என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். த
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவலால் கோவில் வளாகத்திலேயே அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவலால் நேற்று கோவில் வளாகத்திலேயே சமூக விலகலை பின்பற்றி பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக அம்மன் சிரசு ஊர்வலத்தை காணமுடியாத பக்தர்களின் வசதிக்காக கெங்கையம்மன் கோவிலில் சந்தனத்தால் கெங்கையம்மன் சிரசு அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல் கோவில் வளாகத்தில் மஞ்சள் நிற சேலையால் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல நாட்களுக்கு பிறகு கெங்கையம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளிைய கடைப்பிடித்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவலால் நேற்று கோவில் வளாகத்திலேயே சமூக விலகலை பின்பற்றி பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக அம்மன் சிரசு ஊர்வலத்தை காணமுடியாத பக்தர்களின் வசதிக்காக கெங்கையம்மன் கோவிலில் சந்தனத்தால் கெங்கையம்மன் சிரசு அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல் கோவில் வளாகத்தில் மஞ்சள் நிற சேலையால் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல நாட்களுக்கு பிறகு கெங்கையம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளிைய கடைப்பிடித்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 40 கிலோ கனகாம்பரம் பூக்களும், 120 கிலோ கோடி மல்லி மலர்களும் என மொத்தம் 400 கிலோ மலர்களால் புஷ்ப்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்கள் உள்பட பல்வேறு வகையான மலர்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நேற்று கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாக குண்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 180 ருத்விக்குகள் நெய், பட்டு வஸ்திரம், மூலிகை பொருட்களால் யாகம் வளர்த்து, கலச பூஜை செய்தனர்.
பின்னர் மாலை மகா புஷ்ப யாகம் தொடங்கியது. அதில் 40 கிலோ கனகாம்பரம் பூக்களும், 120 கிலோ கோடி மல்லி மலர்களும் என மொத்தம் 400 கிலோ மலர்களால் புஷ்ப்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
புஷ்ப யாகத்தில் திருச்சானூரை சேர்ந்த பஞ்சரத்ன ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரிலு பங்கேற்றார். மேலும் அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் பலா் கலந்து கொண்டனர். புஷ்ப யாக நிகழ்ச்சி தேவஸ்தான பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்பட்டது.
பின்னர் மாலை மகா புஷ்ப யாகம் தொடங்கியது. அதில் 40 கிலோ கனகாம்பரம் பூக்களும், 120 கிலோ கோடி மல்லி மலர்களும் என மொத்தம் 400 கிலோ மலர்களால் புஷ்ப்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
புஷ்ப யாகத்தில் திருச்சானூரை சேர்ந்த பஞ்சரத்ன ஆகம ஆலோசகர் சீனிவாசாச்சாரிலு பங்கேற்றார். மேலும் அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் பலா் கலந்து கொண்டனர். புஷ்ப யாக நிகழ்ச்சி தேவஸ்தான பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பாக ஆண்டு தோறும் ஆனிவார ஆஸ்தானம் அன்று பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பாக ஆண்டு தோறும் ஆனிவார ஆஸ்தானம் அன்று பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து 6 பட்டு வஸ்திரங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை, கோவில் அதிகாரிகள் திருமலைக்கு கொண்டு வந்தனர்.
திருமலைக்கு கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் வரவேற்று மரியாதை செய்து பெற்றுக் கொண்டனர். பின்னர் திருமலை ஜீயர் மடத்தில் வைத்து பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து பேடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவரிடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருமலைக்கு கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் வரவேற்று மரியாதை செய்து பெற்றுக் கொண்டனர். பின்னர் திருமலை ஜீயர் மடத்தில் வைத்து பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து பேடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவரிடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் கீழரத வீதியில், தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 89வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோவில் கடலினுள் மண்கோவிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார்.
திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.
மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடித் தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்” என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள இறைவனுக்கு பாலபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வழிபாடு செய்கின்றனர்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோவில் கடலினுள் மண்கோவிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார்.
திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.
மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடித் தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்” என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள இறைவனுக்கு பாலபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வழிபாடு செய்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை வழிபட வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். கோவிலில் விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 7-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை உற்சவர் சந்திரசேகர் மற்றும் விநாயகர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.
ஆனி பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தீர்த்தவாரி நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடந்தது. அதற்காக, பாரம்பரிய நடைமுறையின் படி அய்யங்குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னா் கோவில் வளாகத்தில் பெரிய நந்தியிடம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய நந்தி பின்புறம் உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சூலத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்புப்பூஜை நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 7-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை உற்சவர் சந்திரசேகர் மற்றும் விநாயகர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.
ஆனி பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தீர்த்தவாரி நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடந்தது. அதற்காக, பாரம்பரிய நடைமுறையின் படி அய்யங்குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னா் கோவில் வளாகத்தில் பெரிய நந்தியிடம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய நந்தி பின்புறம் உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சூலத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்புப்பூஜை நடந்தது.
லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ, அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.
‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’
இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை..
‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’
இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை..
ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று வராஹி அம்மன் வெண்ணெய் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5-ம் நாளான நேற்று மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6-ம் நாளான நேற்று வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது.
6-ம் நாளான நேற்று வராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை காய்கனி அலங்காரம் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5-ம் நாளான நேற்று மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6-ம் நாளான நேற்று வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது.
6-ம் நாளான நேற்று வராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை காய்கனி அலங்காரம் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு வெள்ளிக்குடம் எடுத்து புறப்பட்டு காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு உறையூர் திருத்தாந்தோனி ரோட்டில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க யானை மேல் வெள்ளிக்குடம் வைத்து ஊர்வலம் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தது.
பின்னர் சாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.
அங்கிருந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு உறையூர் திருத்தாந்தோனி ரோட்டில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க யானை மேல் வெள்ளிக்குடம் வைத்து ஊர்வலம் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தது.
பின்னர் சாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலயம் முன்புள்ள கொடி மரத்திற்கு மிக்கேல்தூதர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக சென்றார். பின்னர் மாலை 6.30 மணிக்கு கொடிகளை மந்திரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை கிஷோக் முன்னிலையில் மணப்பாடு மறைமாவட்ட முதன்மை குரு இருதயராஜ் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் ரொனால்டு, டிக்சன், ஜெயகர், சந்திஸ்டன், இன்பன்ட், பபிஸ்டன் மற்றும் பங்கு பேரவை, ஊர்நலக்கமிட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் ரொனால்டு, டிக்சன், ஜெயகர், சந்திஸ்டன், இன்பன்ட், பபிஸ்டன் மற்றும் பங்கு பேரவை, ஊர்நலக்கமிட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும்.
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.
ஆடியில் சூரியன் மனோகாரகன் சந்திரனின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சூரியனின் தென் திசை பயணம் தொடங்குகிறது.
ஆடியை 'கர்கடக மாதம்' என்றழைக்கின்றனர். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி பிரவேசம்.
ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலைரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சென்னை மாநகரத்திலும் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தெருவிற்கு தெரு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுகின்றனர்.
இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது.
உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி ஏற்ற மாதமல்ல அது பீடை மாதம் என கூறப்படுவது உண்டு. ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதனால்தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்-மனைவி கூடுவதையும் பெற்றோர்கள் தவிர்த்தனர்.
அதுமட்டுமல்லாது ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.
ஆடியில் சூரியன் மனோகாரகன் சந்திரனின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சூரியனின் தென் திசை பயணம் தொடங்குகிறது.
ஆடியை 'கர்கடக மாதம்' என்றழைக்கின்றனர். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி பிரவேசம்.
ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலைரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சென்னை மாநகரத்திலும் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தெருவிற்கு தெரு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுகின்றனர்.
இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது.
உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி ஏற்ற மாதமல்ல அது பீடை மாதம் என கூறப்படுவது உண்டு. ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதனால்தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்-மனைவி கூடுவதையும் பெற்றோர்கள் தவிர்த்தனர்.
அதுமட்டுமல்லாது ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மாத பூஜைகள் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கேரள அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வடமதுரை, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி ஆடி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.
இதற்காக கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மாலதி, பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ராமமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
விழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், 24-ந்தேதி மாலை வெள்ளித் தேரோட்டமும் கோவில் வளாகத்திலேயே நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, பின்னர் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதேேபால் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள் இன்றி கோவிலில் ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் மாலதி ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதற்காக கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மாலதி, பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ராமமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
விழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், 24-ந்தேதி மாலை வெள்ளித் தேரோட்டமும் கோவில் வளாகத்திலேயே நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, பின்னர் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதேேபால் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள் இன்றி கோவிலில் ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் மாலதி ஆகியோர் செய்து வருகின்றனர்.






