என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மாணிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.
ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார். பாண்டவர்களின் வெற் றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான்.
அதனால் இரு குலத் தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டனர். அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.
இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந் தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம் பாக மாறி பரீஷத் மகா ராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.
ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. ‘என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோசத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரை யேற்றுவது? என்று தவித் தான். அப்போது ஸ்ரீதேவி பாக வதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய் தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.
சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித் தான். உடனே ‘ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்தி ருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார். பாண்டவர்களின் வெற் றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான்.
அதனால் இரு குலத் தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டனர். அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.
இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந் தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம் பாக மாறி பரீஷத் மகா ராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.
ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. ‘என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோசத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரை யேற்றுவது? என்று தவித் தான். அப்போது ஸ்ரீதேவி பாக வதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய் தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.
சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித் தான். உடனே ‘ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்தி ருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் மோகினி அலங்காரத்திலும், தங்கக் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் அருகில் தங்கத்திருச்சி வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உற்சவர்கள் இருவரும் வாகன மண்டபத்தில் இருந்து முதலில் கோவிலில் உள்ள ெரங்கநாயகர் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து உற்சவர்கள் இருவரும் ஊர்வலமாக கல்யாண உற்சவ மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வாகனச் சேவையில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பாதுகாப்புத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உற்சவர்கள் இருவரும் வாகன மண்டபத்தில் இருந்து முதலில் கோவிலில் உள்ள ெரங்கநாயகர் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து உற்சவர்கள் இருவரும் ஊர்வலமாக கல்யாண உற்சவ மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வாகனச் சேவையில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பாதுகாப்புத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உறவு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு:
இரண்டு உயிரினங்களுக்கு இடையேயான தொடர்பை, இணைப்பை, நட்பை ‘உறவு’ என்கிறோம். இதன் சொல்வளம் விசாலமானது. உறவு முறை பல பரிணாமங்களை உள்ளடக்கியுள்ளது.
எத்தகைய உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுகள் இணைந்து உயிர்ப்பாக இருக்க வேண்டும். பல உயிர்கள் இணைவதுதான் உறவு. உறவுகள் சேர்வதுதான் குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதுதான் கூட்டுக்குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு கோத்திரம். பல கோத்திரங்கள் இணைந்துதான் ஒரு சமூகம் உருவாகிறது. பல சமூகங்களின் சங்கமம்தான் ஒரு தேசியம். பல தேசிய இனங்களின் உருவாக்கம்தான் சர்வதேசம், உலகம்.
உறவு என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் உலகம் உருவாகிறது. அந்த உலகமே உறவுமுறையில் ஐக்கியமாகி விடுகிறது. அந்த புனித உறவின் வீழ்ச்சியின் முதல்படியே கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக்குடும்பமாக பிரிந்து போவதில் துவங்குகிறது. தனிக்குடித்தனம், தனிக்குடும்பம் பெருகப் பெருக உறவுமுறை அருகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது.
உறவு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு:
“இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது.
இறைவன், “சற்று பொறு” என்றான்.
“உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு.
உடனே இறைவன், “உறவே, உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்கு திருப்தியளிக்கவில்லையோ” என்று கேட்டான்.
அதற்கு “ஆம், திருப்திதான் என் இறைவா” என்றது உறவு.
“இது உனக்காக நடக்கும்” என்றான் இறைவன்.
இந்த நபிமொழியை அறிவித்த பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நயவஞ்சகர்களே, நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும். உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் திருக்குர்ஆனின் (47:22) இறைவசனத்தைக் கூறினார்கள்”. (நூல்: புகாரி)
உறவாடுவது என்பது பதிலுக்குப் பதில் செய்யும் காரியம் அல்ல. உறவை முறித்தவனுடன் வலிய வந்து உறவாடுவதே உண்மையான உறவு.
“பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
உறவை முறித்து வாழ்பவன் உலக வாழ்க்கையை மட்டும் இழக்கவில்லை. சொர்க்க வாழ்க்கையையும் இழக்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். “உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)
உறவுமுறையை முறிப்பதற்கு பலவிதமான காரணங்கள் ஏற்படுகிறது. 1) அறிவற்ற செயல்பாடு, 2) இறையச்ச குறைபாடு, 3) தற்பெருமை, 4) நீடித்த தொடர்பின்மை, 5) அதிகமான தொந்தரவு தருவது, 6) உறவுகளை சந்திப்பதின் முக்கியத்துவம் குறைந்து போவது, 7) கருமித்தனம், 8) உறவை மறந்து உலக ஈடுபாடு, 9) மனமுறிவு, 10) பொறாமை. இன்னும் இதுபோன்ற காரணங்கள் ஒருவரிடம் வெளிப்படும் போது, அவரைச் சுற்றியுள்ள உறவுக்காரர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றனர்.
உறவை முறிக்கும் எந்த காரியங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது.
“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாக இருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்).
அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
எத்தகைய உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுகள் இணைந்து உயிர்ப்பாக இருக்க வேண்டும். பல உயிர்கள் இணைவதுதான் உறவு. உறவுகள் சேர்வதுதான் குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதுதான் கூட்டுக்குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு கோத்திரம். பல கோத்திரங்கள் இணைந்துதான் ஒரு சமூகம் உருவாகிறது. பல சமூகங்களின் சங்கமம்தான் ஒரு தேசியம். பல தேசிய இனங்களின் உருவாக்கம்தான் சர்வதேசம், உலகம்.
உறவு என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் உலகம் உருவாகிறது. அந்த உலகமே உறவுமுறையில் ஐக்கியமாகி விடுகிறது. அந்த புனித உறவின் வீழ்ச்சியின் முதல்படியே கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக்குடும்பமாக பிரிந்து போவதில் துவங்குகிறது. தனிக்குடித்தனம், தனிக்குடும்பம் பெருகப் பெருக உறவுமுறை அருகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது.
உறவு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு:
“இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது.
இறைவன், “சற்று பொறு” என்றான்.
“உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு.
உடனே இறைவன், “உறவே, உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்கு திருப்தியளிக்கவில்லையோ” என்று கேட்டான்.
அதற்கு “ஆம், திருப்திதான் என் இறைவா” என்றது உறவு.
“இது உனக்காக நடக்கும்” என்றான் இறைவன்.
இந்த நபிமொழியை அறிவித்த பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நயவஞ்சகர்களே, நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும். உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் திருக்குர்ஆனின் (47:22) இறைவசனத்தைக் கூறினார்கள்”. (நூல்: புகாரி)
உறவாடுவது என்பது பதிலுக்குப் பதில் செய்யும் காரியம் அல்ல. உறவை முறித்தவனுடன் வலிய வந்து உறவாடுவதே உண்மையான உறவு.
“பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
உறவை முறித்து வாழ்பவன் உலக வாழ்க்கையை மட்டும் இழக்கவில்லை. சொர்க்க வாழ்க்கையையும் இழக்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். “உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)
உறவுமுறையை முறிப்பதற்கு பலவிதமான காரணங்கள் ஏற்படுகிறது. 1) அறிவற்ற செயல்பாடு, 2) இறையச்ச குறைபாடு, 3) தற்பெருமை, 4) நீடித்த தொடர்பின்மை, 5) அதிகமான தொந்தரவு தருவது, 6) உறவுகளை சந்திப்பதின் முக்கியத்துவம் குறைந்து போவது, 7) கருமித்தனம், 8) உறவை மறந்து உலக ஈடுபாடு, 9) மனமுறிவு, 10) பொறாமை. இன்னும் இதுபோன்ற காரணங்கள் ஒருவரிடம் வெளிப்படும் போது, அவரைச் சுற்றியுள்ள உறவுக்காரர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றனர்.
உறவை முறிக்கும் எந்த காரியங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது.
“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாக இருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்).
அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 5-ம் நாளான நேற்று சங்கீத சியாமளா அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான 10-ம் தேதி, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி விழாவின் 5-ம் நாளான நேற்று சங்கீத சியாமளா அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அரசு அறிவித்தப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கோவிலுக்குள் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். கோவில் திறந்து பக்தர்களை அனுமதிக்கும் நாட்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்மன் அலங்காரத்தை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.
செப்டம்பர் மாதம் 12-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
12-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சித்தயோகம்
* குரங்கனி முத்துமாலையம்மன் பவனி
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம்
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
13-ம் தேதி புதன் கிழமை :
* வளர்பிறை அஷ்டமி
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி
* துர்க்காஷ்டமி
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்
14-ம் தேதி வியாழக்கிழமை :
* சரஸ்வதி பூஜை
* ஆயுத பூஜை
* திருவோண விரதம்
* மஹா நவமி
* சந்திராஷ்டமம்- மிருகசீருஷம், திருவாதிரை
15-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* விஜயதசமி
* கரிநாள்
* தசரதலலித கௌரி விரதம்
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
16-ம் தேதி சனிக்கிழமை :
* வளர்பிறை ஏகாதசி
* அமிர்தயோகம்
* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேச பெருமாள் கஜலெட்சுமி வாகன புறப்பாடு
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்
17-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்போற்சவம்
* இன்று சூரிய வழிபாடு நன்று
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
18-ம் தேதி திங்கள் கிழமை :
* சித்தயோகம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
* சித்தயோகம்
* குரங்கனி முத்துமாலையம்மன் பவனி
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம்
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
13-ம் தேதி புதன் கிழமை :
* வளர்பிறை அஷ்டமி
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி
* துர்க்காஷ்டமி
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்
14-ம் தேதி வியாழக்கிழமை :
* சரஸ்வதி பூஜை
* ஆயுத பூஜை
* திருவோண விரதம்
* மஹா நவமி
* சந்திராஷ்டமம்- மிருகசீருஷம், திருவாதிரை
15-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* விஜயதசமி
* கரிநாள்
* தசரதலலித கௌரி விரதம்
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
16-ம் தேதி சனிக்கிழமை :
* வளர்பிறை ஏகாதசி
* அமிர்தயோகம்
* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேச பெருமாள் கஜலெட்சுமி வாகன புறப்பாடு
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்
17-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்போற்சவம்
* இன்று சூரிய வழிபாடு நன்று
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
18-ம் தேதி திங்கள் கிழமை :
* சித்தயோகம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகர விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக 17-ந் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக 17-ந் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார்.
‘விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து, நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.’
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார். இந்த உவமையும் உலக முடிவில் அளிக்கப்படும் தீர்ப்புநாளைக் குறிக்கின்றது.
விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். மீன்களைப் பிடிப்பதற்காகவே மீனவர் கடலில் வலைவீசுகின்றனர். ஆனால், வலையில் மீன்களோடு, உண்ணத் தகாத மீன்களும், பிற உயிரினங்களும் சேர்த்து அள்ளப்படுகின்றன. அவ்வாறே, விண்ணரசின் நற்செய்தியாகிய வலை மக்கள் நடுவே வீசப்படுகிறது. நாம் திருச்சபையில் சேர்க்கப்படுகிறோம். நாம் அனைவரும் நல்ல மீன்களாகவும், கெட்ட மீன்களாகவும் திருச்சபையில் இருக்கிறோம். நாம் அனைவரும் நம்மை நேர்மையாளராகவும், இறைவனின் பிள்ளைகளாகவும், இறையாட்சியைப் பெற்றவராகவும் நம்புகிறோம்.
பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இவ்வாறே தம்மை நேர்மையாளராகவும் விண்ணரசுக்கு உரியவராகவும் எண்ணினர். இன்னும் வலை நிறையவில்லை, கரைசேர்க்கப்படவில்லை. இப்போது நடப்பது இரக்கத்தின் காலம். நாம் வலைக்குள் மீனாக இருக்கிறோமா அல்லது தேவையில்லாத உயிரினங்களாக இருக்கிறோமா என்பதை நாம் இப்போதே அறியவேண்டும். நம் பாவங்களை நாம் அறிந்திருக்கிறோமா?, மனம் மாற விரும்புகிறோமா?, இயேசுவின் மன்னிப்பை பெற்றிருக்கிறோமா?, இயேசுவின் இறையாட்சியின் அன்பு, பரிவு, தாழ்மை போன்ற ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகிறதா? என்பதை கடைசி நாளாகிய இப்போதே அறிந்துகொள்வது நமக்கு நல்லது.
வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து நல்லவற்றை கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் வானதூதர் நேர்மையாளி இடையே இருந்து தீயோரைப் பிரிப்பார். வலை நிறைவடைவதே உலகின் முடிவு. திருச்சபையிலுள்ள நேர்மையாளரையும் வெளிவேடக்காரரையும் வானதூதர் பிரிக்கின்றனர். நல்லவர் நிலைவாழ்விலும், கெட்டவர் அழியா நெருப்பிலும் சேர்க்கப்படுகின்றனர்.
“அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்று சொல்வீர்கள். ஆனாலும், ‘தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்லப்படும்” என்று இயேசு கூறுகிறார்.
நமது தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பே நேர்மையாளரையும், தீயோரையும் பிரிக்கிறது என்பதை அறியவேண்டும். வலை இழுக்கப்படுவதற்கு முன், மனம் மாறி நற்செய்தியைக் கைகொள்ளுவோம்.
இந்த உவமையும் கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் ஒன்று. இந்த உவமையைக் கூறியபின் இதன் விளக்கத்தையும் இயேசுவே அளிக்கிறார். இந்த உவமையும் உலக முடிவில் அளிக்கப்படும் தீர்ப்புநாளைக் குறிக்கின்றது.
விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். மீன்களைப் பிடிப்பதற்காகவே மீனவர் கடலில் வலைவீசுகின்றனர். ஆனால், வலையில் மீன்களோடு, உண்ணத் தகாத மீன்களும், பிற உயிரினங்களும் சேர்த்து அள்ளப்படுகின்றன. அவ்வாறே, விண்ணரசின் நற்செய்தியாகிய வலை மக்கள் நடுவே வீசப்படுகிறது. நாம் திருச்சபையில் சேர்க்கப்படுகிறோம். நாம் அனைவரும் நல்ல மீன்களாகவும், கெட்ட மீன்களாகவும் திருச்சபையில் இருக்கிறோம். நாம் அனைவரும் நம்மை நேர்மையாளராகவும், இறைவனின் பிள்ளைகளாகவும், இறையாட்சியைப் பெற்றவராகவும் நம்புகிறோம்.
பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இவ்வாறே தம்மை நேர்மையாளராகவும் விண்ணரசுக்கு உரியவராகவும் எண்ணினர். இன்னும் வலை நிறையவில்லை, கரைசேர்க்கப்படவில்லை. இப்போது நடப்பது இரக்கத்தின் காலம். நாம் வலைக்குள் மீனாக இருக்கிறோமா அல்லது தேவையில்லாத உயிரினங்களாக இருக்கிறோமா என்பதை நாம் இப்போதே அறியவேண்டும். நம் பாவங்களை நாம் அறிந்திருக்கிறோமா?, மனம் மாற விரும்புகிறோமா?, இயேசுவின் மன்னிப்பை பெற்றிருக்கிறோமா?, இயேசுவின் இறையாட்சியின் அன்பு, பரிவு, தாழ்மை போன்ற ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகிறதா? என்பதை கடைசி நாளாகிய இப்போதே அறிந்துகொள்வது நமக்கு நல்லது.
வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய் கரையில் உட்கார்ந்து நல்லவற்றை கூடைகளில் சேர்த்து வைப்பர், கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் வானதூதர் நேர்மையாளி இடையே இருந்து தீயோரைப் பிரிப்பார். வலை நிறைவடைவதே உலகின் முடிவு. திருச்சபையிலுள்ள நேர்மையாளரையும் வெளிவேடக்காரரையும் வானதூதர் பிரிக்கின்றனர். நல்லவர் நிலைவாழ்விலும், கெட்டவர் அழியா நெருப்பிலும் சேர்க்கப்படுகின்றனர்.
“அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்று சொல்வீர்கள். ஆனாலும், ‘தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்லப்படும்” என்று இயேசு கூறுகிறார்.
நமது தீர்ப்பல்ல, இறைவனின் தீர்ப்பே நேர்மையாளரையும், தீயோரையும் பிரிக்கிறது என்பதை அறியவேண்டும். வலை இழுக்கப்படுவதற்கு முன், மனம் மாறி நற்செய்தியைக் கைகொள்ளுவோம்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், 3 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் கொடியேற்றம் நடந்த முதலாவது திருநாளிலும், 3 முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2-ம் திருநாளில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதித்தபோது, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு வாங்கி கைகளில் அணிந்தனர்.
தொடர்ந்து நேர்த்திக்கடனாக காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணர், அனுமர், நாராயணர், பிரம்மன், விஷ்ணு போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து அந்தந்த ஊர்களிலேயே காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
தசரா திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று முதல் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
3 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்ததால், நேற்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காலை முதல் இரவு வரையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் நிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெறுகிறது.
இதனால் கொடியேற்றம் நடந்த முதலாவது திருநாளிலும், 3 முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2-ம் திருநாளில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதித்தபோது, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு வாங்கி கைகளில் அணிந்தனர்.
தொடர்ந்து நேர்த்திக்கடனாக காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணர், அனுமர், நாராயணர், பிரம்மன், விஷ்ணு போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து அந்தந்த ஊர்களிலேயே காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
தசரா திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று முதல் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
3 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்ததால், நேற்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காலை முதல் இரவு வரையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் நிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெறுகிறது.
வாக்குக்கு அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. இவர் பல ஆலயங்களில் பெண் தெய்வங்களின் பெயர்களின் வீற்றிருக்கிறார். அவற்றில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.
உலகம் தோன்றிய போது முதலில் எழுந்த ஓசைக்கு ‘ஓம்’ என்று பெயர். இந்த ஓம்கார ஒலியில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள் அனைத்துக்கும் ஓம்கார ஒலியே பிரதானம். அதில் இருந்து வாக்கு பிறந்தது. அதுவே மனிதர்களின் பேசும் மொழிகளாக பரந்து விரிந்தது. வாக்குக்கு அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. இவர் பல ஆலயங்களில் பெண் தெய்வங்களின் பெயர்களின் வீற்றிருக்கிறார். அவற்றில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.
பிரம்ம வித்யாம்பிகை
திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் இருக்கிறார். அம்பாளாக, பிரம்ம வித்யாம்பிகை அருள்கிறாள். இந்த அம்மன், சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். இவருக்கும் இங்கே சன்னிதி உள்ளது. கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றும் இந்த ஆலயம், சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கல்விக்கு அன்னை
திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு. இங்கு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி, தவம் இருந்த இடம் இது. இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
ஞான சரஸ்வதி
திருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் பிட்சாடனர் கோவில் உள்ளது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.
கலைவாணி
வாணியம்பாடியில் பெரியநாயகி உடனாய அதிதீஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு முறை பிரம்மனின் சாபத்தால் பேச்சை இழந்த கலைமகள், இந்த ஆலயத்தில் உள்ள ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றாள். கலைவாணிக்கு அருள்செய்த ஈசன், அவளை வீணை மீட்டி பாடும்படி பணித்தார். இதனாலேயே இந்த ஊர் ‘வாணியம்பாடி’ என்று பெயர் பெற்றது. கோவிலின் முகப்பிலேயே சிவன், பார்வதியை கலைவாணி வழிபடும் சுதை சிற்பம் உள்ளது. தனிச் சன்னிதியில் வீணை மீட்டும் வாணி அருள் செய்கிறாள்.
மாதங்கி தேவி
சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள், அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.
பிரம்மனுடன்
சென்னை வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் அருகில் ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் கோவிலின் கன்னி மூலையில் சரஸ்வதி உடனாய பிரம்மாவுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. இந்த தேவிக்கு மஞ்சள் காப்பு சாத்தி வழிபட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டு வருபவர்களது தலை எழுத்து மாறும் என்பது பக்தர்களது நம்பிக்கையாகும். மேலும், மாணவ - மாணவியர்கள் அந்த மஞ்சளை அணிந்து கொண்டால், கல்வி மற்றும் ஞாபக சக்தி பெருகும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கம்பர் வழிபட்ட சரஸ்வதி
காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் சரஸ்வதி தனி ஆலயத்தில் அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட கம்பர், ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி - வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கினார். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோவில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கம்பர் எண்ணியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தாங்கி கிராமம் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் சரஸ்வதி சிலை புதைபொருளாகக் கிடைத்தது. இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோவில் கட்டப்பட்டது.
ஞானவாணி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கண்டியூர். இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி உண்டு. இங்கு சரஸ்வதி தேவி, தனது கணவரோடு நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் வழங்கும் ஞானவாணியாக வீற்றிருக்கிறாள்.இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
பிரம்ம வித்யாம்பிகை
திருவெண்காடு தலத்தில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் இருக்கிறார். அம்பாளாக, பிரம்ம வித்யாம்பிகை அருள்கிறாள். இந்த அம்மன், சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். இவருக்கும் இங்கே சன்னிதி உள்ளது. கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றும் இந்த ஆலயம், சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கல்விக்கு அன்னை
திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு. இங்கு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மண்டூக மகரிஷி, தவம் இருந்த இடம் இது. இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜையுடன், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்வது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதிதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
ஞான சரஸ்வதி
திருச்சிராப்பள்ளி புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில் பிட்சாடனர் கோவில் உள்ளது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த இடம். அப்போது பெருமாள் தோன்றி, அங்கேயே இருக்க அனுமதி அளித்ததுடன், தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் உன்னைக் காண இங்கே வருவார்கள் என்று ஆசீர்வதித்து, தன் அருகில் வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் தனியாக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுவதுடன், அவளது கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச் சுவடியோடும், ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.
கலைவாணி
வாணியம்பாடியில் பெரியநாயகி உடனாய அதிதீஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு முறை பிரம்மனின் சாபத்தால் பேச்சை இழந்த கலைமகள், இந்த ஆலயத்தில் உள்ள ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றாள். கலைவாணிக்கு அருள்செய்த ஈசன், அவளை வீணை மீட்டி பாடும்படி பணித்தார். இதனாலேயே இந்த ஊர் ‘வாணியம்பாடி’ என்று பெயர் பெற்றது. கோவிலின் முகப்பிலேயே சிவன், பார்வதியை கலைவாணி வழிபடும் சுதை சிற்பம் உள்ளது. தனிச் சன்னிதியில் வீணை மீட்டும் வாணி அருள் செய்கிறாள்.
மாதங்கி தேவி
சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி அருள்பாலித்து வருகிறாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள், சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ராஜமாதங்கி தேவி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள், அறிவு வடிவமாக நின்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.
பிரம்மனுடன்
சென்னை வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் அருகில் ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் கோவிலின் கன்னி மூலையில் சரஸ்வதி உடனாய பிரம்மாவுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. இந்த தேவிக்கு மஞ்சள் காப்பு சாத்தி வழிபட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டு வருபவர்களது தலை எழுத்து மாறும் என்பது பக்தர்களது நம்பிக்கையாகும். மேலும், மாணவ - மாணவியர்கள் அந்த மஞ்சளை அணிந்து கொண்டால், கல்வி மற்றும் ஞாபக சக்தி பெருகும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கம்பர் வழிபட்ட சரஸ்வதி
காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் சரஸ்வதி தனி ஆலயத்தில் அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட கம்பர், ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி - வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கினார். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோவில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கம்பர் எண்ணியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தாங்கி கிராமம் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் சரஸ்வதி சிலை புதைபொருளாகக் கிடைத்தது. இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோவில் கட்டப்பட்டது.
ஞானவாணி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கண்டியூர். இங்கு பிரம்மனுக்கு தனிச் சன்னிதி உண்டு. இங்கு சரஸ்வதி தேவி, தனது கணவரோடு நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் வழங்கும் ஞானவாணியாக வீற்றிருக்கிறாள்.இந்தக் கோவிலுக்கு எதிரில் ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயம் உள்ளது. பிரம்மாவின் தலையைக் கொய்ததால், ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள் அகற்றியதாக ஐதீகம். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் இன்று மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைகிறார். கொலு, இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் இன்று மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைகிறார். கொலு, இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது.
இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாதத்தில் தான். பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோயில்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் புரட்டாசி மாத வழிபாடு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும், காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்தியமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர்.
பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு.
இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடி மகிழ்கிறோம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.
புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும். அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோயில்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் புரட்டாசி மாத வழிபாடு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும், காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்தியமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர்.
பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு.
இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடி மகிழ்கிறோம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.
புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும். அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் நவராத்திரி 4-ம் நாள் விழாவில் மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான நேற்று, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுதிக்கப்படவில்லை.
அரசு அறிவித்தப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கோவிலுக்குள் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். கோவில் திறந்து பக்தர்களை அனுமதிக்கும் நாட்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்மன் அலங்காரத்தை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.
நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான நேற்று, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள். இந்த விழாவில் பக்தர்கள் யாரும் அனுதிக்கப்படவில்லை.
அரசு அறிவித்தப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கோவிலுக்குள் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். கோவில் திறந்து பக்தர்களை அனுமதிக்கும் நாட்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்மன் அலங்காரத்தை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.






