியம்
தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:-
தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், தொழில்புரிவோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்பட அனைத்து தரப்பினரும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவியாய், தவித்து வருகின்றனர். ஆகவே இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:-
அனைவரும் வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். அதற்கேற்ப பயணங்களை அமைத்துக்கொள்ளலாம். கோடைகாலத்தில் மிருதுவான வெள்ளாடை, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். கருப்பு, கனமான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும் கடினமான வேலையையும் தவிர்த்தல் வேண்டும். வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது கண்களை பாதுகாக்க கண்ணாடி, உடலைப் பாதுகாக்க குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்வது மிக நல்லது.
காலை, மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் வகையில், பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் தர்பூசணி, நுங்கு போன்றவைகளை பயன்படுத்தலாம். உடலில் சோர்வு, தளர்ச்சி, தலைவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகம் புரத சத்து உள்ள உணவுகள், காரமான உணவுகள் பதப்படுத்தப்படாத பழைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிக்காற்று வீட்டிற்குள் புகும் வகையில், வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கலாம்.
அனைவரும் வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். அதற்கேற்ப பயணங்களை அமைத்துக்கொள்ளலாம். கோடைகாலத்தில் மிருதுவான வெள்ளாடை, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். கருப்பு, கனமான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும் கடினமான வேலையையும் தவிர்த்தல் வேண்டும். வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது கண்களை பாதுகாக்க கண்ணாடி, உடலைப் பாதுகாக்க குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்வது மிக நல்லது.
காலை, மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் வகையில், பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் தர்பூசணி, நுங்கு போன்றவைகளை பயன்படுத்தலாம். உடலில் சோர்வு, தளர்ச்சி, தலைவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகம் புரத சத்து உள்ள உணவுகள், காரமான உணவுகள் பதப்படுத்தப்படாத பழைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிக்காற்று வீட்டிற்குள் புகும் வகையில், வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கலாம்.
பிரண்டை கை வலி, கால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து. பிரண்டை எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்
பிரண்டைத் தண்டு - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
வெள்ளைப் பூண்டு - 3 பற்கள் (பெரியது)
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் பிரண்டையில் உள்ள நீரை வடிகட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.
பரிமாறும் போது கொத்தமல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சுவையான பிரண்டை சூப் தயார்.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
குறிப்பு
பிரண்டைத் தண்டு - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
வெள்ளைப் பூண்டு - 3 பற்கள் (பெரியது)
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் பிரண்டையில் உள்ள நீரை வடிகட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.
பரிமாறும் போது கொத்தமல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சுவையான பிரண்டை சூப் தயார்.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
குறிப்பு
பிரண்டையை தேர்வு செய்யும் போது இளம்பச்சை நிறத்தில் உள்ள இளந்தண்டினைத் தேர்ந்தெடுக்கவும். இளந்தண்டு கைகளில் அரிப்பினை அவ்வளவாக ஏற்படுத்தாது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முடியின் ஆரோக்கியத்தை கொண்டே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
பெண்கள் முடிஉதிர்வு பிரச்சினையால் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரச்சினை என்றபோதிலும் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 10-ல் 9 பெண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை சார்ந்த விஷயத்தில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
நமது நாட்டில் பணிபுரியும் பெண்களில் 85 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறும் விஷயத்தில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பாலின பாகுபாடு காரணமாக புறக்கணிக்கப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரச்சினை என்றபோதிலும் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 10-ல் 9 பெண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை சார்ந்த விஷயத்தில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
அலுவலக வேலையில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய பாலின பாகுபாடு பெண்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவில் 85 சதவீத பெண்கள் பாலின பாகுபாடு காரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை பெற முடிவதில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவு 60 சதவீதமாக உள்ளது.
சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பெண் களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 2,285 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
சர்வேயில் பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் போதிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியிருக் கிறார்கள். 70 சதவீதம் பேர் தொழில் வேலைவாய்ப்புகளுக்கு முன்னால் குடும்ப பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக 22 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பாலின சமத்துவத்தில் பெற்றோர் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.
வாய்ப்புகள் தேடிவந்தாலும் அதனை பெறுவதற்கு பாலினம் தடையாக இருப்பதாக 50 சதவீத பெண்கள் கூறி இருக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பாலினம் முக்கியமானது என்று 63 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 37 சதவீத பெண்கள் ஆண்களை விட குறைவான ஊதியம் பெறுவதும் சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
அலுவலக வேலையில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய பாலின பாகுபாடு பெண்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவில் 85 சதவீத பெண்கள் பாலின பாகுபாடு காரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை பெற முடிவதில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவு 60 சதவீதமாக உள்ளது.
சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பெண் களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 2,285 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
சர்வேயில் பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் போதிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியிருக் கிறார்கள். 70 சதவீதம் பேர் தொழில் வேலைவாய்ப்புகளுக்கு முன்னால் குடும்ப பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக 22 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பாலின சமத்துவத்தில் பெற்றோர் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.
வாய்ப்புகள் தேடிவந்தாலும் அதனை பெறுவதற்கு பாலினம் தடையாக இருப்பதாக 50 சதவீத பெண்கள் கூறி இருக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பாலினம் முக்கியமானது என்று 63 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 37 சதவீத பெண்கள் ஆண்களை விட குறைவான ஊதியம் பெறுவதும் சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும்.
நவீன வாழ்க்கை முறையில் குறைந்த வயதினரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய செயல்பாடு பற்றிய பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. இது சாதாரணமான வலி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தொடர்ச்சியான வலி காரணமாக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மருத்துவமனையிலேயே அவரது இதயம் செயல்படாமல் நின்று விட்டது. சில மணி நேரத்தில் அவர் பிணமானார். காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறு இல்லாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அதிநவீன தீவிர சிகிச்சை அளிப்பட்டது. இதில் இதயம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முயற்சி வெற்றி பெற்றது. பிணம் என நினைத்த குடும்பத்தினர் அதிசயிக்கும் வகையில் அவர் மறு உயிர் பெற்றார்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஒரு ரத்தக்குழாயில் முழுவதுமாக அடைப்பு கண்டறியப்பட்டது. அதிரடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். இதேபோல 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். கடும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த வயதில் மாரடைப்பு வருமா? என்ற சந்தேகத்தில் இதய பரிசோதனை செய்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவருக்கு பெரிய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஓ.சி.டி. என்ற நவீன பரிசோதனை செய்தபோது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ரத்தக்குழாயில் கொழுப்பு படிவம் அடைப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அடைப்பை நீக்கியவுடன் இதயம் சீராக இயங்க தொடங்கியது. மாரடைப்பு எந்த வயதினருக்கும் வரலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம்.
கடுமையான மன உளைச்சல், கண்டறியப்படாத ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடற்பயிற்சியின்மை, மரபு ரீதியிலான குடும்ப வழி இதய நோய் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதய பரிசோதனை செய்து கொண்டால் பல மரணங்களை தவிர்க்கலாம். நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக இதய பரிசோதனையும், இதய மருத்துவரின் ஆலோசனையையும் தட்டிக்கழிக்காமல் நவீன மருத்துவத்தை செய்து கொண்டு திடீர் மரணத்தை பெருமளவு குறைக்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாரடைப்பு நோயாளிகள் இங்கு 360 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனையை சென்றடைகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். வருடத்திற்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் இதய நோய் வருமுன் தவிர்க்கலாம்.
இதய நோய் சிறப்பு மருத்துவர், ஜவஹர் மருத்துவமனை, ராமநாதபுரம்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஒரு ரத்தக்குழாயில் முழுவதுமாக அடைப்பு கண்டறியப்பட்டது. அதிரடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். இதேபோல 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். கடும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த வயதில் மாரடைப்பு வருமா? என்ற சந்தேகத்தில் இதய பரிசோதனை செய்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவருக்கு பெரிய ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஓ.சி.டி. என்ற நவீன பரிசோதனை செய்தபோது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ரத்தக்குழாயில் கொழுப்பு படிவம் அடைப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது. அடைப்பை நீக்கியவுடன் இதயம் சீராக இயங்க தொடங்கியது. மாரடைப்பு எந்த வயதினருக்கும் வரலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம்.
கடுமையான மன உளைச்சல், கண்டறியப்படாத ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடற்பயிற்சியின்மை, மரபு ரீதியிலான குடும்ப வழி இதய நோய் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இதய பரிசோதனை செய்து கொண்டால் பல மரணங்களை தவிர்க்கலாம். நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக இதய பரிசோதனையும், இதய மருத்துவரின் ஆலோசனையையும் தட்டிக்கழிக்காமல் நவீன மருத்துவத்தை செய்து கொண்டு திடீர் மரணத்தை பெருமளவு குறைக்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாரடைப்பு நோயாளிகள் இங்கு 360 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனையை சென்றடைகிறார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடையே ஏற்பட்டால் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். வருடத்திற்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் இதய நோய் வருமுன் தவிர்க்கலாம்.
இதய நோய் சிறப்பு மருத்துவர், ஜவஹர் மருத்துவமனை, ராமநாதபுரம்.
ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் முகத்தில் வரும் கருமை, கரும்புள்ளிகள் மறையும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது. தூக்கமின்மையால் ஏற்படும் கண் சோர்வை நீக்க, ஆரஞ்சு சாற்றினை குளிர்பதப்பெட்டியில் உறைய வைத்து ஐஸ் கட்டியாக்கி அதை கண்களில் ஒத்தடம் கொடுத்தால் கண்கள் புத்துணர்வோடு பளிச்சென்று ஆகிவிடும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஒருசிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுதிட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை, அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும்.
சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப்பொடி மூன்றும் சேர்த்து பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர வேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
ஒருசிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுதிட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை, அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும்.
சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப்பொடி மூன்றும் சேர்த்து பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர வேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன.
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.
இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.
* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்
* உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.
* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.
* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.
* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.
* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்
* உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.
* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.
* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.
* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.
* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி - 1 இஞ்ச் அளவு
தேன் - 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.
அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.
இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.
கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி - 1 இஞ்ச் அளவு
தேன் - 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.
அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.
இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.
இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...
மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும். அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.
உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.
எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
சமையலறை பராமரிப்பு பணிகளை இல்லத்தரசிகள் எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
சமையலறை பராமரிப்பு என்பது இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே சலிப்பை தருகிறது என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
சமையல் ‘பிளாட்பார்ம்’
வீட்டின் கட்டுமான பணிகளின்போதே டிசைனர் மூலம் மாடுலர் கிச்சனில் அமைக்கவேண்டிய ‘கன்சீல்டு’ அதாவது சுவருக்குள் பொருத்த வேண்டிய பகுதிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெறுவது நல்லது. கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் வைக்க முடிவெடுக்கும் நிலையில் முதலிலேயே கிச்சன் மேடை அமைப்பது கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் ஆகியவற்றை அமைத்த பின்னரே கிச்சன் மேடை அமைக்கப்பட வேண்டும்.
கியாஸ் சிலிண்டர்
ஸ்டோரேஜ் அமைப்புக்கான பிளைவுட் கேபின்களை ஒன்றரை அங்குல அளவுக்கு வெளிப்புறம் நீண்டிருக்குமாறு சமையலறை கிரானைட் மேடையை அமைத்தால், சுத்தம் செய்யும்போது கசியும் நீர் காரணமாக பாதிப்புகள் உருவாகாது. மேலும், ‘கியாஸ் ஹப்புக்கு’ வரும் இணைப்பு குழாய் அடிக்கடி செக்-அப் செய்யும் வகையில் இருக்கவேண்டும். ஹப்புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமலும், கியாஸ் சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.
‘சிங்க்’ கவனம்
பொதுவாக, மாடுலர் சமையலறை அமைப்புகளில் பூச்சிகள் மற்றும் எலிகள் நுழைவதற்கான வாய்ப்பு ‘சிங்க்’ மூலம் ஆரம்பிக்கிறது. அதனால், சமையலறை சிங்க் அமைப்பிலிருந்து வெளிப்புறம் செல்லும் பைப்புகளை கொசு வலை கொண்டு மூடிவிடலாம். அதன் குழாய் மூலமாக சாக்கடையில் இருந்து பூச்சிகளும் எலிகளும் சமையலறைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அனுபவமிக்க பிளம்பர் மூலம் ‘சிங்க் ஹோஸ்களில்’ கசிவுகள் ஏதும் இல்லாதவகையிலும், வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும்படியும் கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாக சிங்க் அமைப்புக்கு கீழ்ப்புறம் உள்ள குப்பை தொட்டியை தினமும் அகற்றுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய ‘டஸ்ட்பின்’ கேபின் வழியாக நுண்கிருமிகள் உருவாகி ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு உண்டு. பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பலரது மாடுலர் சமையலறைகளை ‘டிஷ் வாஷர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. உள் அமைந்த ‘இன் பில்ட்’ வகை ‘டிஷ் வாஷர்’ பொருத்தும்போது சமையலறையின் பராமரிப்பு எளிதாக இருப்பதுடன் தண்ணீர் கசிவையும் தவிர்க்க இயலும்.
சிம்னி பாராமரிப்புகள்
சமைக்கும்போது பெரும்பாலானோர் சிம்னியை இயக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால், உருவாகும் பிசுபிசுப்பு சிம்னியில் படிந்து அழுக்காக மாறுகிறது. அதனால், ‘கேஸ் ஹப்புக்கு’ மேற்புறம் உள்ள சிம்னியை சுத்தம் செய்வது சிக்கலாக மாறி விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது சந்தையில் ‘ஆட்டோ கிளன் சிம்னி’ (Auto Clean Chimney) வகைகள் கிடைக்கின்றன.
பொதுவாக, சிம்னியில் இருக்கும் ‘பில்டர்களை’ வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவிய பின்னரும், அவற்றில் பிசுபிசுப்பு இருக்கும் பட்சத்தில் திரவ கிளனர் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.
பிளைவுட் அலமாரிகள்
சமையலறையில் உள்ள கேபின்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாக இருந்தால், பாத்திரங்களை கழுவிய பின்னர் அவற்றை உலர்வதற்கு முன்னரே அடுக்கி வைப்பதால் அவை துரு ஏற்படலாம். அதனால், பிளைவுட் கப்போர்டுகளை அமைப்பதே நல்லது. கேபின் கதவுகளுக்கு பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கைப்பிடிகளின் தரத்தையும், பொருத்திய விதத்தையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீரின் ஈரப்பதம் காரணமாக கைப்பிடியில் துரு ஏறாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.
சமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.
சமையல் ‘பிளாட்பார்ம்’
வீட்டின் கட்டுமான பணிகளின்போதே டிசைனர் மூலம் மாடுலர் கிச்சனில் அமைக்கவேண்டிய ‘கன்சீல்டு’ அதாவது சுவருக்குள் பொருத்த வேண்டிய பகுதிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெறுவது நல்லது. கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் வைக்க முடிவெடுக்கும் நிலையில் முதலிலேயே கிச்சன் மேடை அமைப்பது கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் ஆகியவற்றை அமைத்த பின்னரே கிச்சன் மேடை அமைக்கப்பட வேண்டும்.
கியாஸ் சிலிண்டர்
ஸ்டோரேஜ் அமைப்புக்கான பிளைவுட் கேபின்களை ஒன்றரை அங்குல அளவுக்கு வெளிப்புறம் நீண்டிருக்குமாறு சமையலறை கிரானைட் மேடையை அமைத்தால், சுத்தம் செய்யும்போது கசியும் நீர் காரணமாக பாதிப்புகள் உருவாகாது. மேலும், ‘கியாஸ் ஹப்புக்கு’ வரும் இணைப்பு குழாய் அடிக்கடி செக்-அப் செய்யும் வகையில் இருக்கவேண்டும். ஹப்புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமலும், கியாஸ் சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.
‘சிங்க்’ கவனம்
பொதுவாக, மாடுலர் சமையலறை அமைப்புகளில் பூச்சிகள் மற்றும் எலிகள் நுழைவதற்கான வாய்ப்பு ‘சிங்க்’ மூலம் ஆரம்பிக்கிறது. அதனால், சமையலறை சிங்க் அமைப்பிலிருந்து வெளிப்புறம் செல்லும் பைப்புகளை கொசு வலை கொண்டு மூடிவிடலாம். அதன் குழாய் மூலமாக சாக்கடையில் இருந்து பூச்சிகளும் எலிகளும் சமையலறைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அனுபவமிக்க பிளம்பர் மூலம் ‘சிங்க் ஹோஸ்களில்’ கசிவுகள் ஏதும் இல்லாதவகையிலும், வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும்படியும் கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாக சிங்க் அமைப்புக்கு கீழ்ப்புறம் உள்ள குப்பை தொட்டியை தினமும் அகற்றுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய ‘டஸ்ட்பின்’ கேபின் வழியாக நுண்கிருமிகள் உருவாகி ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு உண்டு. பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பலரது மாடுலர் சமையலறைகளை ‘டிஷ் வாஷர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. உள் அமைந்த ‘இன் பில்ட்’ வகை ‘டிஷ் வாஷர்’ பொருத்தும்போது சமையலறையின் பராமரிப்பு எளிதாக இருப்பதுடன் தண்ணீர் கசிவையும் தவிர்க்க இயலும்.
சிம்னி பாராமரிப்புகள்
சமைக்கும்போது பெரும்பாலானோர் சிம்னியை இயக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால், உருவாகும் பிசுபிசுப்பு சிம்னியில் படிந்து அழுக்காக மாறுகிறது. அதனால், ‘கேஸ் ஹப்புக்கு’ மேற்புறம் உள்ள சிம்னியை சுத்தம் செய்வது சிக்கலாக மாறி விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது சந்தையில் ‘ஆட்டோ கிளன் சிம்னி’ (Auto Clean Chimney) வகைகள் கிடைக்கின்றன.
பொதுவாக, சிம்னியில் இருக்கும் ‘பில்டர்களை’ வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவிய பின்னரும், அவற்றில் பிசுபிசுப்பு இருக்கும் பட்சத்தில் திரவ கிளனர் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.
பிளைவுட் அலமாரிகள்
சமையலறையில் உள்ள கேபின்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாக இருந்தால், பாத்திரங்களை கழுவிய பின்னர் அவற்றை உலர்வதற்கு முன்னரே அடுக்கி வைப்பதால் அவை துரு ஏற்படலாம். அதனால், பிளைவுட் கப்போர்டுகளை அமைப்பதே நல்லது. கேபின் கதவுகளுக்கு பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கைப்பிடிகளின் தரத்தையும், பொருத்திய விதத்தையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீரின் ஈரப்பதம் காரணமாக கைப்பிடியில் துரு ஏறாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.
சமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.
சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது , ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது டிராகன் பழத்தின் முக்கியமான பலனாகும். உடலின் மிக பெரிய சொத்து வைட்டமின்-சி. இது டிராகன் பழத்தில் அதிகமாக இருக்கிறது.
வைட்டமின்-சியை தவிர வைட்டமின்-பி சத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இதிலிருக்கும் பி-1, பி-2, பி-3 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன, கொழுப்பு அளவை குறைக்கின்றன. டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமானமும் சீராகுகிறது. குறிப்பாக குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.
செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது. இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை வருவது தடுக்கப்படுகின்றன. இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது டிராகன் பழத்தின் முக்கியமான பலனாகும். உடலின் மிக பெரிய சொத்து வைட்டமின்-சி. இது டிராகன் பழத்தில் அதிகமாக இருக்கிறது.
வைட்டமின்-சியை தவிர வைட்டமின்-பி சத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இதிலிருக்கும் பி-1, பி-2, பி-3 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன, கொழுப்பு அளவை குறைக்கின்றன. டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமானமும் சீராகுகிறது. குறிப்பாக குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.
செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது. இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை வருவது தடுக்கப்படுகின்றன. இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது. சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம்.
முதுமையில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சிறிதளவு அதிகரிக்கும். ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல ரத்தமானது ரத்தக் குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்தில் இருந்து வெளியேறும்போது மற்றொரு வேகத்திலும் செல்கிறது.
இந்த வேகத்துடன் ரத்தமானது ரத்தக் குழாய் சுவர்களை மோதும்போது ஏற்படுகிற அழுத்தத்தை ‘ரத்த அழுத்தம்’ என்கிறோம். பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்குரி என்று இருந்தால், அது சரியானது. ஆனால், இது எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம்.
பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு ‘தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம்’ என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன.
ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்க சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படி குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.
இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்க தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளை தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை, மருந்து மட்டுமே சிகிச்சை இல்லை. உப்பு மற்றும் எண்ணெய் குறைந்த ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி. நடைப்பயிற்சி, மன மகிழ்ச்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவைப்படும்.
இந்த வேகத்துடன் ரத்தமானது ரத்தக் குழாய் சுவர்களை மோதும்போது ஏற்படுகிற அழுத்தத்தை ‘ரத்த அழுத்தம்’ என்கிறோம். பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்குரி என்று இருந்தால், அது சரியானது. ஆனால், இது எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் உடல், எடை, உயரம் போன்றவை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுவதைப்போல, ரத்த அழுத்தம் சற்று வித்தியாசப்படலாம்.
பொதுவாக, வயது கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 160-க்கு அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 80-லிருந்து 90-க்குள்ளும் இருக்கும். இதற்கு ‘தனித்த சிஸ்டாலிக் உயர் ரத்தஅழுத்தம்’ என்று பெயர். காரணம், வயதாக ஆக ரத்தக் குழாய்கள் கடினமாகி, தடிமனாகின்றன.
ரத்த ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப அவை விரிந்து சுருங்க சிரமப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாயின் உள் அளவு குறைந்துவிடுகிறது. இப்படி குறைந்த இடைவெளி வழியாக ரத்தத்தை உடலுக்குள் செலுத்துவதற்கு, இதயம் இன்னும் அதிக அழுத்தத்துடன் துடிக்கிறது. இதனால், சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரிக்கிறது.
இப்படியே அழுத்தத்துடன் அது துடித்துக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் இதயச் சுவர் பலவீனம் அடைந்து, வீங்கிவிடும். அப்போது உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் உட்செலுத்த முடியாது. இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, கிறுகிறுப்பு, மயக்கம், நினைவு இழத்தல், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இந்த நிலைமை தொடர்ந்தால், இதயம் செயலிழக்க தொடங்கிவிடும். மாரடைப்பும் வரலாம். சிறுநீரகம் பாதிக்கப்படலாம். இந்த ஆபத்துகளை தவிர்க்கத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை, மருந்து மட்டுமே சிகிச்சை இல்லை. உப்பு மற்றும் எண்ணெய் குறைந்த ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி. நடைப்பயிற்சி, மன மகிழ்ச்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவைப்படும்.






