என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். மேலும், கோவிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றினார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.
திருவிழாவையொட்டி தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். மேலும், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு கோவிலுக்கு வந்தார்கள். இதில் முகத்தில் நீளமான வேல் அலகு குத்தி கொண்டு வந்தார்கள். இதேபோல் பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி கொண்டும் கோவிலுக்கு நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீரை ஊற்றினார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பலர் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. இதில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரைவாய்க்கால் மாரியம்மன் வீதிஉலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். மேலும், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு கோவிலுக்கு வந்தார்கள். இதில் முகத்தில் நீளமான வேல் அலகு குத்தி கொண்டு வந்தார்கள். இதேபோல் பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி கொண்டும் கோவிலுக்கு நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீரை ஊற்றினார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பலர் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர்.
பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. இதில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரைவாய்க்கால் மாரியம்மன் வீதிஉலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடி ஏற்றினார்.
தமிழக-கேரள எல்லை பகுதியில் பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று மதியம் 2 மணிக்கு குருசு மலை அடிவாரத்தில் இளைஞர்கள் சார்பில் பரிகார சிலுவைப்பாதை நடைபெற்றது. நிகழ்ச்சியை அருட்பணியாளர் ஜோயி ஷாபு தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு புனித பத்தாம் பியூஸ் தேவாலயத்தில் இருந்து திருகொடி பயணம் தொடங்கி மலை அடிவாரத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து திருவிழா கொடியை நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் ஏற்றி வைத்தார். பின்னர் திவ்ய ஜோதி கொடி பயணம் மலையடி வாரத்தில் இருந்து மலை உச்சி வரை நடந்தது. இதில் அருட்பணியாளர் கிறிஸ்து தலைமை தாங்கினார்.
மாலை 5 மணிக்கு நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலை உச்சியில் திருவிழா கொடியை அருட்பணியாளர் கிறிஸ்து ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். மாலையில் நடைபெற்ற திருவிழா பொதுக்கூட்டத்தில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். குருசுமலை இயக்குனர் வின்ெசன்ட் வரவேற்று பேசினார்.
விழாவில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், ஆன்சலன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் மலைேயறி சென்று வழிபாடு நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
குருசு மலை கோவில் தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு தமிழக, கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையொட்டி நேற்று மதியம் 2 மணிக்கு குருசு மலை அடிவாரத்தில் இளைஞர்கள் சார்பில் பரிகார சிலுவைப்பாதை நடைபெற்றது. நிகழ்ச்சியை அருட்பணியாளர் ஜோயி ஷாபு தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு புனித பத்தாம் பியூஸ் தேவாலயத்தில் இருந்து திருகொடி பயணம் தொடங்கி மலை அடிவாரத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து திருவிழா கொடியை நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் ஏற்றி வைத்தார். பின்னர் திவ்ய ஜோதி கொடி பயணம் மலையடி வாரத்தில் இருந்து மலை உச்சி வரை நடந்தது. இதில் அருட்பணியாளர் கிறிஸ்து தலைமை தாங்கினார்.
மாலை 5 மணிக்கு நெய்யாற்றின் கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலை உச்சியில் திருவிழா கொடியை அருட்பணியாளர் கிறிஸ்து ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். மாலையில் நடைபெற்ற திருவிழா பொதுக்கூட்டத்தில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். குருசுமலை இயக்குனர் வின்ெசன்ட் வரவேற்று பேசினார்.
விழாவில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், ஆன்சலன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஏராளமானோர் மலைேயறி சென்று வழிபாடு நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
குருசு மலை கோவில் தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு தமிழக, கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம் கோவில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் கடந்த சில வாரங்களாகவே பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவிலில் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலை நம்பி வாழும் ரத வீதிகளை சுற்றி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவிலில் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலை நம்பி வாழும் ரத வீதிகளை சுற்றி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான பூச்சொரிதல் விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் பூச்சொரிதல் முக்கியமானதாகும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில், திருச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி பயபக்தியுடன் வழங்கினர்.
மேலும், 62-ம் ஆண்டாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் படத்தை வைத்தும், யானையின் மீது பூக்களை வைத்தும் வாணவேடிக்கைகள் முழங்க சமயபுரம் சிறுகடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் நிர்வாகிகள், குடும்பத்தினர், சமயபுரம் கண்ணனூர் பூர்வீக குடிமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பூக்களை சுமந்து கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
இதேபோல, சமயபுரம் போலீஸ் நிலையம் சார்பாக 29-வது ஆண்டாக திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில் போலீசார் தங்களது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் இருந்து யானை மீது பூக்களை வைத்து மேளதாளங்கள், அதிர் வேட்டுகள் முழங்க ஊர்வலமாக பூக்களை சுமந்து கோவிலை அடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக தலைவர் சரவணன் தலைமையில் செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக பூக்களை எடுத்துச்சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இரவு புதிய பஸ் நிலையம் அருகே இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.3-வது பூச்சொரிதலையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோவிலில் குவிந்ததால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 62-ம் ஆண்டாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் படத்தை வைத்தும், யானையின் மீது பூக்களை வைத்தும் வாணவேடிக்கைகள் முழங்க சமயபுரம் சிறுகடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் நிர்வாகிகள், குடும்பத்தினர், சமயபுரம் கண்ணனூர் பூர்வீக குடிமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பூக்களை சுமந்து கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
இதேபோல, சமயபுரம் போலீஸ் நிலையம் சார்பாக 29-வது ஆண்டாக திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில் போலீசார் தங்களது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் இருந்து யானை மீது பூக்களை வைத்து மேளதாளங்கள், அதிர் வேட்டுகள் முழங்க ஊர்வலமாக பூக்களை சுமந்து கோவிலை அடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக தலைவர் சரவணன் தலைமையில் செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக பூக்களை எடுத்துச்சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இரவு புதிய பஸ் நிலையம் அருகே இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.3-வது பூச்சொரிதலையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோவிலில் குவிந்ததால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
சுவாமி : மகரநெடுங்குழைக்காதன்.
அம்பாள் : குழைக்காதநாச்சியார்.
தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.
விமானம் : பத்ர விமானம்.
தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.
வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங்குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோவில் முகவரி : அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,
தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.
அம்பாள் : குழைக்காதநாச்சியார்.
தீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.
விமானம் : பத்ர விமானம்.
தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.
வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங்குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோவில் முகவரி : அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,
தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளில் காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் இரண்டாவது திருத்தலமாக திகழ்வது, திருச்செந்தூர். இங்கு ஆலயத்தின் முன்பாக இருக்கும் கடலும், முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் நாழிக்கிணறு தீர்த்தமும் முக்கியமான தீர்த்தங்களாக இருக்கின்றன.
இவை தவிர திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முகாரம்ப தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், கந்தக் கடவுளின் கருணையைப் பெறுவர்.
தெய்வானை தீர்த்தம்:- உணவு, உடை, இருப்பிடம், செல்வ வளம் பெருக நினைப்பவர்கள், இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வள்ளி தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடினால், பிரணவ வடிவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் வந்து சேரும்.
லட்சுமி தீர்த்தம்:- நிதிகளை தன்னுடன் வைத் திருக்கும் குபேரனால் அடையமுடியாத செல்வங் களைக்கூட, இந்த தீர்த்தத்தில் நீராடினால் பெறலாம்.
சித்தர் தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தடையாக இருக்கும் உலக மாயைகளை அகற்றி, முக்தியை வழங்கும்.
அஷ்டதிக்கு பாலகர் தீர்த்தம்:- கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களின் நீராடு வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடையலாம்.
காயத்ரி தீர்த்தம்:- 100 யாகங்களை செய்தவர்கள் அடைகின்ற பலனைப் பெற்றுத் தரும்.
சாவித்ரி தீர்த்தம்:- பிரம்மன் உள்ளிட்ட தேவர் களால் காண்பதற்கு அரிய பராசக்தியின் திருவடிகளை பூஜித்த பலன் கிடைக்கும்.
சரஸ்வதி தீர்த்தம்:- வேதங்களையும், ஆகமங் களையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்த ஞானத்தை வழங்கும்.
ஐராவத தீர்த்தம்:- சந்திர பதாகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும்.
வயிரவ தீர்த்தம்:- பாவங்களைப் போக்கும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
துர்க்கை தீர்த்தம்:- சகல துன்பங்களும் நீங்கி நன்மை பெருகும்.
ஞான தீர்த்தம்:- இறைவனை நினைத்து வழி படுபவர்களுக்கும், அவனை நினைப்பவர்களுக்கும் நன்மையை வழங்கும்.
சத்திய தீர்த்தம்:- களவு, மது, குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றில் இருந்து விடுவித்து, நல்வழியில் நிற்க உதவி புரியும்.
தரும தீர்த்தம்:- தேவாமிர்தம் என்னும் தேவதீர்த்தத்தை அடைவீர்கள்.
முனிவர் தீர்த்தம்:- வாழ்வில் சுபீட்சத்தை வழங்கும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.
தேவர் தீர்த்தம்:- ஆறு விதமான தீய குணங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
பாவநாச தீர்த்தம்:- சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்க வல்லது.
கந்தபுஷ்கரணி தீர்த்தம்:- சிவபெருமானின் திருவடியைக் கண்ட பலன் கிடைக்கும்.
கங்கா தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியை ஏற்படுத்தும்.
சேது தீர்த்தம்:- சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி, நன்மையை வழங்கும்.
கந்தமாதன தீர்த்தம்:- பாவங்களைப் போக்கி பரிசுத்தமான வாழ்வைத் தரும்.
மாதுரு தீர்த்தம்:- அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
தென்புலத்தார் தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
இவை தவிர திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
முகாரம்ப தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், கந்தக் கடவுளின் கருணையைப் பெறுவர்.
தெய்வானை தீர்த்தம்:- உணவு, உடை, இருப்பிடம், செல்வ வளம் பெருக நினைப்பவர்கள், இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வள்ளி தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடினால், பிரணவ வடிவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் வந்து சேரும்.
லட்சுமி தீர்த்தம்:- நிதிகளை தன்னுடன் வைத் திருக்கும் குபேரனால் அடையமுடியாத செல்வங் களைக்கூட, இந்த தீர்த்தத்தில் நீராடினால் பெறலாம்.
சித்தர் தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு தடையாக இருக்கும் உலக மாயைகளை அகற்றி, முக்தியை வழங்கும்.
அஷ்டதிக்கு பாலகர் தீர்த்தம்:- கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களின் நீராடு வதன் மூலம் கிடைக்கும் பலன்களை அடையலாம்.
காயத்ரி தீர்த்தம்:- 100 யாகங்களை செய்தவர்கள் அடைகின்ற பலனைப் பெற்றுத் தரும்.
சாவித்ரி தீர்த்தம்:- பிரம்மன் உள்ளிட்ட தேவர் களால் காண்பதற்கு அரிய பராசக்தியின் திருவடிகளை பூஜித்த பலன் கிடைக்கும்.
சரஸ்வதி தீர்த்தம்:- வேதங்களையும், ஆகமங் களையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்த ஞானத்தை வழங்கும்.
ஐராவத தீர்த்தம்:- சந்திர பதாகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும்.
வயிரவ தீர்த்தம்:- பாவங்களைப் போக்கும் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
துர்க்கை தீர்த்தம்:- சகல துன்பங்களும் நீங்கி நன்மை பெருகும்.
ஞான தீர்த்தம்:- இறைவனை நினைத்து வழி படுபவர்களுக்கும், அவனை நினைப்பவர்களுக்கும் நன்மையை வழங்கும்.
சத்திய தீர்த்தம்:- களவு, மது, குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றில் இருந்து விடுவித்து, நல்வழியில் நிற்க உதவி புரியும்.
தரும தீர்த்தம்:- தேவாமிர்தம் என்னும் தேவதீர்த்தத்தை அடைவீர்கள்.
முனிவர் தீர்த்தம்:- வாழ்வில் சுபீட்சத்தை வழங்கும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.
தேவர் தீர்த்தம்:- ஆறு விதமான தீய குணங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
பாவநாச தீர்த்தம்:- சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்க வல்லது.
கந்தபுஷ்கரணி தீர்த்தம்:- சிவபெருமானின் திருவடியைக் கண்ட பலன் கிடைக்கும்.
கங்கா தீர்த்தம்:- பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியை ஏற்படுத்தும்.
சேது தீர்த்தம்:- சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி, நன்மையை வழங்கும்.
கந்தமாதன தீர்த்தம்:- பாவங்களைப் போக்கி பரிசுத்தமான வாழ்வைத் தரும்.
மாதுரு தீர்த்தம்:- அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
தென்புலத்தார் தீர்த்தம்:- இந்த தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
அபிராமி அம்மனை நீ்ங்காத பக்தியோடு வழிபட்ட பட்டரின் உயிரை அம்மன் காப்பாற்றிய நிகழ்வு இன்றளவும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள அபிராமி அம்மன் தன்னை மனமுருகி உண்மையான பக்தியோடு வழிபடுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து அவர்களை கொடிய இன்னல்களில் இருந்து காப்பார் என்பது ஐதீகம். தன்னை தினமும் பூஜிக்கும் சுப்பிரமணிய பட்டரை காப்பாற்ற அபிராமி அம்மன் தை அமாவாசை நாளை பவுர்ணமியாக்கிய நிகழ்வு பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.
தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகாருக்கு சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மன்னரின் வருகையை கூட கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். சுப்பிரமணிய பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி என கூறிவிட்டார். இதைக்கேட்ட மன்னர் இன்று இரவு பவுர்ணமி முழுநிலவு தோன்ற வேண்டும். இது தவறும் பட்சத்தில் உங்களுக்கு(சுப்பிரமணிய பட்டருக்கு) மரண தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.
இருப்பினும் மனம் கலங்காத சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். அப்போது 79 பாடலான ‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார். அந்த தோடு முழு நிலவாக வானில் ஒளி வீசி அமவாசையை பவுர்ணமியாக மாற்றியது. இந்த அதிசய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார். அபிராமி அம்மனை நீ்ங்காத பக்தியோடு வழிபட்ட பட்டரின் உயிரை அம்மன் காப்பாற்றிய நிகழ்வு இன்றளவும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இதையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைஅமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் உள்ள அபிராமி அம்மன் தன்னை மனமுருகி உண்மையான பக்தியோடு வழிபடுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து அவர்களை கொடிய இன்னல்களில் இருந்து காப்பார் என்பது ஐதீகம். தன்னை தினமும் பூஜிக்கும் சுப்பிரமணிய பட்டரை காப்பாற்ற அபிராமி அம்மன் தை அமாவாசை நாளை பவுர்ணமியாக்கிய நிகழ்வு பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.
தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகாருக்கு சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மன்னரின் வருகையை கூட கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். சுப்பிரமணிய பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி என கூறிவிட்டார். இதைக்கேட்ட மன்னர் இன்று இரவு பவுர்ணமி முழுநிலவு தோன்ற வேண்டும். இது தவறும் பட்சத்தில் உங்களுக்கு(சுப்பிரமணிய பட்டருக்கு) மரண தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.
இருப்பினும் மனம் கலங்காத சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். அப்போது 79 பாடலான ‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார். அந்த தோடு முழு நிலவாக வானில் ஒளி வீசி அமவாசையை பவுர்ணமியாக மாற்றியது. இந்த அதிசய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார். அபிராமி அம்மனை நீ்ங்காத பக்தியோடு வழிபட்ட பட்டரின் உயிரை அம்மன் காப்பாற்றிய நிகழ்வு இன்றளவும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இதையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைஅமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பக்தர்கள் நந்தவனம் போல் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பழமையானதாகும். இக்கோவில் வெளி பிரகாரத்தில் முன்பு ஒரு காலத்தில் இருந்த நந்தவனம் அழிந்துவிட்டது.
இந்த நிலையில் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் 5 பேர் மீண்டும் நந்தவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களை மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரியவகை மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகள், பூஞ்செடிகள் ஆகியவற்றை சேகரித்து, வரிசைப்படுத்தி தனித்தனியாக பாத்தி கட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் நட்டுவைத்த 80 வகையான 100-க்கும் மேற்பட்ட மரங்கள் நன்றாக வளர்ந்து தற்போது வெளிபிரகாரத்தை நந்தவனம் போல் பசுகையாக்கி உள்ளது.
இங்கு பல்வேறு ராசிக்குரிய 27 வகையான மரங்கள், 40 வில்வ மரங்கள், கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரம், புரசை மரம், அரியவகை கருங்காலி மரம், மருத்துவ குணமிக்க வெள்ளிளோத்திரம் மரம், ஆவிமரம், புங்கை மரம், கடம்பை மரம், ஓதிய மரம், பன்னீர் மரம், இடி விழுவதை தடுக்கு அத்திமரம், பலா மரம், வெப்பாலை மரம், வெண் தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி மரம், மகோகணி மரம், நொச்சி மரம், மகாலிங்கம் மரம், மகிலி மரம், செண்பக மரம், ரெயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் மகாகனி மரம், தென்னை மரம், சிவபெருமானின் சடையை போல் பின்னி வளரக்கூடிய காட்டு எலுமிச்சை மரம் என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது.
மேலும் சுவாமிக்கு சூடுவதற்காக மனோ ரஞ்சிதம் பூ, கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட மந்தாகரப் பூ, முல்லைப் பூ, பாரிஜாதம் உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அழிந்து வரக்கூடிய அரிய வகை மரங்களை அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் நந்தவனத்தில் வளர்த்து வருகின்றனர். இங்கு களா மரங்களும் நடப்பட்டுள்ளது.
இந்த மரங்களை வளர்க்க பக்தர்கள் காய்ந்த இலைகளை மட்டும் இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதற்கு நீர்ப்பாய்ச்சி பராமரித்தும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் இலைகளை பறிக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் 5 பேர் மீண்டும் நந்தவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களை மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கினார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரியவகை மரக்கன்றுகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகள், பூஞ்செடிகள் ஆகியவற்றை சேகரித்து, வரிசைப்படுத்தி தனித்தனியாக பாத்தி கட்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் நட்டுவைத்த 80 வகையான 100-க்கும் மேற்பட்ட மரங்கள் நன்றாக வளர்ந்து தற்போது வெளிபிரகாரத்தை நந்தவனம் போல் பசுகையாக்கி உள்ளது.
இங்கு பல்வேறு ராசிக்குரிய 27 வகையான மரங்கள், 40 வில்வ மரங்கள், கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரம், புரசை மரம், அரியவகை கருங்காலி மரம், மருத்துவ குணமிக்க வெள்ளிளோத்திரம் மரம், ஆவிமரம், புங்கை மரம், கடம்பை மரம், ஓதிய மரம், பன்னீர் மரம், இடி விழுவதை தடுக்கு அத்திமரம், பலா மரம், வெப்பாலை மரம், வெண் தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி மரம், மகோகணி மரம், நொச்சி மரம், மகாலிங்கம் மரம், மகிலி மரம், செண்பக மரம், ரெயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் மகாகனி மரம், தென்னை மரம், சிவபெருமானின் சடையை போல் பின்னி வளரக்கூடிய காட்டு எலுமிச்சை மரம் என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது.
மேலும் சுவாமிக்கு சூடுவதற்காக மனோ ரஞ்சிதம் பூ, கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட மந்தாகரப் பூ, முல்லைப் பூ, பாரிஜாதம் உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அழிந்து வரக்கூடிய அரிய வகை மரங்களை அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் நந்தவனத்தில் வளர்த்து வருகின்றனர். இங்கு களா மரங்களும் நடப்பட்டுள்ளது.
இந்த மரங்களை வளர்க்க பக்தர்கள் காய்ந்த இலைகளை மட்டும் இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதற்கு நீர்ப்பாய்ச்சி பராமரித்தும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் இலைகளை பறிக்காதவாறு பாதுகாத்து வருகிறார்கள்.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சண்முகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்கில் புனித நீர் நிரப்பட்டு கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 18-ந்தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிலையில் நேற்று விடையாற்றி விழா நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்கில் புனித நீர் நிரப்பட்டு கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர் இரவு சண்முகப்பெருமான் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர் இரவு சண்முகப்பெருமான் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
• வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.
• திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.
• கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
• நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
• வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.
• திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.
• கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
• நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது 2010-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம், லட்டு பிரசாதம், மலர்மாலை, துளசி மாலை உள்ளிட்ட மங்கல பொருட்களை தட்டில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது 2010-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம், லட்டு பிரசாதம், மலர்மாலை, துளசி மாலை உள்ளிட்ட மங்கல பொருட்களை தட்டில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது 2010-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






